Freitag, 19. September 2008

பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்

காலம்.



எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்


பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல


மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ


மேகத்துள் மெல்ல விரியும் இருப்பிழந்த
துகளுக்குக் கால்கள் மண்டை வழி முளைத்தபடி
முதுகைக் குப்புறப் படுத்தபடி
சொறிவதற்கு நாட்குறித்த கனவில்



தெருவோரத்து நாய்களில் ஒன்று
திடங்கொண்டு தேடிய எதிர்ப்பால்
மல்லுக்கட்டிய கணத்தை சுரந்த சிதளொடு
மெல்ல முகர்ந்த கணத்தை மோகித்து



என்னைக் காவு கொள் கனவொடு
வரம்பின்றி மோகித்து மனமொடு மிரண்டது
மீள் வருகை ஒன்றில் மோதிய
உடலை தூக்கி நகர்ந்தது காலம்



19.09.08

Samstag, 19. Juli 2008

அறிவித்தல்!

வாசகர்கள் கவனத்திற்கு,தேசம்நெற் இணையத் தளத்தில் வெட்டியொட்டப்படும் நிர்மாணம் தளக் கட்டுரைகளுக்கும்,அந்த நிர்மாணம் எனும் பெயருக்கும், நமக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.நமது வலைப் பதிவினது பெயரில் உலாவும் நிர்மாணம் முற்றிலும் வேறானவர் என்பதைக் குறித்துரைக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.இது,நிலவுகின்ற இலங்கை அரசியல்போக்கில் அவசியமாகும்.


புலம் பெயர் "மாற்றுக் கருத்தாளர்கள்"பலர் இலங்கை-இந்தியக் கைக்கூலிகளாக மாறிவரும் இந்த அரசியல் இலாபங்களின் பின்னே நமது பெயர்கள் அடிபட்டுப்போவதை நாம் விரும்பவில்லை.நமது மக்களின் விடிவுக்கான விடுதலையை நாம் மக்களின் தயவோடு சாதிப்பதற்கான அடிப்படை அரசியலை முன்வைத்து இயங்குபவர்கள்.எனவே,தத்தம் தனிப்பட்ட இலாபங்களுக்காக இலங்கை-இந்திய அரசுகளிடம் மடிப்பிச்சை ஏந்தும் பொறுக்கிகளாக அலையும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் பெயரில் உலாவரும் ஞானம்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,மற்றும் அவர்களின் பின்னே வால்பிடிப்பவர்களின் இழி அரசியல் நடாத்தைகளின் கருத்துத் தளமாக உலாவரும் தேசம்நெற்றையும் நாம் எதுவிதத்திலும் மக்கள் நலனுக்கான சக்திகளென வரையறுக்கவும் இல்லை.இவர்கள் நமது மக்களின் எதிரிகள் கூட்டில் அரசியல் இலாபம் பெறும் பொறுக்கிகள் என்பதால், இவர்களுக்கும் எமக்குமான எந்தப் பொருத்தப்பாடும் கிடையாதென்பதை மிகவும் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.


நிர்மாணம் எனும் பெயரில் தேசம்நெற் தளத்தில் வெட்டியொட்டும் அவரது கருத்துக்களுக்கும் நமக்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது.இந்த நிலையில் அவரது செயலூடாக நமது பதிவினது கருத்ததுத் தளத்தை அளவிடும் தப்பான தருணங்களை நாம் தவிர்த்துக்கொள்ளவே இப்பதிவினூடாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இலங்கைப் போர் வாழ்வினூடாகக் கடக்கப்பட்டிருக்கும் அரசியலில் நாம் யுத்தத்தை வெறுத்தொதுக்கும் அரசியலை மக்களின் நலனிலிருந்து முன் வைக்கின்றோம்.தேசம்நெற்றில் வெட்டியொட்டும் நிர்மாணம் கொண்டிருக்கும் அரசியலை அவர் பிரதியெடுக்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரைவழி புரியமுடியும்.இவர்கள் யுத்தத்தைத் தமது கட்சி-இயக்க-தனிப்பட்ட நலனிலிருந்து எதிர்ப்பதும்,அதேயே ஒரு கட்டத்தில் இலங்கை அரசின்வழி ஆதரிப்பதாகவும் இருக்கிறார்கள்.


நமது நிலைப்பாடனது, மக்களது அடிப்படை வாழ்வாதாரத்தின் அவசியமான அதீத தேவைக்காவும்,அவர்களது உயிர்வாழ்வின் பாதுகாப்புக்கும்,உரிமைகளை வென்றெடுக்கும் இன்னொரு வகையான மக்கள்-வெகுஜன எழிச்சிக்கான முன் நிபந்தனைகளுடன் இலங்கைப் போரை எதிர்த்து வருகிறோம்.இந்த நிலையிலிருந்தே இலங்கையில் இருவேறு அரச ஜந்திரங்களால் முன் தள்ளப்படும் யுத்த ஜந்திரத்தை எதிர்த்து வருகிறோம்.இது, எமது மக்களின் எதிர்கால வாழ்வினதும்,உரிமைகளினதும் உண்மையான விடுதலைக்குரிய நோக்கங்கட்கமைய முன்வைத்து நடாத்தப்படும் கருத்தியல் போரினுள் நமது நிலையாக இருக்கிறது.


இதுவே,எம்மை தனித்தியங்கும் நிலைக்குள் இதுவரை இயக்கி வருகிறது.நாம் எந்தக் காரணம்கொண்டும் தேசம் நெற்றில் பின்னூட்டுக்கள் போடுவதற்கோ அன்றி அத் தளத்துக்குக் கட்டுரைகள் எழுதவோ அடிப்படையில் எந்த பொருத்தப்பாடும் கிடையாது.கடந்த காலத்தில் அத் தளத்தில் நிர்மாணம் எனும் பெயரில் நாம் எந்தப் பதிவையோ அன்றிப் பின்னூடத்தையோ இடவில்லை என்பதையும் இத்தால் அறியத் தருகிறோம்.


எமக்கும் அத்தளத்தில் உலாவரும் நிர்மாணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.


நன்றி.

நிர்மாணம்.

19.07.2008

Samstag, 21. Juni 2008

ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும்



கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்னவென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது


எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உரமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியால் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய


நிர்மாணம்
21.06.2008


(கொலைகளை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியச்
சூதாட்டத்தில்
நொடிந்துபோன தமிழ்ச் சமுதாயம் இருப்புக்காய் யுத்தத்தை
எதிர்த்து...


மேலே ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்,
தேசம் நெற்
நிரந்தர வாசகர்கள் ரகு-ரதன் ஆகிய இருவரையும் அம்பலப்படுத்தும் மரமண்டையினது
கருத்துக்களோடு...)



மரமண்டை on June 20, 2008 6:01 pm

/இதிலென்ன அபத்தம் இருக்கு. புலிக்கு எதிராக மோசமான அபத்தங்களை மாற்றுக்கருத்து என "மாற்றுக்கருத்துக் காரர்" சொல்வதில்லையா? பழக்கதோசத்தில எழுதிபோட்டார் வழமைதான் இது விட்டுத்தள்ளுங்கள்!!!! /-ரகு

ரகு, புலிக்கெதிராக மோசமான அபத்தங்களைத்தான் மாற்றுக்கருத்தாளர்கள் சொல்வதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். ஆனால் புலிகள் அவர்களைக் கொன்றெல்லோ குவிக்கிறார்கள்! மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது! அட உதை நான் எழுதவில்லையே என்று கேனைத்தனமாக எழுதாதீர். புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர். போதுமடா உந்த ரகுவின் அறிவிலத்தன வாதம்.
மரமண்ட

ரகு on June 20, 2008 8:13 pm

//…புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர்…/-/மரமண்ட

வரலாற்றை இயலுமானவரை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தான் எழுதுகிறேன். உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கேளுங்கள் தெரிந்தவரை பதில் அளிக்கிறேன். எனக்குத்தெரியாதென நீங்கள் கருதினால் சான்றுடன் தெரியப்படுத்துங்கள் கற்றுக்கொள்கிறேன்.அவர் சொன்னார்..இவர் சொன்னார்…மக்கள் பேசிக்கொள்கிறார்கள் ……கேட்கக்கூடியதாக இருந்தது…..அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன கதையள் வேண்டாம்!!!!
தேசம்நெற் இல் கருத்து எழுதத்தொடங்கிய நாளில் இருந்து பலர் மஹாபாரத, ராமாயண , வடஇந்திய, தென்னிந்திய, ஆசிய, ஆபிரிக்க, அரேபிய, தென்அமெரிக்க பெயர்களுடன் வந்து கருத்துக்கூறுகிறிச் செல்கின்றனர். நாளொரு கருத்து பொழுதொரு பெயர் என. ஆனால் நான் அதே பெயரிலே வந்து கருத்துக்கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். எங்கும் ஓடி புனைபெயகளின் பின்னால் ஒளிக்கவில்லை. சரித்திரத்தை ஆதாரங்களுடன் கற்றுக்கொடுங்கள்!

/..மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது!….//
விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!


மரமண்டை on June 21, 2008 8:38 am


/விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!/-ரகு


ஆக "விடுதலைப் போராட்டத்தில்" கொலைகள் செய்லாம் என்கிறீர்? உங்கள் இந்த மனதுதான் இதுவரை பல்லாயிரக்கணக்கான கொலைகளை" ஈழவிடுதலையின்" பெயரால் புலிகள் செய்கினம். இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங் குழுக்களும் அடக்கம்! இத்தகைய கொலைகள் அபத்தமான கருத்துகளைவிட நியாயம் பெறும் உமது மனதுதான் புலியினது அராஜகத்துக்கு உரம் போடுவதும்; அதன் இருப்புக்குத் தத்துவ ஆதாரமாகும். நீர் ரகு என்ற பெயரில் புலிக்குப் பிரச்சாரப் பீரங்கியாகப் புலியின் நிதியிடலில் இயங்கும் முதல்தரமான கொலைக்காரன். உம்மோடு கருத்தாடுவதற்கு முதலில் உமக்குள் இருக்கும் புலியைக் கொன்றுவிட்டு வாரும்.


(நாசிகளின் மீள் வருகை கருப்பு நாசிகளாக...)


இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து கொலைகளை "விடுதலையின் "பெயரால் எவர் நியாயப்படுத்துகிறாரோ அவரே மிகப்பெரும் சமூகவிரோதி. ஈழத்தின் பெயரால் இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்கள் மகத்தானவொரு உண்மையைவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தமிழ்ச் சமுதாயம் ஒரு கொலைவெறிபிடித்த சுயநலக் கிரிமினல் கூட்டம் என்பதே. இந்த உண்மையை புலிகள் அடிக்கடி செய்யும் அரசியல் சூதாட்டத்தில் அனைவரும் கண்டையமுடியும். இதையே ரகு தனது தொழிலாகத் தேசத்தில் கருத்துச் சொல்வதென்ற போர்வையில் செய்துவருகிறார். இதுவரை இந்த மக்கள்கூட்டம் இழந்த உயிர்களையும் கண்டு ரகு இப்படிக் கொலையை நியாயப்படுத்தும்போது அதையும் அனுமதிக்கும் ஜெயபாலன்மீது சந்தேகம் வருகிறது. இவரும் "விடுதலையின்"பெயரால் கொலைகளை ஏற்கிறரா என்று.

எதிரியையும் அவனுக்கு-அவளுக்குரிய உயிர்வாழும் உரிமையுடன் வாழ அனுமதிக்கும் உயிராதவுரிமையை எந்த விடுதலையும் பறித்திடமுடியாது. மாறாக "எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் என்று அதையொட்டி பார்ப்பதும் அத்தகைய காரணத்தின் தவறு அமைப்புக்குள் நிலவுவதன் தோறறுவாயைக் காணுவதும்தான் சரியாக இருக்கும்.

இதுவரைப் புலி அரசியலின் இருப்பே கொலைகளால்தான் எனும்போத அத்தகைய கொலையை ரகு நியாயப்படுத்துவது அவருக்குக் குற்றமாவதில்லை. இதனால்தான் பலர் புலிகளின் பொய்யுரைகளை நம்பிக் கொலைகளைச் செய்கிறார்கள். ஈழம் என்ற கோசம் இத்துணை வினைகளைச் செய்யுமென்று அன்றே ஆருடம்கூறியவர்கள் இப்போது புலிகளால் கொல்லப்பட்ட தினத்துக்குள் மட்டுமே வாழ்கிறார்கள்! அவர்களின் அடிச்சுவடே இல்லை. அதற்கு மாறாக ரகு போன்றவர்கள் நியாயம் சொல்லும் -கருத்துச் சொல்லும் தளமே மிஞ்சியுள்ளது.

மரமண்ட


ரதன் on June 21, 2008 10:23 am

//இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்./-/மரமண்ட

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.
ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு

//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //
புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.




மரமண்டை. on June 21, 2008 12:14 pm



//ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு
//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.//-ரதன்


ரதன் மீளவும் தவறு செய்கிறீர்கள்.

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால்…
புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?

இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.
புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்.

ஆனால்,அந்த மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் அடக்கியொடுக்கும் புலிகளோ அல்லது அரசோ மற்றும் ஆயுதக்குழுக்களோ இவற்றைத் தீர்மானிக்கின்ற சூழலேதான் இன்று கொலைகளுக்கு மூல காரணம்.

பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?

புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன? இதைச் சாத்தியப்படுத்திய போராட்டத்தின் செல்நெறியை மீள ஆய்வுட்குட்படுத்தும் உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா? அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்.
இவற்றையெல்லாம் புறத்தே தள்ளியபடி, ஏகத் தலைமை நாங்கதான்-நாங்கள் செய்யும் நடவடிக்கை-அரசியல்-கொலைகள் எல்லாம் மக்கள் நலனிலிருந்தே இப்படிச் செய்கிறோம் என்னும் புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது.

நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!
புலிகளினது இயக்க நலனிலிருந்து மக்கள் உரிமைகளைக் காணவிரும்பும் மனது இறுதியில் கொலைகளைப் புலிக்கொடிக்குள் மறைத்துத் தேசிய விடுதலையால் நியாயப்படுத்துகிறது. இது திட்டமிட்ட புலி அரசியல். இங்கே ரகுவோ அல்லது ரதனோ மக்களின் உயிர்மீது கொலைக்காரகளின் அரசியல் கொலை வண்டியை ஓட்ட முனைவதன் தொடர்ச்சியாகத் தேசம் நெட்டில் பாதை அமைக்கிறார்கள். அது அம்பலப்படப்போகும் இந்தத் விவாதத்தை இனிமேல் தொடரவேண்டும்.

யுத்தத்தை நிறுத்து-அப்பாவி மக்களையும் அவர்களின் குழந்தைகளையும் "துரோகி"சொல்லி கொல்லுவதைத் தடுக்கவும் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களின் உயிராதார வாழ்வுத் தேவைகளின் சிதைவைத் தடுக்கவும் அவர்களின் மீது தொடக்கப்பட்டிருக்கும் அரச-இயக்கப் பயங்கரவாதப் போரைத் தடுத்திட முதலில் இந்த ஈழப்போர் என்றதை அம்பலப்படுத்தி அதற்கெதிராகக் கருத்தாடவும்.

மக்களையெல்லாம் மந்தைகளாக்கும் புலிவகை அரசியல், அப்பாவிக் குழந்தைகளை அழிப்பதில் கடந்த கால் நூற்றாண்டின் வரலாற்றைப் படிக்கவும்.
இதுதான் தமிழ் மக்களின் கண்ணீருக்குக் காரணமான ஆயுதக் கலாச்சாரத்தையும் அதன் பின் இயங்கும் அன்னிய அரசியல் ஆர்வங்களையும் விளங்கிக்கொள்ளவும்; இந்தப் போராட்டத்தால் துரோகிகளாக்கப்படும் போராளிகளின் பின்னே கட்டமைக்கப்பட்ட அரசியல் சூதாட்டத்தையும் விளங்கும் முதற்படியாகும்.

ரதன் பாணியில் புலிகளின் நடவடிக்கை என்று இவற்றை ஏற்பதற்கு நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.அப்படி மக்களின் உரிமைகளை ஏலம்போடும் ஏகதலைமைத்துவத்தை புலிகளின் அரசியலிலிருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை.


அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண். மக்களே தமது விடுதலைக்கு எதிரானவர்கள் எவரென்பதை நிலைநாட்டும் நாட்கள் நெருங்கும்போதெல்லாம் அவர்களைக் குறுந்தேசிய மாயைக்குள் இட்டு அழிப்பு அரசியல் செய்ய நீங்கள் பொங்கும் பொங்கு தமிழுக்குப் புரட்சியென்றோ விடுதலைப் போராட்டமென்றோ எந்தத் தெரிவும் இல்லை. இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.


ரகு-ரதன் இயங்கும் புலி அரசியல் சாய்வில் பொல்லாத கொலை அரசிலொன்று "நடவடிக்கை" என்று நியாயம் சொல்கிறது. இதையும் தேசம்நெற் மீளவும் பதிவிடுவதால் நான் தொடர்ந்து வருகிறேன். இது கொலைகளுக்கெதிரான குரல். ஈழப்போரென்று மக்களை துரோகியாக்கும் ஆயுத அராஜகத்துக்கெதிரான குரல் இது எப்போதும் -எங்கேயும் ஒலிக்கும். மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்.

மரமண்டை.


ரகு on June 21, 2008 1:15 pm


//….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///-மரமண்டை.

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.





/…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//என்ன நடவடிக்கை?


/…புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.



ரதன் on June 21, 2008 4:07 pm


//புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?//-மரமண்டை

ஈழத்தமிழரின் ஏகோபித்த பிரதிநிதி. தமிழீழத்தின் நிழல் அரசு. இது ஆயுத போராட்டாத்தாலும் 2004ல் நடைபெற்ற நாடளமன்ற தேர்தல் ஊடகம் நிரூபிக்கப்பட்ட உண்மை. புலிகளை தடைசெய்தவர்கள் கூட சிறிலங்கா அரசை புலிகளுடன் பேச வலியுறுத்துவது கூட இதன் அடிப்படையில்தான்.


//இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.//-மரமண்டை

அதைதான் மக்கள் 2004லில் நடந்த நாடளமன்ற தேர்தலூடக தீர்மானித்தார்கள். 2000 குறைவான புலிகள் 120 000 மேற்பட்ட இந்தியப்படையையும் பல்லாரயிரக்கணக்கான இந்திய ஆதரவு ஆயுத குழுக்களையும் விரட்டிஅடிக்க முடிந்ததற்கான பிரதான காரணங்களிலொன்று ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற யதார்த்தம் புரியவில்லையா?

//பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?//-மரமண்டை
முதலாவது தம்மீது நடைபெறவிருந்த விசாரணைக்கு முகம் கொடுக்கும் நேர்மையின்னை. அதே நேரம் புலிகளை எதிர்ப்பதால் கிடைக்கபோகும் பணம் பதவி ஆசை.


//புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன?//-மரமண்டை
தனது மனித நேர்மையீனமென்பது பலருக்கு இயல்பாகவே உள்ளவிடயம். இதற்கெல்லாம் ஒரு அரசியல் காரணங்களில்லை. ஒருவகை தனிமனித பேராசை.


//உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா?//-மரமண்டை

புலிகள் "செய் அல்லது செத்துமடி" என்ற தொனிப்புடைய இராணுவ அமைப்பு இந்த அடிப்படையதார்த்ததை முழுமையாக உள்வாங்கினால் இந்த கேள்வியின் அர்த்தமற்ற தன்மை புரியும். அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வனுக்கு பிரிகேடியர் எனும் இராணுவ பதவி நிலையே வழங்கப்பட்டது.


//அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்//-மரமண்டை

"துரோகியாக்கப்பட்டதன்" என்ற சொல்லில் தொக்கிநிற்கும் அர்த்தம் என்ன?. கிழக்கு மக்களின் நன்மைக்காக தான் பிரிவதாக சொன்ன கருணா லண்டனுக்கு ஒடிவந்ததிலிருந்து புரியவில்லையா அவரின் சொல்லும் செயலும் எதிர்மாறனவை என்று. கருணாவுடன் கொழும்பிற்கு தப்பியோடிய தளபதிகள் ஏன் வலியவந்து புலிகளிடம் சரணடைந்தார்களென்று எப்பவாவது சிந்தித்து பார்த்தீர்களா!

புலிகளின் வருவிற்கு முன்னர் துரொகிகள் என்ற சொல்லோ மனிதர்களோ(?) தமிழர் வரலாற்றில் இருக்கவில்லையா? காக்கைவன்னியன் பூதத்தம்பி…. என்று மிகநீண்ட பட்டியல்களுக்கும் புலிகளா காரணம்.


//புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது//-மரமண்டை

ரதனை ரொம்பதான் புகழுகிறீர்கள். புலிகளிடமிருக்கும் வீரம் தியாகம் ஈகம் தொலைதூர பார்வை எங்கை ரதன் எங்கை!


//நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!//-மரமண்டை
நீங்கள் கொலையென்ற ஒற்றை சொல்லுக்கை எல்லாவற்றையும் மறைக்கவெல்லோ பார்க்கிறீர்கள்.


//நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.//-மரமண்டை

முதலில் தனிமனித சுதந்திரத்தை மதியுங்கோ.


//அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண்.//-மரமண்டை

அதை எனது பின்னூட்டத்தை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும் எனது கருத்து வீணே இல்லை பிரயோசனமோ என. நீங்கள் சொன்ன மக்கள் உரிமையும் இதற்குள் அடங்குது.


//இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.//-மரமண்டை
மக்களின் ஆதரவற்றவர்களின் வெற்று புலம்பல்களும் இதே தொனிப்பில் இருப்பதைதான் பார்க்கிறேன். தமிழர்களுடன் சேர்ந்து வாழும் புலிகளை மக்களிடத்திலிருந்து அந்நியப்பட்டுள்ளவர்கள் அம்பலப்படுத்த போகிறார்களாம்.


//மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்//-மரமண்டை

நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?



மரமண்டை on June 21, 2008 5:40 pm


/ரகு on jun 21 2008 1:15 pm //….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.


…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
என்ன நடவடிக்கை?

/…புலிகளையும் இமக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.-ரகு//



ரகுவினது மனது இன்னும் கொலைகளை நியாயப்படுத்தும் மனதாகவே-புலியினது அரசியலால் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிதென்பதற்கு மேலுள்ள பதில் நிரூபணமாக இனியிருக்கும்.மக்களின் நடவடிக்கை என்றெழுதும்போது…அதை என்னண்ணை நடவடிக்கை-எப்படிப்பட்ட நடவடிக்கை என்கிறார்.இக்கேள்வி மக்களைப் பார்வையாளராக்கி அவர்களின் குழந்தைகளை அடியாட்படைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பாசிச இயக்கத்தின் வழி தெளிவாகிய மிக மோசமான எள்ளல்.மக்களின்றி-அவர்களது உண்மையான எழிச்சியின்றி-மக்கள் அமைப்பு உருவாகமுடியாது.மக்களே தமக்கான அமைப்பைத் தமது போராட்டத் தெளிவினுடாகக் கட்டியமைக்கும் மக்கள் எழிச்சிக்குச் சுயமான அவர்களது போராட்டச் சமூக நடவடிக்கைக்கு விலங்கிட்ட புலிகள்-அரசு-மற்றைய அராஜகக் குழுக்களெல்லாம் மக்களையும் அவர்களது விடுதலையுணர்வையும் வேராடு சாய்த்தபடி மக்களுக்காகக் காரியமாற்றுகிறோம் என்பது மிக மோசமான அழிவு அரசியலுக்கிட்டுள்ளது.இதை நோக்கிய மேன்மேலுமான இயக்கச் சர்வதிகாரம் ஏகத் தலைமைத்துவத்துக்காக மாற்றுக் குழுக்கள்மீதான அத்துமீறிய அராஜக அழிப்பால் இன்று மாற்றுக்குழுக்களை எதிரியாக்கிய"தெரிவு"புலிகளால் திட்டமிடப்பட்டு ஆற்றிய வரலாற்றுக் கொலை.இதைத் தகர்ப்பதற்காகவே மக்களின் சுய எழிச்சிக்குத் தடையான இயக்கச் சர்வதிகாரத்துவப் பாசிசக் காட்டாட்சியை உடைக்க ஜனநாயகத்தைக் கோருகிறது மக்களின் வாழ்நிலை.
இதை மறுப்பதும் மக்களைத் தொடர்ந்து யுத்த ஜந்திரத்தால் வருத்திக் கொலையின் மூலம் அவர்களின் எழிச்சியை ஒடுக்குவதற்குப் பெயர் ஈழப்போராட்டம்.இந்தக் கேடுகெட்ட இயக்க வாதச் சகதிகுள்ளிருந்தபடி மக்களின் நடவடிக்கை என்பதை விளங்க முற்படும் ரகுவின் மனது அதைக் கேள்வியாக்கி நம்முன் தன் கருத்து மனதை இப்படி அம்பலப்படுத்துகிறது.


மாற்றுக் குழுக்கள்மீது எடுக்கப்பட்ட புலிகளின் அழிப்பு யுத்தமானது இன்றைய கிழக்குப் போராளிகள்மீது எடுக்கப்பட்டுவரும் அராஜக அழிப்புவரை அரசியல் வறுமையை வெளிப்படுத்துகிறது.இங்கே ஆயுதத்தைவிட வேறுமொழி இல்லை என்பதன் தொடர்ச்சி புலிகளின் தலைமைத்துவத்தின் இருப்பினது தொடர்ச்சியாக விரியும்போது அதுவே கொலைகளை ஊக்குவித்துக்கொண்டு கொலையாக்கப்படுபவர்களைத் "துரோகி"என்று முத்திரை குத்துகிறது.இப்படி துரோகிகளாக்கப்பட்ட எத்தனையே தீரமிக்க உயிர்கள் இன்று இந்தத் தமிழ் மனதிடம் இன்னும் கேள்வியையே தொடக்கவில்லை.அப்படிக் கேள்வியை இத்தகைய ரகு-ரதன் போன்றவரிடம் எழுப்பியிருக்குமாயின் இவர்கள் இந்த அராஜக யுத்தத்தை நிறுத்துவதற்காகப் புலிகளையும்>இலங்கை அரசையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி மக்கள் பக்கம் நிற்பார்கள்.அப்படி நிற்கும்போது மட்டுமேதான் நாங்களும் மக்கள் குழுமத்திலொரு உறுப்பினர் என்ற பொதுமனது வேலை செய்யும்.இந்த மனதுதான் மக்களினது உரிமை என்பது புலிசொல்லும் புலுடா அல்ல.அது மாறாக மக்களை விடுவிப்பதற்கான கோரிக்கைகளோடு பின்னப்பட்டு மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவர்களது வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட வெகுஜன எழிச்சியாக இருப்பதற்கு செய்யப்படும் நடவடிக்கை என்று விளங்கும்.


பிள்ளையான் குழுவுக்கு எதிராக-மாற்றுக் குழுக்களுக்கெதிராகப் புலிகள் எடுக்கும் நடவடிக்கை என்வென்று குழந்தைகளுக்கும் தெரியுமென்று பாசிச அரசியலுக்கு விளக்கம் கொடுக்கும் ரகு அதே மனதோடு மாற்றுச் செயற்பாடு "துரோகம்"என்கிறார்.இதை மக்கள்தான் சொல்லவேணஇடும் துரோகமென.நீங்கள் வணங்கும் புலித் தலைமை அல்ல.ஆக புலிகள் கொலைகளைச் செய்வதும் அதை நியாயப்படுத்தத்"துரோகி"என்பதும் இன்று மக்களிடத்தில் எவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடத்தை-மெளனத்தை உருவாக்கியுள்ளது!ஒரு சிறு குழந்தையே இந்த வகை அரசியலால் மெளனமாக்கப்பட்டு அதன் உளவியலை அச்சப்படுத்திய இந்தக் கேடுகெட்ட அரசியலை ரகு பெருமிதமாக இங்கே எடுத்து வைக்கும் உளவியலை எந்த அரசியலோடு இணைக்கமுடியும்?இது கிட்லர் காலத்துக் காயடிப்பு அரசியலோடு சம்பந்தப்பட்டது.


மாத்தையாவை அவோரோடு சேர்த்துக் கொல்லப்பட்ட போராளிகளை இன்றும் தொடரும் இதே வகை அழிப்பைப் பற்றிய புலிகளின் சுய விமர்சனம் எஙஇகே முன்வைக்கப்பட்டது?அப்படி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாத்தையாவையும் அவரோடு கொல்லப்பட்ட போராளிகளையும் மக்களேதான் தமது நலனிலிருந்து என்ன தீர்ப்பளிப்பதென்று தீர்மானித்திருப்பார்கள்.ஏனெனில் இதுவேதாம் மக்கள் போராட்ட அமைப்பின் இலக்கணம்.இன்று கருணாவின் பிளவுக்கு அதே பாணி"துரோகம்"என்பதை முன்வைக்கும் இதே புலிப்பாசிஸ்டுக்கள் கிழக்கில் கொன்றுகுவித்த போராளிகளை மக்கள் முன் நிறுத்தும் பண்போடு காரியமாற்ற முடியாத ஆயுதக்காடைத்தனம் உருவாகிய சூழல் எப்படியுருவாகியது?குறுங்குழுக்களாக அமைப்பு வெடிக்கும் ஒரு அரசியல் முகிழ்ப்புத் தடீரெனத் தோன்ற முடியாது.இது உட்கட்சிக்குள் தொடர்ந்து நிலையெடுத்துவரும்வரை அதை அறியாதளவுக்குபஇ பாசிஸ்டுக்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுக் கிடக்கிறார்கள்.


இதே தொடர் கதையில் வரும் ரகு-ரதன் பாத்திரங்கள்தான் இன்று குழந்தைகளுக்கே தெரியும் என்று புலிகளின் அராஜகத்தின் அத்துமீறிய மக்கள் விரோதக் கொலைகளைச் சொல்லி நம்மையும் அச்சப்படுத்துகிறார்கள்.


தம்பி ரகு பக்கம் பக்கமாக எழுதுவதல்ல மக்கள் அரசியல்-விவேகம்.மாறாக மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அவர்களை எஜமானர்களாகக்கொண்ட மக்கள் அரசியலை விளங்க முற்படுவதும் அதை நிலைப்படுத்தும் சூழலை இல்லாதாக்கிய இயக்கச் சர்வதிகாரத்தை தொடர்ந்து அம்பலப்படுதஇதுவதுதான் நியாயமான விவேகம்.இதன் தொடரில்தான் யுத்தத்தை நிறுத்து.மக்களைப் பேசவிடு என்கிறோம்.நீங்களோ குழந்தைகளுக்கே எங்கள் புலிகளின்"துரோக"த்துகான மரணத் தண்டனை என்று மக்கள் விரோதிகளாகவே அம்பலப்பட்டுத் தலை குனியும் அராஜவாதிகளாக நிற்கிறீர்கள்.


