Sonntag, 31. März 2013

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

யோசித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.





இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்"மாற்றுக் கருத்து-அரசியலை"தொடரவே!

சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!

தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.





இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.






இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.

இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

31.03.2013

Samstag, 30. März 2013

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் , யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

சிங்கள இனவாத அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாத அரசியலானது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்பு வாதிகளுக்குள் பல்வேறு இனவாத-சாதிய வொடுக்குமுறை-பெண்ணடிமைத்தனம்-பிரதேசவாதமெனக் கோலாச்சிய இந்த மானுடவிரோதமானது பௌத்த சிங்களப் பெருந்தேசிய உச்சத்துள், தமிழ்த் தேசியவினத்தின் மீதான வொடுக்குமுறையாகவும்,அதற்கு முன்னமே சிங்கள-முஸ்லீம் வார்த்தகர்களது முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும் எழுந்து, இறுதியில் இந்த இனவாதமானது "தமிழீழப் போராட்டத்துள்"அதீத உச்சமான மனித அவமானகரமான புலிப் பாசிசமாக உச்சம் பெற்றது!

இதன் முகங்கள் பல்வேறு வகையானவை.

இந்திய உளவுப் படையினது நேரடியான ஆலோசனையின் பெயரில் இந்தப் பாசிசமானது அநுராதபுரத்துள் (1988 இல்) சிங்கள மக்களை வேட்டையாடியது.பின். இஸ்லாமிய மக்களை வேட்டையாடியது.இதன் முகத்தைத் தமிழ்பேசும் மக்களே தரிசித்த காலமானது புலிகளது வதை முகாமிலிருந்தும்,முள்ளிவாய்க்காலிலிருந்தும் மட்டுமல்ல.கூடவே,தமிழ் மக்கள் தமது குழந்தைகளை,கல்வியாளர்களை,மாற்று அமைப்புப் போராளிகளைப் பல்லாயிரக்கணக்காகப் புலிப் பாசிசத்தால் இழந்தபோதுதாம் அதன் உச்சம் புலப்பட்டது.

இந்த அந்நிய அடியாட்படைச் சேவையுள் பாசிசப் புலிகளது பாத்திரம் தேசிய விடுதலையாகப் பின்னப்பட்ட கருத்தாடல்களால்-சிங்கள இனவாத ஒடுக்குமுறையால் ஒரு தேசிய இனம் தன்மீதானவொரு வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது, இன்று!

இந்த வரலாற்றைத் தந்த புலிப் பினாமிகள் இன்றும் அஃதே, வகை அந்நியச் சேவையில் மக்களிடம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களுடன் பாரிய முதலாளிகளாகிவிட்டு எமது மக்களுக்காக மீளவும், கொலை அரசியலையே செய்கின்றனர்.

புலிப் பாசிசத்தின் பெயரால் மொட்டையடிக்கப்பட்ட            " தமிழினத்துக்கு வெளியிலான பிற-இனங்கள் " தமது அனைந்து நியாயத்தையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட தமிழ்த் தேசியவினத்தின்மீது சுமத்திவிடும்போது அந்தத் தேசியவினமானது அதை நிராகரிக்க முடியாது.இஃது,இந்த உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பான ஒடுக்குமுறையாக மேலெழுகிறது.ஒன்று ,உளவியலொடுக்குமுறை மற்றது, பௌதிக ஒடுக்குமுறை!புலிப்பாசிசத்தின் உச்சத்தின் அறுவடை இதுதாம்!

ஆனால்,இது குறித்து நாம் பேசியாக வேண்டும்.

