Samstag, 26. November 2011

பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..."

// பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. //


http://www.facebook.com/parani.krishnarajani


பரணி,இஃது ரொம்ப ஓவராக இல்லையா?

"சுதந்திரம்,விடுதலை,இறைமை"என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?அதன் அடிப்படைகள் என்ன?பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..." "........." இதுதாம் இன்னும் மோசமான ஆபத்தைத்(அபத்தம்) தமிழ் மக்களுக்குத் தரவல்லது.


அவர் எந்தவொரு கோட்பாட்டுருவாக்கச் சித்திரத்தின் கர்த்தாவாக இருக்க முடியாது!நடைமுறைசார்ந்து ஒடுக்குமுறைக் கெதிரான "எதிர்ப்புப் போராட்டத்தை"ஒரு இனஞ்சார்ந்து அதைத் சமூகவுணர்வுக்குள்ஜீரணிக்க வைத்ததும்,அதையே ஒரு கட்டத்தில் சமுதாய ஆவேசமாக்கிய பிரக்ஜையில் பிரபாகரன் ஒரு குறியீடாக இருப்பதால் அவர் கோட்பாட்டுருவாக்க கர்த்தாவென்பது மிகைப்படுத்தப்பட்ட உரையாடல்.இதன் வாயிலாகத் தமிழ் இளைஞர்களது சிந்தனைக்குள் மீளவும் மாயயை-போலிப் பெருமையைக் கட்டி வைத்துச் சுயசிந்தனையை மழுங்கடிக்கும் போக்கு இது.சிந்திக்கவும்.


தமிழ்ச் சமுதாயத்திடம் எந்தவொரு கோட்பாட்டு இரீதியான உருவாக்கமோ அல்லது செல்நெறியோ இதுவரை நியாயமான வடிவில் நிறைவாக உருவாகவில்லை!தமிழ் மொழியானது வெறும் பூஜைக்குரிய மொழியாகவும்,எதிரிகளால் போலிப் புகழுக்கும் உட்பட்ட வெறும்உணர்வுசார் புனைவுகளால் வாழும் மொழி.இது,ரொலான்பார்த் வழி புரியப்பட்ட"மொழி பாசிசத் தன்மையாக நின்றேகும்"நிலைக்கு மிக நெருங்கிய மொழியாக இன்றிருக்கிறது!இந்த மொழி பேசும் மக்கட்டொகுதியானது இதுவரை"திருக் குறளை"வைத்து உலகைப் புரிய முனையும் அபத்தத்தின் மத்தியில் பிரபாகரன் குறித்து மிகைப்படுத்தி வைப்பதில் அடுத்த தலைமுறையையும் இப்படியே வழிப்பாட்டு அடிமைக் கூட்டமாக்கும் கைங்காரியத்தையும் நீங்களும் செய்வதில்"இனத்தின் விடுதலை,சுதந்திரம், இறைமை" என்பதைப் புலிகளது போராட்டச் செல்நெறிவழி உரைக்க முனைதலானது இதன் அடிப்படைகளைச் சொல்லி சென்றிருக்க வேண்டிய அவசியத்தைக் கோருகிறது.மற்றும்படி, தொல் காப்பியத்துக்கு விளக்கந்தரும் வேலை போன்று பிரபாகரன் குறித்துக் கருத்துக் கட்டுவது ஒரு இனத்தின் விவேகத்தின்மீது ஆணியடிப்பதாகும்!

இங்ஙனம் நீங்கள் செய்வதாவது,குறியியல் ரீதியான உணர்வுகொள் சொல்லாடல் குறிப்பானைக் காரணியாக்கும் மருவு நிலையில் புறநிலைகளின் தன்மைகளை மறந்தொதுக்கிறது.ஒப்புமை மூலமாக"இனவிடுதலையை,சுதந்திரத்தை, இறைமை" விளக்கப் படுத்துவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை."இனவிடுதலை,சுதந்திரம்,இறைமை" என்பவை குறிகளின் தொகுப்பல்ல!

