Samstag, 21. Juni 2008

ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும்



கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்னவென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது


எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உரமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியால் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய


நிர்மாணம்
21.06.2008


(கொலைகளை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியச்
சூதாட்டத்தில்
நொடிந்துபோன தமிழ்ச் சமுதாயம் இருப்புக்காய் யுத்தத்தை
எதிர்த்து...


மேலே ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்,
தேசம் நெற்
நிரந்தர வாசகர்கள் ரகு-ரதன் ஆகிய இருவரையும் அம்பலப்படுத்தும் மரமண்டையினது
கருத்துக்களோடு...)



மரமண்டை on June 20, 2008 6:01 pm

/இதிலென்ன அபத்தம் இருக்கு. புலிக்கு எதிராக மோசமான அபத்தங்களை மாற்றுக்கருத்து என "மாற்றுக்கருத்துக் காரர்" சொல்வதில்லையா? பழக்கதோசத்தில எழுதிபோட்டார் வழமைதான் இது விட்டுத்தள்ளுங்கள்!!!! /-ரகு

ரகு, புலிக்கெதிராக மோசமான அபத்தங்களைத்தான் மாற்றுக்கருத்தாளர்கள் சொல்வதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். ஆனால் புலிகள் அவர்களைக் கொன்றெல்லோ குவிக்கிறார்கள்! மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது! அட உதை நான் எழுதவில்லையே என்று கேனைத்தனமாக எழுதாதீர். புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர். போதுமடா உந்த ரகுவின் அறிவிலத்தன வாதம்.
மரமண்ட

ரகு on June 20, 2008 8:13 pm

//…புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர்…/-/மரமண்ட

வரலாற்றை இயலுமானவரை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தான் எழுதுகிறேன். உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கேளுங்கள் தெரிந்தவரை பதில் அளிக்கிறேன். எனக்குத்தெரியாதென நீங்கள் கருதினால் சான்றுடன் தெரியப்படுத்துங்கள் கற்றுக்கொள்கிறேன்.அவர் சொன்னார்..இவர் சொன்னார்…மக்கள் பேசிக்கொள்கிறார்கள் ……கேட்கக்கூடியதாக இருந்தது…..அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன கதையள் வேண்டாம்!!!!
தேசம்நெற் இல் கருத்து எழுதத்தொடங்கிய நாளில் இருந்து பலர் மஹாபாரத, ராமாயண , வடஇந்திய, தென்னிந்திய, ஆசிய, ஆபிரிக்க, அரேபிய, தென்அமெரிக்க பெயர்களுடன் வந்து கருத்துக்கூறுகிறிச் செல்கின்றனர். நாளொரு கருத்து பொழுதொரு பெயர் என. ஆனால் நான் அதே பெயரிலே வந்து கருத்துக்கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். எங்கும் ஓடி புனைபெயகளின் பின்னால் ஒளிக்கவில்லை. சரித்திரத்தை ஆதாரங்களுடன் கற்றுக்கொடுங்கள்!

/..மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது!….//
விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!


மரமண்டை on June 21, 2008 8:38 am


/விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!/-ரகு


ஆக "விடுதலைப் போராட்டத்தில்" கொலைகள் செய்லாம் என்கிறீர்? உங்கள் இந்த மனதுதான் இதுவரை பல்லாயிரக்கணக்கான கொலைகளை" ஈழவிடுதலையின்" பெயரால் புலிகள் செய்கினம். இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங் குழுக்களும் அடக்கம்! இத்தகைய கொலைகள் அபத்தமான கருத்துகளைவிட நியாயம் பெறும் உமது மனதுதான் புலியினது அராஜகத்துக்கு உரம் போடுவதும்; அதன் இருப்புக்குத் தத்துவ ஆதாரமாகும். நீர் ரகு என்ற பெயரில் புலிக்குப் பிரச்சாரப் பீரங்கியாகப் புலியின் நிதியிடலில் இயங்கும் முதல்தரமான கொலைக்காரன். உம்மோடு கருத்தாடுவதற்கு முதலில் உமக்குள் இருக்கும் புலியைக் கொன்றுவிட்டு வாரும்.