புலிப் பாசிசத்தை, இவ்வளவு மனித அவமானகர ஒடுக்குமுறைகளுக்குப் பின்னும்-பாசிசத்தின் புதிய மாதிரிகளுக்குப் பாத்திராமாகவும்,அந்நியச் சக்திகளது அடியாளாகப் போன பின்பும் அந்தப் பாசிசப் புலிகளைத் தேசிய இராணுவமாகவும்,அதனால் தமிழீழம் விடுதலையாவதாகவும் அப்பட்டமான பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை இவ்வளவு அழிவுக்குள் தள்ளிய பயங்கரமான " புரட்சிகரச் சிந்தனையாளர்களும்" நமக்குள் "இப்போது" புரட்சி வகுப் பெடுக்கின்றனர்தாம்.இவர்களைத் தண்டிக்கவென ஒரு இனங்கடந்த நீதி மன்றைத் தோற்றுவிக்க முடியாதளவுக்கு உலகம் மனிதக் குருதியில் நீந்திக்கொண்டிருக்கிறது.எனவே,இலங்கை மக்களாகிய அனைவரும் தமக்குள் இணைவுறவேண்டியது இந்த யுத்தக் கிரிமனல்களைக் குறித்த விசாரணையுள் இனவாதப் பேதமின்றி நீதி-விசாரணைக்கானதாக இருக்க வேண்டும்.


இதுவொரு புதிய நூரன்பேர்க் நீதிவிசாரணை மன்றாக அமைய வேண்டும்.தென் கிழக்காசியாவின் விடிவுக்கு இது அவசியமானவொரு பணி.இதன் வாயிலாகவொரு நீதியை இந்த இஸ்லாமிய மற்றும் தமிழ்தேசியவினத்துக்கானவொரு மாண்பான நீதியும்-நிலைத்த ஜனநாயக வழித் தீர்வும் எட்டாதா?நிச்சியம் எட்டும்!மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அந்த மக்கள் தம்மைத்தாமே தலைமையாக்கும்போது இது சாத்தியமானதே!

இன்று, இஸ்லாமிய மக்களது இந்த வடூவுக்காகப் புலிப்பாசிசத்தை ஊக்குவித்த புரட்சிக்காரர்களே ஆதரவாகவும்,பக்கப்பலமாகவும் இருந்து அநுதாபம் தெரிவிப்பது வேடிக்கையானதல்ல-வினையானது.

புலிகளுக்குக் கருத்தியல்-பரப்புரை செய்து, பிழையானவொரு அழிவுச் சக்தியைத் தேசிய இராணுவமெனச் சொன்னவர்கள்,அதற்காகக் கட்சி கட்டி எமது மக்களை ஏமாற்றியவர்கள், புலம் பெயர் தமிழ் குழுமத்தில் உலகு தழுவி வாழ்கின்றனர்.அவர்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் இப்போது அரசியல் பண்ணுகின்றனரென்பதை இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அறியார்கள்.அவர்களை நிர்க்கதியாக்கிய இந்தப் பாசிஸ்டுக்களே இப்போது, புரட்சியின் புரவலர்களென்றும்-முன்னேறிய பிரிவினரென்றும் ஐரோப்பாவெங்கும் தமது அரசியலை தொடர்கின்றனர்.

எப்போதும்,முகமூடி அரசியல் செய்தவர்கள்-புலிப்பாசிசத்தை மிக மூர்க்கமாக ஆதரித்தவர்கள்,அதைத் தேசியச் சக்தியாக வரையறை செய்து முள்ளி வாய்க்கால்வரை மனித வதை செய்தவர்கள் முஸ்லீம்-சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரானவர்களே!

இவர்கள்தாம் இப்போது, இந்த வீடியோவுக்கும் "ஆதாரித்து அரசியல் " செய்கின்றனர்.இவர்களிடம் ஏமாறாது, பாதிக்கப்பட்ட இஸ்லாம்-தமிழ்த் தேசியவினங்கள் தமக்குள் நீதி காணும் முயற்சியில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

அது,பாசிச அரசாகத் தோன்ற முனையும் இலங்கை அரசை மக்களுக்கான சட்டத்துக்குட்பட்ட-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,ஜனநாயக விழுமியத்துள் தள்ளி அதன் வாயிலாகவொரு நீதிகான அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவிருக்கவேண்டும்.இதன் முகிழ்ப்பில்தாம் இலங்கையில் யுத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும்.

