Sonntag, 11. Mai 2014

மே 16.17 ஆம் தேதிகளில் 42-ஆவது இலக்கியச் சந்திப்பு ...

மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில்  புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கிய விருந்தினர்!


எதிர் வரும் மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில்  "புலத்துத் தலித்தியத் தத்துவார்த்தப் போக்கின் பிதா மகன்கள் ஞானம்;தேவதாசன் மற்றும் ஜீவ முரளி தலைமையில்  நடைபெறப்போகும்"ஆள்(ய்)வரங்கை"முன்னிட்டு இந்தப் (க் ) ப(க)ல்வெட்டைப் புனைந்து கொல்(ள்)வேன்:


கட்டியம்:


மட்டக்களப்பு கிழக்கின் தோழனெனுங்கால் திரிகோணமலை தலையெனும் பொருள் நோக்கப் பெறும் தெம்பு வடக்கை மடக்கி மூலையில் கடாசி முடிச்சவிழ்க்கும் இன்றைய எங்கள் முயற்சியில் இனியும் தலை-வால் உதிர்ந்து போகுமெனுங் கண்காணா அச்சம் மெல்ல விலக்கி,விடிவின் தொடர்ச்சி வாழ்வில் போராடுதலாக...


பூமியில் உன் வாழ்வு நீடித்திட உன் எஜமானரின் பாதந்தாங்கித் தெருவில் அவர்கட்காய் குரைத்து வால் அசைப்பாய் கிழக்கே-என் தாயே,தற்குறியே-தவப்பயனே!தலித்தே,தலித்துவமே...தான் நோக்கித் தரப்புக்குச் செக்கசைக்கும் சாமாடே!...







நேரிசை வெண்பா:



"எழுக ஞானமென எழுந்தேன்
புனைந்தேன் புளுகவென கிழக்கின் ஜனநாயகம்
கவிழ்த்தேன் தமிழ்த் தேசக் கருத்தரிப்பை
பாரதக் கனவின் பருப்பு நான் பங்கே எனது மூலம்."



என் புலம்பல்:


மயக்கமுற்ற ஒரு உணர்வு இதயப்பரப்பெங்கும் துள்ளியபடி, துருத்திக் கொண்டவொரு கணப்பொழுதின் மரிப்பில் என்வரையிலான எல்லா நிறைவும் உதிர்ந்துகொள்ள மனதின் அனைத்து வலிகளும் எங்கோ தொழுகையைத் துவக்கியது.அந்தத் தொழுகை எதைப்பற்றியும் இறையோடு இறைஞ்சும் இன்பத்தைப்போன்றதான கருக்கட்டலில்லையென்றபோதும் சுகமே பிரதானமான செயற்பாட்டுக்கரிய சிந்தனையாக என் பாட்டன் காலம் முதல் எங்கள் கணக்கில்"வரவு"வைக்கப்பட்டிருக்கின்றதனால் எல்லோர் தரப்பிலும் ஏதாவது குறைகாணும் வரைமுறையிலான அரிப்பு அப்பப்ப என் பக்கவாட்டு இதயத்துள் சீழ் கட்டியபடி.இது "மயோகாடியற்றிக் றபிளாக" மாறாதிருக்கக் கண்ட இடத்தில் கொண்டை போடுவதில் ஒப்பாரும் மிக்காருமற்ற எனது பூனைப் பிராண்டல். வாழ்வில் நான் அடிக்கடி இப்படி மறைந்தும்,கவிழ்ந்தும் போகிறேன்.

எங்கே சேடம் இழுத்தாலும் அங்கே பாலூற்றிப் புதைக்க ஏதோவொரு உள்ளுணர்வு உந்திய பொழுதுகளில் என் பொன்னான பொதுமனப் புத்தி அவிழ்த்துப் போடும் ஒழுக்கச் சட்டைகளுக்குள் ஒரே அழுக்குப் பிடித்தபடி இருப்பதை நான் பலமுறைகள் கண்டு அதிர்ந்துபோனேன்.அப்படியானவொரு பொழுதை இப்போது என் வானத்தில் நான் கண்டபோது அது என்வரைக்கும் நெருங்குவதில் ஒருவிதச் சலிப்பு என்னை அண்டிக்கொண்டு ஒரு கொலைக்காக என்னைத் தயார்ப்படுத்தியது.அந்தக் கொலையை நான்மட்டும் செய்துகொண்டு,மற்றவர்களின் தயவில் தங்கியே நெடுநாள் காலத்தை ஓட்டவும் தாங்கவொண்ணாத் தொல்லையுள் முடிச்சிட்ட சிக்கலை அவிழ்த்துப்போட்டு என் கணக்கை ஐந்தொகையோடு மூடிவிடவே முனைகிறேன்.