(நாசிகளின் மீள் வருகை கருப்பு நாசிகளாக...)


இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து கொலைகளை "விடுதலையின் "பெயரால் எவர் நியாயப்படுத்துகிறாரோ அவரே மிகப்பெரும் சமூகவிரோதி. ஈழத்தின் பெயரால் இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்கள் மகத்தானவொரு உண்மையைவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தமிழ்ச் சமுதாயம் ஒரு கொலைவெறிபிடித்த சுயநலக் கிரிமினல் கூட்டம் என்பதே. இந்த உண்மையை புலிகள் அடிக்கடி செய்யும் அரசியல் சூதாட்டத்தில் அனைவரும் கண்டையமுடியும். இதையே ரகு தனது தொழிலாகத் தேசத்தில் கருத்துச் சொல்வதென்ற போர்வையில் செய்துவருகிறார். இதுவரை இந்த மக்கள்கூட்டம் இழந்த உயிர்களையும் கண்டு ரகு இப்படிக் கொலையை நியாயப்படுத்தும்போது அதையும் அனுமதிக்கும் ஜெயபாலன்மீது சந்தேகம் வருகிறது. இவரும் "விடுதலையின்"பெயரால் கொலைகளை ஏற்கிறரா என்று.

எதிரியையும் அவனுக்கு-அவளுக்குரிய உயிர்வாழும் உரிமையுடன் வாழ அனுமதிக்கும் உயிராதவுரிமையை எந்த விடுதலையும் பறித்திடமுடியாது. மாறாக "எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் என்று அதையொட்டி பார்ப்பதும் அத்தகைய காரணத்தின் தவறு அமைப்புக்குள் நிலவுவதன் தோறறுவாயைக் காணுவதும்தான் சரியாக இருக்கும்.

இதுவரைப் புலி அரசியலின் இருப்பே கொலைகளால்தான் எனும்போத அத்தகைய கொலையை ரகு நியாயப்படுத்துவது அவருக்குக் குற்றமாவதில்லை. இதனால்தான் பலர் புலிகளின் பொய்யுரைகளை நம்பிக் கொலைகளைச் செய்கிறார்கள். ஈழம் என்ற கோசம் இத்துணை வினைகளைச் செய்யுமென்று அன்றே ஆருடம்கூறியவர்கள் இப்போது புலிகளால் கொல்லப்பட்ட தினத்துக்குள் மட்டுமே வாழ்கிறார்கள்! அவர்களின் அடிச்சுவடே இல்லை. அதற்கு மாறாக ரகு போன்றவர்கள் நியாயம் சொல்லும் -கருத்துச் சொல்லும் தளமே மிஞ்சியுள்ளது.

மரமண்ட


ரதன் on June 21, 2008 10:23 am

//இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்./-/மரமண்ட

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.
ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு

//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //
புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.




மரமண்டை. on June 21, 2008 12:14 pm



//ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு
//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.//-ரதன்


ரதன் மீளவும் தவறு செய்கிறீர்கள்.

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால்…
புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?

இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.
புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்.

ஆனால்,அந்த மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் அடக்கியொடுக்கும் புலிகளோ அல்லது அரசோ மற்றும் ஆயுதக்குழுக்களோ இவற்றைத் தீர்மானிக்கின்ற சூழலேதான் இன்று கொலைகளுக்கு மூல காரணம்.

பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?

புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன? இதைச் சாத்தியப்படுத்திய போராட்டத்தின் செல்நெறியை மீள ஆய்வுட்குட்படுத்தும் உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா? அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்.
இவற்றையெல்லாம் புறத்தே தள்ளியபடி, ஏகத் தலைமை நாங்கதான்-நாங்கள் செய்யும் நடவடிக்கை-அரசியல்-கொலைகள் எல்லாம் மக்கள் நலனிலிருந்தே இப்படிச் செய்கிறோம் என்னும் புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது.

நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!
புலிகளினது இயக்க நலனிலிருந்து மக்கள் உரிமைகளைக் காணவிரும்பும் மனது இறுதியில் கொலைகளைப் புலிக்கொடிக்குள் மறைத்துத் தேசிய விடுதலையால் நியாயப்படுத்துகிறது. இது திட்டமிட்ட புலி அரசியல். இங்கே ரகுவோ அல்லது ரதனோ மக்களின் உயிர்மீது கொலைக்காரகளின் அரசியல் கொலை வண்டியை ஓட்ட முனைவதன் தொடர்ச்சியாகத் தேசம் நெட்டில் பாதை அமைக்கிறார்கள். அது அம்பலப்படப்போகும் இந்தத் விவாதத்தை இனிமேல் தொடரவேண்டும்.

யுத்தத்தை நிறுத்து-அப்பாவி மக்களையும் அவர்களின் குழந்தைகளையும் "துரோகி"சொல்லி கொல்லுவதைத் தடுக்கவும் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களின் உயிராதார வாழ்வுத் தேவைகளின் சிதைவைத் தடுக்கவும் அவர்களின் மீது தொடக்கப்பட்டிருக்கும் அரச-இயக்கப் பயங்கரவாதப் போரைத் தடுத்திட முதலில் இந்த ஈழப்போர் என்றதை அம்பலப்படுத்தி அதற்கெதிராகக் கருத்தாடவும்.

மக்களையெல்லாம் மந்தைகளாக்கும் புலிவகை அரசியல், அப்பாவிக் குழந்தைகளை அழிப்பதில் கடந்த கால் நூற்றாண்டின் வரலாற்றைப் படிக்கவும்.
இதுதான் தமிழ் மக்களின் கண்ணீருக்குக் காரணமான ஆயுதக் கலாச்சாரத்தையும் அதன் பின் இயங்கும் அன்னிய அரசியல் ஆர்வங்களையும் விளங்கிக்கொள்ளவும்; இந்தப் போராட்டத்தால் துரோகிகளாக்கப்படும் போராளிகளின் பின்னே கட்டமைக்கப்பட்ட அரசியல் சூதாட்டத்தையும் விளங்கும் முதற்படியாகும்.

ரதன் பாணியில் புலிகளின் நடவடிக்கை என்று இவற்றை ஏற்பதற்கு நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.அப்படி மக்களின் உரிமைகளை ஏலம்போடும் ஏகதலைமைத்துவத்தை புலிகளின் அரசியலிலிருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை.


அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண். மக்களே தமது விடுதலைக்கு எதிரானவர்கள் எவரென்பதை நிலைநாட்டும் நாட்கள் நெருங்கும்போதெல்லாம் அவர்களைக் குறுந்தேசிய மாயைக்குள் இட்டு அழிப்பு அரசியல் செய்ய நீங்கள் பொங்கும் பொங்கு தமிழுக்குப் புரட்சியென்றோ விடுதலைப் போராட்டமென்றோ எந்தத் தெரிவும் இல்லை. இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.


ரகு-ரதன் இயங்கும் புலி அரசியல் சாய்வில் பொல்லாத கொலை அரசிலொன்று "நடவடிக்கை" என்று நியாயம் சொல்கிறது. இதையும் தேசம்நெற் மீளவும் பதிவிடுவதால் நான் தொடர்ந்து வருகிறேன். இது கொலைகளுக்கெதிரான குரல். ஈழப்போரென்று மக்களை துரோகியாக்கும் ஆயுத அராஜகத்துக்கெதிரான குரல் இது எப்போதும் -எங்கேயும் ஒலிக்கும். மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்.

மரமண்டை.


ரகு on June 21, 2008 1:15 pm


//….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///-மரமண்டை.

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.





/…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//என்ன நடவடிக்கை?


/…புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.



ரதன் on June 21, 2008 4:07 pm


//புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?//-மரமண்டை

ஈழத்தமிழரின் ஏகோபித்த பிரதிநிதி. தமிழீழத்தின் நிழல் அரசு. இது ஆயுத போராட்டாத்தாலும் 2004ல் நடைபெற்ற நாடளமன்ற தேர்தல் ஊடகம் நிரூபிக்கப்பட்ட உண்மை. புலிகளை தடைசெய்தவர்கள் கூட சிறிலங்கா அரசை புலிகளுடன் பேச வலியுறுத்துவது கூட இதன் அடிப்படையில்தான்.


//இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.//-மரமண்டை

அதைதான் மக்கள் 2004லில் நடந்த நாடளமன்ற தேர்தலூடக தீர்மானித்தார்கள். 2000 குறைவான புலிகள் 120 000 மேற்பட்ட இந்தியப்படையையும் பல்லாரயிரக்கணக்கான இந்திய ஆதரவு ஆயுத குழுக்களையும் விரட்டிஅடிக்க முடிந்ததற்கான பிரதான காரணங்களிலொன்று ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற யதார்த்தம் புரியவில்லையா?

//பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?//-மரமண்டை
முதலாவது தம்மீது நடைபெறவிருந்த விசாரணைக்கு முகம் கொடுக்கும் நேர்மையின்னை. அதே நேரம் புலிகளை எதிர்ப்பதால் கிடைக்கபோகும் பணம் பதவி ஆசை.


//புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன?//-மரமண்டை
தனது மனித நேர்மையீனமென்பது பலருக்கு இயல்பாகவே உள்ளவிடயம். இதற்கெல்லாம் ஒரு அரசியல் காரணங்களில்லை. ஒருவகை தனிமனித பேராசை.


//உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா?//-மரமண்டை

புலிகள் "செய் அல்லது செத்துமடி" என்ற தொனிப்புடைய இராணுவ அமைப்பு இந்த அடிப்படையதார்த்ததை முழுமையாக உள்வாங்கினால் இந்த கேள்வியின் அர்த்தமற்ற தன்மை புரியும். அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வனுக்கு பிரிகேடியர் எனும் இராணுவ பதவி நிலையே வழங்கப்பட்டது.


//அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்//-மரமண்டை

"துரோகியாக்கப்பட்டதன்" என்ற சொல்லில் தொக்கிநிற்கும் அர்த்தம் என்ன?. கிழக்கு மக்களின் நன்மைக்காக தான் பிரிவதாக சொன்ன கருணா லண்டனுக்கு ஒடிவந்ததிலிருந்து புரியவில்லையா அவரின் சொல்லும் செயலும் எதிர்மாறனவை என்று. கருணாவுடன் கொழும்பிற்கு தப்பியோடிய தளபதிகள் ஏன் வலியவந்து புலிகளிடம் சரணடைந்தார்களென்று எப்பவாவது சிந்தித்து பார்த்தீர்களா!

புலிகளின் வருவிற்கு முன்னர் துரொகிகள் என்ற சொல்லோ மனிதர்களோ(?) தமிழர் வரலாற்றில் இருக்கவில்லையா? காக்கைவன்னியன் பூதத்தம்பி…. என்று மிகநீண்ட பட்டியல்களுக்கும் புலிகளா காரணம்.


//புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது//-மரமண்டை

ரதனை ரொம்பதான் புகழுகிறீர்கள். புலிகளிடமிருக்கும் வீரம் தியாகம் ஈகம் தொலைதூர பார்வை எங்கை ரதன் எங்கை!


//நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!//-மரமண்டை
நீங்கள் கொலையென்ற ஒற்றை சொல்லுக்கை எல்லாவற்றையும் மறைக்கவெல்லோ பார்க்கிறீர்கள்.


//நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.//-மரமண்டை

முதலில் தனிமனித சுதந்திரத்தை மதியுங்கோ.


//அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண்.//-மரமண்டை

அதை எனது பின்னூட்டத்தை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும் எனது கருத்து வீணே இல்லை பிரயோசனமோ என. நீங்கள் சொன்ன மக்கள் உரிமையும் இதற்குள் அடங்குது.


//இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.//-மரமண்டை
மக்களின் ஆதரவற்றவர்களின் வெற்று புலம்பல்களும் இதே தொனிப்பில் இருப்பதைதான் பார்க்கிறேன். தமிழர்களுடன் சேர்ந்து வாழும் புலிகளை மக்களிடத்திலிருந்து அந்நியப்பட்டுள்ளவர்கள் அம்பலப்படுத்த போகிறார்களாம்.


//மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்//-மரமண்டை

நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?



மரமண்டை on June 21, 2008 5:40 pm


/ரகு on jun 21 2008 1:15 pm //….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.