மரமண்ட



மரமண்டை on June 21, 2008 6:09 pm


//நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?//-ரதன


ரதன் புலிகள் மக்கள் பிரதிநிதிகள் என்பதல்ல இங்கே பிரச்சனை. பிரச்சனை கொலை அரசியல்- அராஜகம்- இயக்கச் சர்வதிகாரம்- அழிப்பு யுத்தம் பற்றியது. இதை மறுத்துவிட்டுப் புலிகளைப் புனிதராக்கும் உங்கள் புலிமனது. தமிழ்தேசிய மனதின் அறுவடையாக இங்கே மீளக் கேள்வி கேட்கிறது. நான் மக்கள் விரோதிகளைத்தான் எச்சரிக்கிறேன். மக்கள் சமுதாயத்தின் குழுமத்தில் நானும் அடக்கமென்பதால் அதே மக்களின் நலன் எனக்குள் பிரதியாகிறது. இங்கே அந்தப் பிரதி மக்களாகிய எமது நலனிலிருந்து ஒரு யுத்த ஜந்திரத்தையும் அதன் வழியாக வந்து சேர்ந்த கொடிய அடக்குமுறையையும் எதிர்த்து எச்சரிக்கை செய்கிறது. இந்த எச்சரிக்கை எம்மை அழிக்காதே. இது உங்கள் அழிவில் நிறுத்தும் இன்னொரு அமுக்தைத் தரும் என்பது.

புலிகள் தம்மைத்தாமே மக்களின் பிரதிநிதிகளாக்க எடுத்த அரசியல்-அழிப்பு நடவடிக்கைகளின் தொடர் வருகைகளில் எத்தனையே அப்பாவி மக்களை அழித்திட்டார்கள். அதை நியாயப்படுத்த எத்தனையோ கதையாடல்- துரோகி- தியாகம்- தேசியம்- ஈழம் என்றபடி. இத்தகைய வழி ரதன்-ரகு எல்லோரும் வந்து போவீர்கள் .ஆனால் அழிவது மக்கள்தான். போராட்டத்தால் செததுமடியும் ஒவ்வொரு போராளியும் இயக்கச் சதியையும் அவ்வியக்கத்தின் தலைமையின் அழிப்பு அரசியலையும் தேசத்துக்கான விடீவென்று நம்பவைக்கப்பட்டு யுத்ததுக்கு அனுப்பி கொல்லப்படுகிறார்கள். நீங்கள் இத்தகைய ஏமாற்று யுத்ததையும் அதன் இயக்கக் கட்டமைவையும் தேசத்தின்- மக்களின் அரசு என்கிறீர்கள் .இது புலிப் பிரச்சாரத்தின் ஒரு தொடர்தான்.

இந்த நிழல் அரசு மக்களின் பட்டிணிக்கு இதுவரை செய்ததென்ன? பசிகிடப்பவர்களை யுத்த்துக்கு அழைத்து அடியாட்களாக்கியதைத் தவிர வேறென்ன மக்கள் நல நடவடிக்கை செய்தார்கள்?


நீங்கள் புலியைக் காவித் திரியும் இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி அனைத்தையும் புலிவழி பார்க்கப் பழக்கப்பட்டதை இங்கே கொட்டி அம்பலப்பட்டு நிற்பதற்கு இன்னும் எழுதுவேன்.

மரமண்டை.

Sonntag, 4. Mai 2008

தேசம்நெட் ஜெயபாலன் நெஞ்சைப் பிழியும் ஒரு கட்டுரையை...

சகோதர இயக்கப் படுகொலையின் பின்னே...


தேசம்நெட் ஜெயபாலன் நெஞ்சைப் பிழியும் ஒரு கட்டுரையை மிக வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை மிக நேர்த்தியாக இயக்க அராஜகத்தின் பிற்காரணங்களை,வெளித்தொடர்புகளை இனம்காண மறுத்தொதுக்குக்கிறது.இது ஜெயபாலனது தெரிவாக இருக்கலாம்.எனினும்,மறுத்தொதுக்க முடியாதவொரு வலியைத் தனது சொந்த அனுபவித்திலிருந்து ஜெயபாலன் தொகுத்துள்ளார்.அவரது குடும்பத்திலேயே இயக்க அராஜகம் உயிரைப் பறித்திருக்கிறது!அவர் குடும்பத்தைப்போலவேதான் ஈழத்தின் பல்வேறு குடும்பங்களிலும் உயிரிழப்பும்,பொருளிழப்பும்-இடப்பெயர்வும் நிகழ்துள்ளது. இவையனைத்தும் ஈழப்போரினது பல்வேறுபட்ட முகங்களினது ஒரு வடிவம்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டில் ஆயுதப்போராட்டமென்பது மக்களால் தீர்மானிக்கப்பட்ட முற்றுமுழுதான மக்கள் வகைப்பட்ட முன் நிபந்தனைகளால் உந்தப்பட்ட இயக்கக் கட்சியுருவாக்கத்தில் ஆயுதப்போராட்டம் ஒரு பகுதியாக எழுந்தது அல்ல.அது முற்றுமுழுதும் அன்னிய சக்திகளால் உந்தப்பட்டு அவர்களது முற்றுமுழுதான நலன்களோடு தோற்றம் பெற்ற இயக்கங்களே ஈழத்தில் தோற்றங்கண்டன.எந்தவொரு அமைப்புக்குபின்னும் மக்களே உந்துசக்தியாகவும் அவர்களே போராட்டத்தில் முன்னணிப்படையுமாக நிற்பார்களாயின் அங்கே ஒவ்வொரு இயக்கத்தினுள்ளும் உட்கட்சி ஜனநாயகவும் மிக நெருங்கிய முறையில் இயக்கப் போக்கை நிர்ணியிக்கும் மத்திய குழுவைத் தந்திருக்கும்.ஆனால், ஈழத்தில் தோற்றும் பெற்ற அனைத்து இயக்கங்களுக்குள்ளும் தனிநபர் வாதமும்-வழிபாடும் தடல்புடலாகத் தோற்றங்கண்டது.அங்கே, இத்தகைய தனிநபர்களை முன்நிறுத்திக் கட்டபட்ட ஒளிவட்டம் அராஜகத்தை சுயதேவைக்காக இவற்றைக்கட்டி வளர்ப்பதற்கும்,அதையே பாதுகாப்பதற்குமாக இயக்கங்களுக்குள் தவிர்க்கமுடியாத விதியாக அராஜம் ஆயுதமாக்கப்பட்டது.இன்றுங்கூட உட்கட்சிஜனநாயகம் என்றால் என்னவென்பதே புரியாத இயக்கவாத மாயை நம்முள் நிலவுகிறது.இது காவிய நாயகர்களின் பின்னே தன் விருப்பைத் தேடுகிறது.தேசியத்தைச் சொல்லி மாற்றார் குழந்தைகளைப் பலியெடுப்பதற்காக நியாயஞ் சொல்லித் தன் புலப்பெயர்வு வாழ்வைத் துய்த்துச் செரித்தபடி புரட்சியென்பதைப் புலிப் போராட்டத்துக்குள் இனங்காண்கிறது!இத்தகைய பாசிஸ்டுக்களே புரட்சியென்பதை ஒடுக்கும் புலி அரசியலின் தொடர்ச்சியில், ஆங்காங்கே புலி இயக்கப் பாசிசக் கருத்தியல் அராஜகத்தை மிக நுணுக்கமாகச் செய்து முடிக்கிறார்கள்.இவர்களிடம் நெருக்கமான அன்னியச் சகத்திகள் எம்மக்களின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எமக்கான அரசியல் தீர்வுக்கான ஒத்துழைப்பாகப் படம் காட்டுகிறார்கள்.இவர்களேதான் அன்றுஞ்சரி இன்றுஞ்சரி சகோதர இயக்கப்படுகொலைகளைத் தூண்டியவர்கள்-அப்பாவி மக்களை இனவாதத்தோடு வெட்டிக் குதறியவர்கள்.

அன்று,இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் புரட்சியென்பது மிகச் சுலபமாக நெருங்கி வருவதை இனம் கண்ட அமெரிக்கா அந்த அரசியல் விழிப்புணர்வு தென்கிழக்காசியாவில் வசந்தத்தின் இடிமுழக்கமாக மலரும் சூழலைமிக யதார்த்தமாகப் புரிந்துகொண்டது.இதற்கு இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஒடுக்குமுறை மிக நேரிடையாகச் செயலாற்றுமென்றே அன்று கருத்திலெடுத்த ஏகாதிபத்தியங்கள் தமிழ்வலது சாரிகளான தமிழரசுக்கட்சியை மிகச் சாதுரியமாகக் கையாண்டது.இத்தகைய செயற்பாட்டின் தொபடர்ச்சியாகப் பின்னாளையத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிதாமகன் செல்வா பற்பல ஒப்பந்தங்களைச் செய்து அவற்றையே சிங்களத் தலைமைகளால் நீர்த்துப்போகச் செய்யும் அமெரிக்க-இந்திய அரசியலுக்கு உடந்தையாகச் செயற்பட்டார்.இத்தகைய அரசியலானது சிங்களத் தரப்பில் ஜே.ஆரையும்,தமிழர் தரப்பில் செல்வாவையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியது.

1958 ஆம் ஆண்டு முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குள் இலங்கை இனப்பிரச்சனை ஓரளவு நிறைவுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கூடாக எட்டபட்ட தீர்வாக இருந்திருக்கும் வாய்ப்பைப் பண்டா-செல்வா ஒப்பந்தம் சுட்டிநின்றது.ஆனால்,இத்தகைய ஒப்பந்தமும் இலங்கையும் பண்டாவின் தேசியப் பொருளாதார நடவடிக்கைகளைக்கூர்மைப்படுத்துமென அறிந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் பெயரளவிலான பண்டாவின் பம்மாத்துத் தேசியப் பொருளாதாரத்தையே அனுமதிக்க மறுத்து அவரைப் போட்டுத்தள்ளுவதற்குமுன்பே ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான ஜே.ஆர் மற்றும் செல்வா தலைமையிலான கூட்டணியையும் பயன்படுத்தி பண்டாரநாயக்காவை அந்த ஒப்பந்தத்தையே கிழித்தெறிய வைத்துத் தன் நோக்கை(அமெரிக்க அரசியல் இலக்கு) வெற்றியோடு பண்டாவை தட்டுவதுவரை செய்து முடித்தது.ஜே.ஆர் தலைமையில் களனியிலிருந்து கண்டிக்கான பாதையாத்திரை சிங்களப் பெளத்தபீடங்களையும்,காடையர்களையும் உள்வாங்கியே சென்றது.இத்தகைய இனவாத்தைத்திட்டமிட்டு உந்தித்தள்ளிய ஏகாதிபத்தியம் பண்டாவின் ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை சிங்கள மக்களிடமிருந்து வருவதற்காகச் செயற்கையான அரசியல் நடவடிக்கையைச் செய்த அதே தருணம் தமிழர்தரப்பில் அதை இன்னும் கூர்மைப்படுத்தும் இனவாதச் செயற்பாடாகத் தமிழரசுக்கட்சியை(அன்றைய)மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தியது.செல்வாவைத் தந்தையெனும் இன்றைய தமிழ்க் குரடர்கள் அன்றைய யாழ்ப்பாணத்தில் சிங்கள எழுத்துக்களைத் தார்பூசி அழித்த தமிழ்த் தலைவர்களின் அரசியலின்பின்னே மறைந்திருந்து தமிழரையும் சிங்களவரையும் நிரந்தரமாகப்பிரிக்கும் அமெரிக்க அரசியலே என்பதைப் புரியார்! ஏகாதிபத்தியத்தை தமது கக்கத்தில் மறைத்துவைத்துக்கொண்ட நமது தலைவர்களை எத்தனைபேர்கள் இன்று அறிவார்கள்?

