tag:blogger.com,1999:blog-31757417236152506062024-03-14T08:04:55.338+01:00நிர்மாணம்தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் தேவையாகும்நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-3590700267280531802016-03-07T19:51:00.000+01:002016-03-07T19:55:22.776+01:00மெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்...<div class="_4lmk">
சின்னமடு மாதா!</div>
<div class="_2yud clearfix">
<div class="_3uhg">
<span class="_4_mf"></span><br />
<div class="_6a _43_1" id="u_jsonp_15_b">
<div class="_6a uiPopover" id="u_jsonp_15_c">
<span class="_4_mf"><a class="_42ft _4jy0 _55pi _5vto _55_p _2agf _p _1zg8 _4jy3 _517h _51sy _59pe" data-hover="tooltip" data-tooltip-alignh="right" data-tooltip-content="Öffentlich" href="https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/10152911715482168?notif_t=like#" id="u_jsonp_15_d" rel="toggle" role="button" style="max-width: 26px;"><span class="_55pe" style="max-width: 12px;"></span></a></span></div>
</div>
<span class="_4_mf">
</span><span class="_5q4y"><br /></span><b><span class="_19ij">அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,</span></b></div>
</div>
<div class="_39k5" style="text-align: justify;">
<b><span class="_19ij">மெய்மையும் புனைவும் இருத்தலை </span></b><b><span class="_19ij">நோக்கிக் கை அசைக்க…</span></b><br />
<br />
<b><span class="_19ij"> </span></b>
<br />
<blockquote>
<blockquote class="_2cuy _509u _2vxa tr_bq">
<span style="background-color: yellow;"><span class="_19ij">>> நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு ”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான். <<</span></span></blockquote>
</blockquote>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="300" id="u_jsonp_15_1" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12729210_10207876156174729_296794812056362199_n.jpg?oh=9ac1da03abe2b3715d0c5c1d515b8648&oe=5764FFC3" width="400" /></div>
</figure><br />
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மெல்லப் பாடும் தென்றலும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மெட்டு விரிக்கும் முல்லையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கண்ணைத் திறந்து வைத்துக்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கப்பல் கட்டும் தம்பியும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்”</span></div>
</blockquote>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<br />
<br />
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_2" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/p720x720/12823294_10207876055372209_6430318019043091564_o.jpg" width="400" /></div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<span class="_19ij">அது ஒருகாலம்.மழைக் காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டு கிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவ வேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள் ; இப்பவும் இருக்கிறாள்!</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சிவா…</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்…</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம். ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<br />
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_3" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xlf1/t31.0-8/p720x720/12792303_10207876057652266_8878602496792805165_o.jpg" width="400" /></div>
</figure><br />
<br />
<br />
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">“சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சகஜமாக்கும் நாட்பொழுதில்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்”</span></div>
</blockquote>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.கூடார வண்டில்களது தொடரணியைக் கண்டும் ; சில்லாலை -ஏழாலை மக்களது ஐப்பசிப் பூசைக்கான அவர்களது தரிப்பிலும் ; அவர்களை நனைக்கும் மழையிலும் குயில் கூவுவது எனக்கொரு நிறைவான காலம்! ; சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">தற்போது எனது சின்ன மடுமாதாவை உரு மாற்றிவிட்டார்கள்!</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அவள் ,இருப்பிடத்தை தமக்கேற்றமடி மாற்றிவிட்டார்கள்.அவளது ஒரு கோடி எனது முற்றம்.அம்மாவின் மடியுள் கிடந்தபடி பாதர் சிங்கராசா அவர்களது நீண்ட - பொலிவான தமிழைக் கேட்டிருக்கிறேன்.என் மாதாவின் குருசு மரத்தைச் சாய்த்தவர்கள் எவர்? </span><br />
<br />
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_4" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/p720x720/12778804_10207876065092452_1130781817730053788_o.jpg" width="400" /></div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<br />
<span class="_19ij">கடந்த 48 வருடங்களுக்கு முன்னாள் நான் ,அவளது கோவிற் தரை நிலத்தில் "அ.ஆ.இ..."எழுதக் கற்றேன்.எனக்கு -எங்களுக்கு வாய்த்த ரீச்சர் அக்கா ,ரீற்ரா கியோகுமார்.அவரது தமிழ் எழுத்துக்கள் அச்செழுத்தைவிட அழகானது -அவரைப் போலவே!யஸ்ரின் டயசு; யஸ்ரின் அன்ரூ ; அமலோற்பவநாதன் ;சிவகுமார் ; சகாயமல்லிகா ;அம்சற்வனி ;சகாயமலர் ; தமிழ்ச் செல்வி ;லிற்பின் மேனாக ;ஞானமலர் ;ஞானகரன் ;பாலகுமார் ;விசயகுமார் ;கேதாரம் ; ஶ்ரீகாந்தராசா ;யோண் டேவிட்டு ; எட்மன் பீரூ எனப் பலர் என் பள்ளித் தோழர்கள்.நாங்கள் ஓடியாடிப் பாடித்திரிந்த வளவு -மழைவெள்ளங்கண்டு நிரம்பிய அவளது வளவில் நீர் விளையாடிய அந்த முற்றம் அன்பும் ,அரவணைப்புமிக்க என் மாதாவின் வளவு இன்று, வெகுவாக மாறிவிட்டது.கடந்த 31 ஆண்டுகளாக அவளைவிட்டு நான் நீண்ட தூரம் கடந்துகொண்டேயிருக்கிறன். இந்த ஆண்டு, 2016 ஆடிப் பெருநாளுக்கும் நான் உன்னிடம் வருவதற்கு வழியில்லை! ; என் மரணம் உன்மடியிலேயே நிகழவேண்டுமென்பது என் நீண்ட நாளாசை! ;அதற்காகவா என்னையின்னும் அழைக்கவில்லை? </span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அன்று ,நாங்கள் தவமிருக்கும் குருசு மரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை. கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும், விளையாட்டுச்சாமான் விற்கும் ”சோனக”க் கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும். வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம், எழுந்து ஆலமரக்கிளைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப “கம்பு”விளையாடுவோம்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">காலையிற் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் ,மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும். சில வேளைகளில் தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினுக்கு மாற்றாகக் கு.வேலுப்பிள்ளைக் கிழவரது லையிட் எஞ்சின் வரும்.நாங்கள் அவருக்குக் கிட்டப் போவதேயில்லை! ; அந்த மனுசன் திட்டுவார்.கண்ணைச் சிமிட்டும் லைட்டுக்கள் எங்களுக்கு மனதில் வர்ணயாலத்தைப் பரவவிடும்.நாம் மகிழ்ந்து-வாழ்ந்தோம்! </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_5" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/t31.0-8/p720x720/12829482_10207876089013050_8920014108324679653_o.jpg" width="400" /></div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<br />
<br />
<span class="_19ij">இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தையும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் ,எமக்குள் ஒட்டும்போது, எமது உயர்தரப் பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">பின்னாளில்,ஊரும்,உறவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ, அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம். கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span><br />
<br />
</div>
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">“எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மெல்ல விலகும் வாழ்வோடும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!”</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
</blockquote>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு”சாத்தான் வந்துவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்”என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அவனது “கத்தலில்” நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான். இலண்டனில் கற்ற கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_6" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xta1/t31.0-8/p720x720/10273348_10207876122133878_6155945310947701793_o.jpg" width="400" /></div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<br />
<br />
<br />
<br />
<span class="_19ij">இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது ; தற்போது ...அல்லையூர் இணையம்!</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக் கதைகளுண்டு.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன!</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என…)கொண்டு,</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">விளக்கப்படுத்திக்கொள்வோம்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">அப்போதெல்லாம்”தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ”என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி, அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.</span><br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று, அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்…</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_7" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/p720x720/12829024_10207876129614065_3569353857000393139_o.jpg" width="400" /></div>
</figure><br />
<br />
<br />
<br />
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">“பின்னைய பொழுதொன்றில்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">தூங்குவதற்கு முன்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சுரக்கும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">எமது இருப்புக்காய்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">நான் இப்போது தொடர்கிறேன்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">உன்னைக் கொல்வதற்கு!”</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
</blockquote>
<br />
<br />
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">நினைத்துப் பார்க்கிறேன்.</span></div>
</blockquote>
<br />
<br />
<blockquote class="tr_bq">
<div class="_2cuy _3dgx _2vxa">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">“கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது”</span></div>
</blockquote>
<br />
<br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த”சேரிப் பொடியன்கள்”தயவு அதிகமாகவிருந்தது.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.</span><br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<br />
<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" height="266" id="u_jsonp_15_8" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xlt1/t31.0-8/p720x720/12841244_10207876132934148_5205027767689534977_o.jpg" width="400" /></div>
</figure><br />
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<br />
<br />
<span class="_19ij">பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">இளமையின் வலி?</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும் சிலகாலம் உயிர்த்திருக்கிறது!</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் “ஏலங்கள் விடப்படும்”குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுத்தார் -அது முள்ளி வாய்க்காலுக்குப்பின்பும் தொடர் கதைதாம்!</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சின்னமடுமாதாவும் விலக்கல்ல.</span><br />
<br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">சேராது இயல்வது நாடு.”-குறள்</span><br />
<br />
<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij"> </span></div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<span class="_19ij">ப.வி.ஸ்ரீரங்கன்</span></div>
</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-70558216342215099142016-01-05T01:59:00.000+01:002016-01-05T02:02:49.288+01:00தமிழ்த் தேசியம் :கட்சிகளது அரசியல்<br />
<div class="_39k5">
<div>
<blockquote class="_2cuy _509u _2vxa">
<span class="_5yi_">ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் நம்பிக்கை வைப்போம் ;</span></blockquote>
<blockquote class="_2cuy _509u _2vxa">
<span class="_5yi_">இலங்கையின் தேசியவின முரண்பாட்டுக்ககான தீர்வுத் திறவுகோல் இந்தியாவிடமேதாம் - நம்புவோம்!</span></blockquote>
<div style="text-align: justify;">
எமது மக்களும் ,மண்ணும் அந்நிய இனங்களிடம் அடிமையாக்கப்பட்டு எதிர்கால அரசியவாழ்வு இருண்டுகிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் பல்வேறு அகமுரண்படுகள் (பிரதேசவாதம்,சாதி; பெண்ணடிமை ;குறுந்தேசியவாத ஒடுக்குமுறை (இஸ்லாமிய மக்களைப் பூண்டோடு கிள்ளியெறிந்த...) வர்க்க ஒடுக்குமுறை போன்ற பல்வேறு தளைகளே காரணமாகவிருக்கின்றன.இந்த அகமுரண்பாட்டை முழுமையாகக் கையகப்படுத்தி நம்மை ஒடுக்குபவர்கள் தேசிய அரசுகளாக நம்மைச் சுற்றி தம்மை நிறுவியுள்ளனர்.நமது அக முரண்பாட்டை நமக்குள் இருக்கும் அதிருப்பதியாளர்களைப் பயன்படுத்தியே நம்மை வடக்கும்,கிழக்குமாகப் பிளந்த சக்திகள்(இந்திய -இலங்கைக் கூட்டும் மற்றும்,அமெரிக்க ஏகாதிபத்தியம்) நமது மக்களை முழுமையாகத் தமது அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.நாம் இந் நூற்றாண்டிற்றாம் மிகவும் மோசமானவொரு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.இதற்கான முழுப்பொறும் புலிவழியான போராட்டச் செல்நெறிக்கே!<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _use img" height="182" id="u_9h_0" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/1454932_10207473622591641_5037919916369205233_n.jpg?oh=9d12db321f7d52bc11888d9c9c91018c&oe=56FF703D" width="400" /></div>
</figure>இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில்முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை அரசியல் மயப்படுத்தி ,ஐக்கியமாக்கியமாக்கியவொரு வலுவான வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ள மறுத்து எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் நகர்வை பிழைப்புவாத வியாபார யுக்திகளைக்கொண்டு நசுக்கி வருகிறது.இத்தகைய குழிபறிப்புக் கட்சிவாத ,வர்த்தக நோக்கு நிறைந்த அரசியலானது நம்மை அரசியற்றலமைதாங்க - வழிநடத்தத்தகுதியற்ற கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்க வைத்திருக்க முனைகிறது.இதன் மூலம் தமது கட்சிசார்ந்த வர்த்தக நலன்களை அந்நிய சக்திகளது சலுகைகளின்வழி அடையமுனைவதில் ஈழத்து மக்களது தேசியவிடுதலையை -உரிமைகளை தமது வர்த்தகப்பண்டமாக அந்நியர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அது மூலதனச் சுழற்சியில் ஒருவிதக் கச்சாப்பொருளாக -பண்டமாகப்பட்டு பரிவர்த்தனையில் பல தமிழ்ப் பிழைப்புவாதிகளைச் செல்வந்தர்களாக்கி உள்ளதென்றவுண்மை பல தமிழ் அரசியல் வாதிகளால்-ஊடககங்களால் மறைக்கப்பட்டு நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.இன்றைய தமிழர் பேரவை மற்றும் மரபார்ந்த தமிழ்த் தேசியக்கட்சிகள், கூட்டமைப்புகள் மற்றும் இயக்கவாதத் தலைமைகள் இதற்கு வெளியில் இயங்கவே இல்லை!</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
புரையோடிப்போன எதிரிகள்:</div>
<div style="text-align: justify;">
<br />
எதிரிகள் பல இரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிந்தது.அதைக் கூடத் தமது வர்க்க நலனின் பொருட்டுத் தமிழ் ஆளும் வர்க்கத் தரகு மூலதனம் சிங்கள மூலதனத்தோடு பேரமிட்டுத் தமது வர்த்தக மூலதனமாக்கிய அரசியலானது சிங்களப் பெருந் தேசியவாதத்துக்கும் -பௌத்த மதவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் பின் கதவு வழியாகப் பச்சைக்கொடி காட்டியதென்பது வரலாறாக நீள்கிறது.<br />
நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழர் மகாசபை -தமிழ்க் காங்கிரஸ்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சிகளால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு, அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.பின்ளைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின்முள்ளி வாய்க்காலில் பிரபாகரனோடு பல்லாயிரம் தேச பக்த இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டு இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் தமிழர் அரசியலது இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!<br />
<figure class="_2cuy _4nuy _2vxa"><div class="_h2x">
<img alt="" class="_h2z _297z _usd img" id="u_9h_1" src="https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12494900_10207473625831722_3344733406329532687_n.jpg?oh=e8a99c985194c05fc1b119e1bc427ecb&oe=57067942" /></div>
</figure>இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது கட்சிவாத நலன்களை முதன்மைப்படுத்தியும்,கட்சிகளது இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு முன்னாள்ஆயுதக் குழுக்கள்மற்றும் புதுப்புதுக் கூட்டணிகள் யாவும் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலுகுகள்,கோரிக்கைகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். </div>
<div style="text-align: justify;">
<br />
எமது தேசிய அபிலாசைகள்:</div>
<div style="text-align: justify;">
<br />
நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது பிரதேசப் பிளவுவாத நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.இங்கு பிள்ளையான் குழுவின்வீழ்ச்சி இதுசார்ந்தவொரு சிறு இடைவெளியை நமக்கு இட்டிருக்கிறது.அந்த இடைவெளியில் முதலில் வடக்கும் ,கிழக்கும் அரசியல் ரீதியாக மீளவிணையும் அரசியல் ஐக்கியம் கட்டப்படவேண்டும்.<br />
நம்மை,நமது வாழ்வைக் கேவலமான கும்பல்களாக்க முனையுமிந்த பிரதேசவாதப் பிளவுவாத அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடித்தனர். இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம்இப்போதும் கட்டுகிறார்கள். இப்டித்தாம் வரதராஜப்பெருமாள் - பிள்ளையான்போன்ற கொடிய ஆயுதாரிகள்அரசியலில் இந்திய -சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு அடியாளாக மேலெழுந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
திரு.சம்ப(ம)ந்தனோ அன்றிச், சங்கரியோ அல்ல டக்ளஸ் தேவாநந்தாவோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்ற மீளவும் தொடங்கிவிட்டார்கள். இவர்கள், எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக மாகாணசபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.</div>
<div style="text-align: justify;">
<br />
பல்முனை ஒடுக்குமுறையும்,<br />
அவைகளின் அமுக்கம்:</div>
<div style="text-align: justify;">
<br />
இன்றோ பல்வேறு அரச - பொருளாதார ஜந்திரத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப்பரிணாமிக்கத்தக்க புரட்சிகரமானவொரு அரசியற்பாதை காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br />
மாற்றுத் தலைமையின் <br />
அவசியம் உணரப்பட்டதா? :</div>
<div style="text-align: justify;">
<br />
பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலிபள் மறுபுறமாகவும்எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!</div>
<div style="text-align: justify;">
<br />
ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br />
இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br />
