Freitag, 18. Dezember 2009

சாதல் வைபோகமே!...

தோல்வியின் விளிம்பில் நிற்பினும் தோழி உன்றென் முகமொடு மொட்டவிழ்க்கும் என் இதழொடு ஊசாலாடும் உயிர்.
இளைய இதயம் உடைந்தேகுமாயின் நட்சத்திரங்களது புன் நகையொடு நீ பேசிடுவாய்,புன் நகைகொண்டு என்னையும் கொன்றிடுவாய் கூடவே அன்று.
தூரவெளி துவக்கும் நீலத்துள் நிலவும் உன் இருள் சுமக்கும் கூந்தலில், நான் கனவுக்காகத் தரித்து வைத்த மல்லிகை மொட்டவிழ்த்போது என் தோளினுள் தொங்கிய கொலைக்கான இரும்புக்கு ஏப்பம் வந்ததென மேனியொடுக்கி நீ, மௌனித்தாய்.
 
நீ,ஏழை என்னைப் போல்,எங்கள் கனவுகளுக்கு அன்பு செலுத்தப் பஞ்சமில்லையெனினும் முழுமையான ஆன்ம விருப்பு அகப்பட காலம் நீண்டபடி இருந்ததே!
 
காதல்!
Wenn junge Herzen brechen,
So lachen drob die Sterne,
Sie lachen und sie sprechen
Herab aus der blauen Ferne:
"Die armen Menschen lieben
Sich zwar mit vollen Seelen,
Und muessen sich doch betrueben,
Und gar zu Tode quaelen.
Wir haben nie empfunden
Die Liebe,die so verderblich;
Den armen Menschen drunten;
Drum sind wir auch unsterblich".
-Heinrich HEINE in Ramsgate.
வான் எட்டும் தொலைவில், வாழ்வு தூரச் செல்லும்.
 
ஆதராமற்ற ஒன்றில், அவிழ்ந்து போகும் ஆசைகள் முறித்தெறிந்தவுணர்வில் வரண்டது இதயெமென்றால்-வாழ்வென்பதன் தொடரில் சாவுக்கான தேதி தேடுதல் குடும்பம்.என்னைக் கொல்வதற்கு நானே உன்னை வருத்தியபோது ஊழென உருண்டாய்...
 
தேசம் தொலைத்தவன்.
 
தோன்றியதன் திசையுள் உன்னைத் தொலைத்தேனா?

 
நாங்கள் காதலைப் பரிமாறியதில்லை-அன்பைப் பருகிக் கொண்டதென்று அப்பப்ப ஆசையைக் கட்டி மோதலைக் கொண்டோம்.எத்தனை இரவுகளுக்கு ஏங்கிக் கிடந்த கனவுகள் எப்பவும் விடியலைத் தரிசித்திருக்கவில்லை.எனக்கும் மரணமில்லையென நீ அவிழ்த்த பொய்யில், நான் தொலைத்தது என் வாழ்வின் திசையை.
 
தேடுகிறேன்.
 
திசை புரியாத வழிமீது உனைச் சுமந்து வரும் காற்றில், என்னைத் தொலைக்கும்போது நான் மரணிப்பேன்!
 
ஆம்!நாங்கள் வாழ்ந்திருந்தோம் விழிமீது ஒருவரைச் சுமந்து.
 
எப்போதெல்லாம் கனவுகளுக்குப் பஞ்சமோ, அப்போதெல்லாம் சுமையிறக்கி ஒருவரையொருவர் புணர்வோம்.
 
அற்புதம்.
 
அகமொடு கனவுடையும் ஒவ்வொரு நாளியும், காதலெனும் வாழ்வு கனிந்திருந்து இதயமொடு அன்புரைக்கும்.கேட்டபோது தருவதற்கு அது செழுமையொடு தேனொழுகும் பருவத்தைச் சிதைக்கும்.
 
காலத்தில் வாழ்வதற்கு கருவறுக்கும் சொந்தம்.
 
அப்புக்கு ஆச்சி காதலொடு சேர்ந்திருந்தாளாம்.அம்மாவுக்கு அப்பா காதலுக்கு மதிலமைக்கக் கைப்பிடித்தாராம்.
 
எப்போதெல்லாம் இளமையைப் புரிந்தோம்?
 