இதுன் தொடர்ச்சியான ஏகாதிபத்தியச் சதியில் பண்டா கொல்லப்படவும் தமிழர் தரப்பில் கூட்டணிகள் உருவாகவும் பின்பு அது சிதைந்து ஆயுதப்போராட்டமாகத் திடீரென உருவாகுவதற்கும் அமெரிக்க-இந்திய அரசுகளின் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான செயற்பாடுகள்-திட்டமிடல்கள் இருக்கின்றன.இவை குறித்து ஓரிரு பக்கங்களில் எழுதிக் குறிப்பிட்டுவிட முடியாது.ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை ஒரு வரலாற்றியலாளர் எழுதமுற்படும்போது எமது எதிரிகள் எமக்குள்ளே உருவாக்கப்பட்டவிதம் உண்மையாக வெளிப்படும்.அப்போது புலிகளின் பாத்திரம் நிச்சியம் புலப்படும்.அதுவரையும் புலிகளின் பின்னே மறைந்துள்ள வர்க்க நலனுக்கு அமெரிக்க வெள்ளைமாளிகைவரை தொடர்ச்சியான உந்துதல்கள் இருப்பதையும் அது இந்தியாவின் எடுபிடியாக இருந்த-இருக்கவிரும்பும்-இருக்கும் காலவர்த்தமானத்தின் கடைக்கோடி நிலையையும் நாம் (புரிந்துகொண்டும்)புரிந்துகொள்ள முடியாது.இதன் தொடர்பான அரசியலில் புலிகளாலும் மற்றும் குறுங்குழுக்களாலும் நடாத்தி முடிக்கப்பட்டு, இப்போது கண்டவிடத்தில் தோற்றம் பெறும் ஆயுதக்குழுக்களின் வரவினூடாக மனிதப்படுகொலைகள் விழுவதையும் நாம் ஓரளவாவது புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

அன்று சகோதர இயக்கப் படுகொலைகளை இயக்கங்கள் தோற்றமுறும்போது திட்டமிட்ட இந்திய ரோவும்,சி.ஐ.ஏ.வும் படிப்படியாக அதைச் செய்து முடித்தபோது அதன் உச்சம் ரெலோவைப் பூண்டோடு அழிப்பதற்காகன முறையில் அதை அணைத்துப் புலிகளால் அழித்தொழித்த அரசியலில் இன்றுவரை கருணா-பிள்ளையான் என இந்திய ரோ புலிகளுக்குள் ஊடுருவிய விந்தை மகத்தானது.

இத்தகைய அரசியல் பின்புலத்தை மறுத்துவிட்டுப் புலிகளை அணுகும் ஒவ்வொரு தருணமும் நாம் நம்மை அழிப்பதற்கான இயக் அராஜகத்தை மென்மேலும் உருவாக்கும் அன்னிய அரசியலுக்கு உடந்தையாகவே இருக்கின்றோம்.இதை மறுத்துப் புலிகளையோ அல்லது மற்றெந்தக் குறுங்குழுக்களையோ மக்களின் மீட்பர்களாக ஒவ்வொருவரும் தத்தம் மனவிருப்புக்கேற்பக் கையாள்வதாக இருக்கும்போது, நமது மக்களின் பல்லாயிரம் உயிரோடு விளையாடுகிறோம்.இங்கே புலிகளைத் தென்கிழக்காசியாவின் வி(வெ)டிவெள்ளியாக உணரும் தேசிய இஞ்சி தின்ற புலம்(ன்)பெயர்ந்த மந்திகளுக்கு அரசியல் மக்களின் உயிர்குடிப்பதாகவே இருக்கும்.

ஜெயபாலன் தந்த இயக்க அராஜகத்தின் வரலாற்றுக்குறிப்புகள் வெறும் உள்ளக முரண்பாடுகளின் இயக்கப்பாடல்ல.நமது மக்களைக் கொன்றுபோடவும் தொடர்ந்து இலங்கையில் இனவாத இருப்பை நிலைப்படுத்தவும் அதன் வாயிலாகத் தென்கிழக்காசியாவில் புரட்சித்தீயைத் தொடர்த்து அணைப்பதற்கெடுக்கும் முயற்சியில் உலக ஆளும் வர்க்கங்கள் மிக நெருக்கதாக உடன்படுபடுகிறார்கள்.அவர்கள் மக்களை,மக்களின் புதல்வர்களாலேயே வேட்டையாடியதற்கு இன்றைய புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளான தமிழ்நாட்டு அரசியல் கயவர்களும் காரணமானவர்களென்பதை வரலாறு சொல்லும்.

எனவே,எமது மக்களின் மீட்பர்களாகக் கோபால்சாமிகளால் இன்று தூக்கி நிறுத்தப்படும் புலிகளின் இருப்பானது இலங்கையின் இனவாதத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தவும் ஏகாதிபத்தியச் சார்பு அரசியலைவிட்டு இலங்கைவழுவாதிருக்கவும் அன்னியச் சக்திகளின் சுயதெரிவாகவே இருக்கிறது.இதற்கான அனைத்து அரசியலும் அதன் உள்ளார்ந்து இயக்க அரசியலின் தொடர்ச்சியிலேயே சாத்தியமாகும்.எனவே,புலிகள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மக்களியக்கமாக மலர்வதற்கான தலைமை அதனிடத்தில் இல்லை.அத்தகைய தலைமைகள் உருவாவுவதற்கான இயக்க உட்கட்சி ஜனநாயகம் அங்கே மருந்துக்கும் கிடையாது.தனிநபர் வழிபாடும்,ஒளிவட்டமும் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு அவசியான இரு கண்கள்.

நிர்மாணம்
04.05.2008




தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன்

ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.


இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்னரேயே சங்கர் லால் அப்போது வட்டுக்கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த ரெலோ இயக்கத்தின் தலைவர் எமது வீட்டில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வந்து பெட்டி பெட்டியாக மறைத்து வைத்தார். எனது சகோதரன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த போதும் சங்கர் லால் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. திடீரென வட்டுக்கோட்டை கிராமமும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உள்ளானது. இத்தேடுதல் அடிக்கடி இடம்பெற்றதை அடுத்து எமது வேண்டுகோளின் படி மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை சங்கர் லால் இடம்மாற்றினார்.


இருந்தாலும் எமது நட்புத் தொடர்ந்தது. இரவு வேளைகளில் வருவார். குடும்பத்தவர்களுடன் உரையாடுவார். அப்பாவுடன் மிகவும் நட்பானார். எங்கள் குடும்பத்தவர்களைப் பொறுத்தவரை சங்கர் லால் ஒரு முன்னுதாரணமான போராளி. ஆயுதங்களுக்கு மேலால் மக்களையும் அவர்களின் உறவையும் நம்பிய ஒரு நல்லுள்ளம் கொண்ட இளைஞர்.


சங்கரத்தையில் பத்திராளி கோயில் மிகவும் பிரசித்தமானது. சங்கரதைச் சந்தியில் இருந்து பத்திராளி கோயிலுக்குச் செல்லும் வழியில் ரெலோ இயக்கத்தின் ஒரு முகாம் உள்ளது. இலங்கை இராணுவத்தின் முகாம்களையொட்டி விடுதலை இயக்கங்கள் காவல் அரண்களை அமைத்து இருந்ததால் இலங்கை இராணுவம் வெளியேறி தமது முகாம்களை அழித்துவிட முடியாது என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலை இயக்க முகாம்களில் பெரிதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை. அவ்வாறே சங்கரத்தையில் இருந்த ரெலோ முகாமும்.

அப்போது கண்நோய் பரவி இருந்த காலமும். புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இந்த முகாமில் படலையைத் திறந்ததும் விறாந்தை என்றும் போல் அன்றும் அதில் அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

‘புலிகள் ரெலோக்காரர்களை சுடுகிறான்கள்’ என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆரம்பத்தில் இது ஒரு உள்ளுர் சம்பவமாகவே ரொலோ இயக்கத்தவராலும் கருதப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல பல ஊர்களில் இருந்தும் வந்த தகவல்கள் நிலைமையின் கொடூரத்தை விளக்கியது. சங்கர் லாலும் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியும் எம்மை எட்டியது. இதற்கு சில தினங்களுக்கு முன் அப்போது வட்டுக்கோட்டைக்கு புலிகளின் தலைவராக இருந்த பிரசாத் (இவரின் மூத்த சகோதரர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்) சங்கர் லாலை தனது முகாமுக்கு அழைத்துச் சென்று அப்பம் சுட்டு சாப்பிட்டார்கள். அதே பிரசாத்தே சங்கர் லாலை சுட்டுக் கொன்றார் என்ற செய்தியும் எமது செவிகளை எட்டியது. இன்று பிரசாத் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக அறிகிறேன். இவ்வாறு பல சம்பவங்கள். பல சங்கர் லால்கள். பல பிரசாத்கள்.


நானும் அப்பாவும் சங்கர் லாலுக்கும் கொல்லப்பட்ட ஏனைய போராளிகளுக்கும் எமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்றிருந்தோம். படுத்திருந்த போது கொல்லப்பட்ட அந்த இளைஞர்களின் தலை சிதறி சுவரில் இரத்தமும் சதையும் ஒட்டியிருந்தது. இரத்த வெள்ளத்தில் உடல்கள். இதயத்துடிப்பு நின்ற பின்னும் சங்கர் லாலின் கைக்கடிகாரம் டிக் டிக் என காலக் கணிப்பைத் தொடர்ந்தது. மறுநாள் காரைநகர் மக்கள் இபோச பஸ் வண்டிகளில் சாரைசாரையாக வந்து இறங்கினர். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு பிரேதப் பேழைகளை காரைநகருக்கு எடுத்துச் சென்றனர்.


இதற்கு சில ஆண்டுகள் கழித்து 1989ல் இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் இயக்கத்தைவிட்டு வெளியேறி சுவிஸ்லாந்து செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார் சகோதரன். ஆனால் அதற்கிடையே முள்ளிக்குளத்தில் இருந்த முகாமிற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார். அப்போது விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் இரு தரப்பிலுமாக நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் எனது சகோதரனும் ஒருவர் என்பது, சம்பவம் நடந்த சில தினங்களின் பின்னரேயே தெரியவந்தது.