இதைத் தவிர்த்துவிட்டுப் பாசிசக் கூறுகளை மேலும் அரசியல் வாழ்வாக நிலை நிறுத்தும் அரசியல் பிழைப்புவாதிகளின்பின் நம்பிக்கை தரிப்பது கானல் நீரான எதிர்ப்பார்ப்பையே இந்த மக்களுக்கிட்டுச் செல்லும்.

புலிப்பினாமிகளான இந்த மேற்சொன்ன சிந்தனையாளர்கள் சொல்லும் அநுதாபமும்,அதுசார்ந்த இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவும் "புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!" என்பது போன்றதே!ஏனெனில்,முள்ளி வாய்க்கால் வரைப் புலிகளைத் தேசியச் சக்திகளாக வர்ணித்து அதை வளர்த்துவிட்டுப் பாசிச ஒடுக்குமுறையை அப்பாவிகள்மீது செலுத்தியவர்கள் இவர்கள்தாம்.

இவர்களைக் குறித்து கவனத்தைக் குவிப்பதே முதற்கட்ட விடுதலைக்கு-விமோசனத்துக்கான முகிழ்ப்பாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.03.2013

Freitag, 29. März 2013

ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை


 நான் மனிதனென
உறவு வெளிக்களுக்குள் இதயத்தை
எல்லா "விலைக்கும் "வைத்தேன்
வேண்டுவாரில்லை

தெரு ஓராமாய்
எனது இரகசியங்களையும்
வலியையும் குவித்து வைத்திருக்கும்
உள்ளாடைக்குள் மெல்லப் புதைத்து வைத்தேன்
ஒவ்வொன்றாக அள்ளிச் சென்றனர்



 எடுத்துப் போட்ட இரகசியமோ
எனது இதயத்தைத் துடிக்கத் துடிக்க  அறுத்துப்போட்டு
அப்பனுக்குக் கஞ்சிக்கு அடுப்பு எரிக்க
நெருப் பூட்டும் போது
என் உணர்வுகளுக்குக் கச்சை கட்டி
விற்கப்படும் சந்தில் என்னைப் புணர்ந்த வியாபாரிகள்
எனக்கான சவப் பெட்டியை வண்ணங்கொண்ட
வகைகளில் செய்துகொண்டனர்




என் வலிக்கும்
வடுவுக்கும் ஒரு தலிபான் துப்பாக்கிக் குண்டின்
விலை மூன்று மில்லியன் டொலரென
நிர்ணயித்த  ஐரோப்பிய மனித நேயவாதிகள்
அள்ளிக் கொட்டும் வானேவிக் குண்டுகளுக்கு
அடுக்கடுக்காய் டசின் கணக்கில்
சிரசு தெறிக்கும் என்னைப் போன்றோருக்கு
அவ்கானில் மனித நேயம்-சனநாயகம் விலையென நிர்ணயித்த
அரசியலை எவரெனக்குச் சொல்வார்?
எல்லாவற்றையும்
அள்ளி வைத்து
ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை
 எப்போதும் போல சனநாயகமெனவும்
அவர்களது குண்டுகளுக்குச்  சாவீடாகும் தேசத்தின்
முற்றத்துள்  வளர்க்கப்படும் முள் முருக்கில்
கட்டப்படும் அரசியல் மனித முன்னேற்றமுமென
ஐ.நா. அடுக்கி வைக்கும்-பிறகென்ன?

அவர்களுக்காய் சாவோம்
அவர்களுக்காய்க் குருதி சிந்துவோம்
அல்லாவின் துணையோடும் 
அரவணைத்த மொழிகளோடும் மதங்களோடும்!

 29.03.2013

Samstag, 16. März 2013

புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச...

வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த    இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ...

=======================
Sugan Kanagasabai:
=======================
ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !
(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் .... )






Sugan Kanagasabai : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !

==============================================
முட்டையில் மசிர் :1
==============================================
இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள்  இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத்  தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது.

இதையொட்டிக் கண்டிப்பதைவிட  முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.

இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.

இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது,  அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.

எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :"இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!".