மொழிவழியாகவுணரப்படும் இவைகளை மொழிவழி குறியாக அடையாளப்படுத்துவதில் அதன் அடிப்படைகள் மறுக்கப்படுகிறது.பிரபாகரன், தமிழ்இனத்தின் இன்றைய கட்டத்தில் இவற்றுக்கானவொரு குறிப்பானாக இருப்பது,அவர்வழி உணரப்படும் போராட்டம் ஒரு குறியீடாகத் தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்திருப்பதானது மேற்காணும் இனவிடுதலை,சுதந்திரம்,இறைமைக்கு கோட்பாட்டுச் சித்திரங்களல்ல!கோட்பாடென்பதை மிக மலினப்படுத்திக் கதைப்பது இன்றைய நிலையில் சாத்தியமாகிவிடுவதையிட்டு நாம் கேகலின் அகவயக் குறைபாடான இயக்கவியலுக்குள் மெல்லச் செல்கிறோம்.ஒன்றின் தொடர்ச்சியை இன்னொன்றுக்குள் காணும்அனாலோஜிக் கோட்பாட்டுரீதியான ஒப்பீட்டுருவாக்க மொழிவு, உங்களது கருத்தின்வழி புரிய முனையும் இந்த நிலையில் இதுவொருவகை சிம்பாதி-பரிவுணர்ச்சி என்பேன்!

இது,எமக்கு எட்டப்பட முடியாது நிற்கும்சுதந்திரம்,இன-விடுதலை,இறைமை குறித்து மிக வேகமாக "போலிப் பெறுதல்" உணர்வுக்குள் மிக வேகமாக ஒருவரை இணைத்துவிடுகிறது.இதன் இயக்கவியல்ரீதியான உள்ளடக்கமானது அனைத்து வடிவத்தையும் உடைத்துவிடுதனால் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும்(சுதந்திரம்,விடுதலை,இறைமைசார் ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு தன்நிலைகளை) அழித்துவிடுகிறது. இது,சுதந்திரத்தையும்,விடுதலையையும்,இறைமையையும் வெறும் மொழிவுகளுக்குள் குறுக்கி-குறியாக்கி வடிவத்துக்கு அந்நியத்தை வழங்கி,நாம் இவற்றுக்குப் பக்குவப்பட்ட வாழ்வைத் துய்க்க இலாயக் கற்றவர்களென்று சொல்லாமற் சொல்கிறது.இதைத் தொடர்ந்து நீங்கள் கட்டும்-உதிர்க்கும் நறுக்குகளுக்குள் இயங்கும் நிலைகளாக என்னால் நிறுவ முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
25.11.11

Samstag, 29. Oktober 2011

இன்னொரு "அலசல்" வீடியோ

"விடுதலை"ப் பு(ளி)லிகள்

( இன்னொரு "அலசல்" வீடியோ )

க்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
புலித் துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
தூரத் துரத்திய கையோடு,

தேம்பியழுது
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும்,
"அன்று" உச்சத்தைத் தாண்டப்
பிள்ளை பிடித்துத்
தேசக்காளிக்கு நரபலியிட்டனரா?

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும்புலத்துத்தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் "மாவீரர் தினப் பஜனை"!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!

ஈழமென்ற கனவின்
நனவாய்"தேசிய-மாவீரர் தினம்"
தெருவெங்கும் "தேசியத் தலைவர்"
உயிருடன் உள்ளார் எனத்தோரணமிடுகிறது!

செத்தவன்,
மண்ணோடு போன பின்னும்
நிணம் புசிக்கும் தந்திரமெனச் சரடுவிடும்
புலத்துப் புலி
கோடம்பாக்கத்துக்
குமரிகளைக் காட்டிக் காசும் பறிக்கிறது.

எந்தப்புரிதலும்
தமிழரை எட்டாத திசைகளைச் செய்து
திரட்டிய நிதியோ
ஒரு சிலரது தேடிய சொத்தாச்சு!

கட்டை விரலை
வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற "தமிழீழ"மயக்கம்
மக்களில் சிலருக்கு.

அற்பர்கள் அழித்தவை
தேசத்து மக்களை
வாழ்வை ,பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை"பொய்மை"இவர் இறைத்திடினும்
எத்துணை"கொலைகள்"இவர் கரஞ்செய்கினும்
இடர் மறந்து "அன்று" இறந்தனர் மக்கள்!

புலத்தில்,
இதயத்தைத் தொலைத்த துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி,
"மாவீரர் பஜனை"ஒலித்தும்,
மக்களின் மனதில்உண்டியில் தூக்கி,
வழிகளில்"தமிழீழ வெடிகளைப்" புதைத்து
பணத்துடன் ஓடப்
பொழுதுகள் பார்த்து...