அப்போது துக்கம் விசாரிக்க எனது சகோதரியின் சிநேகிதியும் அவரது தம்பி மனோகரனும் வந்திருந்தனர். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது எனது அப்பா சொல்லி அழுதார், "தம்பி இதெல்லாம் ஒன்றும் சரிவராது. நீங்கள் உங்கட உங்கட குடும்பத்தைப் பாருங்கோப்பு. எங்கடை விதி இது தான்." என்று. அடுத்த சில மாதங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் விடுதலைப் புலிகளும் மோதிக் கொண்டதில் மனோகரன் உயிர் இழந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. இதுவரை விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

தமிழ் மக்களின் உயிர்களைக் கொல்வதற்காக எந்தத் தமிழ் மக்களும் போராளிகளையும் தலைவர்களையும் உருவாக்கவில்லை. அரசியல் படுகொலைகள் முற்றாக நிறுத்தப்படாத வரை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். வி.புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் பொது எதிரியான, பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு வி புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுடன் இனிமேல் இவ்வாறான மனித நாகரீகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனைச் செய்யாத எவரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியற்றவர்களே.
தயவு செய்து நிறுத்துங்கள்!!! படுகொலைகளை.



//Sothilingam on May 4, 2008 7:51 am
தமிழீம் தோற்று விட்டதை அன்றே
நிச்சயப்படுத்தியது இந்த புலிகளின் படுகொலை- இன்றய தோல்வி நிலையின் ஆரம்பம்
தோழர் சிறீசபாவின் மற்றும் 300 மேற்ப்பட்ட தோழர்களின் படுகொலை செய்யப்பட்ட தினமே
- தமிழர் தோற்றுப் போய்விட்ட நாள் இது - ஒன்று சேர்ந்து போராட முன்வந்த தோழர்
சிறீ சபாவை துரோகத்தனமாக கொலை செய்த புலிகள் எப்படி தாம் தமிழர் போராட்டத்தை
நடாத்துவதாக கூறமுடியும். தமிழரைக் கொலை செய்துவிட்டு தமிழருக்காக போராடுவது
என்பது என்ன செயல்? தமிழ் அமைப்புக்ளை அழித்துவிட்டு தமிழருக்காக போராடுகிறோம்
என்பது எனன? தமிழ் மக்களின் மனதில் ஊன்றிவிட்ட இந்த கொடூரம் விட்டகலா முடியாத வடு
இந்தக் கொடூரமே எமது இனத்தை இப்போது அடிமையாக்கி விட்டுள்ளது. இந்தப் படுகொலைகள்
இன்றுவரை தொடர்வது ஏற்றக் கொள்ள முடியாதது.//

Samstag, 29. März 2008

இஸ்லாமைப் பழித்து இன்னொரு குறும்படம்:Fitna.

Niederlande: Rätselraten um Anti-Koran-Film »Fitna«

"Religion is the opium for the mass"-Marx K.

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மேற்குலக வலதுசாரி அடிப்படைவாதிகள் இன்றிந்தவுலகத்து முரண்பாடுகளை மிகவும் கபடத்தனமாக மறைத்தபடி மேன் மேலும் மக்களை இனவாதிகளாகவும் மத அடிப்படை வாதிகளாக்கவும்,ஒரு பகுதி மக்களை இன்னொரு பகுதி மக்களோடு முட்டி மோதவும்விட்டு,மக்களின் உண்மையான முரண்பாடுகளைத் திசை திருப்புகிறார்கள்.


அரேபிய மண்ணில் எண்ணைக்காக யுத்தம் புரிந்து பல இலட்சம் மக்களைப் பலி கொள்ளும் மேற்குலகம் தமது ஈனத்தனமான அரசியலை-யுத்தத்தை மறைப்பதற்கு இஸ்லாமைக் கருவியாக்கும் அரசியலை முன்னெடுக்கிறது.

நெதர்லாந்து வலது சாரி அரசியல் வாதியும்,எம்.பி.யுமான திரு.Geert Wilders ஐரோப்பாவுக்கு ஆபத்தை இஸ்லாம் வழியாகப் புனையும் மிகக்கேவலமானவொரு படத்தை 27.03.2008 இல் தந்திருக்கிறார்.இப்படத்தை இங்கே சென்று பாருங்கள்.http://www.themoviefitna.com/

Film FITNA

//The 15-minute movie will air in March and will end with an animated cartoon of the prophet Mohammed, Wilders said.
The movie aims to demonstrate that "Islam can cost us our freedom if we do not act against it," said Wilders
.//


இது குறித்த விமர்சனத்தை நாம் பின்னால் முன் வைக்கிறோம்.


நிர்மாணம்.
29.03.2008

Sonntag, 23. März 2008

பழங்குடிகளின் விவசாயத்தில் எந்த கானுயிருக்கும் சிறு பாதிப்பும் கிடையாது.

பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்


பழங்குடி மக்களின் பண்பாட்டில் உலகின் அடிப்படை இயங்கு சக்தியாக வனம் இருப்பதான நம்பிக்கை உள்ளது. சூரியனிலிருந்து வெளிச்சத்தை பெற்று உணவாக மாற்றுவதாக அறிவியலால் ஏற்றுக் கொண்ட உண்மையைத் தங்களின் நம்பிக்கைகள் சடங்குகளில் நம்பி விடுகின்றனர். பல பழங்குடிகள் தங்கள் வழிபாடுகளில் ஒரு நாயகமாகப் பச்சை வர்ணத்தை வைத்துள்ளனர்.



வனம் என்பது பழங்குடிகள் நம்பிக்கை வாழ்வாதாரம் வாழ்க்கை என்ற மதிப்பீடுகளைக் கொண்டது. வனத்திலிருந்து பசுமை விரட்டப்படும் போது வன தேவதைகள் எழுந்து கோரத்தாண்டவமாடுவதைத் தமிழ் இலக்கியம் பதித்துள்ளது. சோழ அரசன் காட்டை அழித்து நாட்டை பெருக்கி வரும் போது, கொங்கு நாட்டு காடுகளை அழிக்கும் சமயம் இருளர்களின் பெண் தெய்வம் தலை விரிகோலத்தோடு சோழ மன்னனின் முன் தனக்கு அநீதி விளைவிக்கப்பட்டதாகத் தாண்டவமாடி முறையிட்டதாகவும், சோழன் பழங்குடி பெண் தெய்வத்தை அமைதிபடுத்த இரு பச்சிளம் குழந்தைகளை நரபலி கொடுத்து பின் அத்தெய்வத்தை உமையாளாக மாறி ஈசனுக்கு இடப்புறம் அமரச் சொன்னதாகவும் சோழனின் பூர்வப்பட்டயக்குறிப்பு ஒன்று பேசுகின்றது.

பழங்குடி சமூகத்தில் சமூகத்தின் பண்பாடு மற்றும் தொன்மங்கள் என்பன அம்மக்களைக் காலகாலமாக நம்பிக்கை கொடுத்து வழிநடத்துவன. உலகில் முதல் சமூகம் பழங்குடி மக்களிடமிருந்தே உதயமானது. உலகில் நிறுவன தன்மையோடு துவங்கிய முதல்மதமான புத்தரின் சங்கம் தனது அமைப்பு முறை சமூக வடிவத்தையே எடுத்துக் கொண்டது. மேலும் புத்தரின் சொத்து மறுப்பு, ஆசை மறுப்பு போன்ற தத்துவங்களின் தேடல் தளமாகப் பழங்குடி சமூகம் இருந்தது.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இயற்கையைச் சிதைக்காது அதனை உயிர்ப்பித்துப் பயன்படுத்தும் முறைகளைப் புத்தர் பழங்குடி சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்கின்றார். ஒரு மலரை தேனீ பயன்படுத்துவதைப் போலச் சேதாரமின்றி இயற்கையைப் பயன்படுத்திக் கூறும் புத்தரின் தத்துவத்திற்கு அடிப்படையானது பழங்குடி சமூகம்.

பழங்குடி மக்கள் வனத்தையும் அதன் கானுயிர்களையும் தெய்வமாக வழிபடுகின்றனர். பொதுவாக, வனத்தில் கானுயிர்களைப் பழங்குடியினர் உணவிற்காகவும், மருந்துக்காகவும் தவிர வேறு எதற்காகவும் கொல்வது கிடையாது. குறிப்பாகக் குட்டிமான்கள், பெண்மான்கள், சினையுற்ற விலங்குகள் போன்றவற்றைப் பழங்குடியினர் கொல்வது தெய்வ குற்றமாகவே கருதுகின்றனர். வனவிலங்குகள் உணவிற்கான வேட்டையில் அழிப்பது கிடையாது. வணிக நோக்கத்திற்கான பேராசையின் நிகழும் வேட்டைகளாலேயே அழிவை எதிர்கொள்கின்றன.

கோலிகர் பழங்குடிகளுடன் அவர்களின் விவசாயத்தை அறிய முடிந்ததில் அந்த விவசாயம் முழுவதும் இயற்கையைச் சார்ந்தது. அபர் வனங்களை ஒட்டிய விவசாய நிலங்களில் கேழ்வரகுத் தானியத்தையே, உச்சள்ளு என்ற எள்ளு வகை தானியத்தையே விளைவித்துத் தானியம் முளைப்பு முட்டி வரும் போதிலிருந்து தங்களின் வயல்களில் இரவுகளில் காவல் புரிகின்றனர். வனத்தை ஒட்டிய வயல்களில் விலங்குகள் இரவுகளில் வரும் என்று அறிந்தும் எவ்விதமான வேலிகளைத் தங்கள் தங்களின் நிலங்களுக்கு அமைத்துக் கொள்ளுவதில்லை. தானியங்கள் தானியக் கதிர்களைச் சுமக்கத் துவங்கிய நாட்களுக்கு இரவுகளில் தங்களின் வயல்களில் உள்ள மரங்களில் பரண் அமைத்து இரவு முழுவதும் விழித்திருந்து விலங்குகள் தென்படும்போது சப்தம் எழுப்பியே அதனை விரட்டுகின்றனர்.

பழங்குடிகளின் விவசாயத்தில் எந்த கானுயிருக்கும் சிறு பாதிப்பும் கிடையாது. ஆனால் அதே கோலிகர் பழங்குடிகளின் உனர்களுக்கு அண்மையின் கீழ்பகுதியிலிருந்து வந்தவர்கள் பழங்குடிகளின் நிலங்களை அபகரித்து விவசாயம் செய்ய துவங்கியபின் முழுவதும் மின்சார கம்பி வேலிகளை அமைத்துக் கொண்டுள்ளனர். பல சமயம் யானைகள் காட்டுப் பன்றிகள் என வனத்தின் முக்கியமான கானுயிர்கள் மின்சாரம் பாய்ந்து செத்துப் போவது ஈரோடு மாவட்ட தாளபாவு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்கிறது. பழங்குடி சமூகத்தில் பகிர்ந்துண்ணும் பண்பு இன்னமும் உயிரோட்டமுள்ளதாக உள்ளது. வேட்டையில் கிடைக்கும் விலங்குகளின் கறிகளைக் கூறுகளாக்கி முதல் கூறு சமூகத்தின் விதவைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கப்படும் பண்பு தொடர்கிறது.