இளமை குறித்துச் சொல்லும் போது, சுகமொடு வானெட்டும் ஆசைகொண்டு மெய்சிலிர்க்கும்.எத்தனையோ இரவுகளில் தொலைந்திருந்த உலகம் மாயமொடு மண் நினைக்க வரண்டது வானம்.தொலைந்தது இளமை அகதியெனக் கோலந் தாங்கி.

 
வாசமுதிரும் வசந்தம் உடம்பொடு உருகும் இளமை.
 
எல்லாந் திருடிய கனவு விடியமறுத்த தேசமாய் வேதனையை விட்டுச் சென்றிருக்கு.
 
வசந்த ருதுவுக்கு வண்ணமில்லை-மலரும் இல்லை.வாடிய பூவுக்கு வாழ்கைதாம் உண்டோ-இல்லையென்பவர் எவரிங்கே?மண்ணொடு மோதிக்கொள்ளுமொரு கணத்தில் வாழ்வொன்றுண்டதற்கு.
 
வாய்மொழிக்கு ஒலியுடைவு பிரசவமில்லையா?
 
வான்போற்றும் உழவனுக்கு மழையொடு காதலெனக் கொண்டவர்க்கு, சோறுதாம் அவன் சுகமெனச் சொல்லி உண்பதுவே காதலாகிச் கசிந்துருகிச் சேலைகொண்டொருத்திச் சுகம் விசாரிக்க...
 
காதலெனும் திசையில் கண்வருத்தி நீரிறைத்து, நெஞ்சு வலிக்க முகங்கொள்வாள் முதற்காதல் முன்னுரையாம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
18.12.09

Samstag, 12. Dezember 2009

இலங்கையில் தேசியவிடுதலைப்போராட்டம்...

புலிக்கு உளவு பார்த்தவர்கள்,
வியூகமென வடிவமெடுக்க...
 
 
வியூகம் என்பதை இவர்கள் ஒவ்வொரு காலத்திலும் அதிகாரங்களுக்கிசைவாகவே நகர்த்தியுள்ளனர்.அன்றைய உயிர்ப்பு,பின்னாளைய தமிழீம் சஞ்சிகையென... இவர்களது பல்சதி அரசியல் கடந்தகாலமாக இருக்கிறது.இதன் தொடரில், இப்போது வியூகம்.
 
 
கடந்த காலத்தை தாம் எந்த வகையில் அணுகியிருந்தனர் என்பதும்,அதன்வழி இப்போதைய காலத்தை எதன்பொருட்டு அணுகுகின்றனர் என்றும் அவர்களது இலக்கின்வழி தெரிவிப்பதல்ல இன்றைய நிலை.இப்போது,இவர்களது கடந்தகால அரசியலை சுயவிமர்சனமூடாக முன்வைக்க வேண்டியவர்கள் இவர்கள்.
 
குறிப்பாக, இதுள் தலைகாட்டும் ஜான் மாஸ்டர் தனது கடந்த கால அரசியலையும், தனது தார்மீக அரசியற் கடமைகளின் நிமித்தம் உண்மையோடு பேசியாக வேண்டும்.இவருக்கும் தீப்பொறிக் குழுவுக்குமான முரண்பாடுகள், இறுதியில் எங்ஙனம் இவரைப் புலி உளவாளியாக்கி மேற்குலகத்திலுள்ள ஊடகங்களை வேவு பார்த்ததென, இவர் சொல்லியாக வேண்டும்!
 
 
ஒவ்வொரு காலக்கட்டத்திலும்"புரட்சி,நேர்மை-மக்கள் நலன்-தேசியச் சக்திகள்"எனச் சொல்லியபடி, அதிகாரத்துக்கு உடந்தையாக இருப்பது தமிழ் வியூகம் அல்ல.இது,கபடம்!இதன்வழி, இன்றைய முள்ளி வாய்க்கல்வரை இவர்கள் வெட்டிய சவக்குழி நமக்கு நல்ல பாடம்.
 
 
எனினும்,மே 18 உம் இவர்கள்வழி மீள சில அடையாளங்களைக் காவி வரலாம்.
 
 
ஆனால், விடுதலையை அல்ல.
 