இந்த இழி அiசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?</div>
<div style="text-align: justify;">
<br />
மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் நம்மால் செய்து முடிப்பதற்கு மாற்றுச் சக்திகளுக்கும்,மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட நிலையில் இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா?</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
இன்றைய இந்தத் தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்மாற்றுச் சக்திகளால் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு மாற்றுத் தலைமை மக்கள் சார்ந்து மக்களால் கட்டப்படவேண்டிய நிலையென்றுமில்லாவாறு அவசியமானது.</div>
<div style="text-align: justify;">
<br />
எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.மகிந்தாவைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த அதிகாரவர்க்கமானது அதனிடத்தில் இருத்தப்பட்ட மரபார்ந்த அந்நிய ஏவற் கட்சிதாம் யு.என்.பி. இப்போது மைத்திரி தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றிய பின்பும் அவர்களை மக்கள் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியவர்கள் இந்தச் மாற்றுச் சக்திகளுக்குள் இருந்த அந்நிய எடுபிடிகள் இல்லையா?</div>
<div style="text-align: justify;">
<br />
எனவே, ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.மாற்றுச் சக்திகள் தமது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் காலத் தேவையோடு பாரிய எதிப்பு அரசியலைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டு மீளவும் மக்களை ஏமாற்றியழித்து ,நமது போராட்டவுணர்வையும்,ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அரசியலையும் பூரணமாகக் கருத்தியல் ரீதியாக அழித்து அநாதவராக்கப் போகிறது. <br />
அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத் தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்ப் பிழைப்வாதக் கட்சிவாதத் தலைவர்களும் ,கட்சிகளும்,போலிக் குழுக்களும் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் மெல்ல வலுவாக்கப்பட்டு நிரந்தரமாகப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br />
இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொன்ற வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தருணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!<br />
இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?<br />
</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">"மக்களே!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;"><br /></span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">தெரு நாய்களுக்கும் இரையாக்கின</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;"><br /></span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">நீங்கள் வாழ்ந்த</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">மண்ணைச் சுற்றிலும்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">சிந்தின,உங்கள் உற்றோரினது</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">துரோகிகளென்றும் கதைவிட்டு</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<span style="background-color: yellow;">மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே!!!"</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div class="_2cuy _3dgx _2vxa">
<br />
<a name='more'></a><br /></div>
</div>
</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-68771541124845285922015-01-04T01:52:00.000+01:002015-01-04T02:27:35.776+01:00பொது வேட்பராகிய மைத்திரிபாலவுக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்<blockquote class="tr_bq">
"இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்."</blockquote>
<br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">த</span>ற்போது,வரும் ஜனாதிபதித் தேர்தற் பரப்புரைகளைக் கவனிப்பவர்களுக்கு பல சிக்கலான கேள்விகள் மண்டையைக் குடைகிறதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு இரத்தவழுத்தம் அதிகமாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகிந்தா தலைமையிலான இந்தப் பாசிச அரசைக் குறித்து நமக்கு வகுப்படுத்த பலர் முள்ளி வாய்க்காலுக்குமுன்னும், பின்னுமொரு தர்க்க நியாயத்தை வழங்கி வந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது,மகிந்தா அரசானது - இல்லை இன்னுஞ் சிறப்பாகச் சொல்வதானால்இலங்கை அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டதுக்குட்பட்ட அரசென்றும்,அது ஜனநாயகத் தன்மையுடைய அரசென்றும், நீதி பரிபாலனம் அங்கு ஓரளவேனும் சிறப்பாக இருப்பதாகவும் கூறிவந்தனர். இதை முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பும் பலர் கூறிக்கொண்டனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறப்பாகத் தலித்துவ மேம்பாட்டுக் கழகத் "தோழர்" தேவதாசனும்,அவரது தத்துவ ஆசிரியரான நிர்மலா குழுவுறுப்பினர் அண்ணன் இரகவனும் மிக நேர்த்தியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று,பார்த்து வழிமொழிந்தார்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிர்மலா அம்மையார் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவரது மொழியில் இலங்கையின் மகிந்தா தலைமையிலான அரசைச் சிலாகித்துப் பேசிப் புலிப் பயங்கரவாதத்தைச் சாடிக்கொண்டே வந்தார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-zlQkCYBW0YM/VKiNEbvDZgI/AAAAAAAAAX4/oSQ2V8FKePw/s1600/Blackjuly.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-zlQkCYBW0YM/VKiNEbvDZgI/AAAAAAAAAX4/oSQ2V8FKePw/s1600/Blackjuly.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்" தம்சார்புக்குப் பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனி என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.அவர்களில் இப்போது இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் <a href="https://www.colombotelegraph.com/index.php/tamil-vote-disaster-for-rajapaksa-with-low-iq-upfa-propaganda-admitting-mass-murder/">கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி</a> மகிழ்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டேய்,உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும் ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோருகிறார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன் <a href="https://www.facebook.com/suseenthiran/posts/10152531782125373?pnref=story">சுசீந்திரன்</a>வரை கும்பிட்டுக் கேட்டுக்கொள்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியே எல்லோரும் கூறிக்கொள்ளும்போது தமிழர்கள் தலையைச் சொறிவதைத்தவிர என்ன செய்ய முடியும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையை மாறி,மாறி-மாறி ஆண்ட இருபெருங்கட்சிகளும் அவையோடு கூட்டு வைத்த இடது-வலது,முரடு-கரடுகளெல்லாம் இதுவரை என்ன செய்தன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் பூர்வீக நிலப்பரப்பில் இந்தச் சட்டவாத அரசு மூலம் ,நீதி, ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி நிலைத்திருந்ததென்பதை அறியாத-புரியாத,உணராத நமக்கு இன்று , இது என்ன சாமான்கள் என்றுதாம் எண்ணதோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இராணுவ முகாங்களும்,பொலிஸ் நிலையங்களும் அவர்களது தார்ப்பாரும் நிலவியவொரு பிரதேசத்துள் இதை எப்படிப் புரிந்துகொள்வது நண்பர்களே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ஓட்டுக்கட்சிகளது தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் இதுவரை எமக்கு அப்படியொரு அரசவொழுக்கங்கள் இருப்பதாகக் காட்டவில்லையே!இனியும் அதைக் காட்டுவார்களென்று எந்த நாயும் வகுப்பெடுக்க முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மீள ஜனநாயத்தை,நல்லாட்சியை,சுதந்திரத்தை,நீதிபரிபாலனத்தை "க் கட்டியொழுப்ப [ return to democracy, good governance, an independent judiciary, etc. ]மைத்திரிக்கு வாக்களிக்கக் கோருபவர்களே,இவையெல்லாம் முன்னம் நமக்குள் இருந்தவைகளா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவை இருந்ததென்றால் ஏன் இனவொடுக்குமுறையை காலா காலமாக நமக்குள் இந்த அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் பல இலட்சம் மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் வருடா வருடங்கள் இனக் கலவரங்கள் தூண்டப்பட்டன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் பல இலட்சம் துருப்புகள் நமது மண்ணை அபகரித்து ஆக்கிரமித்தன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் சத்தியாக்கிரகக்காரர்கள் மண்டை பிளவுண்டனர்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் நமது கோணேஸ்வரிகளது கவட்டுக்குள் குண்டுகள் வெடித்தன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை மொட்டையடித்தவர்கள்,நம்மிடம் வந்து, இந்த எட்டாக் கனிகளைக் குறித்து வகுப்பெடுக்கும்போது கொஞ்சமும் கூச்சமில்லையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கள மக்களிடம் சொல்வதைத் தமிழ்பேசும் மக்களிடமும் சொல்ல முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் ஒடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமென்பதை "ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி,நீதிபரிபாலனம்" என்று சொல்லும் இந்தத் திமிரை யாரடா உங்களுக்குச் சொல்லித் தந்தது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
04.01.2015</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-25155023615121228722014-05-11T23:32:00.004+02:002014-05-11T23:37:17.128+02:00 மே 16.17 ஆம் தேதிகளில் 42-ஆவது இலக்கியச் சந்திப்பு ... <span style="color: blue;"><span style="font-size: large;">மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கிய விருந்தினர்!</span></span><br />
<br />
<br />
<span style="background-color: yellow;">எதிர் வரும் மே 16.17 ஆம் தேதிகளில் ஃபெர்லினில்[Berlin] நடைபெறும் 42-ஆவது இலக்கியச் சந்திப்பில் "புலத்துத் தலித்தியத் தத்துவார்த்தப் போக்கின் பிதா மகன்கள் ஞானம்;தேவதாசன் மற்றும் ஜீவ முரளி தலைமையில் நடைபெறப்போகும்"ஆள்(ய்)வரங்கை"முன்னிட்டு இந்தப் (க் ) ப(க)ல்வெட்டைப் புனைந்து கொல்(ள்)வேன்:</span><br />
<br />
<br />
<span style="font-size: large;">கட்டியம்:</span><br />
<br />
<br />
மட்டக்களப்பு கிழக்கின் தோழனெனுங்கால் திரிகோணமலை தலையெனும் பொருள் நோக்கப் பெறும் தெம்பு வடக்கை மடக்கி மூலையில் கடாசி முடிச்சவிழ்க்கும் இன்றைய எங்கள் முயற்சியில் இனியும் தலை-வால் உதிர்ந்து போகுமெனுங் கண்காணா அச்சம் மெல்ல விலக்கி,விடிவின் தொடர்ச்சி வாழ்வில் போராடுதலாக...<br />
<br />
<br />
பூமியில் உன் வாழ்வு நீடித்திட உன் எஜமானரின் பாதந்தாங்கித் தெருவில் அவர்கட்காய் குரைத்து வால் அசைப்பாய் கிழக்கே-என் தாயே,தற்குறியே-தவப்பயனே!தலித்தே,தலித்துவமே...தான் நோக்கித் தரப்புக்குச் செக்கசைக்கும் சாமாடே!...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<a href="http://1.bp.blogspot.com/-ymHtry01lYg/U2_qUowroOI/AAAAAAAAAXo/LdUrqss1Rok/s1600/ilakkiyam42BERLIN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-ymHtry01lYg/U2_qUowroOI/AAAAAAAAAXo/LdUrqss1Rok/s1600/ilakkiyam42BERLIN.jpg" height="226" width="320" /></a><br />
<br />
<br />
<br />
<span style="font-size: large;">நேரிசை வெண்பா:</span><br />
<br />
<br />
<br />
<span style="color: blue;">"எழுக ஞானமென எழுந்தேன்</span><br />
<span style="color: blue;">புனைந்தேன் புளுகவென கிழக்கின் ஜனநாயகம்</span><br />
<span style="color: blue;">கவிழ்த்தேன் தமிழ்த் தேசக் கருத்தரிப்பை</span><br />
<span style="color: blue;">பாரதக் கனவின் பருப்பு நான் பங்கே எனது மூலம்."</span><br />
<br />
<br />
<br />
<span style="font-size: large;">என் புலம்பல்:</span><br />
<br />
<br />
மயக்கமுற்ற ஒரு உணர்வு இதயப்பரப்பெங்கும் துள்ளியபடி, துருத்திக் கொண்டவொரு கணப்பொழுதின் மரிப்பில் என்வரையிலான எல்லா நிறைவும் உதிர்ந்துகொள்ள மனதின் அனைத்து வலிகளும் எங்கோ தொழுகையைத் துவக்கியது.அந்தத் தொழுகை எதைப்பற்றியும் இறையோடு இறைஞ்சும் இன்பத்தைப்போன்றதான கருக்கட்டலில்லையென்றபோதும் சுகமே பிரதானமான செயற்பாட்டுக்கரிய சிந்தனையாக என் பாட்டன் காலம் முதல் எங்கள் கணக்கில்"வரவு"வைக்கப்பட்டிருக்கின்றதனால் எல்லோர் தரப்பிலும் ஏதாவது குறைகாணும் வரைமுறையிலான அரிப்பு அப்பப்ப என் பக்கவாட்டு இதயத்துள் சீழ் கட்டியபடி.இது "மயோகாடியற்றிக் றபிளாக" மாறாதிருக்கக் கண்ட இடத்தில் கொண்டை போடுவதில் ஒப்பாரும் மிக்காருமற்ற எனது பூனைப் பிராண்டல். வாழ்வில் நான் அடிக்கடி இப்படி மறைந்தும்,கவிழ்ந்தும் போகிறேன்.<br />
<br />
எங்கே சேடம் இழுத்தாலும் அங்கே பாலூற்றிப் புதைக்க ஏதோவொரு உள்ளுணர்வு உந்திய பொழுதுகளில் என் பொன்னான பொதுமனப் புத்தி அவிழ்த்துப் போடும் ஒழுக்கச் சட்டைகளுக்குள் ஒரே அழுக்குப் பிடித்தபடி இருப்பதை நான் பலமுறைகள் கண்டு அதிர்ந்துபோனேன்.அப்படியானவொரு பொழுதை இப்போது என் வானத்தில் நான் கண்டபோது அது என்வரைக்கும் நெருங்குவதில் ஒருவிதச் சலிப்பு என்னை அண்டிக்கொண்டு ஒரு கொலைக்காக என்னைத் தயார்ப்படுத்தியது.அந்தக் கொலையை நான்மட்டும் செய்துகொண்டு,மற்றவர்களின் தயவில் தங்கியே நெடுநாள் காலத்தை ஓட்டவும் தாங்கவொண்ணாத் தொல்லையுள் முடிச்சிட்ட சிக்கலை அவிழ்த்துப்போட்டு என் கணக்கை ஐந்தொகையோடு மூடிவிடவே முனைகிறேன்.<br />
<br />
<br />
முந்திய வினைப் பயன்களின் அறுவடைக்காக நான் காத்திருந்தபோது அது என்னை இவ்வளவு தூராத்துக்குப் பதவியுயர்த்துமென நான் கனவிலும் நினைத்தே இருக்கவில்லை.வெறும் காகிதத்தில் முற்பகல் விடிந்தபோது முயற்சியே திருவினையாகுமென்ற என் தாயின் வேத வாக்குக்குக் கட்டுப்பட்ட என் சிறுமனசு சரித்திரத்தின் சில பக்கங்களில் என் பெயரின் உச்சரிப்புக் கருக்கட்டுமென நான் நினைத்திருக்கவிலைத்தான். எனினும்,இளிச்ச வாயர்களின் இருப்பு மனத்துள் என் வகையான சொல்லாடல்கள் பெரும் பரபரப்பாகச் செய்யப்பட்டபின்பே நான் எனது முயற்சியின் விளை பயனைக் கண்டேன்.<br />
<br />
சற்றே கனவு நிலையாக, நான் எவரிடமும் ஓடிப்போய் ஒதுங்குவதாகக் கண்ட காட்சிகளின் உண்மைகளாக இன்றைய எனது அரசியல் நகர்வுகள் இருப்பதாலும் ஏதோவொரு பாரம்பரியத் தொடர்ச்சி என்னுள் ஓடுகிறது.அது, எனது பூர்வீகம் பற்றிய எனது தேடலில் என்னைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.<br />
<br />
<br />
தென் கிழக்காசியாவின் வடிவெடிகள் என் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, அந்த அனுபவமும் என்னைப் பின்தொடர்கிறது.மயங்கும் மௌனவுணர்வுகளுக்குள் மண்டையன் குழுக்கூட்டல் வாய்ப்பாடு சற்றுப் பிசகியபடி இப்போது எனக்குள்ளும் ஒரு கூட்டலும் பெருக்கலும் கணிதச் சமன்பாட்டுக்காய் நர்தனஞ் செய்வதில் என்னவோ பாதகம் எனக்குத் தொடர்வதாக நான் உணர்கிறேன்.இது, என்மீதான அதீத விருப்பத்தின் தெரிவில் நான் அன்றிருந்த தெருச்சேவையில், சோடிக்கப்பட்ட லையிட் போஸ்டில் தொங்கிய எனது உடலமாக எனது முன்னைய கனவின் தொடர்ச்சி என்னை ஆட்கொண்டபடி...<br />
<br />
<br />
<br />
<span style="font-size: large;">உனக்காய் நான் தவங்கொள்ளல்:</span><br />
<br />
<br />
<br />
<span style="color: blue;">"பொய்யே பூனையே</span><br />
<span style="color: blue;">புகழுமாவுடல் மெய்யே</span><br />
<span style="color: blue;">மேதினியே மேன்மைகொள்</span><br />
<span style="color: blue;">மண்ணேமிளிர் நெஞ்சழிந்த நஞ்சே</span><br />
<span style="color: blue;">நாய்த் திமிரே நடுக்காட்டில் எரி பிண்டமே"</span><br />
<br />
<br />
<br />
ஒவ்வொரு தெரிவும் எனக்குள்.உனக்கோ அல்லது உன் தெரிவுக்கோ நான் பொறுப்பெடுப்பினும் பொல்லாத சளி மூக்கின் முதிசமாக மனத்திரையில் மப்புக் கட்டி என் எண்ணத்தின் கண்ணுள் மண்ணைவாரியிறைப்பது நியாயமா நெருஞ்சி முள்ளே?நேற்றுக் குட்டையைக் குழப்பியதால் ஒன்று உயிரையே நிழலாக்க, நெஞ்சே நஞ்சைக் கக்க நாத்தாண்டவம் நசுக்கிய எக்ஸ்ஸிலில் எரித்த உடலம் உப்பிட்டுக் கருவாடாக்க முடிந்தால் அதையும் எனதாக்க முந்தியடித்திருப்பேன்.துருவமொன்று என்றிருந்த எனக்கு வடக்கும் தெற்கும் என்ற இரு முனைகள் தெரியாதிருந்தபோது வடக்கை அண்டிய கிழக்கை இணைக்க முடியாத இரு துருவமாக்குவதில் என் எஜமானருக்கு நானே எடுபிடியானதான தோரணை சகிக்க முடியாதிருப்பினும் சல்லி வந்தால்"எவன் பொண்டில் எவனோடு போனால் என்ன-லெப்பைக்குக் காசு வந்தால் சரி"என்று ஒரு மனவெழுச்சி எனக்குள் இடியாக-மின்னலாக உரசுவதால் அதை அப்படியே எடுத்தாகவேண்டும்.<br />
<br />
காத்திருப்பது ஒரு தயவுக்காய் என்று அன்றறியேன்.அடுத்தவர்களை அடுத்துக் கெடுப்பதில் என்னைவிட எவன் இந்தப் பாரீசு மண்ணில் எக்ஸ்சில் கொண்டான்.எருச் சுமந்த அன்றைய பொழுதை எனக்கு "ஞானம் தோன்றி கதையாகவும்,வரலாறாகவும்" நான் ஆக்கியே தீரணுமென்றவொரு நப்பாசையில் நான் நடு ரோட்டில் இறங்கி நாட்டைக் காட்டைப் பிரித்தாவது நல்ல மனுச நாட்குறிப்பை மகிந்த மாவின் மனசில் எழுதியாகவேண்டும்.<br />
<br />
என்னைவென்ற எருப் பொறுக்கி எங்கேதான் இருக்க முடியும்?எருவென்றதை எருவாகக் கனவுகாணுவதாக நீங்கள் எண்ணமுற்றால் அதற்காக நான் என்ன செய்யமுடியும்?அப்பனுக்குத் தோரணங்கட்டிய அன்றைய பொழுதில் அம்புவிட்ட பெண்டுகொண்டு பெரிதுவக்கப் பல வினைசெய்தும் புறம்போக்கு எனக்கு ஒரு மசிரும் உதிரக்காணோம்!இதற்குள்ளே பொதுசனத்துக்கு நான் ஜனநாயகத்தைத் தேடியபடி வடக்கின் மடக்கைத் தட்டிச் சாக்கடையில் இட்டபடி கிழக்கின் முதுகில் அம்புவிட்ட தூக்குச் சட்டிகளை எட்டியெடுத்து எனது கையில் வைத்திருக்கிறேன்.அந்த உணவு புளி(லி)த்துப் போவதற்குள் என் வாய்க்குள் வந்தாகவேண்டும்.தூக்குச் சட்டிக்குள் இருப்பது உணவா அல்லது நேரக் குண்டாவென்பதெல்லாம் புறவுலகப் பாடம்தரும் பொய் உணர்வே.எனவே,பெயரோடு வெளிப்படுத்தும் என் அறிக்கைகளே இப்போது எல்லோருக்கும் பெரு வெடியாக இருப்பதால் அதுவே எனது ஒரு நேரச் சாவின் உளப்பூர்வ நினைவாக இருக்கும்.<br />
<br />
<br />
<span style="font-size: large;">விநாயகர் துதி:</span><br />
<br />
<br />
<br />
<span style="color: blue;">"நோக்குண்டாம் நல்ல பசையுண்டாம்</span><br />
<span style="color: blue;">பாராத மாதா நோக்குண்டாம்-மேனி நுடங்காது</span><br />
<span style="color: blue;">ஜனநாயகங்கொண்டு பாரதப் பூஜை-ரோவ் கும்பல் பாதம்</span><br />
<span style="color: blue;">தப்பாமல் சா(ர்)வார் தமக்கு"</span><br />
<span style="color: blue;"><br /></span>
அதுவரைக்குமான எனது தேடலில் கிழக்கை விடுவிப்பதான முறைமைக்கு எடுத்தாளப்படும்"ஜனநாயகம்"செருப்படிபடும் உலகச் சரித்திரத்தில் வடக்கின் தொடர்ச்சி இருப்பதான "பெருவெளி"தெரிவாக-தெளிவாகத் தெரிவதாக நான் சொல்லும் புதிய பிராந்திய-பிரதேச வாதம் அன்றைய அண்ணன் இராசதுரையின் விருப்பத்தின் தொடர்சியாகவும் இருப்பதை எவருக்கும் அச்சொட்டாக வெடியிட்டுச் சொல்லும் தருணம் வருமென்றால் அதையுங் காட்டிக்கொள்வதில் எனக்கேதும் தயக்கமில்லை.தருவதற்கும் அணைப்பதற்கும் பக்கத்துப் பாரதமேன்மக்கள் இருக்கும் புதிய கதைத் தொடரில் என் முன்னைய அச்சம் மிச்சமாக இருப்பதற்கும் இலண்டனில் அண்டக்கிறவுண்ட் பெருவாழ்வு துய்ப்பதற்கும் முடியுமெனில் அடிப்பொடி நான் அழிவதென்பது அசாத்தியமானது.அப்புவுக்குப் பாக்கு வெத்திலை கொடுத்தவர்கள் அண்ணனுக்கு "டி.பி.எல்"பாஸ்போர்ட் காட்டியவர்கள் எனக்காகச் சுவர் ஒழுப்பித் தந்தவர்கள் ஒருபோதும் எம்மால் ஏமாற்றப்படுவதாக உணரவே கூடாது-கூடாது!<br />
<br />
கோணேஸ்வரிகளின் கவட்டுக்குள் குண்டுகள் இறங்கலாம்,குடும்பத்தைக் கொண்டு தூக்கு மாட்டலாம்.கிராமமாகக் கலைத்து அகதி முகாங்களை உருவாக்கலாம்.இவையெல்லமே பாரத ஜனநாயகத்தின் பக்க விளைவுகளெனக்கொள்வதில் எனக்கேதும் சிரமமேயில்லை.பாண்டவர் பூமியில் இதுவெல்லாம் தொடர்கதைகளென்பதை எனது அன்றைய ஆசிரியர்த் தொழிலில் நான் அறியாததா?ஜனநாயகத்தை ஏற்மதி செய்யும் எனது எஜமான்களுக்குக் கிழக்கே அவர்களுக்கானதாக இருந்தாகவேண்டும்.சம்பூரில் சங்கூதி அனல்மின்னுக்கு ஆள்கொன்றதன் அர்த்தம் அன்புக்கு அடிபணிவதென்ற தமிழின் அதியுயர் பண்பென்றுகொள்வேன்.கொடுவாள் ஏந்தும் எந்தக் கொம்பரும் எங்கள் கிழக்கின் மேகங்கள் காரிருள் விலக்கி விடிவதைத்தடுக்கும் கிழக்கின் எதிரிகளே!<br />
<br />
<br />