பழங்குடிகளின் கடவுள்கள்:

பழங்குடி மக்களின் கடவுள்கள் பெரும்பாலும் மரங்களின் கீழ் உள்ள கடவுள்தான். பழங்குடி மக்களின் பெண் தெய்வத்தை உமையாள் என்று தன் இந்து மதத்திற்குள் உபக்கியப்படுத்திக் கொண்டது போலவே காளி, விநாயகன் போன்ற பழங்குடி தெய்வங்கள் இந்து மயமாக்கப்பட்டன. இந்து மதத்திற்கு முன் பௌத்தமதமும் பழங்குடி தெய்வங்களைத் தன்மயப்படுத்தியது. கோவையில் உள்ள கோணியம்மன் என்ற பெண் தெய்வம் பௌத்தர்களின் காலத்தில் தாரா தேவி என்ற புத்தரின் தாயார் என கருதி வழிபட்டதாக அறிய முடிகிறது. இது இருளர்களின் பெண் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிகள் தங்களின் மூதாதையரின் ஆவிகள் வனத்தைக் காப்பதாகவும் சிலவகை மரங்களை அழித்தால் தங்களின் மூதாதையருக்குக் கோபம் வந்துவிடுமென்றும் நம்புகின்றார்கள். பல சமயம் விலங்குகளையும் கடவுளின் அவதாரமாகப் பார்ப்பதுண்டு. யானைகளைப் பெரியசாமி என்று கோலிகர்கள் அழைக்கின்றனர். புகழ்பெற்ற ரைவீரிய எழுத்தாளர் சினுவா அச்சிபி தன் சிதைவுகள் (Things talkana pants) நாவலில் ஆப்பிரிக்கப் பழங்குடிகள் மலைப்பாம்புகளைத் தங்களின் மூதாதையர் வழி தெய்வங்கள் என்று நம்புவதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரிஸடான் காலகந்தி மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் புலிகளைத் தங்களின் சகோதரிகள் என கருதுகின்றனர். எப்போவது புலி செத்துp போகும்போது அதனை ஒரு சகோதரன் அடக்கம் போலவே மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர்.

பழங்குடிமக்களின் மருத்துவம்:

பழங்குடி சமூகத்தில் உள்ள மருத்துவர்களை லடாக் பழங்குடிகள் அம்சி (amchis) என்றும் மத்திய இந்தியாவில் கைய்ட்டாஸ் (gaitas) அஸ்ஸாமில் உச்சே (uche), பீகாரில் வங்காளம், ஒரிஸாவில் ஏகாஸ் (ojhan), மகாராஸ்டிரா, குஜராத்தில் பகாத் (bhagats) மற்றும் மத்திய பிரதேசத்தில் பட்வாஸ் (bhadws) என்றும் அழைக்கின்றனர். இம் மருத்துவர்கள் மூட்டுவலி, பக்கவாதம், சன்னி, தொழு நோய், காமாலை, நீரிழிவு நோய், மலேரியா, பாலியல் நோய், பேதி, தோல்நோய் மற்றும் பெண்களுக்கான மாதவிடாய் நோய்கள், எலும்பு முறிவு போன்றவற்றை குணமாக்க முழுவதும் மூலிகைகளையே பயன்படுத்துகின்றனர். மேலும் 1984-ல் சுற்றுசூழல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் பழங்குடி மருத்துவத்தில் விலங்குகளை மூலப்பொருட்களாகக் கொண்ட 156 வகை மருந்துகள் கண்டறிப்பட்டன.

அவைகளில் 32 பறவைகளின் மூலமும், 30 ஊர்வன மூலமூம் மீன்கள் மூலம் 10 வகை மற்றும் பூச்சிகள் வழி 9 வகை, நண்டு மூலம் 9 மற்றும் 5 வகை மண் புழுக்கள் மூலமும் மத்தியபிரதேசம், ஏரிஸாக்கில் பழங்குடிகள் உருவாக்குகின்றனர். கேரளாவில் பழங்குடி மருத்துவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பழங்குடிகள் 39 வகைக் கிழங்குகள், மேலும் பலவகை தாவரங்கள் அவர்களின் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதை அறிய முடிந்தது.
அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (All India Coordinate Research Object) ஆய்வில் பழங்குடி மக்கள் சுமார் 9000 வகை தாவரங்களின் பயன்பாடுகளை அறிந்து வைத்திருப்பதாக வெளிப்படுத்துகிறது. அதில் 7500 வகை தாவரங்கள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கான நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுவதும் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கோலிகர் பழங்குடிகள் யானை கன்று ஈனும் போது விழும். கருப்பை நஞ்சை எடுத்து காயவைத்துப் பத்திரப்படுத்தி வைத்து பெண்களுக்குப் பிரசவ சமயம் அதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த நஞ்சில் பிரசவத்திற்கு உதவும் மருத்துவக்கூறு உள்ளதை நவீன மருத்துவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களின் அறிவியல் பொது சமூகத்தின் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் அதிகாரத்துவத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறது. இந்த அறிவை உள்வாங்கும் நேர்மைத்தன்மை காலணியாதிக்கக் கல்வியில் குறைவாகவே உள்ளது.

பழங்குடி அரசுகள்:

தமிழ் இலக்கியத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் பெரும் தாக்குதலுக்கு உள்ளான பாரி, அதியன் போன்ற அரசர்கள் பழங்குடி அரசர்களேயாவார்கள். வணிகமயமான பொருளாதாரத்தை நிறுவ வந்த நிர்பந்தத்தை எதிர்த்து சுயமரியாதையுடன் நின்றதாலேயே இப்பழங்குடி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை காண இயலுகிறது. வரலாறு நெடுகிலும் பழங்குடி அரசுகள் தொடர்ந்து இடைவிடாத தங்களின் வீரந்தணிந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தியாவில் லிச்சாவி சாம்ராஜ்ஜியம் மகத பேரரசுக்கு எதிராகப் போராட பழங்குடிக் குழுக்களால் உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் வைசாசி. இதனை அஜாய்சந்ரூ அழிக்கின்றான்.

தமிழகத்தில் கரிகால சோழனின் பேரரசுக்கு எதிராக வெண்ணிப் பறந்தலை போரில் பழங்குடி அரசுகள் எதிர்த்து போர் புரிந்து தோல்வியடைந்தன. மத்திய இந்தியாவின் கி. பி. 10ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை கூண்டு பழங்குடிகளின் ஆட்சி நடந்தது. பழங்குடிகளின் கார்கா - மண்டலா அரசு நர்மதை பள்ளத்தாக்கிலும் அதனை ஒட்டிய வனப்பகுதியினும் அரசாண்டது. ஜபல்பூர் நகரம் அதன் முக்கிய தலைநகர்களில் ஒன்றாகும். ராணி துர்க்காவதி என்ற பழங்குடி பெண்ணின் அரசாட்சி அவள் முகலாயிருக்கெதிரான யுத்தத்தில் சாகும் வரை நீடித்தது. நாக்பூர் நகரம் 18ம் நூற்றாண்டின் கூண்டு பழங்குடி அரசர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து வீரஞ்செறிந்த எதிர்ப்பு பலசமயம் பழங்குடி பகுதிகளிலிருந்தும் வந்தது.

1772 - ல் பகாரிய பழங்குடிகள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். தில்கா மஞ்சி என்ற அதன் தலைவன் 1785-ல் பகல்பூரில் தூக்கிலிடப்படும் வரை அப்போராட்டம் தொடர்ந்தது. தமர், முண்டா பழங்குடிகளின் போராட்டம் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் எதிரொலித்தது. 1855-ல் காரன் வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியியல்பு திட்டங்கள் பழங்குடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீதும் சுரண்டலை ஏற்படுத்தியபோது சந்தால் பழங்குடிகள் கடும் எதிர்ப்பைக் காட்டி போராடினர். அதன் பின் 1857-முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி தலைவர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1858-ல் ஆங்கிலேயர்கள் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்கி விக்டோரியாவின் நேரடி ஆட்சி மூலம் காலனியாதிக்கத்தை இந்திய சமூகத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக 1878-ல் இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள வனங்கள் மற்றும் கானுயிர்கள் அனைத்தும் அரசுக்கு உரிமையுடையது என்று மாற்றப்பட்டது. பழங்குடிகளை நசுக்கக் குற்ற பழங்குடிசட்டம் 1871-ல் கொண்டுவரப்பட்டிருந்தது. பழங்குடிமக்கள் மீது காலனி ஆதிக்கவாதிகளின் சுரண்டலும் ஜமீன்தார்களின் பிடிகளும் இறுகியபோது பீர்கா முண்டா போன்ற பழங்குடித் தலைவர்கள் போராடி, சிறைபட்டு உயிர்த்தியாகம் செய்தனர். தென்னிந்தியாவில் ஆந்திரத்தில் 1922-ல் அல்ஷாரி ராமச்சந்திர ராஜீ என்ற சீத்தாராம ராஜீ என்பரின் தலைமையில் பழங்குடிகள் திரண்டு போராடினர். இப்போராட்டத்தை நசுக்க ஆங்கிலேய மலபார் சிறப்பு படை வரவழைக்கப்பட்டது. எனினும் அல்ஷாரி ராஜீ வீரமரணம் அடையும் வரை பழங்குடிமக்கள் தொடர்ந்து ஆங்கிலேய அடக்கு முறையை எதிர்த்தனர்.

