Samstag, 20. März 2010

பள்ளிப் பருவத்தின் ஓரக் கண்கொண்டு...

Oh Meine "Lady" Parvathi...!
Ich liebe Dich ueber alles-mehr weiss ich nicht:


Aus meinem Taenen spriessen
Viel bluehende Blumen hervor,
Und meine Seufzer werden
Ein Nachtigallenchor.


Und wenn du mich lieb hast,Kindchen,
Schenk ich dir die Blumen all,
Und vor deinem Fenster soll klingen
Das Lied der Nachtigall.


Es stehen unbeweglich
Die Sterne in der Hoeh,
Viel tausend Jahr,und schauen
Sich an mit Liebesweh,
Sie sprechen eine Sprache,
Die ist so reich,so schoen;
Doch keiner der Philologen
Kann diese Sprache verstehen.
Ich aber hab sie gelernet,
Und ich vergesse sie nicht;
Mir diente als Grammatik
Der Herzallerliebsten Gesicht.
".............."

-Heinrich HEINE.



அழியுந் தாறுவாயில்...


பார்த்திருந்தேன்,பார்வதியை
பள்ளிப் பருவத்தின் ஓரக் கண்கொண்டு
பாழும் கிழட்டுடலின் கீறிய விழித்திரையில்
வினைகொள் நெஞ்சாய் நெடிய பொழுது
நெருஞ்சியாய் குத்த...

மகளே,
நீ,
திசை மறுத்துக் காய்கின்ற உள்ளத்தில்
உன்னதமான சங்கீதமாய் உனது முகம் வரைய
நான் தொலைந்தேன்!

தேடிய திசையில்
மரித்துக் கிடக்கும் என் ஆணவம்
தெரிந்தே இழக்கப்பட்ட கனவோடு
சேர்ந்தே நடக்கும் எனது மனமுமாக...

என்ன கோலம்?

இசைத்திருக்கும்
உனது கன்னம்,
ஆயிரம் வெள்ளிகளோடு
மின்னும் உனது பற்களின் நடுவே முறிபடும் ஒலி
அநாதியாய் எனது செவியின் ஓரத்தில் அலைய

மெல்லவும் முடியாத
துப்பவும் முடியாத பித்த மோனத்தோடு
சலனத்தின் சுவரில்
கீறிப் பார்க்கும் எனது கோலத்தில்
நீ,வானத்துத் தேவதை...

ஒரு விடியலில்
உனை மறந்திடலாம்
உன் குரலது கணீரொலியை மறப்பேனா
இல்லை என்னை இழப்பேனா?

வட்டமிடும் வானத்து அதிசயமே!
வண்ணத்துப் பூச்சிக்கு நீ என்ன தோழியா?

வசந்தருதுவும் வண்ணமலரும்
கோலமிட்ட எனது மனதில் வாடிக் கிடக்க
வருவாயோ எனது இருண்ட அறையுள் கீதமிசைத்து?

வானம் பொழியும் விரிந்த வெளியுள்
உளிகொண்டு உலகொன்றைச் செதுக்கி
அதனில்
உனைப் பொறித்து
ஊர்கோலஞ் செல்ல எனக்கெனப் பாடு.

ப.வி.ஸ்ரீரங்கன்
20.03.2010