மீண்டும்,மீண்டும்
பிரபாகரன் "உயிருடன்"
சுகமாய்-சுகமாய் உண்டு
உறங்குவதாக உருவங்கட்ட,
உருண்டவன் தலையும்,
கோத்தபாயக் கோடாரியுமாக
இன்னொரு "அலசல்" வீடியோ
அமெரிக்கப் பாணியில் இங்கே...

Freitag, 19. August 2011

அகதிப் பிள்ளைகளுக்கு_FLUECHTLINGSKINDERN

FLUECHTLINGSKINDERN:

Wir wollen den Erdball schenken,
wenigstens fuer einen Tag,
dass sie damit spielen Koennen
wie mit einen bunter Luftballon,
spielen und singen unter den Sternen.

Lasst uns den Kindern den Erdball schenken
wie einen runden Apfel oder ein warmes Brot,
dass sie satt werden koennen,
wenigstens fuer einen Tag,


Den ganzen Erdball sollen sie haben,
dass sie,
wenigstens fuer einenTag,
Kennenlernen,was Freundschft ist.

spaeter werden sie uns das Land
ohnehin aus den Haenden nehmen,
um unsterbliche Baeume darauf zu pflanzen.

-NAZIM Hikmet.


அகதிப் பிள்ளைகளுக்கு

ங்கள் விருப்பமோ இப் பூமியை
ஒரு நாளுக்காவேனும் குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுக்கவேண்டும்
வர்ணங்கள்கொண்ட பலூன்கள் போன்று
அதனோடு அவர்கள் விளையாடுவதற்கு
நட்ஷத்திரங்களின் கீழே ஆடியும் பாடியும் மகிழ்ந்திருக்க.

குழந்தைகளுக்கு இந்தப் பூமியைப்
பரிசளிக்க எம்மை விட்டுவிடுங்களேன்,
ஓருண்டையான ஆப்பிள் போன்றோ அல்லது
ஒரு சூடான ரொட்டி போல்,
அவர்கள் பசியாற,குறைந்த பட்சம் ஒரு நாட்களுக்காவேனும்!


மொத்தப் பூமிப் பந்தும் அவர்கள் வசமானால்
அவர்கள்,
குறைந்த பட்சம் ஒரு நாளுக்குள்ளே
நட்பு என்பது என்வெனப் புரிந்து கொள்வர்.

பின்னர் அவர்கள் இந்தப் பூமியை
நம்மிடமிருந்து எப்படியும் கையேற்கும்போது
சாகாவரம் பெற்ற மரங்களையாவது
நட்டு வைப்போம்.


நசீம் கிக்மெற்

தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்


Montag, 15. August 2011

Drei junge Tamilien, drei Männer in Indien

DRINGENDE AKTION !!!

Drei junge Tamilen, drei Männer in Indien
von Hinrichtung (durch den Strick) bedroht

Sehr geehrte Damen und Herren,

Indiens Oberstes Gericht lehnte ein Wiederaufnahmeverfahren für die drei Tamilien Murugan, Perivalan und Santhan ab, die zu Beginn des vergangenen Jahres für den Mord an dem vorherigen Premierminister Indiens, Rajiv Gandhi, zum Tode verurteilt wurden. Nur noch der Präsident Indiens könnte jetzt intervenieren, um die drohende Hinrichtung zu stoppen.
Dieser Ungerechtigkeit muß endlich und sofort Einhalt geboten werden ! Nur eine kräftige, internationale Kampagne könnte jetzt noch erwirken, daß die drei Menschen nicht grausam erhängt werden. Wir bitten Sie/Euch daher, diese Unterschriftenaktion so bekannt wie möglich zu machen, damit sich viele Menschen daran beteiligen.



Nähere Informationen sind auf Facebook_ Internetseite
(http://www.facebook.com/notes/stop-death-penalty-in-india/urgent-petition-to-the-president-of-india-stop-hanging-perarivalan-murugan-santh/110545945713419?notif_t=note_reply ) in Englische _Sprache zu finden.

http://www.facebook.com/notes/stop-death-penalty-in-india/urgent-petition-to-the-president-of-india-stop-hanging-perarivalan-murugan-santh/110545945713419

http://www.tamilsolidarity.org/?p=1773

Bitte senden Sie Protestfaxe, Telegramme oder Briefe zu den unten angegebenen Adressen:

APPELLE AN
STAATSPRÄSIDENTIN
Pratibha Patil
Office of the President
Rashtrapati Bhavan
New Delhi 110 004
INDIEN
Fax: (00 91) 11 2301 7290 oder (00 91) 11 2301 7824

KOPIEN AN

INNENMINISTER
P. Chidambaram
North Block, Central Secretariat
New Delhi - 110 001
INDIEN
Fax: (00 91) 11 230 94 221
Email: hm@nic.in

BOTSCHAFT DER REPUBLIK INDIEn

S.E. Herrn Sudhir Vyas
Tiergartenstr. 17
10785 Berlin
Fax: 030-2579 5102
E-Mail: dcm@indianembassy.de
Bitte schreiben Sie Ihre Appelle möglichst sofort. Schreiben Sie in gutem Englisch oder auf Deutsch.

