tag:blogger.com,1999:blog-3175741723615250606.post737966398462853739..comments2023-05-15T11:13:26.005+02:00Comments on நிர்மாணம்: கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் ...நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-16747760819488767132013-02-24T15:20:14.689+01:002013-02-24T15:20:14.689+01:00"முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்..."முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் பலவாறாகச் சிதைக்கப்பட்டும்,பிரபாகரன் சித்திரவதைக்குட்பட்டும்,மண்டை பிளவுண்டும் செத்துப் போயினர்.இந்தத் துன்பியல் நிகழ்வு 2009 மே 16-17-18 ஆம் தேதிகளில் நடைபெற்றிருக்க முடியும்."<br /><br />மேற்சொன்ன தேதிதிகள், புலித் தலைவர் பிரபாகரன் குடும்பத்தின் உண்மையான இறுதி முடிவின் தேதிகளாகும்."<br /><br />நீங்கள் இந்த செய்தியைத்தான் விரும்பி எதிர் பார்த்தீர்களா? <br /><br />ஆனால் நடந்தது வேறு? 15ம் திகதியே மகள் துவாரகா முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்கொலை தாக்குதல் நடத்தி வீர சாவடைந்தார். 17ம் திகதி என்று நினைக்கின்றேன் திருமதி. மதிவதனி சயனைடே அருந்தி தற்கொலை செய்கின்றார். அவருக்கான சயனைடே மருந்து மருத்துவ பிரிவால் தயாரிக்கப்பட்டது. பின் அவர் உடல் எரிக்கப்பட்டது. இதே நாளில் தான் ஏற்கனவே காயமடைந்து இருந்த சொர்ணம் அவர்களும் சயநைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்களுடைய உடல் இராணுவத்துக்கு கிடைக்க வில்லை. <br /><br />ஆனால் பாலச்சந்திரன் சயநைட் அருந்தவில்லை. தாயார் அருந்த கொடுக்கவில்லை. அவன் எமது முகாமாக இருந்த ஒரு வீட்டில் இருந்தான். அவனுக்கு என்ன நடந்தது என்பது பின்பு தான் தெரியும்.<br /><br />எம்மை (மருத்துவ பிரிவு) போகும்மாறு பணிக்கப்பட்டது. நாம் புறப்பட்டு இராணுவ பகுதி வந்தோம். அரசியல் துறை தவிர்த்த ஏனைய தலைவருடன் நேரடியாக தொடர்பு பட்ட அனைத்து தளபதிகளும் கடைசிவரை போரிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.<br /><br />இரண்டு அணியாக பிரிந்து இருந்தனர். ஒன்று தலைவருடன் இருந்தது. மற்றையது பொட்டு அம்மான் தலைமையில் இருந்தது.<br /><br />பொட்டு தலைமையிலான அணிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. <br />Anonymousnoreply@blogger.com