பழங்குடி நிலை:

பழங்குடி மக்கள் தொடர்ந்து தங்களின் மீதான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து வந்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பழங்குடி நிலங்களைப் பழங்குடி கவுன்சலின் அனுமதியின்றி விற்பனை செய்ய இயலாதவாறு வடகிழக்கு மாநிலங்களை ஐந்தாவது அட்டவணையிலும் அது நீங்கிய பிற மாநிலங்களில் (தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, கர்நாடகா நீங்களாக) பழங்குடி உள்ள பகுதிகள் ஆறாவது அட்டவணையிலும் இணைந்து பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவில் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 6.76 கோடியாகும். இந்த மக்கள் தொகையானது ஆஸ்திரேலியாவைப் போல நான்கு மடங்கும் பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டுக்கு இணையானதும் ஆகும்.
சுதந்திரத்திற்குபின் நாட்டில் உருவாக்கப்பட்ட சுமார் 1500 பெரும் நீர்த் திட்டங்களுக்காகச் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.6 கோடியாகும் இதில் சுமார் 40% பேர் பழங்குடியினர். உலகமயமாக்கலில் ஊக்குவிக்கப்பட்ட நுகர்வு வெறி தொடர்ந்து பழங்குடி மக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறது. பழங்குடி மக்களின் நிலங்கள் BALCO, NALLO போன்ற கம்பெனிகளாலும், பன்னாட்டு சுரங்க கம்பெனிகளாலும் சூறையாடப்படுகிறது. பழங்குடிகள் தங்கள் உரிமைக்காகப் போராடும்போது கொடுமையான அடக்கு முறைகளை அரசு நிர்வாகம் கடைப்பிடிக்கின்றது. இம்மக்கள் தங்களின் தாய் மண்ணை விட்டு விரட்டப்படுகின்றனர். நகரங்களின் சேரிகளில், தெரு ஓரங்களில் வாழ நிர்பந்தப்படுகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் அநீதி இங்கு நீதிமன்றம், சட்டம், அடக்குமுறை என்ற பெயரில் நடந்தேறுகிறது. இம்மக்கள் சுமார் 50 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கொத்தடிமைகளாக, படிப்பறிவற்றவர்களாக, வறுமை நோயால் வாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு உன்னதமான ஆதிப் பொதுவுடைமை பண்பாடும் அதன் வரலாறும் அதன் உயிர்ப்பை இழந்து வருகிறது. வேர் தன்மையுள்ள இப்பண்பாடும் நம்பிக்கையும் தொடர்ந்து பேரழிவைச் சந்தித்து வருகிறது. நம் சமூகம் அதன் ஆன்மாவைக் கொலை செய்து கொண்டிருக்கிறது.



ச.பாலமுருகன்

Sonntag, 17. Februar 2008

ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள்...

ஜேர்மனிய அதிகார வர்க்கத்தின்
ஊழல்கள் அம்பலமாகும் தரணம்.


ஜேர்மனியப் பொருளாதாரத்தையும் அந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிப்பவர்களாக இருக்கும் அதிகாரவர்க்கம் மிகக்கபடத்தனமாக உழைப்பவர்களை ஏமாற்றி வருகிறது.அதன் நயவஞ்சகத்தனமான பொருளாதாரச் சீரமைப்பால் நாளும் பல்நூறு தொழிலாளிகள் வேலையிழக்கக் காரணமானர்வர்கள் இன்று தமது தேசப் பற்றைக் கிழித்து நடுத்தெருவில் எறிந்த கதை அம்பலமாகிவருகிறது!அப்பாவி மக்களை மிகக் கொடும் வரிகளைப்போட்டு வாட்டி வதைக்கும் ஜேர்மனிய அரசு,தொழிலாளர்களை ஒட்ட மொட்டையடித்து,அவர்களை வேட்டையாடும் முதலாளிகளால் வழிநடத்தப்படும் அரசாகவே இருக்கிறது.மனசாட்சி என்பதெல்லாம் அதிகாரவர்க்கத்துக்கு,ஆளும் வர்க்கத்துக்கு-ரொப் மனேச்சர்களுக்குக் கிடையாதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.


"அமெரிக்க அதிபர் புஸ் தனது இரண்டவது தடவையான ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தைத்
தொடக்கியுள்ளார்!

பெனின் தேசத்தில் வந்திறங்கிய கையோடு நுளம்பு
வலையைப்பற்றியும் மலேரியாபற்றியும் மக்கள்சார்ந்து மிகமகத்தாகக் கருத்துச்
சொல்லியிருக்கிறார்.ஆபிரிக்க தேசத்தையும் அதன் மக்களையும் குறித்து அவருக்கு
இருக்கும் கரிசனை என்னவென்பதை நாம்
அறிவோம்.பெனின்,டான்சானியாமற்றும்,றுவான்டா,கானா,லிபேரியா ஆகிய ஐந்து ஆபிரிக்கத்
தேசங்களுக்கான இந்த உலக ஜனாதிபதியின் விசேச வருகையானது அந்த மக்களின் வாழ்வை
"வளப்படுத்தி"விடப் போகுதாம்! "

இன்றைய பொருளாதாரக் கிரிமினல்கள் உலக அரச அதிபர்கள்-அமைச்சர்கள் வடிவினில்மட்டுமல்ல பெரும் தொழிலகங்களின் ரொப் மனேச்சர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த "அதியுயர் நிர்வாகிகள்"செய்யும் திட்டங்கள் உலக மக்கள் அனைவரையுமே பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.உலக நாணய வங்கிய அதிபர் போடும் திட்டமானது இலங்கையில்-இந்தியாவின் விவசாயிகளின் வயற்றில் அடிப்பவையாக இருக்கென்றால் அதன் வீச்சு எவ்வளவு மனித விரோதமானதென்பதை நாம் அறிந்துவிடலாம்.

இந்தத்தரணத்தில்தாம் நாம் ஜேர்மனியே அதிரும் உலகப்பெரும் அதியுயர் நிர்வாகியான கிளவுஸ் சும்விங்கெல் எனும் ஜேர்மன் தபால் நிறுவனத்தின் அதிபரின் வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்து அறிகிறோம்.ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளிகள் வேலை பார்க்கும் அரச-தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தபால் நிறுவனத்தின் பெரும் அதிபர்.மாதமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யுரோ சம்பளம் எடுக்கும் அதிகாரி தேசத்தை-நாட்டை ஏமாற்றியது மட்டுமல்ல தனக்குக் கீழே தொழில் பார்க்கும் அரை மில்லின் தொழிலாளிகளையும் உலகத்தின் மக்களையும் ஏமாற்றியுள்ளான்.

கொடியவன்!

குளிரினில் கைவிறைக்கக் கடிதங்கள் சுமக்கும் தொழிலாளிக்கு பட்டுணிச் சம்பளம் கொடுத்தபடி தனது வயிற்றுக்குக் கோடிகோடியாகச் சுருட்டிக்கொண்டான்.இத்தகைய திருடர்களே மக்களின் பெரும் பொறுப்பான அதிகாரிகளாக இந்த அரசுகள் ஒப்புவிக்கின்றனர்.அத்தகையவர்கள் தாம் தேசத்துக்குமட்டுமல்ல மக்களுக்கும் எதிரிகளே-துரோகிகளே என்று தம்மைத் தினமும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.கிளவுஸ் சும்விங்கல் என்ற இந்தத் திருடன் ஒரு மில்லியனுக்குச் சொந்தவருவாய்வரி கட்ட மனமின்றி,அதை மறைத்துள்ளான்.தனது வருமானத்தை வெளிநாடுகளிலுள்ள(லிக்கரன் ஸ்ரையின்)வங்களிலும் மற்றும் தொழிகழகங்களிலும் நிதியிட்டு,பணத்தைத் தேசத்துக்கு வெளியே வரிகட்டாது நகர்த்தியிருக்கிறான்.அங்கே,பணத்தைச் சட்டமூலம் நகர்த்துவதற்காக ஏழை-எளிய மக்களுக்கு உதவும் அறக்கட்டளைகளை நிறுவி அதன் பெயரில் பணம் பற்றுவாடா செய்யப்பட்டு வரிவிலக்காகி நகர்த்தும் இத்தகையவர்களை இப்போது வேட்டையாடிவரும் ஜேர்மனிய வரித் திணைக்கழகம் இந்தக் கிளவுஸ் சும்விங்கீலைப்போல் இன்னும் பல ஆயிரம் பெரும் பணக்கார நிர்வாகிகளை வலைவிரித்துத் தேடுகிறது!எனினும்,இத்தகைய திருடனின் பதவி விலகலுக்குப் பின்பு,அவனே யுனிசெவ் டொச்லாந்துக்கான அதிபராகும் நிலையும் இருக்கிறதென்றால் இந்தவுலகம் எவ்வளவு ஏமாற்றுலகமெனப் பாருங்கள்!


ஜேர்மனிய இறைவரிப் புலனாய்துறையின் தேடுதலில் வசமாக மாட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் வெளியில் வருகிறார்கள்.தம்மீது சுமத்தப்படும் குற்றத்துக்கான தண்டனையைப் பணமாகச் செலுத்தி வெளியில் வந்துவிடுகிறார்கள்.இவர்களே இன்றைய பொருளாதாரத்தைத் தின்று ஏப்பமிட்டு,அப்பாவிகளை வேட்டையாடுபவர்கள்.

இவர்கள் எங்ஙனம் மாட்டுப்படுகிறார்கள்?முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சட்டரீதியாகக் கொள்ளையிடும் சட்டதிட்டங்களைத்தாமே உருவாக்கி உழைப்பவர்களைச் சுரண்ட ஜனநாயகம் என்கிறது!எனினும்,இத்தகைய பொருளாதாரக் கிரிமினல்கள் எப்படி உருவாகிறார்கள்?ஏன் உருவாகிறார்கள்?

அரசியல்வாதியிலிருந்து அதிகாரத்திலிருப்பவர்கள்வரை ஊழலில் மிதக்கிறார்கள்!அப்பாவித் தொழிலாளர்களை வேட்டையாடும் பொறிமுறைக்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்னு வேறு பெயரென்றால் அவர்கள் இதைவிடவா வேறு வழியில் சிந்திப்பார்கள்?வரிNயுப்புத் திமிங்கலங்களில் ஆயிரக்கணக்கான பெரும் தொழிற்கழகங்களிள் நிர்வாகிகள்-அதிகாரிகளின் பெயர்களை ஜேர்மனிய அரசு பணம் கொடுத்துப் பெற்றிருக்கிறது.வெளியுலக வங்கியில் பதுக்கப்பட்ட பணங்களின் தொகையும்,அதைப் பதுக்கியர்வர்களின் முழுவிபரமும் அடங்கிய சி.டி.றூம் ஒன்றிற்கு கமிசனாக 4.2 மில்லியன்கள் யுரோவை ஜேர்மனியப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டவொரு துப்புத்துலக்கிக்கு வழங்கியுள்ளார்கள்.இதன் அடிப்படையிலேயேதாம் திரு.கிளவுஸ் சும்விங்கல் மாட்டியுள்ளார்.வரும் கிழமைகளில் இன்னும் பல் நூறு பெரும் அதிகாரிகள்-நிர்வாகிகளை இந்தப் புலனாய்வுத்துறை கைத்துசெய்யும் அல்லது அவர்களிடம் தண்ட-அபராதப்பணம் பெற்று விடுதலை செய்யும்.


தொடரும்.

நிர்மாணம்
18.10.2008