Von Sri Rangan Vijayaratnam
Wuppertal
15.08.11


Mittwoch, 3. August 2011

சலாம் பம்பாயும் நானும்-மீரா நாயரும்

என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது.

(சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)


"........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும் இனித்தோன்றும் என் அடுத்த பிறப்புக்காகவும் நான் வதைப்பட்டதும்,படுவதும்-படப்போவதும் குறித்துப் பேசுவது அவசியமில்லையா?


பேசவேண்டும்!


தர்மம் செய்கிறோமெனும் பேர்வழிகளில் நானும் ஒருவனல்ல.கையேந்தும் ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களில் ஒன்று நான்.எனது மனவலியும்,வடுவும் என்னைப் பல முறைகள் மீரா நாயரைப் பார்க்க வைத்தது.அவர் திறந்து காட்டிய என் வாழ்வை, நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.எனது சின்னக் கனவின் வண்ணங்களைச் சொன்னதால் மீரா நாயரை மனதுக்குள் அதிகம் நேசித்த காலம் அதிகம்.இளைமைக் காலத்தின் அற்புதமான கனவுகள் எல்லோருக்கும் ஒன்றல்ல.


கிருஷ்ணாவுக்கு வீட்டுக்குப்போகவேணும்!அம்மாவைப் பார்க்கவேணும்.



கடைகளில் தேனீர்க் குவளை தாங்குகிறான்.பணம் சேர்க்கிறான்.ஏதோவொரு முடுக்கு வீதியில் அநாதவராக எழுந்திருக்கும் சுவருக்குள் ஒரு பொந்து!நண்பன் அதைப் பெட்டகமாகவும்-வங்கியாகவும் அறிமுகப் படுத்துகிறான்.கிருஷ்ணாவின் சின்னவிரல்கள் சேர்த்த பணம் அம்மாவுக்கு,அப்படியே வீட்டைபோவதற்கு.பொந்துக்குள் பணம் பத்திரமாக வைக்கப் படுகிறது.


தொடர்ந்து இயங்கிய சின்னக்கால்கள் ஒரு முறை பொந்தைப் பார்த்தபோது பணம் மாயமாக மறைந்துவிடுகிறது.


உலகம் இருண்டு விடுகிறது!மனம் வலியெடுக்கிறது எனக்கு.எங்கேயடா எனது பணம்?


கேட்டேன்.


உதைத்துத் தள்ளுகிறான் நண்பன்.


"நான் வீட்ட போகணும்,வீட்டை போகப் போறேன்."பணம் போனது போனதுதாம்.


எனக்கு எழுத வராது.


வீதியில் அமர்ந்து "அதை" மக்களுக்கு நிறைவேற்றும் ஒரு அண்ணரிடம் கடிதம் எழுதுவிக்கிறேன்.


"அன்புள்ள அம்மா,..." கடிதத்தில் என்னைக் கொட்டி கவருக்குள் திணித்து மூடிய பின், முகவரி எழுதுவதற்கு அந்த அண்ணர் "என்னடா உன்ர வீட்டு அட்றஸ்?"...ம்...


தெரியாது!


தெரியாது.அம்மாவை,அப்பாவை,அன்புடைய சகோதரத்தைத் தெரியாத முகவரியால் நான் தொலைத்தேன்.


என்னோடு உலாவும்-வாழும் எல்லோரும்தாம்.


மஞ்சுவுக்கு ஒரு அம்மாவும்,பல அப்பாக்களும் இருப்பது தெரிந்திருக்கு.அவள் அம்மாவோடு இருப்பாள்.பொழுதுகளில் என்னோடு உலா வருவாள்.


நாங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.


எங்கள் கதைகளில் நாங்களே நாயகர்கள்.எனினும் எங்களுக்கும் ஸ்ரீதேவியைக் காதலிக்கவும் தெரியும்.தெருவில் அமிதாப் பச்சனாக வாய்விட்டுப்பாடவும் தெரியும்.