…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
என்ன நடவடிக்கை?

/…புலிகளையும் இமக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.-ரகு//



ரகுவினது மனது இன்னும் கொலைகளை நியாயப்படுத்தும் மனதாகவே-புலியினது அரசியலால் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிதென்பதற்கு மேலுள்ள பதில் நிரூபணமாக இனியிருக்கும்.மக்களின் நடவடிக்கை என்றெழுதும்போது…அதை என்னண்ணை நடவடிக்கை-எப்படிப்பட்ட நடவடிக்கை என்கிறார்.இக்கேள்வி மக்களைப் பார்வையாளராக்கி அவர்களின் குழந்தைகளை அடியாட்படைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பாசிச இயக்கத்தின் வழி தெளிவாகிய மிக மோசமான எள்ளல்.மக்களின்றி-அவர்களது உண்மையான எழிச்சியின்றி-மக்கள் அமைப்பு உருவாகமுடியாது.மக்களே தமக்கான அமைப்பைத் தமது போராட்டத் தெளிவினுடாகக் கட்டியமைக்கும் மக்கள் எழிச்சிக்குச் சுயமான அவர்களது போராட்டச் சமூக நடவடிக்கைக்கு விலங்கிட்ட புலிகள்-அரசு-மற்றைய அராஜகக் குழுக்களெல்லாம் மக்களையும் அவர்களது விடுதலையுணர்வையும் வேராடு சாய்த்தபடி மக்களுக்காகக் காரியமாற்றுகிறோம் என்பது மிக மோசமான அழிவு அரசியலுக்கிட்டுள்ளது.இதை நோக்கிய மேன்மேலுமான இயக்கச் சர்வதிகாரம் ஏகத் தலைமைத்துவத்துக்காக மாற்றுக் குழுக்கள்மீதான அத்துமீறிய அராஜக அழிப்பால் இன்று மாற்றுக்குழுக்களை எதிரியாக்கிய"தெரிவு"புலிகளால் திட்டமிடப்பட்டு ஆற்றிய வரலாற்றுக் கொலை.இதைத் தகர்ப்பதற்காகவே மக்களின் சுய எழிச்சிக்குத் தடையான இயக்கச் சர்வதிகாரத்துவப் பாசிசக் காட்டாட்சியை உடைக்க ஜனநாயகத்தைக் கோருகிறது மக்களின் வாழ்நிலை.
இதை மறுப்பதும் மக்களைத் தொடர்ந்து யுத்த ஜந்திரத்தால் வருத்திக் கொலையின் மூலம் அவர்களின் எழிச்சியை ஒடுக்குவதற்குப் பெயர் ஈழப்போராட்டம்.இந்தக் கேடுகெட்ட இயக்க வாதச் சகதிகுள்ளிருந்தபடி மக்களின் நடவடிக்கை என்பதை விளங்க முற்படும் ரகுவின் மனது அதைக் கேள்வியாக்கி நம்முன் தன் கருத்து மனதை இப்படி அம்பலப்படுத்துகிறது.


மாற்றுக் குழுக்கள்மீது எடுக்கப்பட்ட புலிகளின் அழிப்பு யுத்தமானது இன்றைய கிழக்குப் போராளிகள்மீது எடுக்கப்பட்டுவரும் அராஜக அழிப்புவரை அரசியல் வறுமையை வெளிப்படுத்துகிறது.இங்கே ஆயுதத்தைவிட வேறுமொழி இல்லை என்பதன் தொடர்ச்சி புலிகளின் தலைமைத்துவத்தின் இருப்பினது தொடர்ச்சியாக விரியும்போது அதுவே கொலைகளை ஊக்குவித்துக்கொண்டு கொலையாக்கப்படுபவர்களைத் "துரோகி"என்று முத்திரை குத்துகிறது.இப்படி துரோகிகளாக்கப்பட்ட எத்தனையே தீரமிக்க உயிர்கள் இன்று இந்தத் தமிழ் மனதிடம் இன்னும் கேள்வியையே தொடக்கவில்லை.அப்படிக் கேள்வியை இத்தகைய ரகு-ரதன் போன்றவரிடம் எழுப்பியிருக்குமாயின் இவர்கள் இந்த அராஜக யுத்தத்தை நிறுத்துவதற்காகப் புலிகளையும்>இலங்கை அரசையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி மக்கள் பக்கம் நிற்பார்கள்.அப்படி நிற்கும்போது மட்டுமேதான் நாங்களும் மக்கள் குழுமத்திலொரு உறுப்பினர் என்ற பொதுமனது வேலை செய்யும்.இந்த மனதுதான் மக்களினது உரிமை என்பது புலிசொல்லும் புலுடா அல்ல.அது மாறாக மக்களை விடுவிப்பதற்கான கோரிக்கைகளோடு பின்னப்பட்டு மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவர்களது வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட வெகுஜன எழிச்சியாக இருப்பதற்கு செய்யப்படும் நடவடிக்கை என்று விளங்கும்.