<span style="background-color: yellow;">"தென்னாடுடைய சிவனே போற்றி</span><br />
<span style="background-color: yellow;">எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி"</span><br />
<br />
ப.வி.ஶ்ரீரங்கன் நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-56054614343290981152013-12-04T01:49:00.001+01:002013-12-04T02:03:35.105+01:00“புரட்சி,விடுதலை” குறித்த ,மாயைகள் தகர்க்கப்படவேண்டும்!!!<div style="text-align: justify;">
<span style="font-size: large;">மு</span>ன்னிலைச் சோசலிசக் கட்சியின் "முன்னணி " உறுப்பினர் பழ ரிச்சாட்டின் உரையாடல்கள் மூலம் சில மாதங்களுக்குமுன் புலம் பெயர்"புரட்சிக் காரர்கள்" தமக்குத் தோதானவொரு சாதகமான சூழலைப் புலத்தில் பதியம்போட்டனர்.அதற்காகப் பழ ரிச்சாட்டைப் பயன்படுத்தி முன்னிலைச் சோசலிசக் கட்சியுடனான தமது கூட்டுக்குப் பற்பல விளக்கம் கொடுத்தனர். அப்போதெல்லாம் பழ ரிச்சார்ட் இலங்கையில் "பெரும் புரட்சிகரமான" இளைஞர் என்ற பாணியுள் வைத்துத் தமக்கான அரசியலைப் "புலத்துப் புரட்டுப் புரட்சி"க் காரர்கள் தகவமைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைப் பல கட்டுரையில் நாம் ஏலவே விளக்கி எழுதியிருக்கின்றோம்.சமீபத்தில் முன்னிலைச் சோசலிசக் கட்சியிலிருந்து பழ ரிச்சார்ட் <a href="https://www.facebook.com/notes/pala-richard/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/595486837185226">பகிரங்கமான விமர்சனத்தோடு விலகியது அறியக் கிடக்கிறது ,அவரது அறிக்கைகளென.</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலதரப்பட்ட குழறுபடிகளுக்குள் சிக்க வைக்கப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியலானது மீளவும் ,இலங்கை -இந்திய நலன்களுக்கான அரசியல் -அணிக் கட்டல்களுக்கொப்பவே பலதும் பத்துமாகப் பிளவுகள்-பிணைப்புகளெனவொரு தீங்கான அரசியற் சூழலை எமக்காக்கிய வரலாறு தமிழ் ஆயுத - இயக்க மாபியாக்களது வருகையோடும்-இருப்போடும் சாத்தியமாச்சு!</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-A17R7JkvAl8/Up55uodOljI/AAAAAAAAAXU/oLyhI9bSLXg/s1600/1234226_165573323635353_523228257_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" src="http://3.bp.blogspot.com/-A17R7JkvAl8/Up55uodOljI/AAAAAAAAAXU/oLyhI9bSLXg/s320/1234226_165573323635353_523228257_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இனியென்ன?</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="color: blue;">முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியற் சூத்திரத்தைப் பக்கம் பக்கமாக நாம் எழுதியிருப்பதால் அதன் மீது குற்றம் சுமத்தி வெளியேறிய பழ ரிச்சார்ட்டின் கூற்றுக்கள் குறித்து பெரிதான எந்த முரண்பாடுகளும் எழுவில்லை!ஏனெனில் ,அதுதாம் உண்மையானது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியல் வருகையுள் இதை ஏலவே இனங் கண்டவர்கள் நாம்.</span></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் ,வழைமயாகப் புலத்துப் "புரட்சி மாபியாக்கள்"தம்மால் தோழரெனத் தோளிற் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரு சில மாதங்களிலேயே பழ ரிச்சார்ட்டைத் தூற்றுவதில் "முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியலை நியாயப்படுத்துவதென்பது" அக் கட்சியின் எசமானர்களது நலனைக் குறித்து இயங்குவதென்றே பொருள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: orange;">இத்தகைய நடாத்தையிற்றாம் ஆயுதக் குழக்கள் இந்திய இராணுவத்தோடு கப்பலேறி, இந்தியாவில் பதுங்கியதும் பின் முள்ளி வாய்க் கால் அழிப்புக்குடந்தையான கையோடு இந்தியாவின் நலனைப் புறந் தள்</span><span style="background-color: orange;"><span style="background-color: orange;">ளா</span>த அரசியலை வகுப்பெடுப்பதெனவும் ஒரு அரசியலை நமக்குள் பரப்பும்போது, அதே திசையில் இந்திய -இலங்கை ஆளும் வர்க்கங்களால் தகவமைக்கப்படும் "புட்சி-புரட்சிகரக் கட்சி" யாவும் ஒரே திசையில் வெவ்வேறு தரப்பை உள்வாங்கிச் சிதைப்பதில் உச்சம் பெற்ற காலந்தாம் இது! </span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இதற்குத் தோதாக் <a href="https://www.facebook.com/notes/kalaiyarasan-tha/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/655233437853771"> கலையரசன்கள்</a>- <a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8984:2013-12-02-13-41-19&catid=368:2013">இரயாகரன்கள்</a> தமக்கான கரச் சேவையாக எவரையும் அநுமதிக்காத "புரட்டு மாபியாக்களாகவே" புலத்தில் "அரசியல் புரட்டுப் புரட்சி"ப் படங்களைக் காட்டுகின்றனர். </div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுள் ,வேடிக்கை என்னவென்றால் கலையரசனோ முள்ளிவாய்க்கால் முடிவுவரை இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு துரும்பைக்கூட எழுத முடியாத பெருஞ் சந்தர்ப்பவாதியும் , போலிப் புனைவுக் காரனுமாய் இருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது புலியழிவுக்குப் பின் "புரட்டுப் புரட்சி"பேசுவதுதாம் நமது காலத்தின் அதிக நகைச் சுவை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இதைக் கடந்து போனோமானால் சில வற்றை இப்படிப் புரிந்தே தீரவேண்டும்:</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-UJooPVFIlSI/Up55urULRRI/AAAAAAAAAXQ/bd9Dj7Fpf1g/s1600/fslp_cilo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-UJooPVFIlSI/Up55urULRRI/AAAAAAAAAXQ/bd9Dj7Fpf1g/s320/fslp_cilo.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் “புரட்சி” வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்”புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்”, இதுவரை தொடர்ந்த “தமிழீழ”ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="color: blue;">இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை, புரட்சி, விடுதலை யெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் “புரட்சி”க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும், மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்.</span></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”தமிழீழப்” போராட்டத்தின் அதே சுத்துமாத்து, சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://srirangan62.wordpress.com/2013/02/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/">இங்கு பழ ரிச்சாட்டினது விலகலுக்குப் பின் நாம் அன்று எழுதியவை இன்னும் உறுதிப்பாடாகிறதென்று வரலாறு நிரூபித்துக்கொண்டே இருக்கும்.</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே “புரட்சி,விடுதலை” குறித்த மாயைகளை" அகற்நவேண்டிய பணியே இப்போது பிரதான பணியாகும்-நாம் அந்நிய ஆர்வங்களுக்காக இந்த மாபியாக்கள் போடும் சதிப் புரட்சி வலையுள் மாட்டப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது உயிரை அவர்கள் மாய்துக்கொண்டே இருப்பர்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக் காலமானது ஒடுக்குமுறையாளர்களது நலனுக்கான அரசியலாகவும்-போராட்டங்களாகவும்-புரட்சிகர முன்னெடுப்பாகவும்"ஆளும் வர்க்கங்களது அடியாட் படைகளே கட்சி-குழுக்கள்-அமைப்புகளை"அமைத்து வைத்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துவகை அரசியற் பரிணாமத்துள்ளும் புகுந்து விளையாடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களை நம்பிச் செல்லும் இளைஞர்கள் தொடர்ந்து பழரிச்சார்ட்டைப் போல் பழி வாங்கப்படுவினர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">பழ ரிச்சார்ட்டின் இன்றைய தெரிவுகூட ஆளும் வர்க்கத்தின் நிகழ்சிக்குட்பட்ட அரசியல் தெரிவாகவே சமூகத்தில் பொது அரசியல் பின்னப்பட்டுள்ளது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே-</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்நியச் சக்திகளுக்கு-அவர்களது நலனுக்காகத் தெரிவாக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் மக்களுக்கானதல்ல! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும் பகுதி மக்களை வேட்டையாடும் இந்த சூழலில் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அடுத்த பல ஆண்டுகளுக்கு எவராலும் -ஏன் அந்த மக்களாலேயே முடியாத காரியமாகவிருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
04.12.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-54590837890459940332013-04-21T19:05:00.002+02:002013-04-21T21:45:52.659+02:00டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள்... <span style="color: blue;"><span style="font-size: large;">திரு. மனோக் கணேசன்மீதான தாக்குதலைக் கண்டிப்பதென்பது...</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>லங்கையானது சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை முற்று முழுதாக இழக்கும் அபாயத்தைக் கட்டியங் கூறும் தாக்குதல்கள் ,சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதன் தொடரில் பலதரப்பாக நடாத்தப்படுகிறது.பத்திரிகைகள்-மாற்று எண்ணங்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் உரிமைக்கான குரல்கள் மீதான தாக்குதலாக விரிகிறது, இது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="background-color: white;"><a href="http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/04/130413_uthayan.shtml">சமீபத்தில் உதயன் பத்திரிகைமீதான தாக்குதலுக்கு விளக்கமளித்த டக்ளஸ் தேவா</a></span><span style="background-color: white;"><a href="http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/04/130413_uthayan.shtml"><span style="background-color: white;"></span></a><span style="background-color: white;"><a href="http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/04/130413_uthayan.shtml">ந</a></span>ந்த <span style="background-color: cyan;">"உதயன் பத்திரிகைக் காரர்கள் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக இத்தகைய தாக்குதலைத் தாமே நடாத்துகின்றனர்"</span>என்றார்.ஆக, இலங்கையிலிருந்து சனநாயகத்துக்கான குரல்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டியவொரு நிலையில் இருப்பதையும் ,அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதையும் அவர் ,குறிப்பாலுணர்த்துவதுவரை டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள் பலியாவதும் நடக்கவே போகிறது!</span></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களுக்கான "மக்கள் மன்றங்கள்-அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.<a href="http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130421_manoattacked.shtml">அவர் மீதான இத்தகைய தாக்குதலைக்</a> கண்டிப்பதென்பது இலங்கை அரசின் இராணுவவாதத்துக்கெதிரானதென்பதைவிட ,மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்துள் மனோக் கணேசன் போன்றவர்களை இல்லாதாக்கும் முயற்சிக்கு எதிரானதென்று நாம் அறை கூவுவோம்!..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://2.bp.blogspot.com/-qua7NrSXNHU/UXQaHy1u-UI/AAAAAAAAAWo/TO3D57KId6Q/s1600/165017_3535212998174_72479895_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-qua7NrSXNHU/UXQaHy1u-UI/AAAAAAAAAWo/TO3D57KId6Q/s320/165017_3535212998174_72479895_n.jpg" width="289" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் இன்றைய போக்கு மிகவும் வன்மம் நிறைந்தது.சட்டரீதியான அரசென்பது சட்டரீதியான குடும்பச் சர்வதிகாரமாகவும், அதைத் தூக்கி நிறுத்தும் இராணுவக் காட்டுத் தார்ப்பாருமாச்சு.இது ,பாகிஸ்த்தானில் முஷ்ரப் போன்றே மகிந்தாவையும்-சீனாவினது தயவில் இயங்க அனுமதித்திருப்பினும் -இலங்கை அரசானது பெரும் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது தமிழ்பேசும் மக்களைத் தோற்கடித்த பெருமிதத்தின் ஆட்சியாக இருப்பதால் -அது பலதரப்பட்ட முறையில் மக்களுக்கெதிரான திசையில் சட்டத்துக்குப் புறம்பானவொரு சர்வதிகாரியின் ஆட்சியாக முன்னேறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இஃது,படுமோசமான அரசியல் பின் விளைவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும்போது இலங்கையானது இராணுவச் சர்வதிகாரத் தலைமைக்குள் வீழ்ந்தே போயிருக்கும்.இத்தகைய இலங்கைக்கு வெளியிலிருந்து இந்தச் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து சட்டரீதியான ஆட்சியையும்,மக்களுக்கான அரசியல் கட்சிகளையும்,தலைமைகளையும் மீள, இயங்க வைப்பது மிக அவசியமானது.ஆனால்,இன்றைய உலகவொழுங்கில் இது, இல்லாதவொரு அரசியல் வெளியையே தாராளமயப் பொருளாதார வினை ஏற்படுத்தியுள்ளது.இங்கேதாம் பெரும் தொழிற் சங்க வலுவுடைய தலைவர்கள் கூடத் தாக்கப்படுவதும்,அரசியலிலிருந்து தொலைத்துக் கட்டப்படுவதும் நடக்கிறது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: yellow;">நாளை ,இதன் முனைப்பு,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்வரை பாய்ந்து அவர்களையெல்லாம் கொன்றே முடிக்கும்.இதுதாம்,இத்தகைய இயக்கவாதிகளால் முண்டுகொடுக்கப்பட்ட குடும்பச் சர்வதிகாரத்தின் தலைவிதி.இதன் பின்னே பெரும் வலுவுடையவொரு இராணுவம் முன்னைய இலங்கைக்குள் நிலவாத வலுவுடன் ஒரு சர்வதிகாரக் குடும்பத்தையும்,அவர்களது கட்சியாதிக்கத்தையும் காக்கிறது.</span>இது,அரச முதலாளியத்தைக் குடும்பச் சொத்தாக்கியதிலிருந்து ஆயுதம் தாங்கியவொரு குழுவினது கையில் இலங்கையின் அனைத்து அதிகாரமும்-பொருளாதார முனைப்புகளும் குவிந்து போயுள்ளதென்பதையும் நாம் உணரவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
21.04.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-6637413288018868002013-03-31T12:53:00.003+02:002013-03-31T22:49:10.261+02:0040 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...<span style="color: blue;"><span style="font-size: large;">40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">யோ</span>சித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://1.bp.blogspot.com/-LuudgNhCZ3Y/UVgUo-GeC9I/AAAAAAAAAWI/DC9uxifdU2Q/s1600/523646_586965071313493_1796837239_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-LuudgNhCZ3Y/UVgUo-GeC9I/AAAAAAAAAWI/DC9uxifdU2Q/s320/523646_586965071313493_1796837239_n.jpg" width="225" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்"மாற்றுக் கருத்து-அரசியலை"தொடரவே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-vhQjcE3U10M/UVgUvU_MwBI/AAAAAAAAAWQ/taXnRsgx_A8/s1600/Rayakaran_Kuthukkaranam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-vhQjcE3U10M/UVgUvU_MwBI/AAAAAAAAAWQ/taXnRsgx_A8/s320/Rayakaran_Kuthukkaranam.png" width="225" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-6-hRdryYky8/UVgU0qogsTI/AAAAAAAAAWY/fjL9DAZifpU/s1600/540161_586965624646771_342709917_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-6-hRdryYky8/UVgU0qogsTI/AAAAAAAAAWY/fjL9DAZifpU/s320/540161_586965624646771_342709917_n.jpg" width="225" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
31.03.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-67047364947500762782013-03-30T12:52:00.003+01:002013-03-30T15:40:38.944+01:00 யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!<span style="color: red;"><span style="font-size: large;">புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் , யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">சி</span>ங்கள இனவாத அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாத அரசியலானது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்பு வாதிகளுக்குள் பல்வேறு இனவாத-சாதிய வொடுக்குமுறை-பெண்ணடிமைத்தனம்-பிரதேசவாதமெனக் கோலாச்சிய இந்த மானுடவிரோதமானது பௌத்த சிங்களப் பெருந்தேசிய உச்சத்துள், தமிழ்த் தேசியவினத்தின் மீதான வொடுக்குமுறையாகவும்,அதற்கு முன்னமே சிங்கள-முஸ்லீம் வார்த்தகர்களது முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும் எழுந்து, இறுதியில் இந்த இனவாதமானது "தமிழீழப் போராட்டத்துள்"அதீத உச்சமான மனித அவமானகரமான புலிப் பாசிசமாக உச்சம் பெற்றது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>இதன் முகங்கள் பல்வேறு வகையானவை.</u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய உளவுப் படையினது நேரடியான ஆலோசனையின் பெயரில் இந்தப் பாசிசமானது அநுராதபுரத்துள் (1988 இல்) சிங்கள மக்களை வேட்டையாடியது.பின். இஸ்லாமிய மக்களை வேட்டையாடியது.இதன் முகத்தைத் தமிழ்பேசும் மக்களே தரிசித்த காலமானது புலிகளது வதை முகாமிலிருந்தும்,முள்ளிவாய்க்காலிலிருந்தும் மட்டுமல்ல.கூடவே,தமிழ் மக்கள் தமது குழந்தைகளை,கல்வியாளர்களை,மாற்று அமைப்புப் போராளிகளைப் பல்லாயிரக்கணக்காகப் புலிப் பாசிசத்தால் இழந்தபோதுதாம் அதன் உச்சம் புலப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அந்நிய அடியாட்படைச் சேவையுள் பாசிசப் புலிகளது பாத்திரம் தேசிய விடுதலையாகப் பின்னப்பட்ட கருத்தாடல்களால்-சிங்கள இனவாத ஒடுக்குமுறையால் ஒரு தேசிய இனம் தன்மீதானவொரு வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது, இன்று!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
இந்த வரலாற்றைத் தந்த புலிப் பினாமிகள் இன்றும் அஃதே, வகை அந்நியச் சேவையில் மக்களிடம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களுடன் பாரிய முதலாளிகளாகிவிட்டு எமது மக்களுக்காக மீளவும், கொலை அரசியலையே செய்கின்றனர்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிப் பாசிசத்தின் பெயரால் மொட்டையடிக்கப்பட்ட " தமிழினத்துக்கு வெளியிலான பிற-இனங்கள் " தமது அனைந்து நியாயத்தையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட தமிழ்த் தேசியவினத்தின்மீது சுமத்திவிடும்போது அந்தத் தேசியவினமானது அதை நிராகரிக்க முடியாது.இஃது,இந்த உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பான ஒடுக்குமுறையாக மேலெழுகிறது.ஒன்று ,உளவியலொடுக்குமுறை மற்றது, பௌதிக ஒடுக்குமுறை!புலிப்பாசிசத்தின் உச்சத்தின் அறுவடை இதுதாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஆனால்,இது குறித்து நாம் பேசியாக வேண்டும்.</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிப் பாசிசத்தை, இவ்வளவு மனித அவமானகர ஒடுக்குமுறைகளுக்குப் பின்னும்-பாசிசத்தின் புதிய மாதிரிகளுக்குப் பாத்திராமாகவும்,அந்நியச் சக்திகளது அடியாளாகப் போன பின்பும் அந்தப் பாசிசப் புலிகளைத் தேசிய இராணுவமாகவும்,அதனால் தமிழீழம் விடுதலையாவதாகவும் அப்பட்டமான பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை இவ்வளவு அழிவுக்குள் தள்ளிய பயங்கரமான " புரட்சிகரச் சிந்தனையாளர்களும்" நமக்குள் "இப்போது" புரட்சி வகுப் பெடுக்கின்றனர்தாம்.இவர்களைத் தண்டிக்கவென ஒரு இனங்கடந்த நீதி மன்றைத் தோற்றுவிக்க முடியாதளவுக்கு உலகம் மனிதக் குருதியில் நீந்திக்கொண்டிருக்கிறது.எனவே,இலங்கை மக்களாகிய அனைவரும் தமக்குள் இணைவுறவேண்டியது இந்த யுத்தக் கிரிமனல்களைக் குறித்த விசாரணையுள் இனவாதப் பேதமின்றி நீதி-விசாரணைக்கானதாக இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<iframe frameborder="0" height="240" src="http://www.facebook.com/video/embed?video_id=146482432195378" width="320"></iframe><br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவொரு புதிய நூரன்பேர்க் நீதிவிசாரணை மன்றாக அமைய வேண்டும்.தென் கிழக்காசியாவின் விடிவுக்கு இது அவசியமானவொரு பணி.இதன் வாயிலாகவொரு நீதியை இந்த இஸ்லாமிய மற்றும் தமிழ்தேசியவினத்துக்கானவொரு மாண்பான நீதியும்-நிலைத்த ஜனநாயக வழித் தீர்வும் எட்டாதா?நிச்சியம் எட்டும்!மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அந்த மக்கள் தம்மைத்தாமே தலைமையாக்கும்போது இது சாத்தியமானதே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>இன்று, இஸ்லாமிய மக்களது இந்த வடூவுக்காகப் புலிப்பாசிசத்தை ஊக்குவித்த புரட்சிக்காரர்களே ஆதரவாகவும்,பக்கப்பலமாகவும் இருந்து அநுதாபம் தெரிவிப்பது வேடிக்கையானதல்ல-வினையானது.</u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிகளுக்குக் கருத்தியல்-பரப்புரை செய்து, பிழையானவொரு அழிவுச் சக்தியைத் தேசிய இராணுவமெனச் சொன்னவர்கள்,அதற்காகக் கட்சி கட்டி எமது மக்களை ஏமாற்றியவர்கள், புலம் பெயர் தமிழ் குழுமத்தில் உலகு தழுவி வாழ்கின்றனர்.அவர்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் இப்போது அரசியல் பண்ணுகின்றனரென்பதை இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அறியார்கள்.அவர்களை நிர்க்கதியாக்கிய இந்தப் பாசிஸ்டுக்களே இப்போது, புரட்சியின் புரவலர்களென்றும்-முன்னேறிய பிரிவினரென்றும் ஐரோப்பாவெங்கும் தமது அரசியலை தொடர்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>எப்போதும்,முகமூடி அரசியல் செய்தவர்கள்-புலிப்பாசிசத்தை மிக மூர்க்கமாக ஆதரித்தவர்கள்,அதைத் தேசியச் சக்தியாக வரையறை செய்து முள்ளி வாய்க்கால்வரை மனித வதை செய்தவர்கள் முஸ்லீம்-சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரானவர்களே!</u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்கள்தாம் இப்போது, இந்த வீடியோவுக்கும் "ஆதாரித்து அரசியல் " செய்கின்றனர்.இவர்களிடம் ஏமாறாது, பாதிக்கப்பட்ட இஸ்லாம்-தமிழ்த் தேசியவினங்கள் தமக்குள் நீதி காணும் முயற்சியில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