 
 


 
 
இது, குறித்து நாம் மிக நேர்த்தியாக உண்மைகளைக் கண்டடைய வேண்டும்.
 
 
இந்தவுண்மைக்காகவே இவர்களை மக்கள் முன் நிறுத்தியாக வேண்டும்!
 
 
மூடிய அரசியல்-காட்டில் பதுங்கிப் போராடி விடுதலை பெறுவதென்பது-புரட்சி செய்வதென்பது, இன்றைய நவீன தகவல் தொழில் நுட்பக் காலத்தில் நடவாத காரியம்.இங்கே பரந்துபட்ட மக்களது வலிமையோடு நேருக்கு நேரான அரசியலே அனைத்தையும் முடித்து வைக்கும்.இதைக்கடந்த காலத்தில்,குறிப்பாக 70களில் இத்தாலியில் களம்பல கண்ட இத்தாலிய நவ மார்க்சிஸ்ட் அந்தோனியோ நேக்றி(Antonio Negri) உரைத்து முடிக்கிறார்.
 
 
இந்த நிலைதாம் இன்றைய உலகம்.இதுள்,வியூகமென வடிவமெடுக்கும் கடந்தகால புலி உளவாளிகள் இப்போது எதை எம் முன் முன் வைக்கின்றனர்?
 
 
மீளவும்,அதே பாணி குறுந்தேசிய-தேசிய அரசியல்.
 
 
இது, முறிந்துபோன ஒரு இயக்கத்தின்வழி மக்கள் விரோத அரசியலோடு முடித்து வைக்கப்பட்டபின்பும் உலகை இலங்கைக்குள் முடக்கிவிட்டு, வியூகம் அமைப்பது மீளவும் கொலைகளின்வழி சிலர் தலைவர்கள் ஆகலாம்-செல்வந்தர்கள் ஆகலாம்.ஆனால்,மக்கள் விடுதலைபெற வேறுவகைகளில் நாம் முயன்றாக வேண்டும்!
 
 
அதுள்,இவர்கள் தமது கடந்தகால அரசியல் நடாத்தையை சுய விமர்சனத்துக்கூடாக முன்வைத்து, மக்களிடம் உண்மை பேசவேண்டும்.அதுவரையும், இவர்கள் மக்கள் விரோதிகள்-பரந்துமட்ட மக்கள் நலத்துக்குக்குக் குறுக்கே நிற்பவர்கள்!இந்த முத்திரை முன் தீர்ப்பல்ல-கடந்த கால இவர்களது அரசியல் பாத்திரத்தின்வழி நாம் கண்ட உண்மை-முடிவு!
 
 



 
 
 
இந்த வியூகம் அமைப்பவர்களின்வழி மீளக் கருக்கொள்ளும் மூடிய அரசியலுக்கு மேலும் முக்காடுபோட எவர் அனுமதிக்கிறார்களோ அவர்களே நாளைய கொலைகளுக்கு உடந்தையானர்வர்கள்.இதை இப்போதே கூறி வைக்கின்றேன்!
 
 
இன்றைக்கு புரட்சி-விடுதலை,சுயநிர்ணய விடுதலை என்பதெல்லாம் ஏதோ நான்கு பேர் சேர்ந்து, இயக்கம் அமைத்து,ஆள் திரட்டி,போரிடுவதென்பது முடிந்த கதை.
 
 
இலங்கையில் தேசியவிடுதலைப்போராட்டம் என்பது முடிந்த கதை.
 
 
இலங்கைக்குள் போராட்டம் என்பதும் அப்படியே.
 
 
இதுவரை, மக்களை முட்டாளாக்கிய தேசியம்-குறுந்தேசிய வாதிகளுடாகப் பலியெடுத்து வந்ததற்கு இவர்களும் உடந்தையானவர்கள்.இவர்கள் தமது சதி அரசியலை எதைக்கொண்டும் மூடிவிட முடியாது.இது பகிரங்கமாகப் பலாரால் உணரப்பட்டது.
 