பிள்ளையான் குழுவுக்கு எதிராக-மாற்றுக் குழுக்களுக்கெதிராகப் புலிகள் எடுக்கும் நடவடிக்கை என்வென்று குழந்தைகளுக்கும் தெரியுமென்று பாசிச அரசியலுக்கு விளக்கம் கொடுக்கும் ரகு அதே மனதோடு மாற்றுச் செயற்பாடு "துரோகம்"என்கிறார்.இதை மக்கள்தான் சொல்லவேணஇடும் துரோகமென.நீங்கள் வணங்கும் புலித் தலைமை அல்ல.ஆக புலிகள் கொலைகளைச் செய்வதும் அதை நியாயப்படுத்தத்"துரோகி"என்பதும் இன்று மக்களிடத்தில் எவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடத்தை-மெளனத்தை உருவாக்கியுள்ளது!ஒரு சிறு குழந்தையே இந்த வகை அரசியலால் மெளனமாக்கப்பட்டு அதன் உளவியலை அச்சப்படுத்திய இந்தக் கேடுகெட்ட அரசியலை ரகு பெருமிதமாக இங்கே எடுத்து வைக்கும் உளவியலை எந்த அரசியலோடு இணைக்கமுடியும்?இது கிட்லர் காலத்துக் காயடிப்பு அரசியலோடு சம்பந்தப்பட்டது.


மாத்தையாவை அவோரோடு சேர்த்துக் கொல்லப்பட்ட போராளிகளை இன்றும் தொடரும் இதே வகை அழிப்பைப் பற்றிய புலிகளின் சுய விமர்சனம் எஙஇகே முன்வைக்கப்பட்டது?அப்படி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாத்தையாவையும் அவரோடு கொல்லப்பட்ட போராளிகளையும் மக்களேதான் தமது நலனிலிருந்து என்ன தீர்ப்பளிப்பதென்று தீர்மானித்திருப்பார்கள்.ஏனெனில் இதுவேதாம் மக்கள் போராட்ட அமைப்பின் இலக்கணம்.இன்று கருணாவின் பிளவுக்கு அதே பாணி"துரோகம்"என்பதை முன்வைக்கும் இதே புலிப்பாசிஸ்டுக்கள் கிழக்கில் கொன்றுகுவித்த போராளிகளை மக்கள் முன் நிறுத்தும் பண்போடு காரியமாற்ற முடியாத ஆயுதக்காடைத்தனம் உருவாகிய சூழல் எப்படியுருவாகியது?குறுங்குழுக்களாக அமைப்பு வெடிக்கும் ஒரு அரசியல் முகிழ்ப்புத் தடீரெனத் தோன்ற முடியாது.இது உட்கட்சிக்குள் தொடர்ந்து நிலையெடுத்துவரும்வரை அதை அறியாதளவுக்குபஇ பாசிஸ்டுக்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுக் கிடக்கிறார்கள்.


இதே தொடர் கதையில் வரும் ரகு-ரதன் பாத்திரங்கள்தான் இன்று குழந்தைகளுக்கே தெரியும் என்று புலிகளின் அராஜகத்தின் அத்துமீறிய மக்கள் விரோதக் கொலைகளைச் சொல்லி நம்மையும் அச்சப்படுத்துகிறார்கள்.