அது,பாசிச அரசாகத் தோன்ற முனையும் இலங்கை அரசை மக்களுக்கான சட்டத்துக்குட்பட்ட-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,ஜனநாயக விழுமியத்துள் தள்ளி அதன் வாயிலாகவொரு நீதிகான அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவிருக்கவேண்டும்.இதன் முகிழ்ப்பில்தாம் இலங்கையில் யுத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத் தவிர்த்துவிட்டுப் பாசிசக் கூறுகளை மேலும் அரசியல் வாழ்வாக நிலை நிறுத்தும் அரசியல் பிழைப்புவாதிகளின்பின் நம்பிக்கை தரிப்பது கானல் நீரான எதிர்ப்பார்ப்பையே இந்த மக்களுக்கிட்டுச் செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
புலிப்பினாமிகளான இந்த மேற்சொன்ன சிந்தனையாளர்கள் சொல்லும் அநுதாபமும்,அதுசார்ந்த இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவும் <b><u>"புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!" </u></b>என்பது போன்றதே!ஏனெனில்,முள்ளி வாய்க்கால் வரைப் புலிகளைத் தேசியச் சக்திகளாக வர்ணித்து அதை வளர்த்துவிட்டுப் பாசிச ஒடுக்குமுறையை அப்பாவிகள்மீது செலுத்தியவர்கள் இவர்கள்தாம்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களைக் குறித்து கவனத்தைக் குவிப்பதே முதற்கட்ட விடுதலைக்கு-விமோசனத்துக்கான முகிழ்ப்பாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
<div style="text-align: justify;">
30.03.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-36143932953239320872013-03-29T15:58:00.000+01:002013-03-29T15:58:52.941+01:00ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-UnDN4r1xaWQ/UVWrGzRe1iI/AAAAAAAAAVg/cWsqWSwDdFo/s1600/love-malala.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">மயானம்!<br /><img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-UnDN4r1xaWQ/UVWrGzRe1iI/AAAAAAAAAVg/cWsqWSwDdFo/s320/love-malala.jpg" width="320" /></a></div>
<br />
நான் மனிதனென<br />உறவு வெளிக்களுக்குள் இதயத்தை<br />எல்லா "விலைக்கும் "வைத்தேன்<br />வேண்டுவாரில்லை<br /><br />தெரு ஓராமாய் <br />எனது இரகசியங்களையும்<br />வலியையும் குவித்து வைத்திருக்கும்<br />உள்ளாடைக்குள் மெல்லப் புதைத்து வைத்தேன்<br />ஒவ்வொன்றாக அள்ளிச் சென்றனர்<br /><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-oRWmHmumDVo/UVWrHEuux0I/AAAAAAAAAVk/VZf688rrjxw/s1600/drone_attack_Obama_090123_mn.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-oRWmHmumDVo/UVWrHEuux0I/AAAAAAAAAVk/VZf688rrjxw/s1600/drone_attack_Obama_090123_mn.jpg" /></a></div>
எடுத்துப் போட்ட இரகசியமோ<br />எனது இதயத்தைத் துடிக்கத் துடிக்க அறுத்துப்போட்டு<br />அப்பனுக்குக் கஞ்சிக்கு அடுப்பு எரிக்க <br />நெருப் பூட்டும் போது<br />என் உணர்வுகளுக்குக் கச்சை கட்டி<br />விற்கப்படும் சந்தில் என்னைப் புணர்ந்த வியாபாரிகள்<br />எனக்கான சவப் பெட்டியை வண்ணங்கொண்ட<br />வகைகளில் செய்துகொண்டனர்<br /><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-TR5lV_f95WU/UVWrHZySQuI/AAAAAAAAAVs/xk3j6FkFfSY/s1600/Victims-of-drones.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="226" src="http://2.bp.blogspot.com/-TR5lV_f95WU/UVWrHZySQuI/AAAAAAAAAVs/xk3j6FkFfSY/s320/Victims-of-drones.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
என் வலிக்கும்<br />வடுவுக்கும் ஒரு தலிபான் துப்பாக்கிக் குண்டின்<br />விலை மூன்று மில்லியன் டொலரென<br />நிர்ணயித்த ஐரோப்பிய மனித நேயவாதிகள்<br />அள்ளிக் கொட்டும் வானேவிக் குண்டுகளுக்கு<br />அடுக்கடுக்காய் டசின் கணக்கில் <br />சிரசு தெறிக்கும் என்னைப் போன்றோருக்கு<br />அவ்கானில் மனித நேயம்-சனநாயகம் விலையென நிர்ணயித்த<br />அரசியலை எவரெனக்குச் சொல்வார்?<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-gn6bFEHD0X4/UVWrH7gCxJI/AAAAAAAAAV4/VuefpxBQeoA/s1600/tumblr_lf1nyxSj2S1qeq2vpo1_1280.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="252" src="http://1.bp.blogspot.com/-gn6bFEHD0X4/UVWrH7gCxJI/AAAAAAAAAV4/VuefpxBQeoA/s320/tumblr_lf1nyxSj2S1qeq2vpo1_1280.jpg" width="320" /></a></div>
எல்லாவற்றையும் <br />அள்ளி வைத்து <br />ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை<br /> எப்போதும் போல சனநாயகமெனவும்<br />அவர்களது குண்டுகளுக்குச் சாவீடாகும் தேசத்தின்<br />முற்றத்துள் வளர்க்கப்படும் முள் முருக்கில்<br />கட்டப்படும் அரசியல் மனித முன்னேற்றமுமென<br />ஐ.நா. அடுக்கி வைக்கும்-பிறகென்ன?<br /><br />அவர்களுக்காய் சாவோம் <br />அவர்களுக்காய்க் குருதி சிந்துவோம்<br />அல்லாவின் துணையோடும் <br />அரவணைத்த மொழிகளோடும் மதங்களோடும்!<br /><br /> 29.03.2013<br />நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-20563725158294797452013-03-16T13:32:00.003+01:002013-03-16T14:33:02.059+01:00புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச... <span style="color: blue;"><span style="font-size: large;">வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ...</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
=======================</div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><u>Sugan Kanagasabai:</u></span></div>
<div style="text-align: justify;">
=======================</div>
<div style="text-align: justify;">
ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !</div>
<div style="text-align: justify;">
(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் .... )</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-DDf2MiSjt_o/UURlRDo5p2I/AAAAAAAAAVI/iW5Bb3n5yjM/s1600/313301_621146514577930_1639578732_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-DDf2MiSjt_o/UURlRDo5p2I/AAAAAAAAAVI/iW5Bb3n5yjM/s1600/313301_621146514577930_1639578732_n.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;"><u>Sugan Kanagasabai</u></span> : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
==============================================</div>
<div style="text-align: justify;">
<span style="color: #990000;">முட்டையில் மசிர் :1</span></div>
<div style="text-align: justify;">
==============================================</div>
<div style="text-align: justify;">
இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள் இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத் தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையொட்டிக் கண்டிப்பதைவிட முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது, அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :"இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
==================================</div>
<div style="text-align: justify;">
<span style="color: #274e13;">முட்டைக்குள் குஞ்சு :2</span></div>
<div style="text-align: justify;">
==================================</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழக மாணவர் கலகம் திறக்கும் அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, மேற்குலக உயர்ந்த ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-qTXdZbk7xRM/UURlXTBoquI/AAAAAAAAAVQ/DMwazV5XKIk/s1600/483890_10151827603474128_1561960217_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-qTXdZbk7xRM/UURlXTBoquI/AAAAAAAAAVQ/DMwazV5XKIk/s320/483890_10151827603474128_1561960217_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-ஶ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
16.03.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-63188722549096635032013-03-12T20:55:00.002+01:002013-03-12T20:55:36.694+01:00ஈரத்தை மறைத்த நெஞ்சு<u><span style="font-size: large;">ஈனப் பாம்பு</span></u><br />
<br />
<span style="font-size: large;">கு</span>ருதி நினைந்த இலையான்களின் கால்களில்<br />
வலிய யுகத்தின் தடமொன்று சிக்கியது<br />
உயிர் கொண்டு அலையும் பிணங்களையும்<br />
அவை விட்ட பாடில்லை!<br />
<br />
எச்சங்கள் <br />
அழிந்தவொரு படுகையில்<br />
நாளைய நிலை மறுப்பை <br />
நிச்சயிக்கச் சில முனைப்புகள் <br />
கருத்தரித்த எனது இருப்பில்<br />
பச்சை குத்திய முகங்களுக்கு <br />
எவருரிமை கொள்வார்?<br />
<br />
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்<br />
புழுக்களோடு மல்லுக் கட்டுகின்றன<br />
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள் என்பதையும் மறுத்து!<br />
<br />
ஊழி முதல்வனும் <br />
உயிர் தந்த ஆழியும் எனக்குள் உறங்க<br />
உச்சியின் மத்தியில் முறிபடும் காலம்<br />
ஈரத்தை மறைத்த நெஞ்சு<br />
இதயத்தைக் கீறிக் கிடப்பிலிட<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<a href="http://2.bp.blogspot.com/-Hjq4HDXAjms/UT-GwXnEwaI/AAAAAAAAAU4/iLf9vKeNq7I/s1600/friedhof3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" src="http://2.bp.blogspot.com/-Hjq4HDXAjms/UT-GwXnEwaI/AAAAAAAAAU4/iLf9vKeNq7I/s320/friedhof3.jpg" width="320" /></a><br />
<br />
<br />
நம்பிக்கை நலிந்த என் விழிகள் <br />
என் கால்களுக்குப் பாதைகளைக் காட்டுகின்றன<br />
நினைவையொடுக்கும் மண்டையோடு<br />
மரணத்துக்கு முன்னைய காலத்தை விரும்பினும்<br />
<br />
குருதியுள் முளைத்த ஈக்களோ<br />
வாழ்ந்து பார்த்து<br />
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!<br />
<br />
மெல்லிய காற்றுள்<br />
உந்தப்படும் தூசியின் இருப்பைச்<br />
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய் இன்று!!<br />
<br />
எதிர் காலமோ<br />
அன்றி நிகழ் காலமோ<br />
கடந்த காலமோ இதுவரை எனக்குள்ளோ<br />
வெளியுள்ளோ உணரத்தக்கதாக அறியேன்<br />
<br />
மீண்டுவிட்ட வினாவுக்குள்<br />
கருத்தரித்த நித்தியம்<br />
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ<br />
காலத்தைக் கிழித்துக் கடாசியது எனக்குள்<br />
<br />
மெல்ல உதிரக் காத்துக் கிடக்கும்<br />
நரை அரித்த விதையோ<br />
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்<br />
ஆசையின் இருட்டில்<br />
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்!<br />
<br />
பிரித்தெறி <br />
தூரத்துக்குத் துரத்திவிடு !<br />
<br />
எட்டப் போவதற்குள்<br />
எதற்குள்ளோ <br />
பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு<br />
மண்டையோடுகளுக்குள் <br />
சிறைப்படுவதற்கு விருப்பற்றது.<br />
<br />
-ஶ்ரீரங்கன்<br />
12.03.2013நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-55636144866414854112013-03-11T20:49:00.003+01:002013-03-11T21:41:01.234+01:00கொடு நிலவு முறித்த இரவு<span style="font-size: large;">ச</span>தா வார்த்தைகளைத் தறித்து<br />
வாய் பிளக்க முனையும் காலம் இஃது<br />
மூட்டைகளாய்க் கொட்டப்பட்ட ஊனத்துள்<br />
ஊழிக் காலமாய் உணர்வுகள் உதிர<br />
<br />
மெல்லத் துரத்தும் எல்லை<br />
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி<br />
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்<br />
உருவமிழந்த சில நட்பு வெளிகள்<br />
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் உயிர்<br />
<br />
முகமிழந்த காலங்களைக்<br />
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு<br />
மூச்சு முட்டும் நாயோட்டம்<br />
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்<br />
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உளைச்சல்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-CX1zZOV3Iuw/UT42NkiDG_I/AAAAAAAAAUo/4ntCKO5iwyo/s1600/188812_224034121073189_778428923_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="242" src="http://4.bp.blogspot.com/-CX1zZOV3Iuw/UT42NkiDG_I/AAAAAAAAAUo/4ntCKO5iwyo/s320/188812_224034121073189_778428923_n.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கோலமிட்ட முற்றம்<br />
கொடு நிலவு முறித்த இரவு<br />
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்<br />
காலங்கள் தொலையக் காத்திருந்த<br />
தாயவளின் தலை வீழ்வு<br />
<br />
எல்லாம் தொலைய<br />
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி<br />
காணாத மனிதரைக் கண்டு<br />
கட்டிய வழி உறவென்றெண்ணி<br />
காணிக்கைகேட்டு<br />
கட்டிய புடவைக்கும் மாற்றெடுத்தோம்<br />
<br />
எச்சில் இலையாய்<br />
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு<br />
தெருக்களில் எடுத்த பிச்சை<br />
குத்தியது கள்ளத் தோணியென்று!<br />
<br />
நட இப்படி<br />
கிட அப்படி<br />
எடு இப்படி<br />
எல்லா ஏவல்களும்<br />
முகத்தில் எழுதும் இரவல் நாடென<br />
<br />
பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்<br />
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்<br />
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது<br />
<br />
காடுகளின் மத்தியில்<br />
கருக்கொண்ட சிசுவுக்கு தேசத்தின்<br />
எந்த நிறமும் நிரந்தரமன்று<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ucvegv_GUEU/UT40o_TxF7I/AAAAAAAAAUk/isRqfF3LBA4/s1600/Digital+surrealism+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-ucvegv_GUEU/UT40o_TxF7I/AAAAAAAAAUk/isRqfF3LBA4/s320/Digital+surrealism+2.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கொட்டிய இரவைகளின் நாட்டியத்துள்<br />
எத்தனையோ ஆசைகளும் <br />
ஊழிக் காலத்தின் உறவுக் கோலங்களும் <br />
உவர் மண்ணின் புதை சேற்றில் உருவந் தேட<br />
<br />
நாடு கடந்தும் காடுகடந்தும்<br />
அரசமைத்து நகலெடுத்தே <br />
தமிழருக்குத் தேசம் செய்யும்<br />
நடுத் தெருவில் தலை வீழ்த்தும் சூனியம்!<br />
<br />
இதயம் பிடுங்கப்பட்ட<br />
சதைக் குவியலுள் கனவு தறிக்க<br />
வேசம் தொலைத்தறியாத தலைகளும்<br />
"சிரச் சேதம் செய்விக்கும் " விருப்பொன்று <br />
வினைப் பொருத்தம் பார்த்திருக்கும் உலகெங்கும்!<br />
<br />
ஶ்ரீரங்கன்<br />
11.03.2013நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-80906494511896958202013-03-06T00:32:00.000+01:002013-03-06T01:20:05.127+01:00கொடுங் காலத்தின் கொள்ளை இது?<u><span style="color: red;"><span style="font-size: large;">கொடுங் காலத்தின் கொள்ளை இது?</span></span></u><br />
<br />
<span style="font-size: large;">நெ</span>ஞ்சில் கீறும் உனது சாவு,<br />
உன் தோழமை நினைவு மக்கள் வெள்ளமாய்<br />
அஞ்சலிக்கும் தேசம்-உலகம்!<br />
<br />
உன்னிழப்பையிட்டு <br />
மௌனித்திருக்கவும் முடியவில்லை;<br />
மனதும் கேட்கிறதாயில்லை -எமக்கு,<br />
எத்தனை கனவுகளை உன் மேல் செலுத்தி<br />
உயிர்ப் பேத்திய சமவாழ்வு இத்துடன் முடிவுரையா?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<a href="http://1.bp.blogspot.com/-rDDOkccGxTg/UTZ-RBj0GDI/AAAAAAAAAUI/0eogNTtONdQ/s1600/chavezUNchom_372.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="165" src="http://1.bp.blogspot.com/-rDDOkccGxTg/UTZ-RBj0GDI/AAAAAAAAAUI/0eogNTtONdQ/s320/chavezUNchom_372.jpg" width="320" /></a><br />
<br />
சி.ஐ.ஏ.கண்ட கனவுக்கு-முயற்சிக்கு<br />
வழி திறந்த புற்றே ,உனக்கொரு நாள் சாவு மணி ஒலிக்காதா?;<br />
எங்கள் தோழன் சாவேசின் உயிருக்கு,<br />
புரட்சிக்கு முற்று வைத்த வினையே<br />
வெனிசூலா மக்கட்கு விடிவைத் தள்ளி வைத்தாயா?<br />
<br />
மீளவும் ,சோற்றைக் கொள்ளும்<br />
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை<br />
தோழமை உறவுக்கான இரை மீட்பில்<br />
வேதனையைப் பகிர்வதற்கென்றே<br />
வேளைகள் நெருங்குகிறது!மக்களது நலன் அறுக்கும் <br />
கொடுங் காலத்தின் கொள்ளை இது?<br />
<br />
உலகெல்லாம்,<br />
உயிர்க் கொள்ளையிடுபவர்கள்<br />
உயிரோடிருக்க,<br />
எங்கள் கனவுச் செடிக்குத் தேர் தந்த<br />
வெனிசூலாத் தேச மகனைக் கொன்றாயே கொடிய காலம்!<br />
<br />
தென் அமெரிக்கத் தெரிந்த சில<br />
"முந்தைய பொழுதின் " சோசலிசக் கரைந்த தடயம்<br />
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்<br />
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல<br />
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ தோழா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<a href="http://2.bp.blogspot.com/-yS94YrJrvLk/UTZ-kQAZ4jI/AAAAAAAAAUQ/tLD4LPUguZg/s1600/487120_418962538164296_1040140570_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-yS94YrJrvLk/UTZ-kQAZ4jI/AAAAAAAAAUQ/tLD4LPUguZg/s320/487120_418962538164296_1040140570_n.jpg" width="320" /></a><br />
<br />
<br />
நொந்துலர்ந்த இதயங்களோடு<br />
துயர்படும் என் கேள்வியெல்லாம்<br />
"கொடிய சாவுக்குள் குலைந்துவிடுமோ நீ,<br />
கட்டிய கோட்டையெல்லாம்?;வெனிசூலாவைக் குதறுமோ<br />
அமெரிக்கக் கழுகு?"<br />
<br />
நாடற்றும் ,வீடற்றும்<br />
இழப்பதற்கு எதுவும் அற்ற எம் வாழ்வில்<br />
ஒரு பிடிமானம் நீயாய் இருந்தாய்<br />
இதயம் நோக ,எம் விழிபனிக்க வைத்தாயே தோழா!<br />
<br />
தென் அமெரிக்கத் தேசமெல்லாம் கட்டிய<br />
சோஷசலிசக் கோட்டை மெல்ல எழும்போது<br />
"எண்ணை மிதந்துவரச் சாடி கவிழ்ந்த கதையாய் " ஆகுமா தோழா?<br />
<br />
என்னதான் எவருரைப்பினும் நீ,<br />
சொன்னதைச் செய்தாய்-செய்ததைச் சிறப்பித்தாய்!<br />
திரண்டெழுந்த மக்கள் மனங்களெல்லாம் உன் வெற்றியின்<br />
கட்டியத்தைச் சொல்லி வைத்தனரே!சோகந்தாம் நீ,<br />
சொல்லாமற் போன செய்தி சோகந்தாம்!<br />
<br />
செல்லக் கரந் தந்து,<br />
செவ் வணக்கமிட்டு உன்னைச் சிறப்பிக்க<br />
மனதுக்கு எந்தத் தடுப்புமில்லை -தூரமுமில்லை!;<br />
சென்று வா தோழனே-உனக்கு என் செவ் வணக்கம்!<br />
<br />
ப.வி.ஸ்ரீரங்கன்<br />
06.03.2013நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-10475152091322643872013-03-03T15:27:00.001+01:002013-03-03T16:21:52.829+01:00அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி <span style="color: blue;"><span style="font-size: large;">அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி </span></span><br />