ஒருநாள்,ஒருநாள் என்னப் பல நாள் பொலிசினால் நகரத் தூய்மை-அழகு கருதி நகருக்கு அப்புறமாகத் துரத்தப்படுவதும் உண்டு.நாங்கள் மீளவும் நகரத்துக்குள் கால் வைப்போம்.


எங்கே போவோம்?


இந்தியாவின் கதாநாயன் கிருஷ்ணன்!


ஆனால் இந்தக் கிருஷ்ணாவுக்கு தாயுமில்லை,தந்தைத் தேசமுமில்லை.வீதியின் விளிம்பில் படுத்துறங்கும் நாம்,சமூகத்தின் உள்ளேயும் வாழ முடியாது விளிம்பில்தாம்.


ஆம்! நாங்கள் விளிம்பு மனிதர்கள்.


"சலாம் பம்பாய்"-மீரா நாயர்.


"என்ன பிரச்சனை?,ஒரு பிரச்சனையுமில்லை!" -மீரா நாயர்.


வெண்திரை மூடி விடுகிறது.


மீளவும்,மீளவும்... ஒரு அறுபது தடவைகளுக்கு மேலே இந்தச்"சலாம் பம்பாய்"க்குள் வாழ்ந்திருக்கிறேன்.அதனால் எனது பையனுக்கு"கிருஷ்ணா" என நாமமும் இட்டேன். அந்தக் கிருஷ்ணா அநாதையில்லை என்பதற்காக நான் கிருஷ்ணாவுக்குப் பெற்றவனாய்... இது நிஷம்!வாழ்வு இப்படித்தாம் மனதுள் விரிகிறது.வசந்தத்தை நாம் வடிவமைப்பதிலும்,வாழ்வதிலும் இணைத்துவிடுகிறோம்.

II

சுய உணர்வும்,சுய நம்பிக்கையும் சமூகத்தின் அனைத்து ஆளுமைக்கும் அடிப்படைக் காரணியாகும்.மனித சமுதாயத்தில் அநேகமாகப் பல குழந்தைகள் அச்சத்தைத் தரிசிப்பவர்கள்.சமூகப் பாதுகாப்பற்ற ஒரு மொன்னைத்தனமான ஆட்சி,நிர்வாகக் கட்டமைப்பு உலகத்துள் நிலவுகிறது.இங்கே மனிதவுணர்வுகள் இயந்திரத்தனமான மனதுகளுக்குள் பின்னப்பட்டிருக்கிறது.இது சமூகத்தின் மொத்த மறுவுற்பத்தியையும் பாழடித்தபடி, பொருள் உற்பத்தியின் திறனைத் தினம் உயர்த்துவது எப்படியெனச் சிந்திகிறது.இந்தவுலகத்தில் துண்டாடப்படும் மனித ஆற்றலானது எந்தக் காரணத்துக்காகவும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.இது தாரளமயமான ஜந்திர வடிவத்துக்குள் உலகைத் தரிசனம் செய்யுந் தரணங்களில் தகவமைக்கும் மானுட மாதிரியானது மேலே வரும் வாழ்வைத் தினம்,தனம் மெருக்கேற்றி வளர்த்தெடுக்கிறது.



இன்றைக்கு மானுடத்திடம் சுய பெறுமானாவுணர்வு குறைந்துவிட்டது.சுயமதிப்பென்பது மானுடத்தின் ஆளுமையை விருத்திக்கிட்டுச் செல்வது.அது மனித ஆற்றலைத் தீர்மானிப்பதும் அறிவை மேம்படுத்திப் பல நல்ல சமூக மனிதர்களை உலகத்துள் வாழத் தருவதுமாக மறு உற்பத்தி இயங்குவதன் ஆதார சுருதியாகும்.இந்தச் சுயமதிப்பு சமுதாயத்தின் மொத்த உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையில் ஒருசில மேட்டுக் குடிகளுக்கான வரையறையாக மாற்றப்பட்டுள்ளது.இவர்கள் தவிர்ந்த சமூகத்தின் மற்ற மனிதர்கள் யாபேரும் இந்தச் சமுதாயத்தின் ஏதோவொரு விளிம்பில் தொங்குகிற ஒட்டுண்ணிகளாகச் சமூக யதார்தத்தம் உருப்பெற்றுள்ளது.இது சமுதாயத்தின் கடமையைச் சரிவர இயக்க முடியாது ஆட்சியையும்,அதிகாரத்தையும் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆளும் வர்கத்தின் அரசியலானது இந்தவுலகத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன்கள் குழந்தைகளை வீதிக்கு உதைத்துத் தள்ளியுள்ளது.இந்த ஈனத்தனமான பொருளாதார இலக்கானது மனிதர்களில் இப்படி மனிதக் குப்பையாக சமூகத்தின் ஒருபகுதித் தலைமுறையைத் தனது கழிவாக்கி வைத்திருக்கிறதென்றால் இந்த ஆட்சி,அமைப்புகள் எவ்வளவு மனிதக்கொடுமைகளைச் செய்கிறது!இதைக் கடைந்தெடுத்த துரோகத்தனமென்பதா இல்லை பயங்கரவாதம் என்பதா?