தம்பி ரகு பக்கம் பக்கமாக எழுதுவதல்ல மக்கள் அரசியல்-விவேகம்.மாறாக மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அவர்களை எஜமானர்களாகக்கொண்ட மக்கள் அரசியலை விளங்க முற்படுவதும் அதை நிலைப்படுத்தும் சூழலை இல்லாதாக்கிய இயக்கச் சர்வதிகாரத்தை தொடர்ந்து அம்பலப்படுதஇதுவதுதான் நியாயமான விவேகம்.இதன் தொடரில்தான் யுத்தத்தை நிறுத்து.மக்களைப் பேசவிடு என்கிறோம்.நீங்களோ குழந்தைகளுக்கே எங்கள் புலிகளின்"துரோக"த்துகான மரணத் தண்டனை என்று மக்கள் விரோதிகளாகவே அம்பலப்பட்டுத் தலை குனியும் அராஜவாதிகளாக நிற்கிறீர்கள்.


மரமண்ட



மரமண்டை on June 21, 2008 6:09 pm


//நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?//-ரதன


ரதன் புலிகள் மக்கள் பிரதிநிதிகள் என்பதல்ல இங்கே பிரச்சனை. பிரச்சனை கொலை அரசியல்- அராஜகம்- இயக்கச் சர்வதிகாரம்- அழிப்பு யுத்தம் பற்றியது. இதை மறுத்துவிட்டுப் புலிகளைப் புனிதராக்கும் உங்கள் புலிமனது. தமிழ்தேசிய மனதின் அறுவடையாக இங்கே மீளக் கேள்வி கேட்கிறது. நான் மக்கள் விரோதிகளைத்தான் எச்சரிக்கிறேன். மக்கள் சமுதாயத்தின் குழுமத்தில் நானும் அடக்கமென்பதால் அதே மக்களின் நலன் எனக்குள் பிரதியாகிறது. இங்கே அந்தப் பிரதி மக்களாகிய எமது நலனிலிருந்து ஒரு யுத்த ஜந்திரத்தையும் அதன் வழியாக வந்து சேர்ந்த கொடிய அடக்குமுறையையும் எதிர்த்து எச்சரிக்கை செய்கிறது. இந்த எச்சரிக்கை எம்மை அழிக்காதே. இது உங்கள் அழிவில் நிறுத்தும் இன்னொரு அமுக்தைத் தரும் என்பது.

புலிகள் தம்மைத்தாமே மக்களின் பிரதிநிதிகளாக்க எடுத்த அரசியல்-அழிப்பு நடவடிக்கைகளின் தொடர் வருகைகளில் எத்தனையே அப்பாவி மக்களை அழித்திட்டார்கள். அதை நியாயப்படுத்த எத்தனையோ கதையாடல்- துரோகி- தியாகம்- தேசியம்- ஈழம் என்றபடி. இத்தகைய வழி ரதன்-ரகு எல்லோரும் வந்து போவீர்கள் .ஆனால் அழிவது மக்கள்தான். போராட்டத்தால் செததுமடியும் ஒவ்வொரு போராளியும் இயக்கச் சதியையும் அவ்வியக்கத்தின் தலைமையின் அழிப்பு அரசியலையும் தேசத்துக்கான விடீவென்று நம்பவைக்கப்பட்டு யுத்ததுக்கு அனுப்பி கொல்லப்படுகிறார்கள். நீங்கள் இத்தகைய ஏமாற்று யுத்ததையும் அதன் இயக்கக் கட்டமைவையும் தேசத்தின்- மக்களின் அரசு என்கிறீர்கள் .இது புலிப் பிரச்சாரத்தின் ஒரு தொடர்தான்.

இந்த நிழல் அரசு மக்களின் பட்டிணிக்கு இதுவரை செய்ததென்ன? பசிகிடப்பவர்களை யுத்த்துக்கு அழைத்து அடியாட்களாக்கியதைத் தவிர வேறென்ன மக்கள் நல நடவடிக்கை செய்தார்கள்?


நீங்கள் புலியைக் காவித் திரியும் இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி அனைத்தையும் புலிவழி பார்க்கப் பழக்கப்பட்டதை இங்கே கொட்டி அம்பலப்பட்டு நிற்பதற்கு இன்னும் எழுதுவேன்.

மரமண்டை.