<span style="color: blue;"><span style="font-size: large;">-சில எதிர்க் குறிப்புகள்!</span></span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>ந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் "தமிழீழ"ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (<u>" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்</u>.(<b>முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5</b>) " ) <a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8840:2013-02-01-113058&catid=368:2013">தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி</a> விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் "<a href="http://iniorunet.wordpress.com/2013/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/">சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை"</a> எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-nTiX5WS6eFc/UTNamCyE99I/AAAAAAAAATo/KfZ6EB_uYu0/s1600/IniOrU_Ashok_Shoba_2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="http://3.bp.blogspot.com/-nTiX5WS6eFc/UTNamCyE99I/AAAAAAAAATo/KfZ6EB_uYu0/s320/IniOrU_Ashok_Shoba_2.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனி, இந்த நிகழ்வூக்கத்துள் <a href="http://inioru.com/?p=33686">இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம்</a> வருகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் <b>நிதர்சனம்.கொம்</b> அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ <a href="http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html">http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html</a> ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, <a href="http://en.wikipedia.org/wiki/Fascism">பாசிஸ்டுக்களது</a> நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய "அவதூறு அரசியலுக்கு" விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் "நற்போக்கு இலக்கிய" முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது "ஆச்சிகள்" வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.<a href="http://www.themodernword.com/eco/eco_blackshirt.html">இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் </a>என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.</u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
"துரோகி - எட்டப்பவன்" என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.</div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pnk-FP4K1hs/UTNc3YuZkMI/AAAAAAAAAT4/LMNJXPrkKgE/s1600/Rangan_PV.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="http://1.bp.blogspot.com/-pnk-FP4K1hs/UTNc3YuZkMI/AAAAAAAAAT4/LMNJXPrkKgE/s320/Rangan_PV.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் "பொடியள் ஏதோ செய்கிறாங்கள்" என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்"புலிகளுக்கு மறுவாழ்வு"அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u><b>இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?</b></u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த "தூயவாத" அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே "தூயவர்கள்" இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-sPG00mR5yFU/UTNanPAvu0I/AAAAAAAAATw/2e9K2I9CoR8/s1600/IniOrU_Ashok_Shoba.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/-sPG00mR5yFU/UTNanPAvu0I/AAAAAAAAATw/2e9K2I9CoR8/s320/IniOrU_Ashok_Shoba.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.</u>அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய "அவதூறு அரசியல்" இலக்கில் இன்னுமெத்தனை தலைகளையுருட்டுவோம்? தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட "கொம்யூனிச"ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் "விடுதலை-சமத்துவம்" குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.</u>இதன்வழியாக "அரசியல்"புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!</div>
<div style="text-align: justify;">
<a href="http://inioru.com/?p=33686"><br /></a></div>
<div style="text-align: justify;">
<a href="http://inioru.com/?p=33686"><u><b>சோபாசக்தி மீதான பிரத்தியேகமான இந்தக் குறிப்பை நாம் நிராகரிக்கிறோம்.</b></u></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<u>இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட"தூய்மைவாதப் பொதுப் புத்தியின்" தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.</u></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அசோக் இக் குறிப்பை "மனசாட்சியின்படி" நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
<div style="text-align: justify;">
03.03.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-7379663984628537392013-02-24T13:07:00.003+01:002013-02-24T13:53:16.619+01:00கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் ...<span style="color: blue;"><span style="font-size: large;">கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் அரசியல்-கருத்துக்கள்.</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் பலவாறாகச் சிதைக்கப்பட்டும்,பிரபாகரன் சித்திரவதைக்குட்பட்டும்,மண்டை பிளவுண்டும் செத்துப் போயினர்.இந்தத் துன்பியல் நிகழ்வு 2009 மே 16-17-18 ஆம் தேதிகளில் நடைபெற்றிருக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்சொன்ன தேதிதிகள், புலித் தலைவர் பிரபாகரன் குடும்பத்தின் உண்மையான இறுதி முடிவின் தேதிகளாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் குறித்துப் புலிகளே இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுமில்லை-எற்கவுமில்லை.தலைவர்கள் உயிரோடிருப்பதாகச் சொல்லி இலங்கை-இந்திய,சீனக் கூட்டுக் கொலைகளைச் சட்டரீதியாகச் செல்லாக்காசாக்கினர், இன்றுவரையும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது குறித்துப் பல ஆவணத்தோடு புலம்பெயர் தளத்தில் செய்திகளும்-ஆவணப்படங்களையும் தேடித் தேடிப் போட்டவர்கள் எல்லோரும் புலிப் பினாமிகளால் தூற்றப்பட்டனர்.புலி அநுதாபிகள் அன்றுஞ்சரி,இன்றுஞ்சரி நியாயமாகக் கவனத்தை "இது குறித்து"ச் செய்யவில்லை.இயக்க நலன்,"தமிழீழம்" என்ற அகக்கனவுகள் அவர்கள்தம் கண்களைக் கட்டிப்போட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சதிகுறித்த<a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7030:2010-05-05-09-55-13&catid=322:2010"> தமிழரங்கக் கட்டுரை-ஆவணப்படங்கள்</a> அடங்கியவொரு சுட்டியானது பல பத்தாயிரம் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது.என்றபோதும், அதையெல்லாம் மறைப்பு அரசியலுக்குள் முடக்கியவர்கள் இப்போது பாலச்சந்திரனது படங்களைப்பார்த்துவிட்டு அரசியல் செய்யும் புள்ளி என்னவாகவிருக்கும்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-zTiX0pG-oA8/USoABkQsUdI/AAAAAAAAATQ/ib6lGaZcaQ8/s1600/602006_10151334835733801_258562781_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="295" src="http://4.bp.blogspot.com/-zTiX0pG-oA8/USoABkQsUdI/AAAAAAAAATQ/ib6lGaZcaQ8/s320/602006_10151334835733801_258562781_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்காண்டுகளாகவிதைக் கண்டுகொள்ளாது, இலங்கைப் பாசிச அரசியலைக் குறித்து இயங்க மறுத்தவர்கள்-புலிகளது சதி அரசியலால் தமிழ்பேசும் மக்களது விடுதலை காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பார்க்க மறுத்தவர்கள். இப்போது, பாலச் சந்திரனை முதன்மைப்படுத்தி, அவிழ்க்கும் அரசியல் ஒரு செல்லாக் காசாகும்.இதைத்தாண்டிச் சில வற்றைக் குறித்துக் கவனத்தைக் குவித்தால்,இவையெல்லாம் ஒரு கொசிப்பு அரசியலாகவே மாறிவிட்டதென்றவொரு புள்ளியைக் குவித்துக்கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் குறையுடைய விட்டேந்தி அரசியலது தெரிவில்,"தமிழ்பேசும் மக்களை முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை செய்த சிங்களவரசுக்கும் அதற்குத் துணைபோன தென்னாசியப் பிராந்திய வல்லரசுகளுக்கும் <a href="http://www.facebook.com/Spartacusthasan/posts/478792688853476">எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை"</a> யென நாம் <a href="http://www.facebook.com/marx.anthonisamy?ref=ts&fref=ts">குறிப்பிட்ட சிலரைத்</a> தொடர்ந்து சிலுவைசுமக்கக் கூப்பிடுகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய இனவழிப்பை இலங்கையில் செய்யத்தக்க பொருளாதாரவுறவுகள் வளர்ந்து வருவதையும்,அதன் வாயிலாக மாறி வருஞ் சூழலைக் கவனத்தில் எடுத்து, மக்களை ஜனநாயக ரீதியாக இயங்க அனுமதித்துப் புலிகளது இயக்கவாத அராஜகத்தையும் அது சார்ந்த இருப்பு அரசியலையும் கைவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுவதற்குப் பல தளத்திலான செயற்பாட்டுக்காக மாற்றுச் சக்திகளை இயங்க அனுமதிக்கும்படி <a href="http://www.srisagajan.blogspot.de/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">நாம் 2007 இன் ஆரம்பத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டோம்.</a> இந்தச் சந்தர்ப்பத்தில் புலிக்குக் காவடி தூக்கியவர்கள், அந்த அமைப்பின் பாசிசத்துக்குமுன் மண்டியிட்டுக் கிடந்து,மௌனித்து அதைப் புரட்சிகரமானவொரு சக்தியாகவும்,விடுதலை அமைப்பாகவும் படம் காட்டியவர்கள்,முள்ளி வாய்க்காலின் கடைசி நிமிடம்வரை "புலிகள் வெல்வார்கள்" என மார் தட்டினார்கள்.இது,இனவழிப்புக்கான ஒத்தூதலுக்குள் வரமுடியாதென எவருரைப்பார்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கள அரசு,உலக ஏகாதிபத்தியங்களை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல புலிகளையும் கண்ணை மூடி ஆதரித்தவர்களுமேதாம் தமிழினவழிப்புக்கு உடந்தையானவர்கள்.நெஞ்சில் நேர்மையுள்ளவர்கள் இது குறித்துப் பேச வரட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே போல்,இன்றும் இத்தகைய புலி அநுதாபிகளால் ஆதரிக்கப்பட்டுத் தொகுப்புகள் போடப்படும் <a href="http://www.facebook.com/photo.php?fbid=10151342759763801&set=a.133852168800.100010.754613800&type=1&theater">"கவிஞர்-கட்டுரையாளர்-கதாசிரியர்-செய்தியாளர்" என்ற அடை மொழிக்குள் தன்னை நிறுவிக்கொண்டு, அப்பாவி மக்களைப் புலிப்பாசிசமும்,இலங்கை அரச பாசிசமும் இணைந்து யுத்தத்துள் கொன்று போட்டதை வைத்துப் புனைந்து, அதையே தமிழகவூடகங்களுக்குக் கச்சாப்பொருளாகவிற்கும் தீபச் செல்வனுக்குப் பார்பன ஏடுகளே இன்று பரிசுகள்-கேடயங்கள் </a>வழங்கும்போது அதையே மௌனித்து வரவேற்கும் நியாயவாதிகளுக்குப் பார்பன ஏடுகளது தந்திரம் புரியாத என்ன? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பார்ப்பன நிறுவன ஏடான கணையாழியின் அரசியல் தெரியாத என்ன?</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சும்மா விசும்புக்கு வேட்டையாடுவதில்,முள்ளி வாய்க்கால் படுகொலையைக் கண்டிக்கவில்லையென்பவர்கள் முதலில் 2009 இல் வன்னியுத்த அழிவுகள் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் வாளாதிருந்த யாழ்ப்பாணத்தார் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து மகிழ்ந்த கபோதித்தனமான அரசியலை விளங்க முற்படுங்கோ!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாமே,நமது மக்களைப்பலியெடுக்கப் புலிக்கு வக்காலத்துவேண்டி அழிவுக்குக் காரணமாக நின்றோம்.மாறிவரும் சூழலையெல்லாம் தானைத் தலைவரது கவட்டுக்குள் திணித்துவிட்டுத் "தலைவர் காலத்தில் தமிழீழம் மலரும்"என்ற மமதைக்கு என்ன பெயர்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போதாதற்கு,தமிழ்நாட்டரசியலுள் இணைக்கப்பட்ட இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு எந்த மார்க்சும் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!அது பலதரப்பட்ட அதிகார அடுக்குகளது நலனோடு சம்பந்தப்பட்டது.அது மட்டுமன்றி இந்தியப் பிராந்தியத்தின் இறைமைக்குட்பட்ட முற்றுமுழுதான அரசியல் சட்டரீதியான செல்வாக்குக்குட்பட்ட இலங்கைக்குள் இந்தியாவென்பது எதையும் செய்யும்-எப்படியும் நடக்கும்.அதைத் தட்டிக்கேட்கும் உரிமையென்பதைக்கூட மக்களுக்கு வழங்காது புலிகள் இந்தியாவின் அரசியலில் எத்தனை மோசடியான நிகழ்வுகளைச் செய்தார்கள்?அதை நொண்டிக் காரணமாக வைத்துத் தமிழ்பேசும் இனத்தையே கருவறுத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய ஆதிக்கத் திமிரை வெறுமனவே அ.மார்க்சுக்குள் திணித்துவிட்டு ஒற்றை வரி இலக்கணமெழுதுவது மீளவும், நம்மை அழிப்புக்கிடவே செய்யும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://1.bp.blogspot.com/-gR5vTKAmXho/USoACOV7mMI/AAAAAAAAATY/5oTDyB_Vug4/s1600/421848_10151342759763801_1099751453_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-gR5vTKAmXho/USoACOV7mMI/AAAAAAAAATY/5oTDyB_Vug4/s320/421848_10151342759763801_1099751453_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><span style="font-size: xx-small;"><span class="userContent">[கணையாழி விருது நிகழ்வு: <br /> <br /> பேராசிரியர் பஞ்சாங்கம், தசரா, நீதிபதி சந்துரு, ஜெயகாந்தன், கனிமொழி]</span></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் <a href="http://www.facebook.com/tipaccelvan.piratipan?ref=ts&fref=ts">தீபச் செல்வனை</a> வைத்துப் பிழைக்கும் அரசியலையும்,அதன்வழி நம்மை மொட்டையடிக்க முனையும் இந்திய லொபிகளையும் மார்ச்சையும்தாண்டி நமக்குள் தேடுங்கோ.அப்போது,மார்சின் பாத்திரமும்,தீபச் செல்வன்,மற்றும் இன்னபிறப் பேராளர்களதும் பாத்திரமும் தெரிந்துவிடப்போகிறது.இதைவிட்டு ஒரு தனிநபர்மீது குவிக்கும் அரசியலானது உண்மையான குற்றவாளிகளைக் காப்பதில் முடிந்துபோகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத்தாம் புலிகளது தமிழீழப்போராட்டத்துள் நாம் செய்துகொண்டோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்பேசும் மக்களது உண்மையான குற்றவாளிகளே புலிகள் வடிவத்துள் மக்களைச் சிதைத்துப் பிழைத்துக்கொண்டவின்றைய பெரு வர்த்தகர்களாக மக்களது பணத்தில் மீளவும் தேசியவிடுதலை வியாபாரஞ் செய்யும் பினாமிப் புலிகளென்பதையெவர் பேச முனைகிறார்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றுவரை,புலிகளது பெருந் தலைவர்களெல்லாம் இலங்கை-இந்திய-சீன நலன்களுக்கிசைவான அரசியலோடு நகரும்போது அந்தப் புலிகளது கலை இலக்கிய கர்த்தாக்களே இந்தியப் பார்ப்பனிய ஊடாகங்களுக்குச் சோரம்போய் மக்களின் அவலங்களை வித்துப் பிழைக்கும்போது அ.மார்ச்சிடமும்,மார்க்சியர்களிடமும் இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு விளக்கம் கேட்கும் அரசியல் அறம் புலி அநுதாபிகளுக்குண்டா? இந்தியப் போலி மார்க்சியர்களை வைத்து முழுமொத்த மார்க்சியப் போக்கையும் சிதைக்க முனையும் திரு விளையாடல் ஆருக்கான அரசியலை முதன்மைப்படுத்தும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"ஏன்-எதற்கு" என்ற கேள்வியையே புலிக்கு முன் சமாதி கட்டிவைத்துவிட்டுப் புலிகளது எல்லா நியாயங்களையும் தமிழீழத்துக்காகச் சரியென்ற அரசியலது அறுவடைதாம் முள்ளி வாய்க்கால்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலி அழிவின் இறுதி நிமிடம்வரை புலிகளோடு மக்கள் அழிவதையும்,அதே மக்களை இயக்க இருப்புக்காகப் புலிகள் தம்மோடழிக்க வியூகமமைத்ததையும் தட்டிக் கேட்க துப்பற்ற அரசியல் அறத்தின்மீது ஆணி அடித்தபோதெல்லாம் நம்மைத் துரோகிகளாக்கிய இந்த அரசியலே இப்போதும் புலிகளது மிச்ச சொச்சங்களைக் கள்ள மௌனம் சாதித்துக் காத்துக்கொண்டு,மார்க்சியர்கள்மீது பாய்வது வர்க்க அரசியலின் வர்க்க நலனைக் காவுவதென்பதற்கப்பால் இது பிழையான தெரிவுகளை உணர்ச்சி வழி நிகழ்த்தும் கொசிப்பு அரசியலாகும் என்பதைத்தாம் சொல்வதென்று புரிக.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"உலகத் தமிழர் பேரவை" என்றும்,"நாடுகடந்த தமிழீழ அரசு" வென்றும்,இன்னபிற முக மூடிகளது தார்ப்பாரில் மையங்கொள்ளும் மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்கும்,அதையே தென்னாசியப் பிராந்திய நலனைக் காவும் மேற்சொன்ன பிழைப்பு வாதப் புலமைக்கும் நடுவே எமது மக்களது தலைவிதி வியாபாரமாக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்களது அவலத்தை வைத்து இலக்கிய வியாபாரம் முதல்,முதலீடு செய்யும் நிதி ஆதாரம்வரை நகரும் இந்தக் குருதிக்கறைபடிந்த அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்பதும்,நியாயமாகப் புலிகளதும்,ஏகாதிபத்தியங்களதும் அரசியலையும்,இந்திய-சீனா லொபிகளையும் தோலுரித்து வைக்கும் அரசியலை முன் வைக்கத் திரணியின்றி நாம் விட்டேந்தித் தனமான அரசியலைக் குழுவாத நெருக்கடிக்கொப்பத் தகவைக்கின்றோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்நிய நலனில் எந்தெந்தக் குழுக்கள் தம்மைத் தகவமைத்தனவென்பதற்கு இயக்கவாத மாயைக்கு-தமிழீழக் கனவுக்கு வெளியிற்றாம் பதிலுண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
24.02.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-9763807562794562392013-02-19T00:02:00.000+01:002013-02-19T00:02:01.653+01:00இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!<span style="color: blue;"><span style="font-size: large;">இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!</span></span><br />
<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">எ</span>ங்கு பார்த்தாலும் இந்திய-சீனா-மேற்குலக அரசுகளதும்,அதன் உளவு நிறுவனங்களதும் முகவர்கள் செய்யும் அரசியல் நாடகமே இப்போது நிலத்திலும்-புலத்திலும் "விடுதலை, சுதந்திரம், சோசலிசம்-புரட்சி,இன ஐக்கியம்-சமவுரிமை" என்று பேசிக்கொள்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இன ஐக்கியம்-ஒருமைப்பாடு,இலங்கைத் தேசியம்"என்று கட்சிகட்டி வகுப்பெடுக்கிறது.இதையும் பலர் 80 களில் இயக்கங்களை நம்பிய விட்டில் பூச்சிகளாய் மீள அண்மித்துப் பறக்கிறார்கள்.ஒவ்வொருவரும் தத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சதிகாரர்களும்,எதிர்ப் புரட்சிக்காரர்களும் சமுதாயத்தில் எந்தத் தப்பையையும் செய்யத் தயங்காதவர்கள்.தப்பையே மக்களது நலனாகக் கருத்துக் கட்டி மக்களை ஏமாற்றுபவர்களென்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல சமீபத்தில் புலிவழியான எமது "விடுதலை"ப்போராட்டமே நல்ல உதாரணமாகவிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் போராட்டத்தால் உந்தப் பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தம்மை ஊக்குவித்த அந்நியச் சக்திகளுக்கு லொபிக் குழுவாகவே இருக்க முனைகிறது.இதை அம்பலப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும்போதோ,அந்தவுண்மைகளையும் தம்மைப்போலவே மாற்றியமைக்கமுனையும் இந்தத் தமிழ்க் குழுக்களது இயக்கவாத அராஜகமானது, மற்றவர்களது தப்பாகத் தமது கடந்த காலத்தை அவர்களது தோளில் சுமத்திவிட்டுப் புரட்சி பேசுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருதிக்கறைபடிந்த மாபியாக்கள் எப்படித்தான் உண்மைகள்மீது சேறடிப்பினும் அது புஷ்வாணமாகிக்கொண்டே வரும்.ஏனெனில்,நாம் மக்களை அண்மித்த அரசியலோடு நகர்பவர்கள்.மக்களை ,இனியும் அந்நியருக்காகச் சாகவிடுவதைத் தடுப்பவர்கள் ,நாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-_QhdzGpdqoo/USKqd6tvLZI/AAAAAAAAAS4/103JIUu25bI/s1600/FSLP_CI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-_QhdzGpdqoo/USKqd6tvLZI/AAAAAAAAAS4/103JIUu25bI/s320/FSLP_CI.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நம்மிடம்,புரட்சி-புடலங்காயெல்லாம் " கிடையாது.மக்களைப் பலியிடுவதைத் தடுப்பதைத்தவிர நாம் புரட்சி-போராட்டம்,யுத்தமென்று அவர்களது எதிர்காலத்தை நாசஞ் செய்யும் துரோகத்தனமான அந்நிய நலன்சார் அரசியலை மக்கள்மீது செலுத்தும் இயக்கவாத கயமை எம்மிடம் இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே,தொடர்ந்தும் இத்தகைய மாபியாக்களையும் அதன் கபட அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைவிட்டுப் புலிகளது அராஜகத்தின்முன் மௌனித்திருந்து அவர்களுக்கு கருத்தியல் வலுவும்,அவர்களது அராஜகத்தையும் வளர்த்துவிட்டதைப்போலவே இப்போதும் இருக்க முனைபவர்கள் நம்மைப்பார்த்து"நாப் பிளக்கப் பொய்யுரைத்து" என்று கூறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே",எதுபொய்-எதுவுண்மை"என்பதைப் புலிகள்மீது நாம் வைத்த கருத்துக்கள்-ஆய்வுகளிலிருந்து உரைக்கும்போது அனைத்துமே தெரிந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே பேசப்படுவது நமக்குள் இருக்கும்,இப்போதைய சதிக் குழுவான-இரயாகரன் குழு!இது, ,புலிகளது கடந்தகால ஆட்காட்டிகள்,புரட்சியைச் சிதைத்த புலிகளது கைக்கூலிகளென்பதை அவர்களது இன்றைய அரசியலிலிருந்து புரிய முடியும்.தம்மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் தம்மைப்பார்த்துக் கேட்கப்படும் உண்மைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காது மற்றவர்களையும் தம்மைப்போல் புரட்டுக்காரரென நிறுவ எந்தக் கீழ்மையான வேலைக்கும் போகத்தக்கவர்கள் இவர்கள்.இதனாற்றாம் இந்தக் குழுவானது முகமூடியோடும்,முகமூடியற்றும் எங்கும் அலைந்து திரிகிறது.இக் குழுவுக்குத் தீனிபோடும் அந்நியச் சக்திகள் நமது மக்களை இன்னும் மொட்டையடிப்பதற்கு நாம் துணைபோக முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்கள் புதிது, புதிதாக ஆரம்பிக்கும் குழுக்களைக் கட்சிகளை சந்தேகிக்காது"மக்கள் நலத்துக்கான"அணித்திரட்சியென நம்பும் முட்டாள்த்தனமே இதுவரை எமைப் புலிவழியாலும்,மற்றைய குழுக்கள்வழியாலும் அழித்து, அடிமையாக்கியதென்பதைப் புரிந்தும் நாம் இவர்களது கபட அரசியலுக்கும் மௌனித்து, வாளாதிருப்பது மேலும் ஒரு அராஜகக் குழவின் கையில் மக்களின் தலைவிதியைத் தாரவார்ப்பதாகவே அமையப்போகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள், எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக, இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் “புரட்சிக்கரர்” என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின் மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.இது,அரசியல் மோசடி!எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான “அதிகாரப் போட்டி அரசியலை-புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச் சூழலில்-“எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே" நமது மக்களது வாழ் நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங் கடந்து,கண்டங் கடந்து நடந்தேறுகிறது.அங்கே,மாற்றுக் கருத்தாளர்கள் முதல்" புரட்சிக்காரர்கள் " வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்”புரட்சி-விடுதலை”குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