==================================
முட்டைக்குள் குஞ்சு :2
==================================

தமிழக மாணவர் கலகம் திறக்கும்   அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!

இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச்  சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.

இது, மேற்குலக உயர்ந்த  ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.




தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.

நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.

சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.

-ஶ்ரீரங்கன்
16.03.2013

Dienstag, 12. März 2013

ஈரத்தை மறைத்த நெஞ்சு

ஈனப் பாம்பு

குருதி நினைந்த இலையான்களின் கால்களில்
வலிய யுகத்தின் தடமொன்று சிக்கியது
உயிர் கொண்டு அலையும்  பிணங்களையும்
அவை விட்ட பாடில்லை!

எச்சங்கள்
அழிந்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை
நிச்சயிக்கச் சில முனைப்புகள் 
கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு
எவருரிமை கொள்வார்?

வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகின்றன
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள் என்பதையும் மறுத்து!

ஊழி முதல்வனும்
உயிர் தந்த ஆழியும் எனக்குள் உறங்க
உச்சியின் மத்தியில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த  நெஞ்சு
இதயத்தைக் கீறிக் கிடப்பிலிட





நம்பிக்கை நலிந்த  என் விழிகள்
என் கால்களுக்குப்  பாதைகளைக் காட்டுகின்றன
நினைவையொடுக்கும் மண்டையோடு
மரணத்துக்கு முன்னைய காலத்தை விரும்பினும்

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!

மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய் இன்று!!

எதிர் காலமோ
அன்றி நிகழ் காலமோ
கடந்த காலமோ இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ  உணரத்தக்கதாக அறியேன்

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக் கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக் கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்!

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு !

எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ
பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள்
சிறைப்படுவதற்கு விருப்பற்றது.

-ஶ்ரீரங்கன்
12.03.2013

Montag, 11. März 2013

கொடு நிலவு முறித்த இரவு

தா வார்த்தைகளைத் தறித்து
வாய் பிளக்க முனையும் காலம் இஃது
மூட்டைகளாய்க் கொட்டப்பட்ட ஊனத்துள்
ஊழிக் காலமாய் உணர்வுகள் உதிர

மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில்  உயிர்

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும்  உளைச்சல்



கோலமிட்ட முற்றம்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
தாயவளின் தலை வீழ்வு

எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவைக்கும்  மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது

காடுகளின்  மத்தியில்
கருக்கொண்ட சிசுவுக்கு தேசத்தின்
எந்த நிறமும் நிரந்தரமன்று



கொட்டிய இரவைகளின் நாட்டியத்துள்
எத்தனையோ ஆசைகளும்
ஊழிக் காலத்தின் உறவுக் கோலங்களும்
உவர் மண்ணின் புதை சேற்றில் உருவந் தேட

நாடு கடந்தும் காடுகடந்தும்
அரசமைத்து  நகலெடுத்தே
தமிழருக்குத் தேசம் செய்யும்
நடுத் தெருவில் தலை வீழ்த்தும்  சூனியம்!

இதயம் பிடுங்கப்பட்ட
சதைக் குவியலுள் கனவு தறிக்க
வேசம் தொலைத்தறியாத தலைகளும்
"சிரச் சேதம் செய்விக்கும் " விருப்பொன்று
வினைப் பொருத்தம் பார்த்திருக்கும் உலகெங்கும்!

ஶ்ரீரங்கன்
11.03.2013

Mittwoch, 6. März 2013

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

நெஞ்சில் கீறும் உனது சாவு,
உன் தோழமை நினைவு மக்கள் வெள்ளமாய்
அஞ்சலிக்கும்  தேசம்-உலகம்!

உன்னிழப்பையிட்டு
மௌனித்திருக்கவும் முடியவில்லை;
மனதும் கேட்கிறதாயில்லை -எமக்கு,
எத்தனை கனவுகளை உன் மேல் செலுத்தி
உயிர்ப் பேத்திய சமவாழ்வு இத்துடன் முடிவுரையா?