இது பயங்கரவாதமே!




மனிதக் கூளங்களாக நூறு மில்லியன்கள் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில்கிடந்து உழல இந்த மனித சமுதாயமும்,அதன் பெருந்தலைவர்களும் அமைதியாகக் "கனவு காணுங்கள் இளைஞர்களே"என்கிறார்கள்!


எதைப்பற்றிக் கனவு?


கோடிக்கணக்கான குழந்தைகளை எங்ஙனம் வீதிக்கனுப்புவதென்றா?


வீதிகள்தோறும் மனிதக் கழிவாகக் குழந்தைகளைக் கொட்டிவைத்திருக்கும் தேசங்கள் வீராப்போடு போர்கள் செய்கின்றன!


இன்றைய அரசுகள்-நிறுவனங்கள் விண்ணுலகத்துக்கு ரொக்கட்டுகளைச் செய்மதிகளை பல கோடிக்கணக்கான நிதியிட்டு அனுப்பிவைக்கின்றன.ஆனால் அப்பாவி மனித ஜீவன்களுக்கு ஒருபடி உணவளிக்கமுடியாது,தேசத்துக் குழந்தைகளைச் சமுதாயத்தின் விளிம்பில் உந்தி தள்ளி அவர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டித்தனமாகப் பறிக்கின்றன.இது கொடுமையில்லையா?,கோபம் வரவேண்டாமா?எத்தனை காலத்துக்குத்தாம் மற்றவர்களைக் காறித் துப்பிப் பழகப்போகிறோம்!இந்தக் குழந்தைகள் நம்மில் ஒரு அங்கமில்லையா?


நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!


உலகப் பொருளாதாரப்போக்குகள்,அதன் காடைத்தனமான சுரண்டல்,மற்றும் நிதிமூலதனத்தின் கண்ணைப் பொத்தியடிக்கும் வட்டி,அந்த வட்டிக்கு வட்டி இப்படி நிதியை வைத்திருப்பவர்கள் செல்வத்தில் புரண்டொழும்ப,உலகத்துச் செல்வமெல்லாம் இவர்கட்கே சொந்தமெனும் மோசடி அரசுகள்-சட்டங்கள்.இவற்றைப் பொறுத்தே பழகுவெனக் கல்வி,நிர்வாக ஒழுங்கு,சட்டம்,நீதிமன்றம்,பொலிசு,இராணுவமென்று பற்பல ஒடுக்குமுறைகள் விலங்கிட அப்பாவிக் குழந்தைகள் அநாதையாகிக் கண்முன்னே செத்து மடிகிறார்கள்.


கடைந்தெடுத்த யுத்தங்கள்,கண்மண் தெரியாத போர்களின் காட்டுமிராண்டிக் குண்டுகள் எத்தனை வகையான துன்பத்தைச் சிறார்க்கு வழங்கி விடுகிறது!



1830 இல் உலக வல்லரசு பிரித்தானியாவிலேயே 30.000. அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி வீதிக்கு வந்தார்கள் என்கிறது ஒரு அமைப்பின் பிரசுரம்(terre des hommes)..ஆனால் அது இந்தக் காரணத்தாலல்ல.சமுதாயத்தில் எங்ஙனம் வறுமை தோன்றுகிறதென்பதும்,குழந்தைகளின் பெற்றோர்கள் எங்ஙனம் இணைந்து வாழ முடியாதுபோனது அல்லது குழந்தைகளைச் சமுதாயத்தின் பொது உயிரியென்ற வகையில் அவர்களைக் காக்க அரச முயலவில்லையென்பதையும் வெறுமனவே பெற்றோர்கள் இன்மை என்பதற்குள் அடக்கி, உண்மைகளை உருத்தெரியாமல் அழிப்பது இந்தச் சமூக அரசியலுக்குப் பழக்கமாகிறது!இதுதாம் முதலாளியத்தின் தப்பித்தல்.முதலாளியத்தில் இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாது தொடர்ந்தே இருக்கும்.வேலையில்லாத் திண்டாட்டத்தைப்போன்று!