18.02.2013</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2:</div>
<div style="text-align: justify;">
===========================================</div>
<div style="text-align: justify;">
என்னை மீளவும் பெரிய மனுஷனாக்கும் இரயாகரன் குழு!</div>
<div style="text-align: justify;">
============================================</div>
<div style="text-align: justify;">
அப்பு,<a href="http://iniorunet.wordpress.com/2013/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/">இப்படிக்</a> கடந்த காலத்துள் புலிகள்கூட எட்டப்பர் .கொம் மூலம் "வைகைச் சிறியெனக் கட்டுரை போட்டு" என்னைச் சேறடிக்க முனைந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது, இரயாகரன் குழுவைத்தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் எனக்கு,அந்தக் குழுவினது உறுப்பினனும்,எனது ஊரவனான,நான் பார்க்க அரை ரவுசருடன் இயக்கத்தை வேடிக்கை பார்த்தவனுமான ஒருத்தன் <a href="http://iniorunet.wordpress.com/2013/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/">நோர்வேயிலிருந்து இப்படியெழுதுகிறான்.</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://iniorunet.wordpress.com/2013/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/">http://iniorunet.wordpress.com/2013/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/</a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-eQgWaJ7LRO8/USKqeRrzXbI/AAAAAAAAATA/0q4oSjtrvgc/s1600/487120_418962538164296_1040140570_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-eQgWaJ7LRO8/USKqeRrzXbI/AAAAAAAAATA/0q4oSjtrvgc/s320/487120_418962538164296_1040140570_n.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவெல்லாம் எனக்குச் சின்ன விஷயம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள்,இப்படித்தாம் சோடிக்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் எதிர்ப்புரட்சிகரச் சக்திகளென்பதை இப்படி நிரூபிக்கின்றீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி,இரயாகரன் குழுவே!.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்,எப்பவும் நன்றி மறவாதவன் இரயா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் தந்த சுளகும்-என்னை இரயில் நிலையம்வரை வந்து இரையில் ஏற்றிய இரயாவை-சிறியண்ணனை என்றும் நன்றியோடு எண்ணிக்கொண்டாலும்,அரசியல் ரீதியான உங்கள் தவறான நடாத்தையை நானென்றுமே மன்னிக்கேன்.அது பரந்தபட்ட தமிழ்பேசும் மக்களது தலை விதியையே மாற்றுவது.அதை,எதுக்காகவும்-எவருக்காகவும் காவு கொடுப்பது மனித நாகரீகத்துக்கே கேடானது தோழா!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது குறித்து இன்னுமின்னும் அதிகமாக எழுதுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏனெனில், நாம் மூன்று இலட்சம் மக்களது உயிரோடு விளையாடியவர்கள்.அதன் இரத்தக்கறை உலர்வதற்குள் மீளவும், சதி செய்கிறோமே,அதைத் தட்டிக் கேட்பதென்பது புரட்சியின் முன் நிபந்தனை தோழர்களே!நடத்துவோமா புரட்சி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி</div>
<div style="text-align: justify;">
18.02.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-61407348025198457372013-01-27T12:52:00.005+01:002013-01-27T14:45:28.048+01:00" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"<span style="font-size: large;">தமிழ்த் தேசியத்தின் கோர முகம் இஃது!</span><br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">பு</span>லிகளால் துரத்தியடித்தல்,வெளியேற்றுதல் தமிழீத்துக்காக.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வட புலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான பரிகாரம் எதுவாக இருக்க வேண்டும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலிவழியாகச் செழித்து வளர்ந்த தமிழ்த் தேசியமானது மிகக்கொடிய பாசிசமாகவுச்சம் பெற்றது 1990 களில்.இதன் தார்ப்பார் சொந்த மண்ணிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை அவர்களது வேரோடும்,விழுதோடும் பெயர்த்து தெற்கே வீசியெறிந்து எதிர்காலத்தை அழித்தது,தமிழ்த் தேசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
[ The announcement Liberation Tigers of Tamil Eelam (LTTE - separatist rebels fighting for an independent ethnic Tamil state in the north) made on 29 October 1990: All Muslims in Jaffna Peninsula, which included the capital of the war-hit Northern Province (Jaffna), had 24 hours to leave or face forced expulsion and death.] </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, நவ மனித நாகரீகத்துக்கே எதிரான மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனம்.நாசிகளுக்கு நிகராகத் தன்னை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் மனிதவதை இது.தமிழ்த் தேசியத்துக்கும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குமான உறவுப் புள்ளியானது சாரம்சத்துள் இனவழிப்பே!<br />
<br />
ஆனால்,தமிழ்த் தேசியமோ சிங்களத் தேசியவாதத்தைவிட மிகவும் கொடியதென்பதற்கு -ஒரு இனத்தை அதனது சொந்த மண்ணிலிருந்து 24 மணி நேரத்துக்குள் குடியெழுப்ப முடியுமென்பதற்கும்-சிங்கள இனவாதமே செய்ய முடியாததை இந்தப் பாசிசப் புலிகள் வழி வளர்ந்து பாசிசமாகவுச்சம் பெற்ற தமிழ்த் தேசியத்தின் கோரமுகமாக இந்த முஸ்லீம் மக்களது அவலம் என்றும் வரலாற்றில் பதியப்படவேண்டும்.<br />
<br />
<br />
இத்தகைய கொடிய நிகழ்வுக்கான(தமிழ்த் தேசியத்தின்வழி புலிகளால் முல்லீம்களது குடி குலைத்தல்,அழித்தல்,கொலை செய்து அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றித் துரத்தியடித்தல்) சமூகவுளவியலை தமிழ்த் தேசியம் பல் நூறு ஆண்டுகால அநுபவப்பட்ட அதன் சாதியவொடுக்குமுறை பண்பாட்டிலிருந்து பெற்றதென்பதே உண்மையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="http://www.youtube.com/embed/70ulPyysguQ" width="480"></iframe><br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்மீது கணிசமான தமிழ்த் தேசியவாத அநுதாபிகள் அன்று வைத்த பழி சுமத்தல்:" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"என்ற உரையாடல்-உணர்வு வழியாகப் புலிப்பாசித்தையும்,தமிழ்த் தேசியத்தின் கோர முகத்தையும் அங்கீகரித்து அதை, வளர விட்டுத் தம்மைத் தாமே அழித்திருப்பினும் இந்தத் தமிழினமானது முஸ்லீம் மக்களிடம் பாரிய மன்னிப்பும் நஷ்ட ஈடும் கட்டியாகவேண்டும்.இது அரசியல்ரீதியான சட்டவாதத்துக்குட்பட்ட பகிரங்கமாக இருக்கவேண்டும்.வரலாற்றில் இது பதியப்பட்ட ஆவணமாக என்றும் நிலைக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று நாசிகள் செய்த இனவழிப்புக்கு நிகரானது இந்த மக்களைத் துரத்தியடித்து அழித்த புலிகளது பாசிசமாகும்.இது,இன்றைய கங்கேரி விக்டர் ஓர்பானுக்கு நிகரானதுங்கூட.அங்கே, சிந்தி - ரோமா மக்களை அவர்களது குடியிருப்புக்குள் வைத்துக் கொலை செய்து அழித்தெரிக்கும் அவலத்துக்கும்,அந்த வலியை நாம் உணர்வதற்குமான நேரடிச் சாட்சியாக யாழ் முஸ்லீம் இனத்தின் அவலம் வரலாறு பூராகத் தொடரவேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்த் தேசியத்தைப் பேசுபவர்கள்,அதை வைத்து ஆட்சி,அதிகாரத்தைப் பெறும் கட்சிகள்-குழுக்கள்,இவர்களின் பின்னே யாழ்ப்பாணத்தில் பெரு வர்த்தகம் புரிந்து கோடிகோடியாயச் சம்பாதிக்கும் வர்த்தகர்களுட்பட இந்த அவலத்துக்குப் பதிலளிக்கவேண்டும்-நஷ்ட ஈடு கட்டி அவர்களது வாழ்விடங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு அவர்களை வாழ வைக்க வேண்டும்.வடபுலத்தில் மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களுக்குக் குறிப்பாக இளையவருக்கு அது அவர்களது தாயகமெனும் உணர்வு வரும்வரை வாழ்சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்காக இலங்கை அரசானது தமிழ்த் தேசிய வாதிகள்,கட்சிகள்,தலைவர்கள்,ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் புலித் தலைமைகளுட்பட வடமாகாண வர்த்தகர்கள் மற்றும் தமிழினத்திடமிருந்து நஷ்ட ஈடு பல கோடி அறவிட்டு இந்த மக்களுக்கு வழங்கியாக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூடவே,இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையும் அதுசார்ந்த அரசுகளுமென்பதால் இலங்கையை ஆளும் கட்சிகள் தமக்குள் இணைவுகொண்டு ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும்.அது,சிங்கள,தமிழ்த் தேசியத்தின் கொடியவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இனத்துக்கு அடுத்துவரும் நூற்றாண்டுவரை எந்த இறைவரியும் அறவிடக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பாக அவர்கள் வரிவிலக்களிக்கப்பட்ட இனமாகவே சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவே,அவர்களது அழிவுகளுக்கான நீதீயும், அரச நியாயமுமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய நிலையை ஏலவே நாசியத்தால் பாதிகப்பட்ட இனங்கள் உலகில் பெற்று வாழ்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை அரசை இது நோக்கிச் செயற்பட வைக்கும் பாரிய தார்மீகப் போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் தொடர்வதற்குத் தமிழினம் உறுதுணையாக நின்று, தனது வரலாற்றுத் தப்புக்கான தண்டனையை அவர்களுக்கு நஷ்ட ஈடுகட்டி, உலகில் நாமும் நியாயமானவர்கள்தாமென நிரூபித்தாகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கான அரசியல் ஊக்கத்தை கருத்தியற்றளத்தில் அனைவரும் ஏற்று முன்மொழிவதே முஸ்லீம்களுக்கான உடனடித் தீர்வாகும்!!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைவிட்ட அனைத்தும் ஏமாற்று.அது முற்போக்குச் சக்திகளாற்கூட முன்வைக்கும் நிலையிலும்கூட!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
27.01.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-52840564759102039062013-01-26T02:44:00.002+01:002013-01-26T02:44:28.470+01:00சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?<blockquote class="tr_bq">
<blockquote class="tr_bq">
<b><span style="font-size: small;">இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!</span></b></blockquote>
</blockquote>
<br />
<br />
<br />
<span style="font-size: large;">"புரட்சி,விடுதலை" குறித்த மாயைகள் தகர்க்கப்படவேண்டும்.</span><br />
<br />
<br />
<br />
<div style="text-align: justify;">
முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட <a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8832:2013-01-24-05-47-31&catid=75:2008-05-01-11-45-16">கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் "புரட்சி" வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்"புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்",</a> இதுவரை தொடர்ந்த "தமிழீழ"ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும்கூடவே புலிகளது போராட்டச் செல்நெறிகளையும் சிறு பிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் இந்திய-மேற்குலக மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் முன்னகர்வுக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட்டுச் சிதைக்கப்படும் "இயக்கவாத மாயைக்கு" ஒரு முன்னிலைச் சோஷலிசக் கட்சியும் இப்போது அறிமுகமாகிறது.அதே போலிகள்,புரட்டுவாதிகள் இத்தகையவொரு சூழலைக் கையகப்படுத்தி அதை, ஆதரிப்பதில் தமது கடந்தகாலச் செயற்ப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைப்பதில்புலத்திலும்-நிலத்திலும் வெற்றியீட்டியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://4.bp.blogspot.com/-ZXlCiTfVOzQ/UQMzZPpL2LI/AAAAAAAAASg/Brh5u1s6-Ns/s1600/London_ER2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-ZXlCiTfVOzQ/UQMzZPpL2LI/AAAAAAAAASg/Brh5u1s6-Ns/s320/London_ER2.jpg" width="251" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை,புரட்சி,விடுதலையெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும்,மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்."தமிழீழப்" போராட்டத்தின் அதே சுத்துமாத்து,சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.இந்த மாயைக்குள் தள்ளப்படும் சமூக உணர்வானது நமது கடந்த காலத்தையும்,போராட்டத் தோல்விகளையும் அது குறித்த சரியான மதிப்பீடுகளையும் உருவாக்கும் காலத்தை வெருட்டி,மீளவும் இயக்க வாத மதயைக்குள் திணிப்பதில் வெற்றி கொள்ளப்படும் மனிதவாழ்வு-சமூக அசைவியக்கம் நம் மக்களைத் தொடர்ந்தும் சிதைக்கும்.இது,தமிழ்நாட்டுச் சினிமாவுக்கேற்பத் தயாரிக்கப்பட்ட தமிழகத்து மக்களது மனித மாதிரிகளைக்கொண்டிருக்கும்.இத்தகைய வாழ்வு நிலை மனித மனமானது ,எதைக் குறித்தும் அலட்டிக்காதவொரு மாயைக்குட்பட்ட சமுதாயமாக இருத்திவைக்கப்பட்டுத் தொடர்ந்து சிதைக்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq">
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<b>இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!</b></div>
</blockquote>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய "முன்னிலைச் சோசலிசக்கட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி" மாயைகொண்டு அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இன்றைய புலம் பெயர் குழுக்களது இயக்க வாத மாயையாகும். இதனால், இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தை அன்று திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொண்டது முள்ளி வாய்க்காலில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இராணுவத் தீர்வுக்குப்பின்பான வியூகத்துள் முகிழ்க்கப்பட்ட திடீர் மக்கள் எழுச்சிகள்-மாணவர்கள் கலகமெல்லாம் எமது மக்களுக்குள் ஊதிப் பெருக்கப்பட்டு அதே இயக்கவாத மாயையின்வழியாகப் "புரட்சி", முன்னிலைச் சோசலிசக் கட்சி வழியாகக் கூடிவருமெனக் கருத்தாடி, நம்மைத் நாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அரசியல் அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாகவின்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://2.bp.blogspot.com/-9Yu2J-gbmZY/UQMzZXTHlMI/AAAAAAAAASk/RURzyvbZS4A/s1600/Egal+suwis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-9Yu2J-gbmZY/UQMzZXTHlMI/AAAAAAAAASk/RURzyvbZS4A/s320/Egal+suwis.jpg" width="225" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ஆபத்தைப் புரட்சிகரக் கட்சியாக வர்ணித்துப் புலத்து புரட்டு வாதிகள் குறிப்பாக இரயாகரன் குழு, நான் ஏலவே சொன்னதுபோல அபாயகரமான சக்தி-இயக்கவாத அராஜகவாதிகள்.இத்தகைய இயக்கவாதக் கயவர்கள்மக்களைத் தொடர்ந்து மொட்டையடிப்பதில் அவர்களது உரிமையைச் சொல்லியே அந்நியருக்காகச் சாகத் தூண்டுவதை நாம் பார்வையாளர்களாகவிருந்து பார்க்கப்போகிறோமோ அல்லது தடுக்கப் போகிறோமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!கடந்தகாலப் போராட்டத்தையும்,அதன் தோல்வியையும்,அந்தத் தோல்விக்கான இயக்கவாத மாயயையும் ஆராயவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்றுமின்றும் சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இங்கே,புலிகளதும்,ஏனைய இயக்கக் குழுக்களது இந்திய-அந்நிய அடியாட்ப்படைச் சேவக அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசனமில்லை.இத்தகைய நிலையிற்றாம்,நமது மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்குமொரு சதி அரசியலும்,புரட்டும் தொடர்ந்து அந்நியச் சக்திகளது கைக்கூலி இயக்ககங்களால்-குழுக்களால் "மக்கள் உரிமை,புரட்சி-விடுதலை" யென நமக்குள் அரங்கேற்றப்படுகிறது.இதிலொன்றுதாம் இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சியும், அதன் புரட்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது குறித்த ஆரம்பப் புரிதலுக்குத் தன்னும் நம்மைத் தயார்ப்படுத்தாத சூழலைச் சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
26.01.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-20032527671670586282013-01-13T23:14:00.002+01:002013-01-13T23:32:04.766+01:00ஷரியாவைக் காப்போம்!>>Prof.Dr. Tariq Ramadan presents itself as cosmopolitan liked, educated and smart. Young Muslims in Europe suburbs, he is an idol for many intellectuals, it is the flagship Muslim. But in fact, he preaches a regressive Islam.<< <br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">இ</span>ந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " <a href="http://idrees.lk/?p=2341">இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,</a>அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் <a href="http://en.wikipedia.org/wiki/Draco_%28lawgiver%29">டிராக்கோனியின்[<b>draconian</b>] சட்டவரைவின்</a> கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு <a href="http://idrees.lk/?p=2341">இத்திரியாசைவிட</a> பெரும் புலிகளான <a href="http://www.bassamtibi.de/">பாஷான் ரைபியையும்</a>[Dr.Bassam Tibi- Die islamische Herausforderung. Religion und Politik im Europa des 21. Jahrhunderts. Darmstadt: Primus. 3. Auflage, ISBN 3-534-22034-X Literatur/ Im Schatten Allahs. Der Islam und die Menschenrechte. München: Piper. ISBN 3492222854 ],<a href="http://www.tariqramadan.com/spip.php?lang=en">ராறிக் ராமடானையும்</a>[Prof.Dr. Tariq Ramadan- Radikale Reform: Die Botschaft des Islam für die moderne Welt, Diederichs, ISBN 978-3-424-35000-5 ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய புலிகளைப் பாசிசப் புலிகளென்று சொல்லி அதை எதிர்த்து வந்த தமிழ்த் தேசியவினத்துக்குள்ளிருந்த பெரும் பகுதிச் சிந்தனையாளர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">2:</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.facebook.com/marx.anthonisamy?ref=ts&fref=ts">திரு.மார்ஸ் அவர்களே,நீங்கள் எனது கருத்துக்களை அழித்துவிடுவதிலுள்ள சூழலை</a>ச் [dar asch-schahada ] சொல்வதில் நான் மறுப்பதற்கில்லை.மோடியையும்,குஜராத்தையும் நாம் மறப்பதற்கில்லை-மறுப்பதற்கும் இல்லை.என்றபோதும் ,புரிதலின் அவசியமும்,அதையொட்டிய ஆபத்துக்களைக் குறித்தும் பேசித்தாம் ஆகவேண்டும்.குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". ;-) ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கானவொன நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும்மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறுவிளக்கமளித்துக்காக் முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை <a href="http://michael-mannheimer.info/category/scharia/">இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
13.01.2013</div>
<br />
<a href="http://michael-mannheimer.info/category/scharia/">http://michael-mannheimer.info/category/scharia/</a>நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-25712806211743626932013-01-11T20:15:00.000+01:002013-01-11T22:31:20.686+01:00"இஸ்லாம்-அரேபியர்கள்" எனும் மனித விரோதிகள்.>> Shariah <<<br />