முந்திய வினைப் பயன்களின் அறுவடைக்காக நான் காத்திருந்தபோது அது என்னை இவ்வளவு தூராத்துக்குப் பதவியுயர்த்துமென நான் கனவிலும் நினைத்தே இருக்கவில்லை.வெறும் காகிதத்தில் முற்பகல் விடிந்தபோது முயற்சியே திருவினையாகுமென்ற என் தாயின் வேத வாக்குக்குக் கட்டுப்பட்ட என் சிறுமனசு சரித்திரத்தின் சில பக்கங்களில் என் பெயரின் உச்சரிப்புக் கருக்கட்டுமென நான் நினைத்திருக்கவிலைத்தான். எனினும்,இளிச்ச வாயர்களின் இருப்பு மனத்துள் என் வகையான சொல்லாடல்கள் பெரும் பரபரப்பாகச் செய்யப்பட்டபின்பே நான் எனது முயற்சியின் விளை பயனைக் கண்டேன்.

சற்றே கனவு நிலையாக, நான் எவரிடமும் ஓடிப்போய் ஒதுங்குவதாகக் கண்ட காட்சிகளின் உண்மைகளாக இன்றைய எனது அரசியல் நகர்வுகள் இருப்பதாலும் ஏதோவொரு பாரம்பரியத் தொடர்ச்சி என்னுள் ஓடுகிறது.அது, எனது பூர்வீகம் பற்றிய எனது தேடலில் என்னைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.


தென் கிழக்காசியாவின் வடிவெடிகள் என் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, அந்த அனுபவமும் என்னைப் பின்தொடர்கிறது.மயங்கும் மௌனவுணர்வுகளுக்குள் மண்டையன் குழுக்கூட்டல் வாய்ப்பாடு சற்றுப் பிசகியபடி இப்போது எனக்குள்ளும் ஒரு கூட்டலும் பெருக்கலும் கணிதச் சமன்பாட்டுக்காய் நர்தனஞ் செய்வதில் என்னவோ பாதகம் எனக்குத் தொடர்வதாக நான் உணர்கிறேன்.இது, என்மீதான அதீத விருப்பத்தின் தெரிவில் நான் அன்றிருந்த தெருச்சேவையில், சோடிக்கப்பட்ட லையிட் போஸ்டில் தொங்கிய எனது உடலமாக எனது முன்னைய கனவின் தொடர்ச்சி என்னை ஆட்கொண்டபடி...



உனக்காய் நான் தவங்கொள்ளல்:



"பொய்யே பூனையே
புகழுமாவுடல் மெய்யே
மேதினியே மேன்மைகொள்
மண்ணேமிளிர் நெஞ்சழிந்த நஞ்சே
நாய்த் திமிரே நடுக்காட்டில் எரி பிண்டமே"



ஒவ்வொரு தெரிவும் எனக்குள்.உனக்கோ அல்லது உன் தெரிவுக்கோ நான் பொறுப்பெடுப்பினும் பொல்லாத சளி மூக்கின் முதிசமாக மனத்திரையில் மப்புக் கட்டி என் எண்ணத்தின் கண்ணுள் மண்ணைவாரியிறைப்பது நியாயமா நெருஞ்சி முள்ளே?நேற்றுக் குட்டையைக் குழப்பியதால் ஒன்று உயிரையே நிழலாக்க, நெஞ்சே நஞ்சைக் கக்க நாத்தாண்டவம் நசுக்கிய எக்ஸ்ஸிலில் எரித்த உடலம் உப்பிட்டுக் கருவாடாக்க முடிந்தால் அதையும் எனதாக்க முந்தியடித்திருப்பேன்.துருவமொன்று என்றிருந்த எனக்கு வடக்கும் தெற்கும் என்ற இரு முனைகள் தெரியாதிருந்தபோது வடக்கை அண்டிய கிழக்கை இணைக்க முடியாத இரு துருவமாக்குவதில் என் எஜமானருக்கு நானே எடுபிடியானதான தோரணை சகிக்க முடியாதிருப்பினும் சல்லி வந்தால்"எவன் பொண்டில் எவனோடு போனால் என்ன-லெப்பைக்குக் காசு வந்தால் சரி"என்று ஒரு மனவெழுச்சி எனக்குள் இடியாக-மின்னலாக உரசுவதால் அதை அப்படியே எடுத்தாகவேண்டும்.

காத்திருப்பது ஒரு தயவுக்காய் என்று அன்றறியேன்.அடுத்தவர்களை அடுத்துக் கெடுப்பதில் என்னைவிட எவன் இந்தப் பாரீசு மண்ணில் எக்ஸ்சில் கொண்டான்.எருச் சுமந்த அன்றைய பொழுதை எனக்கு "ஞானம் தோன்றி கதையாகவும்,வரலாறாகவும்" நான் ஆக்கியே தீரணுமென்றவொரு நப்பாசையில் நான் நடு ரோட்டில் இறங்கி நாட்டைக் காட்டைப் பிரித்தாவது நல்ல மனுச நாட்குறிப்பை மகிந்த மாவின் மனசில் எழுதியாகவேண்டும்.