 
வியூகம் அமைப்பது இவர்களது-குறிப்பாக ஜான்(காந்தன்) மாஸ்டர்-தெரிவில் விடுதலைக்கானதல்ல.மாறாகச் சதி செய்து அதிகாரத்துக்கு முட்டுக்கொடுத்துத் தமது இலாபங்களை அறுவடை செய்வதற்கு.இதற்கு,புதியதோர் உலகம் நாவல் ஆசிரியர் கோவிந்தனுக்குப் பின்பான தீப்பொறி நல்ல எடுத்துக்காட்டு.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
12.12.2009

Freitag, 4. Dezember 2009

இனியொரு,தமிழரங்கம் விவாதத்தில் நாம்...

அன்பு வாசகர்களே,வணக்கம்!,

இனியொரு தளத்தில் நடைபெறும் விவாதம்,அசோக்-இரயாகரன் ஆகிய இருவருக்குமிடையிலானதாக எவரும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.
அது,சமூகஞ்சார்ந்து-மக்கள் நலன்சார்ந்து இயங்கும் அனைவர்மீதுமான விவாதாமாகவே பார்க்கப்பட்டாகவேண்டும்.

இதுவரை காலமாக இயக்கவாத மாயைக்குள் தம்மைத் திணித்திருந்தவர்கள் மக்களைக் கொலைகளின்வழி அடக்கிய தமது வரலாற்று நியாயத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.

இதுள்,மக்களது நலன்களைத் தூக்கிப்பிடித்து, இதுவரை இத்தகைய மனிதவிரோத அரசியலை அம்பலப்படுத்தியவர்கள் மேலும் மௌனித்திருப்பது,மக்கள் விரோத அரசிலை மேலும் வலுப்படுத்தும்.எனவே,இது குறித்துத் தமிழரங்கத்தில் விவாதிக்கும் தோழர் இராயகரனும்,இனியொருவில் ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்னூட்ட அரசியல் நடாத்தும் அஷோக்கும் மக்களது அரசியல்மீது தமது பார்வைகளையும்,கடந்தகால தமது அரசியல் நடாத்தையும் மறு வாசிப்புச் செய்கின்றனர்.
 
இதுள், சந்தடி சாக்கில் திரு.நாவலன் புகுந்து ,சிவசேகரத்தின் பின்னூட்டத்தோடு"இனியொருவுக்" நற்சான்றிதழ் தர முனையும் அரசியலை நாம் கேள்விக்குட்படுத்துவோம்.
 
இன்றைய இவ்வரசியல் விவாதம் குறித்து நாம் விரிவாக விளங்கிக்கொள்ள, நிர்மாணத்தில் தொடர்ந்து எனது அபிப்பிராயங்களை எழுதுவேன்.அதன் ஆரம்பமாக இது தொடர்கிறது.
 
உண்மைகளைத் தேடி விவாதிப்போம்.

மக்களை ஒட்டக் கருவறுக்கும் அனைத்து அரசியல் நாடகத்தையும், நாம் கேள்விக்குட்படுத்துவோம்.

வாருங்கள்,

அவதானியுங்கள்.
 
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
04.12.2009
 
 
  பிரபலங்களின் அவசியம் கண்ட நாவலன்
 
 
நாவலன்,உங்கள் பின்னூட்டம் குறித்துக் கருத்துப்பகிர்வது அவசியமென நினைக்கிறேன்.
 
அப்போதுதாம் நம்மெல்லோராலும் கொல்லப்பட்ட(படும்) மக்களது ஆன்மா சாந்தியடையும்.
 
சிவசேகரம் எழுதியதாகச் சொல்லப்படும் பின்னூட்டத்தை, புதிய ஜனநாயக்கட்சி அனுதாபி-உறுப்பினர்,தினக்குரல்"மறுபக்க"பத்தி எழுத்தாளர் சி.சிவசேகரம்தாம் எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்கிறேன்.அப்படித்தாம் நீங்களும் சொல்லி "நியாயம்" பேசுகிறீர்கள்.
 
நாவலன் சிவசேகரத்தின் முத்திரை (மார்க்) அரசியல் இருப்பைக்கொண்டு,அசோக்கும்,இனியொருவும் சமூகஞ்சார்ந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஊடகம் எனச் சொல்வதற்கு சிவ சேகரத்தின்"தீர்ப்பு-வேண்டுதல்"துணைக்கு எடுத்துக்கொள்கிறார்.
 