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">ஷ</span>ரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்ணினது இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?அநியாய வாதிகள்.இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற அரேபியக் கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://2.bp.blogspot.com/-0jSMxhEvKbo/UPBjhjBClhI/AAAAAAAAAR8/hsVPIPm3Qf4/s1600/No_Sharia-Law.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-0jSMxhEvKbo/UPBjhjBClhI/AAAAAAAAAR8/hsVPIPm3Qf4/s1600/No_Sharia-Law.png" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொடூவாள்-கழுத்தறுப்பு!<br />
<br />
வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இஸ்லாத்தின் ஷரியா!<br />
<br />
இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://2.bp.blogspot.com/-BMM3cW-Vlqg/UPBjh_7psqI/AAAAAAAAASA/Bat0kMZtLJA/s1600/mohammed-vorbild-f-r-islamische-terroristen.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-BMM3cW-Vlqg/UPBjh_7psqI/AAAAAAAAASA/Bat0kMZtLJA/s320/mohammed-vorbild-f-r-islamische-terroristen.png" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்,அரேபியத் தேசத்துள் மேற்குலகஞ் செய்யும் அநியாயத்தை,படுகொலைகளை,ஆளில்லா விமானத்தின் மூலம் அவ்கானிஸ்தான்,பாகிஸ்த்தான்,ஜேமேன் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை,பாலஸ்த்தீனக் குழந்தைகளது மரணத்தையெல்லாம் தாங்க முடியாத வேதனையோடு அது சார்ந்த மாற்றுக் கருத்துக் கட்டுரைகளை முக நூலில் லிங் பண்ணுவது உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால்,எனது தேசத்தின் மகளை வேட்டையாடிய அரேபிய இனவாதச் சகதி முஸ்லீம்களை எப்படிப் புரிவது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்த் "தேசியத்துக்காக" ப் போராடியதெனப் புரியப்பட்ட புலிகளையே பாசிஸ்ட்டுகளெனச் சொல்லி அவர்களது மனித விரோத்துக்கெதிராகக் குரல் கொடுத்து வருபவன் நான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம்களை வேட்டையாடிய புலிகளை என்றுமே மன்னிக்காதவன் நான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது, போலவேதாம் இந்த ரிசானவின் படுகொலையிலும் நான் இந்த அரேபியர்களை,அவர்களது காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.உலகத்தில் அனைத்து மதங்களும் வரலாற்றில் மனிதவழிப்பைச் செய்திருக்கிறது.ஆனால், இந்தக் காட்டுமிராண்டி இஸ்லாமானது இந்த நூற்றாண்டிலும் இப்படிக் கொடூவாள் மூலம் ஒரு மனிதரின் கழுத்தை வெட்டிப்போடுமென்றால்- இது,ஏன்-எதற்காக?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் படுகொலைக்குப் பின்,நான் அரபுலகத்துள் நடக்கும் கொலைகளையோ அல்லது, அரேபியக் குழந்தைகளது மரணத்தையோ ஒரு பொழுதேனும் மதிக்கப்போவதில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரபுத் தேசத்துள் ஐரோப்பியர்கள்,அமெரிக்கர்கள் செய்யும் மனிதவிரோதத்தையும் கண்டுகொள்ளப் போவதுமில்லை.இந்த அரபியவுலகத்து இஸ்லாமியர்கள் வாழ இலாயக்கற்ற மனிதவிரோதிகள்.காட்டமிராண்டிகள்.மனித பெறுமானந்தெரியாத பயங்கரவாதிகள்-மனிதப் புணந் தின்னும் காமகர்கள்.இழி குலத்தோர்-இடிகுலத்தோர்!,மனிதப் பிணந் தின்னிகள்-குருதியருந்தும் தீய குணத்தோர்!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://1.bp.blogspot.com/-Pduajclgwts/UPBjiMvwR0I/AAAAAAAAASE/y-qIDqQ7lEI/s1600/sharia-law-discriminates.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-Pduajclgwts/UPBjiMvwR0I/AAAAAAAAASE/y-qIDqQ7lEI/s1600/sharia-law-discriminates.png" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகள் இவர்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில் எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை மார்க்சிய விரோதியாகவே தனது ஆய்வுகளைச் செய்தவர்.இறுதிவரை அவர் மார்க்சியத்தின்மீது வைத்த விவாதத்துக்கு எந்தக்கொம்பனும் பதில் வைத்தே இருக்கவில்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக வெளியேற வேண்டும்.இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும் நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவரை, அரேபியவுலகத்து மனிதர்களது அழிவுக்காக மனம் வெடித்து வெதும்பிய நான் அது குறித்து இனிக் கவலையுறேன்.மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.இது,உங்களது ஊழ் வினை.இஸ்லாத்தினதும்,உங்கள் ஷரியாவின் வன் கொடும்மைச் சட்டத்தினதும் அறுவடை.எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்கும் மேற்குலகத்தவர்கள் உங்களைத் துவசம் செய்வதும்,பூண்டோடழிப்பதும் பொருளாதாரக் காரணம் மட்டுமல்ல!</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://3.bp.blogspot.com/-rNeCylC70_0/UPBjhU7CUzI/AAAAAAAAAR4/WWEqB5decV0/s1600/scharia-abgehackterkopf.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-rNeCylC70_0/UPBjhU7CUzI/AAAAAAAAAR4/WWEqB5decV0/s320/scharia-abgehackterkopf.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கவுண்டு போங்கோ-காணமற் துடைக்கப்பட்டு,இவ்வுலகத்தில் இஸ்லாமியச் ஷரிய வன்கொடுமை இல்லாது போகட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுபோல், அனைத்து மதங்களினதும் கொடுமைகளையும், அவைகளும் அழிந்தே போகட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையான மனிதர்கள் கார்ல் போப்பராக இந்த அடிமைத்தனமான இஸ்லாத்தின் பயங்கரவாதத்திலிருந்து வெளியேறியாகவே வேண்டும்.அதைச் செய்யதோர் மனித விரோதிகளே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்துப் பாசிஸ்டுக்களைப்போல்-வற்றிக்கான் மாபியாக்கள் போல் இந்த மெக்கா-மெதினாச் சாபக்கேடுகளும் மனித விரோதிகளே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணினது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப.வி.ஸ்ரீரங்கன்</div>
<div style="text-align: justify;">
11.01.2013</div>
நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-60263082888029600032012-04-05T23:07:00.003+02:002012-04-05T23:45:06.815+02:00அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் ...<div style="text-align: justify;"><span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" >அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் இன்னொரு, டக்ளஸ் ஆகிட்டாரடா!</span><br /><br /><span style="font-size:130%;"><br />சா</span>ர்த்தார்(டான் ரி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர்) அவர்களே,<br /><br />எல்லோரும் ஒரு இனமாக எழுவதென்பதை மறுத்துத்தாமே வடக்குக் கிழக்கு மாகாணப்பிரிவு?<br /><br /><a href="http://www.dantv.tv/index.php?option=com_content&view=article&id=1625:nerukku-20120325&catid=103:nerukku-ner&Itemid=541">பின்பு,என்ன அரசு,புலி பிரித்தாளும் தந்திரமென்கிறீர்கள்?</a>.<br /><br />கிழக்கின் மீதான வடக்கு யாழ் மேலாதிக்கமோ அல்ல கிழக்கு முஸ்லீம்கள்-சிங்களவர்கள் மீதான கிழக்குத் தமிழரின் மேலாதிக்கமோ இரண்டும், அடிப்படையில் தவறானவை.எனவே,பிரித்தாளும் தந்திரமென்பது இப்போதுதாம் மிக நேர்த்தியாக இயங்குகிறது.இதைத்தாம் ஞானம் வகுப்பெடுக்கிறார்.ஆனால்,யாருக்காக என்பதே கேள்வி?<br /><br />இலங்கை ஜனாதிபதி மகிந்தா சொல்கிறார்:<br /><br /><blockquote>"நான் இலங்கையின் அனைத்து மக்களுடைய ஜனாதிபதி.ஒருவரையும் புறக்கணிக்கமாட்டேன்.அனைவருமே இலங்கையின் குடிகள்.நாம் அனைவரும்இலங்கையரே தவிர தமிழர்களோ,சிங்களவர்களோ,முஸ்லீம்களோ அல்ல. மாறாக," இலங்கையாகள்"."</blockquote><br /><br />ஞானம் சொல்கிறார்(கவனிக்கவும்: இனிமேல் "அடேய், மச்சான்" போட ஏலாது.அவன் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்தனது அரசியல் ஆலோசகர்.அரசியற் பலமுடைய அதிகாரத்தோடிருப்பவனை-"அவர்"என விளித்துக்கொண்டு...):<br /><br /><br /><iframe src="http://www.ustream.tv/embed/recorded/21365868" style="border: 0px none transparent;" frameborder="0" height="386" scrolling="no" width="480"> </iframe><br /><br /><a href="http://www.ustream.tv/" style="padding: 2px 0px 4px; width: 400px; background: #ffffff; display: block; color: #000000; font-weight: normal; font-size: 10px; text-decoration: underline; text-align: center;" target="_blank">Video streaming by Ustream</a><br /><br /><blockquote>"முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்குமாகாண அனைத்து மக்களுக்குமான முதலமைச்சர்,முஸ்லீம்களே அதை ஒப்புக்கொள்வார்கள்."</blockquote><br /><br />இங்கே,மகிந்தாவினதும்,ஞானத்தினதும் கோசத்துள் மறைந்திருக்கும் அதிகாரமானது தாம் மையம்.இந்த அதிகாரம் எதிலிருந்து எழுகிறது?<br /><br />இதுதானே யாழ்ப்பாண மைய வாதத்துக்கும் ஏலவே அடிப்படையானது?<br /><br />பின்பு,வடக்குக் கிழக்கு இணைவென்பது யாழ்ப்பாணிய மேலாதிக்கமானபோது,கிழக்குக்குள்"முஸ்லீம்கள்"மீது இந்த கிழக்குத் தமிழ் அடையாள மேலாதிக்கம் காலவோட்டத்தில் அழுத்தத்தைதாம் செய்யும்.கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்புக்குக் கூறும் இந்த அனைத்து மையமான காரணிகளும் அதிகாரத்திலிருந்து எழுவதென்பதில் கிழக்குமாகாண அரச அதிகாரி ஞானம் கவனத்தைக்கொள்ளுவாரெனவும் நம்பிடலாம்.<br /><br />கிழக்கு மாகாணத்தில் மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் அவரவர் வாழும் பாரம்பரியமான தாயகப் பூமி நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டு,அந்தந்த மக்கள் கூட்டமே அதை நிர்வாகிக்கும் மாகணவுரிமை அவசியம்.<br /><br />எனவே,கிழக்கிலோ அன்றி வடக்கிலோ எம்.ஆர்.ஸ்டாலினது வாதத்துக்கமைய மொழி-மத-சாதி ரீதியாக அவரவர் வாழும் வலயங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்தச் சாதிகள்,மதங்கள்,மொழிகள் சார்ந்து அவரவர் ஆளுவதே சரி.<br /><br />யாழ்ப்பாணியச் சைவ வேளாள மேலாதிக்கத்தின் வினை போன்றதே கிழக்குமாகாணத்துக்கு ஒரு தமிழன் முதல்வராவது.இது ஏற்கக் கூடியது அல்ல!அப்பாவி முஸ்லீம்களைத் தொடர்ந்து ஓரங்கட்டும் வடக்குக் கிழக்கு மைய வாதத்தை என்னால் ஏற்க முடியாது.இதை முஸ்லீம்களும் தமக்கான ஆளுமையை-முதலமைச்சரைத் தேடிக்கொண்டு,முஸ்லீம் மாகாணத்தை கிழக்கில் உருவாக்கியே தீரவேண்டும்.இதற்கு இந்தியா-அமெரிக்கா மிக நேர்த்தியாக உதவ முன்வருவார்கள்.<br /><br />கிழக்கு மாகாண அரச அதிகாரி ஞானத்தின் குரலானது முற்று முழுதாகக் கிழக்கு மைய வாதமாகும்.அஃது, முஸ்லீம்களை ஏமாற்றும்.ஏனெனில்,வடக்குச் சைவ வேள யாழ் மைய வாதமானது ஞானத்தை ஏமாற்றியது.அதுபோல் ஞானத்தின் கிழக்கு மைய வாதம் முஸ்லீம்களுக்குக் " கீல்வாதமாக" மாறும்.ஆகையினால்,முஸ்லீம்களே உங்களை நீங்களே ஆள அநுமதியுங்கள்.<br /><br />முஸ்லீம் மாகாணம் ஒன்று கிழக்கு மாகாணத்துள் உருவாகவேண்டும்.கிழக்கு மாகணத்தில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.அவர்கள் முஸ்லீம்களாகவும்,சிங்களவர்களுமாக இருப்பதால் கிழக்கு மாகாணத் தமிழ் மேலாதிக்கத்துள் அவர்கள் கட்டுண்டு போவதை ஏற்க முடியாது.<br /><br />காலவோட்டத்தில் கிழக்கு மேலாதிக்கத்தின் பண்பும் அதே யாழ் மேலாதிகத்தின் பண்பாகவே விரியும்.ஏனெனில்,அதிகாரத்தின் இயல்பே ஆதிக்கத்தைத் தகவமைத்துக்கொண்டு இருப்பைக் காப்பது.எனவே,கிழக்கு மாகாண இனங்கள் யாவருக்கும் ஒரு முதலமைச்சர் என்பது அதே மகிந்தாவின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி எனும் அதிகாரத்தின் வடிவமே.<br /><br />ஆக,அவரவரை அவரவரே ஆ(ள)ட விடவேண்டும் ஞானம்.<br /><br />கிழக்கையும் "முஸ்லீம்-தமிழ்" மாகாணங்களாகப் பிரித்து விடுங்கோ.அப்போதுதாம்,உங்கள் மேதமையை நம்போன்ற மூடர்கள் அறிந்து பின்தொடர முடியும்!<br /><br />அங்கே, ஒரு முஸ்லீம் மாகாணம் உருவாகியே தீரவேண்டும். இதுதாம் உங்கள் ஞானத்தினது விருத்திக்குச் சரியானது.<br /><br />வடக்கையும்-கிழக்கையும் பிரித்த உங்கள் அரசியல் அறிவுக்கு இதுவும் சரியானதாகப்பட வேண்டும்.இல்லையேல் அடிப்படையிலேயே உங்கள் அரசியல் யாருக்கோ உழைப்பதாகவும்,அந்தச் சக்திகளது பிரித்தாளும் தந்திரத்துக்கு நீங்கள் வாய்க்கால் வெட்டும் ஒரு தொண்டாரப் பயல்தாம்.<br /><br />எதுவெப்படியோ,அமெரிக்காவினதும்,இந்தியாவினதும் நீண்ட காலக் கனவான "வடக்குக் கிழக்கு" இணைவு மறுக்கும் கனவு இப்போது நனவாச்சு!<br /><br />உங்களைவிட அமெரிக்காவுக்கு இது ரொம்ப மகிழ்ச்சி அன்பரே.<br /><br />ஏனெனில்,இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும்,இப்போது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.அது இனிமேல் பிரதேசவாரியான உள்ளக முரண்களையும் கூடவே நகர்த்தி இலங்கையில் தேசியவின உருவாக்கத்தையும்,தேசியப் பொருளாதார வளர்ச்சியையும் முளையிலேயே கருக்கி நகரும்.இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் நண்ப!<br /><br />இதுதாம்,அமெரிக்காவினது பெரு விருப்பு-கூடவே, நம்ம இந்திய வடக்கு ஆதிக்கத்துக்கும் இது மனமுவர்ந்த அரசியலே!!<br /><br />அன்போடு,<br />ப.வி.ஸ்ரீரங்கன்<br />05.04.2012<br /></div>நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-6185292229350127942012-01-02T21:39:00.007+01:002012-01-05T22:28:32.892+01:00என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???சமீபத்தில் இந்த >> Why this Kolaveri Di << ஆங்கில வார்த்தையூடாகப் பலதரப்பட்ட தொடுப்புகளை எங்கும் காணக் கூடியதாக இருந்தது.முக நூல்வழியாக <a href="http://www.youtube.com/watch?v=0RijO_31ylQ&feature=related">இந்தத் தொடுப்புகளைக்</a> கண்ணுற்றாலும்,அதைத் தேடிச் செல்ல மனம்வரவில்லை.<br /><br />இளையவர்கள் ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ பேசிக்கொள்வதாக இருந்துவிட்டேன்.ஆனால்,தமிழ்ச் சினிமாவில்இப்படியொரு பாட்டை தனூஸ் பாடுவதுபோல அமைத்திருப்பதென்றும்,மிகவும் மோசமாகத் தமிழைக் கொலை செய்து பாடல் கட்டப்பட்டிருப்பதென்பதும்,அப்பாடலானது ஒரு மில்லயன் தடவைகளுக்குமேல் கேட்கப் பட்டிருப்பதையும் இன்றுதாம் கண்ணுற்றேன்.<br /><br />ஏலவே,ரகுமானின் வரவோடு,தமிழ்ப் பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பும்,அதுசார்ந்து கிளர்ச்சி வெறியூட்டும் இரைச்சல் வகைப்பட்ட ஒலியும் சினிமாவில் புதியதொரு செவிவழி நுகர்வு இசையை உருவாக்கியது.<br /><br />மெல்லிசைச் சாரலில், நாட்டுப்புறத் தேமாங்கு பாடிய இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து "கொலைப்படாத" தமிழ் வார்த்தைகள் அதிகமாக ரகுமானால் கொல்லப்பட்டு வெறும் இரைச்சலாக செவிகளில் பட்டுத்தெறித்தன- 1990 களில் தமிழின் நிலை இதுவாக உருவாகியபோது,இன்று அதன் பரிணாமம் கொலைவெறிப் பாடலாக நம்மைத் தொடர்ந்து தாக்கி நமது மொழியைக் கொன்றுவிடும் அளவுக்கு வளர்ந்து விருட்ச மாகியுள்ளது!.இது கவனத்துக்குரியது.<br /><br /><iframe src="http://www.youtube.com/embed/7-GmD7hxDy0?fs=1" allowfullscreen="" frameborder="0" height="270" width="480"></iframe><br /><br />கொலைவெறியோடு, புகுந்து விளையாடிய ரகுமான் காலத்தில் இசைப் புயலாவும் போய், நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றியபோது,அதை முன்னிலைப்படுத்திய சொனி நிறுவனம், அவரை ஓஸ்க்கார் விருதுபெற வைத்துச் சந்தையில் நிரந்தரமானவொரு நுகர்வுப் பொருளாக ரகுமானை மாற்றி வைத்திருக்கும் இன்றைய பொழுதில்தாம், இந்தக் கொலை வெறிப் பாடல்களெல்லாம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கவேண்டும்.<br /><br />இந்தத் திசையில், மக்களது கலையில் அதிகமான பல்வகை உணர்வுகளைத் தகவமைக்கும் நுண்கலை வடிவமானது நிரந்தரமாகவே,மொழியின் வார்த்தைகளைக் கொய்தெறியும் இரைச்சல் ஒலியாக எழுந்து,அதுவே பிரபலமான இசைப் பாணியானது.<br /><br />இதன் உச்சம் இப்போது தனுஸ்கூட்டணியின் தலைமையில் கொலைவெறிப்பாடல்களாக வந்திருக்கிறது?.<br /><br />இதை வார்த்தைகொண்டு,கவிஞர்கள் எதிர்த்திருப்பதை நேற்று வாசித்தேன்.தமிழில் மிக அழுத்தமாகத் எழுதத் தெரிந்தவர் கவிஞன் காசி ஆனந்தன்.<br /><br />அவர்,இத்தகைய பாணியையும்,கவிதை-பாடல் எழுதும் போக்கையும் கண்டித்திருக்கிறார்.அதையும் மீறி ,மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாடல் வழியாகவே-அவர்களது இசைப்பாணியிலேயே <a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FuJPlsDj5fk"></a><a href="http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0">இந்தப் பாடல்</a> நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.<br /><br />இது,எடுத்துப்போடும் வார்த்தைகள்-கேள்விகள் தார்மீக அடிப்படையில் ஒரு இனத்தின் மொழிமீதான எதிர்கால இருப்புக் குறித்த பார்வையில், அதிகமாக வரவேற்கத் தக்க நிலைப்பாடுகளை அது முன் வைக்கிறது.இரண்டையும் செய்திருப்பவர்கள் இளைஞர்கள் என்பதே இதன் கவனத்துக்கான முக்கிய புள்ளி.<br /><br /><span style="font-weight: bold;">ஒரு அணி : நிதிவலுவுள்ள தமிழ்நாட்டுத் தமிங்கிலீஸ் நடுத்தரவர்கத்துக் கோடம்பாகத்து இளைஞர்கூட்டம்,</span><br /><br /><span style="font-weight: bold;">மற்றய அணி : நிதிவலுவற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் குழாம்,</span><br /><br />இதுள்,உலக நடப்பிலுள்ள நுகர்வுச் சந்தையில் பல கோடிகளைக் குவித்துள்ள பாரிய கெடுதி விளைவிக்கக்கூடிய தமிழ் நாட்டுச் சினிமாக் கூட்டத்தின் அதீத வலுவை,எந்தச் சந்தையோ அல்லது நிதிவலுவோ அற்ற யாழ் இளைஞர்களின் பாடல் எதிர்கொள்கிறது!<br /><br />இந்த யாழ்ப்பாண இளைஞர்களின்பாடலுக்கு, நியாயமான கேள்வியும்,எதிர்காலம் குறித்த ஏக்கமுமே பக்கப்பலமாக இருக்கிறது.இந்த எதிர்ப்புக் குரல், தான் பேசிய மகிழும் மொழியின் நிலைக்காக பலமான வேண்டுதலொடு நம்மை அண்மிக்கிறது.நம்மை அழுதுவிடுமளவுக்குத் தாக்குகிறது-நியாயமாகக் கேள்வி கேட்டு உருகுகிறது.நாமும் உருகிப் போகிறோம்.அந்த மிருக வலுவுள்ள கோடம் பாகத்தை அவ்வளவு இலகுவில் வீழ்த்திவிட முடியுமா?அல்லது, மாற்றிவிட முடியுமா?சிறுதுளி பெரு வெள்ளமாகணும்-யாழ்ப்பாண இளைஞர்கள் முளை போட்டிருக்கிறார்கள்.அதுபோல் பல முளைகள் போடப்பட்டு அவை விருட்சமாகினால்மட்டுமேதாம் இந்தச் சினிமாத்தனமான அழிவுச் சந்தையைத் தோற்கடிக்க முடியும்.<br /><br />தாய்மொழியென, நமது நினைவிலி மனதில் பதிந்த தமிழ் நமது இருப்பையும்,வாழ்வையும்,அதுசார்ந்த பண்பாட்டையும் நமக்கு உணர்த்தும் ஊடகமும்தாம்.அதுள் பல்வேறு பிற்போக்கு-முற்போக்குத்தனங்கள் எல்லா மொழிகழுக்குமுரியதைப்போல் உண்டுதாம்.என்றபோதும்,தத்தமது தாய்மொழி குறித்த எதிர்கால அவா,அதன் இருப்பு-நிலைப்பு,வளர்ச்சி குறித்த எண்ணத்துக்கொப்ப எதிர்காலக் கனவைக்கொண்டிருக்கும்.<br /><br />அந்தக் கனவுமீது, தொடர்ந்து சினிமாத்தனத்தாலும்,வர்த்தக நோக்காலும் தமிழ் இனத்தின் இருப்பையே அசைக்கும் இந்த விபரீத இசையையும்-சினிமாவையும் விமரிசனத்துக்குட்படுத்துவதும்,அத்தகைய சினிமாவை நிராகரித்தும், மாற்றுச் சினிமாவின் அவசியமும் உணரப்பட இந்த யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி ஏதுவாக இருக்கின்றது.<br /><br />தமிழினத்தைப் பல முனைகளில் தாக்கும் வார்த்தகவுலகமானது தொடர்ந்து,தமிழினத்தின் அரசியலையும்,அதன் பாண்பாட்டு வடிவங்களையும் பல்வேறு ஆயுதங்களைக்கொண்டு தாக்கி அழித்துவருகிறது. அதுள்,இந்த ரகுமான் பாணி சினிமா இசைப்பாணியும், அதுசார்ந்தெழுதும் பாடல்களும் ஒருவித நச்சு ஆயுதமாகும்.<br /><br />இந்த நச்சு ஆயுதத்தை எதிர்க்கும் யாழ்ப்பாண இளைஞர்களது கனவு பலிக்க வாழ்த்திக்கொள்வதென்பது,நமது ரசனையை நாம் திறம்பட அகலிக்க வேண்டுமென்பதும்,அந்த அகலிப்புள் இந்த நச்சு ரசனைக்கு மாற்றான நமது மண்சார்ந்தும்-நவீனப் புதுமை சார்ந்தும் மொழியைக் கொலை செய்யாத பாடல்களை உருவாக்கி இரசிப்பதற்கு மாற்றுச் சினிமாவை வளர்த்தாகவேண்டும்.<br /><br />இதைவிட வேறு வழி இருக்க்க முடியுமா?<br /><br />ப.வி.ஸ்ரீரங்கன்<br />ஜேர்மனி<br />02.01.2012<br /><br /><br /><br /><span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" >என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???</span><br /><br /><blockquote style="font-weight: bold;">எழுத்து, இசை : எஸ்.ஜே.ஸ்ரலின்.</blockquote><br /><br />என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?<br />என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...<br /><br />கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...<br />நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா...<br /><br /><br />செம்மொழி போற்றும்<br />செந்தமிழ் நாட்டில்<br />தமிழிற்கேன் பஞ்சம்?