சி.ஐ.ஏ.கண்ட கனவுக்கு-முயற்சிக்கு
வழி திறந்த புற்றே ,உனக்கொரு நாள் சாவு மணி ஒலிக்காதா?;
எங்கள் தோழன்  சாவேசின் உயிருக்கு,
புரட்சிக்கு முற்று வைத்த வினையே
வெனிசூலா மக்கட்கு விடிவைத் தள்ளி வைத்தாயா?

மீளவும் ,சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
தோழமை உறவுக்கான இரை மீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
வேளைகள் நெருங்குகிறது!மக்களது நலன் அறுக்கும்
கொடுங் காலத்தின் கொள்ளை இது?

உலகெல்லாம்,
 உயிர்க் கொள்ளையிடுபவர்கள்
உயிரோடிருக்க,
 எங்கள் கனவுச் செடிக்குத் தேர் தந்த
வெனிசூலாத் தேச மகனைக் கொன்றாயே கொடிய காலம்!

தென் அமெரிக்கத் தெரிந்த சில
"முந்தைய பொழுதின் " சோசலிசக் கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ  தோழா?





நொந்துலர்ந்த இதயங்களோடு
 துயர்படும் என் கேள்வியெல்லாம்
"கொடிய சாவுக்குள் குலைந்துவிடுமோ நீ,
கட்டிய கோட்டையெல்லாம்?;வெனிசூலாவைக் குதறுமோ
அமெரிக்கக் கழுகு?"

நாடற்றும் ,வீடற்றும்
இழப்பதற்கு எதுவும் அற்ற எம் வாழ்வில்
ஒரு பிடிமானம் நீயாய் இருந்தாய்
இதயம் நோக ,எம் விழிபனிக்க வைத்தாயே தோழா!

தென் அமெரிக்கத் தேசமெல்லாம் கட்டிய
சோஷசலிசக் கோட்டை மெல்ல எழும்போது
"எண்ணை மிதந்துவரச் சாடி கவிழ்ந்த கதையாய் " ஆகுமா தோழா?

என்னதான் எவருரைப்பினும் நீ,
சொன்னதைச் செய்தாய்-செய்ததைச் சிறப்பித்தாய்!
திரண்டெழுந்த மக்கள் மனங்களெல்லாம் உன் வெற்றியின்
கட்டியத்தைச் சொல்லி வைத்தனரே!சோகந்தாம் நீ,
சொல்லாமற் போன செய்தி சோகந்தாம்!

செல்லக் கரந் தந்து,
செவ் வணக்கமிட்டு உன்னைச் சிறப்பிக்க
மனதுக்கு எந்தத் தடுப்புமில்லை -தூரமுமில்லை!;
சென்று வா தோழனே-உனக்கு என் செவ் வணக்கம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
06.03.2013

Sonntag, 3. März 2013

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி
-சில எதிர்க் குறிப்புகள்!

ந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் "தமிழீழ"ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.

அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) "  ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் "சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை" எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.





இனி, இந்த நிகழ்வூக்கத்துள் இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம் வருகிறேன்.

சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html  ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்!

அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய "அவதூறு அரசியலுக்கு" விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் "நற்போக்கு இலக்கிய" முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!

தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது "ஆச்சிகள்" வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே  உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.

இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.

இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.

"துரோகி - எட்டப்பவன்" என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.

நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!

எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!

இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.

இப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் "பொடியள் ஏதோ செய்கிறாங்கள்" என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்"புலிகளுக்கு மறுவாழ்வு"அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?

இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?

இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?

இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த "தூயவாத" அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.

சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே "தூயவர்கள்" இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!





எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய "அவதூறு அரசியல்" இலக்கில் இன்னுமெத்தனை  தலைகளையுருட்டுவோம்? தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட "கொம்யூனிச"ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் "விடுதலை-சமத்துவம்" குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?

அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக "அரசியல்"புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!


இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட"தூய்மைவாதப் பொதுப் புத்தியின்" தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.

அசோக் இக் குறிப்பை "மனசாட்சியின்படி" நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.03.2013

Blog-Archiv