என்னைவென்ற எருப் பொறுக்கி எங்கேதான் இருக்க முடியும்?எருவென்றதை எருவாகக் கனவுகாணுவதாக நீங்கள் எண்ணமுற்றால் அதற்காக நான் என்ன செய்யமுடியும்?அப்பனுக்குத் தோரணங்கட்டிய அன்றைய பொழுதில் அம்புவிட்ட பெண்டுகொண்டு பெரிதுவக்கப் பல வினைசெய்தும் புறம்போக்கு எனக்கு ஒரு மசிரும் உதிரக்காணோம்!இதற்குள்ளே பொதுசனத்துக்கு நான் ஜனநாயகத்தைத் தேடியபடி வடக்கின் மடக்கைத் தட்டிச் சாக்கடையில் இட்டபடி கிழக்கின் முதுகில் அம்புவிட்ட தூக்குச் சட்டிகளை எட்டியெடுத்து எனது கையில் வைத்திருக்கிறேன்.அந்த உணவு புளி(லி)த்துப் போவதற்குள் என் வாய்க்குள் வந்தாகவேண்டும்.தூக்குச் சட்டிக்குள் இருப்பது உணவா அல்லது நேரக் குண்டாவென்பதெல்லாம் புறவுலகப் பாடம்தரும் பொய் உணர்வே.எனவே,பெயரோடு வெளிப்படுத்தும் என் அறிக்கைகளே இப்போது எல்லோருக்கும் பெரு வெடியாக இருப்பதால் அதுவே எனது ஒரு நேரச் சாவின் உளப்பூர்வ நினைவாக இருக்கும்.


விநாயகர் துதி:



"நோக்குண்டாம் நல்ல பசையுண்டாம்
பாராத மாதா நோக்குண்டாம்-மேனி நுடங்காது
ஜனநாயகங்கொண்டு பாரதப் பூஜை-ரோவ் கும்பல் பாதம்
தப்பாமல் சா(ர்)வார் தமக்கு"

அதுவரைக்குமான எனது தேடலில் கிழக்கை விடுவிப்பதான முறைமைக்கு எடுத்தாளப்படும்"ஜனநாயகம்"செருப்படிபடும் உலகச் சரித்திரத்தில் வடக்கின் தொடர்ச்சி இருப்பதான "பெருவெளி"தெரிவாக-தெளிவாகத் தெரிவதாக நான் சொல்லும் புதிய பிராந்திய-பிரதேச வாதம் அன்றைய அண்ணன் இராசதுரையின் விருப்பத்தின் தொடர்சியாகவும் இருப்பதை எவருக்கும் அச்சொட்டாக வெடியிட்டுச் சொல்லும் தருணம் வருமென்றால் அதையுங் காட்டிக்கொள்வதில் எனக்கேதும் தயக்கமில்லை.தருவதற்கும் அணைப்பதற்கும் பக்கத்துப் பாரதமேன்மக்கள் இருக்கும் புதிய கதைத் தொடரில் என் முன்னைய  அச்சம் மிச்சமாக இருப்பதற்கும் இலண்டனில் அண்டக்கிறவுண்ட் பெருவாழ்வு துய்ப்பதற்கும் முடியுமெனில் அடிப்பொடி நான் அழிவதென்பது அசாத்தியமானது.அப்புவுக்குப் பாக்கு வெத்திலை கொடுத்தவர்கள் அண்ணனுக்கு "டி.பி.எல்"பாஸ்போர்ட் காட்டியவர்கள் எனக்காகச் சுவர் ஒழுப்பித் தந்தவர்கள் ஒருபோதும் எம்மால் ஏமாற்றப்படுவதாக உணரவே கூடாது-கூடாது!

கோணேஸ்வரிகளின் கவட்டுக்குள் குண்டுகள் இறங்கலாம்,குடும்பத்தைக் கொண்டு தூக்கு மாட்டலாம்.கிராமமாகக் கலைத்து அகதி முகாங்களை உருவாக்கலாம்.இவையெல்லமே பாரத ஜனநாயகத்தின் பக்க விளைவுகளெனக்கொள்வதில் எனக்கேதும் சிரமமேயில்லை.பாண்டவர் பூமியில் இதுவெல்லாம் தொடர்கதைகளென்பதை எனது அன்றைய ஆசிரியர்த் தொழிலில் நான் அறியாததா?ஜனநாயகத்தை ஏற்மதி செய்யும் எனது எஜமான்களுக்குக் கிழக்கே அவர்களுக்கானதாக இருந்தாகவேண்டும்.சம்பூரில் சங்கூதி அனல்மின்னுக்கு ஆள்கொன்றதன் அர்த்தம் அன்புக்கு அடிபணிவதென்ற தமிழின் அதியுயர் பண்பென்றுகொள்வேன்.கொடுவாள் ஏந்தும் எந்தக் கொம்பரும் எங்கள் கிழக்கின் மேகங்கள் காரிருள் விலக்கி விடிவதைத்தடுக்கும் கிழக்கின் எதிரிகளே!


"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி"

ப.வி.ஶ்ரீரங்கன்