<br />தமிழை விற்று<br />பதக்கம் வாங்கும்<br />தமிழா கேள் கொஞ்சம்...<br /><br />கம்பனின் வரிகள்...<br />வள்ளுவன் குறள்கள்...<br />பாரதி கவிகள் எங்கே?<br />தொன்று தொட்டு...<br />பழமை பாடும்...<br />தமிழர் பெருமை எங்கே?<br /><br /><br />என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா...? - தமிழா<br />என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா<br /><br /><br />யேசுஇ புத்தன்இ<br />காந்தி சொன்ன<br />அகிம்சை வழியைக் கேளு -- தினம்<br /><br />தமிழின் செழுமை<br />படித்து வந்தால்<br />தணியும் கொலவெறி பாரு..!<br />ஆஸ்கார் வாங்கிய<br />தமிழன் சபையில்<br />பெருமை சேர்த்தான் தமிழில்<br />செம்மொழி பாடிய<br />புரட்சிக் கவிஞன்<br />தன்னுயிர் கலந்தான் தமிழில்..!<br /><br />தமிழை வாழவை இல்லை வாழவிடு<br />இன்னும் தாங்காதடா மனசு<br />தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு<br />நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு<br /><br /><br />தமிழுக்காக உழைத்தவனெல்லாம்<br />வாய்ப்பைத் தொலைத்து நின்றான்...<br />தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்<br />நான் தான் கலைஞன் என்றான்...<br /><br />பணத்திற்காக படைப்பவன் எவனும்<br />உண்மைக் கலைஞனில்ல -- அவன்<br />கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்<br />அவனும் ரசிகனில்ல<br /><br /><br />என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா<br />என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா<br /><br />யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா<br />எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா. ''நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-32683180950989324382011-12-03T23:53:00.002+01:002011-12-04T00:05:57.209+01:00கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா?// Annam Sinthu Jeevamuraly:<br /><span style="font-style: italic;">நெல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழிலோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம.!; இங்கே கொண்டுவரப்பட்டுள்ள விவாதத்தை யாருடைய வாய்கால் வழிக்கும் திசைதிருப்பி விரும்பியபடி அனுபவித்துப்பார்க்கலாம.; இலக்கியமென்பது காலத்தின் கண்ணாடியென கட்டுரை மட்டும்தான் எங்களுக்கு எழுத் தெரியும். ஆனால் காலத்தையும் காலத்தின் வாழ்ந் மனிதர்களையும் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகின்றோம். காலத்தின் கண்ணடியாகவும் தான் வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும்; அடையாளமாகவும் விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் சொல்லிவிடுகிறது</span><br /><span style="font-style: italic;">கசகறணம் என்பதை யார் எப்படி வேண்டமானாலும் புரிந்து கொள்ளலாம்</span>.//<br /><br /><span style="font-weight: bold;">விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?</span><span style="font-style: italic;"> மதுவந்தி, யாழ்ப்பாணம்.</span><br /><br /><span style="font-weight: bold;"></span><blockquote><span style="font-weight: bold;">'ஷோபா சக்தி படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது.</span><br /></blockquote><br /><span style="font-style: italic;">ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும்.</span><br /><br /><span style="font-style: italic;">வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா.</span><br /><br /><span style="font-style: italic;">வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது.</span> - ஷோபா சக்தி<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KN4J_FKYh8U/TtqqGaqwW8I/AAAAAAAAARs/FOmuddS1s1E/s1600/kasakatana_kuzhanthai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 273px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-KN4J_FKYh8U/TtqqGaqwW8I/AAAAAAAAARs/FOmuddS1s1E/s400/kasakatana_kuzhanthai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5682040907095890882" border="0" /></a><br />P/S :ஏல்லா நாடுகளிலுமுள்ள மொழியை கற்றுக்கொள்ளவும் வட்டாரவழக்குகளைப் புரிந்துகொள்ளவும் முடிகின்ற யாழ்பாணத்தாருக்கு கிழக்குமக்களின் மொழியை புரிந்து கொள்ளமுடியவில்லை என்பது எவ்வளவு பொரிய புலுடா?<br /><br /><a href="http://www.facebook.com/notes/annam-sinthu-jeevamuraly/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/316425831709837?notif_t=note_reply">இந்த விமரிசனத்தை</a> விமல் பேளினில் நடந்த உரையாடல் அரங்கில் 27.11 2011 மிகத்தெளிவாக முன்வைத்தார் இதுக்குள்ள வடக்கும் கிழக்கம் மீள இணையவேணும் என்கிறகோசம் வேற! - By Annam Sinthu Jeevamuraly<br /><br />**<br /><br /><span style="color: rgb(51, 51, 255);font-size:180%;" >நெல்லு+புல்லு:</span><br /><br /><span style="font-size:130%;">ஒ</span>ரு தேசியவினத்தின்மீதான சிங்கள அரசினது திட்டமிடப்பட்ட இனவொடுக்குமுறையின் வெளிப்பாடுகளினூடாகப் பாதிக்கப்பட்டது முழுத் தமிழ்பேசும் மக்களும்தாம்.அது மலையகத்தவர்களாகவிருந்தாலென்ன,இல்லை இஸ்லாமியர்களாகவிருந்தாலென்ன சிங்கள அரசினதும்,அதன் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினதும் திட்டமிடப்பட்ட இனவழிப்பின் உச்சம்தாம்.இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள்ளே நியாயமுறும் எதிர்ப்புப் போராட்டங்களது தேவையானது அவர்களது இருத்தலுக்குரியதான வெளியுள்,அந்தச் சிறுபான்மை இனங்களுக்குள் நசுக்கப்படும் விளிம்பு நிலை மானுடரது குரல்கள் இன்னொரு தரமாக இருமுனைப்பட்ட அதிகாரகங்களைத் தமது வாழ்வுக்குள் சந்திக்கும் திசைகளை,ஒன்றுடனொன்று பொருத்திவிடுவதால் அகவொடுக்குமுறையானது புற ஒடுக்குமுறையைவிடக் காத்திரம்தாம்.<br /><br />தரப்படுத்தல்,என்பதும் அதைக் காரணங்காட்டித்தாம் யுத்தம் எழுந்ததென்பதும் ஒரு ஓரத்திலிருக்கும் நிலைமைகளுக்கு(...)லொபியாகும் தகுதிகள் உருப்பெற்றதன் பார்வைகளாகத் திசை திருப்புதலும் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை நீர்த்துப்போக வைக்கும் பெருங்கதையாடலாக்கச் சாதியத்தைக் கைலெடுத்த இலங்கைப் பாசிச அரசினது வியூகமாக இனங்காணும்போது,இவற்றை வைத்துப் பொதுப்படையான யாழ்ப்பாணத்து மேலாதிக்கமென(தமிழ்ச் சமுதாயத்தின்அக ஒடுக்குமுறை) வர்ணிக்கப்பட்டு ,அரசியல் கருத்தாக்கமாக உள்வாங்கப்படும் செயற்பாட்டுக்கு வலுச் சேர்பதில் பல புரட்டுக்கள் தமிழ்பேசும் மக்களது தன்னுரிமைக் கேள்விகளுக்குள் மலிந்திருக்கிறது.இப்போதைய நிலவரப்படி தமிழ்பேசும் மக்களது பாரம்பரியமான ஐதீக நிலப்பரப்புகளைத் திட்டமிட்டுத் தட்டிப் பறிக்கும் குடியேற்றங்கள் நாளொருவண்ணம் நிகழ்ந்தே வருகிறது.<br /><br />இதுள்,யாழ்மைய வாதம்-யாழ்ப்பாண மேலாதிக்கம் என்பதன் தொடரில் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் வலுவைச் சிதைப்பதிலும் மையங்கொண்டியங்குகிறது!.தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறும் இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களது வாழ்வாதாரத்துக்குப் பயன்படும் கடலும் சம்பந்தப்பட்டது என்பதையுங் கவனமாகப் பரிசீலித்தோமானால், அத்தகைய போராட்டங்கள் அந்த மக்களிடமிருந்து எழாது தடுப்பதற்கும்,இஃதொரு நல்ல வியூகமாகவே யாழ்ப்பாண மேலாதிக்கம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.<br /><br />இதைக்கடந்து, இன்றைய பிரச்சனைகளை மேலோட்டமாகப் பார்க்கும் கருத்து நிலைகளைத் தாழ்த்தப்பட்ட மக்களது அரசிலுக்குள் திணிப்பதில் தற்காலிக"அபிவிருத்திகள்-சமூக மேம்பாடுகள்"என அவர்களை அணைத்தபடி இனவாத அரசு வெற்றிகரமாகத் தன் இலக்கை எட்டும்போது,சோபாசக்தியினது கூற்றை அப்படியே யாழ்ப்பாண மேலாதிக்கமென வகுப்பெடுக்கும் ஜீவ முரளியிடமிருந்து சோபாசக்தி சொன்னதான கருத்தைப் புரிந்துகொண்டோமானால்,அஃது ஒரு தனிப்பட்ட மனிதரது இலக்கிய அழகியற் பார்வையாகிறது.அந்தக் கருத்தைச் சொன்ன நபர் யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் உறுப்பிராகவும்,அதைப் பிரதிநிதிப்படுத்துபவராகவும் இவர்கள் பார்ப்பதுங்கூட ஒருவகையான பிரபலப்படுத்தலுக்கான வியூகம்தாம்.இதை பிறதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.<br /><br />இப்போது சோபாசக்தி சொன்னதைவிட மிக மோசமாக வெங்கட் சாமிநாதன் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொன்னதையும் ஞாபகப்படுத்திக்கொண்டமோனால்(தமிழுக்கு இலக்கியம் இல்லை.அது சகாரப்பாலை வனத்தின் உணர்வுகளைச் சொல்லும் நிலையில் இருப்பதென...)இந்த யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் அண்ணன் பார்ப்பனியமென வகுப்பெடுக்கப்படலாம்.<br /><br />நமது நிலைப்பாடு,தமிழ் இலக்கியத்தின்மீதான சமகால அழகியற் கொள்கைகள்,தத்துவார்த்தப்புரிதல்கள்.இலக்கியமென்பது மனித வாழ்வில் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் வரலாற்றின்-சமுதாயத்தின் கண்ணாடி அடியுண்டு போய்விட்டது. இதுதாம், இயற்கை வாதச் சொல்விளையாட்டை வேறுறொரு பாணியில் முறியடிக்க விரும்பியது.டி.எஸ்எலியாட்டையும்,அவரது கோட்பாட்டுருவாக்கத்துக்குத்(இலக்கியக்கொள்கை) துணை நிற்பதான"மனிதர்கள் தமது அனுபவத்துக்குட்பட்ட புரிதல்களின்வழி தொடர்ந்து சிந்திப்பதன் வாயிலாக சமகாலப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து எழுதுவது படைப்போ-கத்தரிக்காயோ" என்பதையுந்தாண்டி , நான் பீட்டர்.வி.சிமா [Peter V.Zima]குறித்த புரிதலின்வழி [<a href="http://www.amazon.de/Literarische-%C3%84sthetik-Methoden-Literaturwissenschaft-Uni-Taschenb%C3%BCcher/dp/3825215903/ref=sr_1_4?s=books&ie=UTF8&qid=1322951270&sr=1-4"> http://www.amazon.de/Literarische-%C3%84sthetik-Methoden-Literaturwissenschaft-Uni-Taschenb%C3%BCcher/dp/3825215903/ref=sr_1_4?s=books&ie=UTF8&qid=1322951270&sr=1-4</a> ]படைப்பிலக்கியமானது அகவயப்பட்ட அனுபவத்தின்வழியே புறநிலையுள் உருவாகின்ற தன்மைக்கொப்பான சிந்தனைப்பயனுள் மீளவும் அகவயப்படுத்தப்பட்ட புரிதல்களை நிகழ்காலத்துள்புரிய மீட்டெடுப்பது,அதன் தற்காலித் தர்ப்பாரான நிறுவனப்பட்ட அதிகாரத்தினது மொழியை, ஆயுதமாக எடுப்பதில் அந்த அனுபவத்துக்கானவொரு அழகயிற்றேவையை நுகர்வுமட்டத்தில் சந்தை விடாப்பிடியாக வலிந்துருவாக்கிக்கொள்கிறது. எனவே,இலக்கியமென வரிந்துணர முற்படும் போக்குகளுக்கு இந்த அநுபவத்தின்மீதான(கசகறணம்- நான் இன்னும் வாசிக்கவே இல்லை.எங்காவது சந்தித்தால் வேண்டலாம்) இலாடன்கள் அவசியமான உணர்வாக்கப்பட்டபின், அது உருவாக்கி வைத்த அழிகியல் மனதானது தனக்கானவொரு இலக்கிய வடிவத்தை உருவாக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுவிடுகிறது.<br /><br />அந்த மனதின்வழி, வெற்றுப் பேப்பர்களாக அநுபவங்களைக் குவித்து, அதை எழுத்தாக்க முனையும் தருணங்களில் சம்பந்தப்பட்டவரது அநுபவம் ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் அழிகியலை நெருங்காதுபோனால் அது மட்டரமாக உணரப்படும்.இதைச் சோபாசக்தி உணரும்போது,அது யாழ் மேலாதிக்கமாக முரளிக்கு அனுபவமாகும்போது,அவர் மீள,மீளச் சொல்லும்"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்காற் வழியாக ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"என்பதில்,புல்லு யாழ்ப்பாண மேலாதிக்கமாகவும் நெல்லு தலித்து மக்களுமாக உணரத் தலைப்படலாம்.<br /><br />எது,எப்படியோ போயினும்,சோபாசக்தியின் இலக்கியக் கொள்கை என்பது அவரது சக்திக்குட்பட்ட புரிதலின் அனுபவமென்பதை யாழ்ப்பாணிய மேலாதிக்கமென வகுப்பெடுப்பதிலிருந்து விடைகாண முற்படும் முரளிக்கு இருப்பது சம்பந்தப்பட்ட அனுபவத்தின் மீதானவொரு நுகர்வறிமுக யுக்திதாம்.எந்தப் பெரிய முரண்பாடென வகுத்துச் சொல்லினும் இவர்களுக்குள் உலாவரும் நானும் இவர்களது இலக்கியக் கொள்கைகள் குறித்து நிறையவே அனுபவப்பட்டதிலிருந்து, இதை இப்படித்தாம் சொல்லிக்கொண்டு, "உண்மையத் தரிசிப்பதும் மொழியினது அடிப்படைகளை நிலவுகின்ற அமைப்பாண்மைக்குள் புரிந்துகொள்ள முனைதலென்பதால் மொழி என்ன செய்யும் என்பதிலிருந்து மொழியை விடுதலைப்படுத்த லென்பது அதன் தார்மீகமான உழைப்பின் வினையை மறுத்துவிட்டு, என்னால் அனுபவத்தை முதன்மைப்படுத்தி மகிமைப்படுத்த முடியவில்லை"என்றாக முடிக்கிறேன்.<br /><br />ப.வி.ஸ்ரீரங்கன்<br />03.12.11நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-65096908024724945912011-11-26T02:30:00.004+01:002011-11-26T02:37:09.668+01:00பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..."<blockquote style="color: rgb(51, 51, 255); font-style: italic;">// பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. //</blockquote><br /><br /><a href="http://www.facebook.com/parani.krishnarajani">http://www.facebook.com/parani.krishnarajani<br /></a><br /><br /><span style="font-weight: bold; font-style: italic;">பரணி,இஃது ரொம்ப ஓவராக இல்லையா?</span><br /><br />"சுதந்திரம்,விடுதலை,இறைமை"என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?அதன் அடிப்படைகள் என்ன?பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..." "........." இதுதாம் இன்னும் மோசமான ஆபத்தைத்(அபத்தம்) தமிழ் மக்களுக்குத் தரவல்லது.<br /><br /><br />அவர் எந்தவொரு கோட்பாட்டுருவாக்கச் சித்திரத்தின் கர்த்தாவாக இருக்க முடியாது!நடைமுறைசார்ந்து ஒடுக்குமுறைக் கெதிரான "எதிர்ப்புப் போராட்டத்தை"ஒரு இனஞ்சார்ந்து அதைத் சமூகவுணர்வுக்குள்ஜீரணிக்க வைத்ததும்,அதையே ஒரு கட்டத்தில் சமுதாய ஆவேசமாக்கிய பிரக்ஜையில் பிரபாகரன் ஒரு குறியீடாக இருப்பதால் அவர் கோட்பாட்டுருவாக்க கர்த்தாவென்பது மிகைப்படுத்தப்பட்ட உரையாடல்.இதன் வாயிலாகத் தமிழ் இளைஞர்களது சிந்தனைக்குள் மீளவும் மாயயை-போலிப் பெருமையைக் கட்டி வைத்துச் சுயசிந்தனையை மழுங்கடிக்கும் போக்கு இது.சிந்திக்கவும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-cUbhbFnisjY/TtBCL49uwLI/AAAAAAAAARg/vkTMoFD-bQk/s1600/1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/-cUbhbFnisjY/TtBCL49uwLI/AAAAAAAAARg/vkTMoFD-bQk/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5679111902151491762" border="0" /></a><br />தமிழ்ச் சமுதாயத்திடம் எந்தவொரு கோட்பாட்டு இரீதியான உருவாக்கமோ அல்லது செல்நெறியோ இதுவரை நியாயமான வடிவில் நிறைவாக உருவாகவில்லை!தமிழ் மொழியானது வெறும் பூஜைக்குரிய மொழியாகவும்,எதிரிகளால் போலிப் புகழுக்கும் உட்பட்ட வெறும்உணர்வுசார் புனைவுகளால் வாழும் மொழி.இது,ரொலான்பார்த் வழி புரியப்பட்ட"மொழி பாசிசத் தன்மையாக நின்றேகும்"நிலைக்கு மிக நெருங்கிய மொழியாக இன்றிருக்கிறது!இந்த மொழி பேசும் மக்கட்டொகுதியானது இதுவரை"திருக் குறளை"வைத்து உலகைப் புரிய முனையும் அபத்தத்தின் மத்தியில் பிரபாகரன் குறித்து மிகைப்படுத்தி வைப்பதில் அடுத்த தலைமுறையையும் இப்படியே வழிப்பாட்டு அடிமைக் கூட்டமாக்கும் கைங்காரியத்தையும் நீங்களும் செய்வதில்"இனத்தின் விடுதலை,சுதந்திரம், இறைமை" என்பதைப் புலிகளது போராட்டச் செல்நெறிவழி உரைக்க முனைதலானது இதன் அடிப்படைகளைச் சொல்லி சென்றிருக்க வேண்டிய அவசியத்தைக் கோருகிறது.மற்றும்படி, தொல் காப்பியத்துக்கு விளக்கந்தரும் வேலை போன்று பிரபாகரன் குறித்துக் கருத்துக் கட்டுவது ஒரு இனத்தின் விவேகத்தின்மீது ஆணியடிப்பதாகும்!<br /><br />இங்ஙனம் நீங்கள் செய்வதாவது,குறியியல் ரீதியான உணர்வுகொள் சொல்லாடல் குறிப்பானைக் காரணியாக்கும் மருவு நிலையில் புறநிலைகளின் தன்மைகளை மறந்தொதுக்கிறது.ஒப்புமை மூலமாக"இனவிடுதலையை,சுதந்திரத்தை, இறைமை" விளக்கப் படுத்துவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை."இனவிடுதலை,சுதந்திரம்,இறைமை" என்பவை குறிகளின் தொகுப்பல்ல!<br /><br />மொழிவழியாகவுணரப்படும் இவைகளை மொழிவழி குறியாக அடையாளப்படுத்துவதில் அதன் அடிப்படைகள் மறுக்கப்படுகிறது.பிரபாகரன், தமிழ்இனத்தின் இன்றைய கட்டத்தில் இவற்றுக்கானவொரு குறிப்பானாக இருப்பது,அவர்வழி உணரப்படும் போராட்டம் ஒரு குறியீடாகத் தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்திருப்பதானது மேற்காணும் இனவிடுதலை,சுதந்திரம்,இறைமைக்கு கோட்பாட்டுச் சித்திரங்களல்ல!கோட்பாடென்பதை மிக மலினப்படுத்திக் கதைப்பது இன்றைய நிலையில் சாத்தியமாகிவிடுவதையிட்டு நாம் கேகலின் அகவயக் குறைபாடான இயக்கவியலுக்குள் மெல்லச் செல்கிறோம்.ஒன்றின் தொடர்ச்சியை இன்னொன்றுக்குள் காணும்அனாலோஜிக் கோட்பாட்டுரீதியான ஒப்பீட்டுருவாக்க மொழிவு, உங்களது கருத்தின்வழி புரிய முனையும் இந்த நிலையில் இதுவொருவகை சிம்பாதி-பரிவுணர்ச்சி என்பேன்!<br /><br />இது,எமக்கு எட்டப்பட முடியாது நிற்கும்சுதந்திரம்,இன-விடுதலை,இறைமை குறித்து மிக வேகமாக "போலிப் பெறுதல்" உணர்வுக்குள் மிக வேகமாக ஒருவரை இணைத்துவிடுகிறது.இதன் இயக்கவியல்ரீதியான உள்ளடக்கமானது அனைத்து வடிவத்தையும் உடைத்துவிடுதனால் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும்(சுதந்திரம்,விடுதலை,இறைமைசார் ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு தன்நிலைகளை) அழித்துவிடுகிறது. இது,சுதந்திரத்தையும்,விடுதலையையும்,இறைமையையும் வெறும் மொழிவுகளுக்குள் குறுக்கி-குறியாக்கி வடிவத்துக்கு அந்நியத்தை வழங்கி,நாம் இவற்றுக்குப் பக்குவப்பட்ட வாழ்வைத் துய்க்க இலாயக் கற்றவர்களென்று சொல்லாமற் சொல்கிறது.இதைத் தொடர்ந்து நீங்கள் கட்டும்-உதிர்க்கும் நறுக்குகளுக்குள் இயங்கும் நிலைகளாக என்னால் நிறுவ முடியும்.<br /><br /><br />ப.வி.ஸ்ரீரங்கன்<br />25.11.11நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3175741723615250606.post-22590879481278647172011-10-29T00:04:00.001+02:002011-10-29T00:09:08.567+02:00இன்னொரு "அலசல்" வீடியோ<span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" >"விடுதலை"ப் பு(ளி)லிகள்</span><br /><br /><span style="font-style: italic; font-weight: bold;"></span><blockquote><span style="font-style: italic; font-weight: bold;">( இன்னொரு "அலசல்" வீடியோ )</span></blockquote><br /><span style="font-size:130%;">ம</span>க்களின் கழுத்தை நெரித்து<br />நாவைச் சுருக்கிய<br />புலித் துன்னலர்<br />துன்பமில்லாக் காலத்தைத்<br />தூரத் துரத்திய கையோடு,<br /><br />தேம்பியழுது<br />பொங்கியெழும் தேசத்தவரை<br />தேடியழிப்பதும்,<br />தட்டிப்பறிப்பதும்,<br />"அன்று" உச்சத்தைத் தாண்டப்<br />பிள்ளை பிடித்துத்<br />தேசக்காளிக்கு நரபலியிட்டனரா?<br /><br />ஓரத்தே மூட்டிய தீயில்<br />தினம் வேகும்புலத்துத்தேசத்து மனிதர்களுக்கு<br />தேசத்தின் பெயரால் "மாவீரர் தினப் பஜனை"!<br />தேசம்,தேசம்,<br />விடுதலையாச்சு!<br /><br />ஈழமென்ற கனவின்<br />நனவாய்"தேசிய-மாவீரர் தினம்"<br />தெருவெங்கும் "தேசியத் தலைவர்"<br />உயிருடன் உள்ளார் எனத்தோரணமிடுகிறது!<br /><br />செத்தவன்,<br />மண்ணோடு போன பின்னும்<br />நிணம் புசிக்கும் தந்திரமெனச் சரடுவிடும்<br />புலத்துப் புலி<br />கோடம்பாக்கத்துக்<br />குமரிகளைக் காட்டிக் காசும் பறிக்கிறது.<br /><br />எந்தப்புரிதலும்<br />தமிழரை எட்டாத திசைகளைச் செய்து<br />திரட்டிய நிதியோ<br />ஒரு சிலரது தேடிய சொத்தாச்சு!<br /><br />கட்டை விரலை<br />வெட்டச் சொன்னால்<br />மறுபேச்சுப் பேசா எகலைவன்போல<br />மட்டற்ற "தமிழீழ"மயக்கம்<br />மக்களில் சிலருக்கு.<br /><br />அற்பர்கள் அழித்தவை<br />தேசத்து மக்களை<br />வாழ்வை ,பண்பாட்டை<br />பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல<br />அவர்தம்<br />ஆன்மாவையும்தான்.<br /><br />இத்துணை"பொய்மை"இவர் இறைத்திடினும்<br />எத்துணை"கொலைகள்"இவர் கரஞ்செய்கினும்<br />இடர் மறந்து "அன்று" இறந்தனர் மக்கள்!<br /><br />புலத்தில்,<br />இதயத்தைத் தொலைத்த துன்னலர்<br />துயரக் கொடூவாள்தாங்கி,<br />"மாவீரர் பஜனை"ஒலித்தும்,<br />மக்களின் மனதில்உண்டியில் தூக்கி,<br />வழிகளில்"தமிழீழ வெடிகளைப்" புதைத்து<br />பணத்துடன் ஓடப்<br />பொழுதுகள் பார்த்து...<br /><br />மீண்டும்,மீண்டும்<br />பிரபாகரன் "உயிருடன்"<br />சுகமாய்-சுகமாய் உண்டு<br />உறங்குவதாக உருவங்கட்ட,<br />உருண்டவன் தலையும்,<br />கோத்தபாயக் கோடாரியுமாக<br />இன்னொரு "அலசல்" வீடியோ<br />அமெரிக்கப் பாணியில் <a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zCxh_jynzhg#%21">இங்கே...</a><br /><br /><iframe src="http://www.youtube.com/embed/zCxh_jynzhg?fs=1" allowfullscreen="" frameborder="0" height="344" width="459"></iframe>நிர்மாணம் Sri Ranganhttp://www.blogger.com/profile/17021278594454437331noreply@blogger.com0