நாவலன் கருத்துப்படி,இனியொருவைச் சமூகஞ்சார்ந்த தத்துவார்த்த விசாரணைக்காக ஆக்குவதற்கு நமக்குச் சிவசேகரம் தேவை என்றாகிறது.இதனால்,சிவசேகரம் அவர்கள் பெரும் பேறடைய முடியுமென எண்ணிக்கொள்வோம்.
 
நல்லது.
 
இதுவரை, புலிகள் பாசிசமாக வளர்ந்து உலகு பூராய்த் தமிழ்ச் சமுதாயத்தின் மாற்றுக்குரல்வளைகளை முறித்தபோது,சிவசேகரமும்,நீங்களும் கடந்த பத்தாண்டுகளாக என்ன செய்தீர்களென இப்போது கேட்பதைவிட,உங்களது முயற்சிகள் குறித்துத் தேடலை ஆரம்பிக்கிறேன்.அதிலிருந்து நீங்கள் புலிகள் அழிவுக்குப்பின் கொண்டுள்ள"சமூகவூக்கத்தை"ஆய்வுக்குட்படுத்துவோம்,பிறதொரு சந்தர்ப்பத்தில்.இங்கே-இனியொருவில் அல்ல!
 
இது அவசியமானது.
 
தமிழ்ச்சமுதாயம் மிக மோசமான பாசிச ஒடுக்குமுறைக்குள் கடந்த பத்தாண்டுகளுக்குமேலாகக் கிடந்து அவலப்பட்டபோது, அதையெங்ஙனம் எதிர்கொண்டார்கள் என்பதை உங்கள் இன்றைய குரல்களிலிருந்து இனம் காணுவது அவசியந்தாம்.அங்கே,உங்களது பாத்திரம் அறிமுகமாகிறது...
 
 
இதன்பொருட்டு,ஒரு அவசரமான நோக்கிலிருந்தபடி(...) நாவலன் தங்கள் பின்னூட்டத்திலிருந்து சில நோக்கங்களை இங்ஙனம் பார்ப்பதற்கு நாமும் முனையலாம்:
 
 
1):அசோக்கினது"இனியொரு"சமூகஞ்சார்ந்த தத்துவார்த்த விசாரணைக்காகப் பயன்படுத்துவதை வலியுறுத்த நாவலன் அவசியமாகிறது.
 
 
2):சிவசேகரம்தம் இரண்டுவரிக் கருத்தை மொட்டையாக"ரயா-அசோக்"தராசில் நிறுத்திச் சமூகத்தைப் பொதுமைப்படுத்துவது.
 
 
3):சிவசேகரம் கூறுவதால்"இனியொருவுக்கு"சமூக அக்கறைசார்ந்த போராட்டமும்,திசைவழியும் இருப்பதாக மலிவு விளம்பரம் தேடுவதும் உங்கள் ஆர்வமாகிவருவது.
 
 
4):தமிழ்ச் சமுக எண்ணவோட்டத்துக்குரியதான அதே பாணியில்,ரயாகரன் குறித்த முன் தீர்ப்பைச் செய்வதில் (ஆக சமூக அக்க்றையுடனான அசோக்கின் கட்டுரைக்கு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ரயாகரன் போன்ற ஒருவரின் பதில் எவ்வாறு அமையும் என்பதை இனியொரு வாசகர்கள் புரிந்து கொண்டு...)உங்கள் "ஆய்வுப் புத்தியை" மீளவும் சிவசேகரத்தின் குரலோடு பொருத்துவது.
 
 
 
5):இதுவரையான இராயவினது கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்காது இருந்துவிட்டு,சிவசேகரத்தின் துணையுடன் வாசகர்களை அணுகுவது.
 
 
இந்த "இனியொரு" ஊடகப் பண்பின் இருப்புமீது எழுப்பப்படும் சமூக அக்கறை சார்ந்த கேள்விகளை, நாம் சிவசேகரம் தரும் "நற்சான்றிதழ்"குரல்கொண்டு மறுத்தொதிக்கிவிட்டுவிடவேண்டுமெனச் செய்யும் மலிவு அரசியல் இருக்கே இது நாணையமுடையதாக இருக்குமாவெனச் சிந்தியுங்கள்.
 
 
இப்போது நம் "எல்லோருக்குமே"இருப்பு அவசியமாகப்படும்போது, அதை முன்நிறுத்தப் பிரபலங்கள் தேவைப்படுகிறது.நடாத்துவோம் நண்பர்களே-நடாத்துவோம்.
 