ஆண்டுதோறும் கடலில் கொட்டும் கோதுமையும்,பழங்களும்,மற்றும் பல்வகைத் தானியங்களும் இந்தவுலகத்திலுள்ள அனைத்து மானுடர்களும் ஒரு மாதத்துக்கு உணவருந்தப்போதுமானது.பல இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள விளை பொருட்களைச்"செயற்கைத்தனமான அழிப்பு"எனும் சந்தை விதி வார்த்தையில் நாம் அழைத்துக்கொள்கிறோம்.இவையாவும் எதன்பொருட்டு?முதலாளியத்தின் "சந்தைப்படுத்தல்-மதிப்பிறக்கத்தைத் தணித்தல"; எனும் தந்திரத்தின்-உத்தியின் விளைவல்லவா?


இன்றைய நிலவரப்படி 100 மில்லியன் வீதிக்குழந்தைகள் இந்த உலகத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!(தரவு:Weltgesundheitorganisation WHO.)இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் முப்பது மில்லியன் வீதிக் குழந்தைகள் வாழ்கிறார்கள்.பிரேசில்போன்ற உலகின் மிக ஏழ்மையான நாட்டில் ஏழு மில்லியன்கள் குழந்தைகள் வீதியில் கையேந்தும்-கண்ணயரும் நிலை.



வளர்ச்சியடைந்த ஜேர்மனியானது உலகத்தின் எந்த நாட்டையும்விட மிக முன்னேறிய சமூகப் பாதுகாப்புடையது.அதன் மண்ணிலே அண்ணளவாக 40.000. வீதிக் குழந்தைகள்,தெருவினில் சீவித்துச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவென்ன ஜப்பானென்ன முதலாளியத்தின் மூச்சு எங்கே நிலவுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்வைத் தொலைத்துத் தெருவுக்குத் துரத்தப்படுகிறார்கள்.



"இராஜசிறீ பன்சிவார் கூறுகிறார்:":"Viele Leute meinen die beste Hilfe fuer diese Kinder waere,sie zuruek zu den Eltern zu schicken oder bei wohlhabenden Leuten unterzubringen.Das ist eine Illusion aus den Filmfabriken"-Voluntary Organisation in Community Enterprise-VOICE."இக் குழந்தைகளை பெற்றோர்களுடன் அல்லது வளம்மிக்க மனிதர்களிடம் மீள அனுப்பிவைப்பதே சாலச் சிறந்ததெனப் பல பேர்கள் எண்ணுகிறார்கள்.ஆனால் இது ஒரு மாயை சினிமாவால்."


இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன்கள் குழந்தைகள்-பெரியவர்கள்,பெற்றோர்கள்-குடும்பங்கள்; முற்றுமுழுதான அநாதைகளாகத் தெருக்களில் அலைகிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைதாம் இவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக இருக்கிறது.இந்த தொழிற்சாலை இச் சிறார்களை- இளைஞர்களை இரண்டும் கெட்டான் நிலைகிட்டுச் சென்று எவருடனும் இணைய முடியாத அகப் புறநிலைக்குள் தள்ளி விடுகிறது.மில்லியன் கணக்காகக் குழந்தைகளையும்,பெற்றோர்களையும் தெருவுக்கு விரட்டியடித்த இந்தியப் பொருளாதாரமானது இப்போதுதெல்லாம் வல்லரசுக்கனவு காண்கிறது.


இவையனைத்தும் இந்த முதலாளித்துவப் பெரும் சுரண்டலினால் தொடரப்படும் பயங்கரவாதமாக இனம் காணப்பட வேண்டும்.
இத்தகைய அரசியல் பொருளாதாரப் பயங்கரமானது இன்னும் சில தரணங்களில் பல மாவட்டங்களில் மனிதர்களைக் கிருமிகளிடமிருந்து காக்காது கொன்றுவிடும் திட்டம் வைத்திருக்கின்றது.சனத்தொகை இங்ஙனம் குறைப்பதற்கானவொரு பொருளாதாரப் புள்ளி இனத்துவ அடையாளப்படுத்தலுடன் நகர்ந்துகொண்டிருப்பதும் இங்கே கவனிகத் தக்கது.


எனவேதாம் கூறுகிறோம் இவ்வுலகம் மாற்றப்படவேண்டுமென.





ப.வி.ஸ்ரீரங்கன்

Mittwoch, 29. Juni 2011

தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ...

மாற்றுக் கருத்தாளர்களின் கருத்துக்களில் இருந்து சுயலாபம் Njடும் ............

கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன்.

எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாகவேண்டும். தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதோட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தோன். உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் ஆனால் ஆதில் ஓருவர் இந்தியா சார்புதன்மை கொண்டவரும் மற்றவர் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் ஒருவர் இலங்கை சார்பு அரசில் கொண்டவரும் நான்காவதாக நான் மாற்றுக்கருத்தை கொன்டவனாகவும் இருந்தோம். இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. அத்தகைய பார்வையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த காலத்தில் இருந்தே மற்றுக் கருத்துக்காக புலம் பெயர் நாடுகளில் குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன் இக்காலத்தில் ஈழபூமி என்ற பத்திரிகையை வெளியிட்டும் அதன் பின் உயிர்ப்பு, தமிழீழ மக்கள் கட்சி,........... இயங்கிவரும் என்னை அரச ஆதரவாளர் என்று தேசம் நெற்றில் 'புலிகளின் வால்கள் நியூமோல்டன் பகுதியில் சண்டித்தனம்' என்ற கட்டுரையில் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன்இ எஸ் வாசுதேவன்இ வி சிவலிங்கம்இ என் கங்காதரன்இ ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்இ சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர் மாறிமாறி கலந்து கொள்கிறார்கள். எனக் குறிப்பிட்டதன் மூலம் என்னை இலங்கை அரசு சார்பானவர் என்று கருதப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வசனத்தை நீக்குமாறு தேசம் நெற்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அதையும் அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கொன்சன்ரைனும் ஜெயபாலனும் தமது அரசியலை எனது பெயரில் திட்டமிட்டு தினிக்கிறார் மாற்றுக் கருத்தாளர்களை சிதைக்கும் முயற்சியாகவே நான் கருதுகின்றேன்.

நட்புடன்
குட்டி

(தயவுசெய்து இதை உங்கள் இணையங்களில் பிரசுரிக்கவும்)

Mittwoch, 19. Januar 2011

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

ப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.

உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.




இந்த"நான்"அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான"நான்"சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் அநுபவமாவது முடிகிறது ஆயுள்.

"அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு எதாச்சு ஏதேதோ ஆயாச்சு..."

இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்...

புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் "..."பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.

எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.

"சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் ..."





பொங்கலிட்டுப் போட்ட கோலமும், புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும்வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை?

விரிந்து,இருட்டு வெளியாய் நீண்டுசெல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் "தொலைந்துபோதல்" எந்தக் கோட்பாட்டில் அமிழ்கிறது?

"ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்"-அன்று!


எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது-மேற்காணும் பையப படப்பாடல்கள்.எனது இளைய பருவத்தை தந்தை ஆண்டு காதலரும்புக் கரும்பிட்டான்,தளையனோ எனது முதுமைக்குமுன் கோலமிட்டபடி குமரியைத் துரத்தக் கற்பிக்கிறான்.

"தந்தனத் தந்தனத் தாளஞ்"சொன்ன தந்தைக்கும்,

"அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா..."


என்று முரசுகொட்டும் தனையனுக்கும் நடுவில் சிக்கிய நானோ...

நான் தவிப்போடு இருக்கிறேன்!

எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.

எனது காதலின் மொத்தவடிவவுமே
காமத்தால் கட்டிப்போடப்பட்டது.


இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.


அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.


"மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!"



அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?


உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க...

இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.

வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.

இன்று, இவைகளது அகண்ட கால்கள் "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரை அப்பாவி இளைஞர்களை-யுவதிகளைப் பிடித்துத் தலையில் ஸ்ரீலங்காத்தேசிய எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.


மக்களுக்கு,மக்களுக்கென புனையும் "மாற்றுக் கருத்து"ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.

இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு "துரோகி"சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?

உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!



"எல்லாந்தெரிந்தவர்கள்"தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.

"ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு"


இவற்றைத் தவிர
நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!

உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.

வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!

இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.

அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடிவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.



"நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்"


"சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?" என்றேங்கிய பொழுதுகள் பல.


நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்