 
நேர்மையும்,நாணயமும் அதுகொண்ட மக்கள் நலன் நோக்கங்களும், நிச்சியம் எங்கள் எல்லோரிடமிருந்தும் மக்களைக் காக்கும்.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
 
04.11.2009
 
 
 
http://inioru.com/?p=7948

 
 
//Sivasegaram

Posted on 12/04/2009 at 5:33 am

Please study the issues with care before shooting off your hip.The article here are in response to slanderous accusations by one who claims to be holier than holy.

The response is carefully written and limited to matters of political and public interest.Do not call it private mud slinging.

It has been Rayakaran who had done that for long and got away with it because many of his victims do not speak the same kind of language.That kind of abuse should stop in the Tamil political e-space (I mean the serious websites and not the trivial ones).

I think that the issues are more or less settled and it is up to Rayakaran to answer the charges, concerning his political stand and falsification of information, rather than continue to indulge in further abusive writing.It will be best for all of us if we treat the public domain with a greater sense of responsibility.

I very much appreciate the restraint shown by Ashok Yogan, and think that the best way of dealing with further abuse is to ignore it.//
 

//நாவலன்
Posted on 12/04/2009 at 7:18 am

அசோக் யோகன் எழுதிய கட்டுரை என்பது ரயாகரன் மீதான தாக்குதல் அல்ல. சமூக அக்கறையோடு எழுதப்பட்ட நேர்மையான விமர்சனம்.மறுபுறத்தில் தனிமனித தாக்குதல் என்பது ரயாகரனின் தொழில். சமூகம் குறித்தோ, அதன் வளர்ச்சி, வர்க்க நிலைகள், சர்வதேச உறவுகள் என்று எம்முன்னால் நீண்டு கிடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, யார் யார் சமூகத்தைப்பற்றிப் பேசுகிறார்களோ அத்தனை பேரையும் சேறடிப்பது ரயாகரனின் தொழில்.

இத்தனை வருடங்களின் ஏதாவது தத்துவார்த்தப் பிரச்சனை குறித்து அவர் விவாதங்களை முவைத்திருக்கிறாரா? இல்லை. எல்லாமே தனிமனிதத் தாக்குதல்கள் தான். யார் எப்போது எந்தப்பக்கம் என்பது மட்டும்தான் இவரின் ஆதங்கம்.சமூக அக்கறையும் மக்கள் பற்றும் கொண்ட தோழர் சிவசேகரம், தோழர் அசோக் யோகன் போன்ற பலரை இவர் தான் நினைப்பது சரி என்று எண்ணியவாறே சல்லடை போட்டிருக்கிறார்.

குறிப்பாக புளட் அமைப்பின் கொலைகளுக்கு எதிராகப் போராடிய மூன்று குழுக்களில் அசோக் சார்ந்த தளக் குழு மிகப்பிரதானமானது. அது ரயாகரனின் இணைபுக்களே தெளிவாக்குகின்றன. இதற்கெல்லாம் பதில் எழுதினால் அவர் இன்னொரு பொய்யைக் கட்டவிழ்த்துவிடுவார்.இது தவிர ரயாகரன் தன்னை நியாயப்படுத்த வரலாற்றைப் புரட்டி நிகழ்த்தும் நாடகங்கள், குறிப்பாக விஜிதரன் போராட்டம் போன்றவை அதன் அரசியல் பின்னணியிலிருந்து அதில் ஈடுபட்ட மாணவர் தலைவர்களே ஆராய ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

எத்தனை இணையத்தளங்கள் எத்தனை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன? இவற்றுள் தாக்குதலை நிரந்தரத் தொழிலாக வரித்துக்கொண்டவர் தான் ரயா.
ஆக சமூக அக்க்றையுடனான அசோக்கின் கட்டுரைக்கு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ரயாகரன் போன்ற ஒருவரின் பதில் எவ்வாறு அமையும் என்பதை இனியொரு வாசகர்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தோழர் சிவசேகரம் கூறுவது போல் இனியொருவை சமூகம குறித்த தத்துவார்த்த விசாரணைக்குரிய தளமாக வளர்த்தெடுப்போம்.//