Mittwoch, 26. September 2007

விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!


விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!



தொடரும் குண்டுத்தாக்குதல்கள்"..................."வன்னியை நோக்கித் தாக்தல்கள்!
கொலைகள்.இராணுவத் தளபதிகள்-போராளித் தளபதிகள் என்றெல்லா ஆயுததாரிகளும் அற்ப வயதில் அழிந்து போவதும்,அழிவார்களின் வழிகாட்டல்களில் ஆயிரமாயிரம் மக்கள் அழிந்து போவதும் ஈழ இலங்கைக் கோதாவில்,தொடர் கதையாய்...


போராளிக்குத் தாம் செத்துத் தேசம் விடுதலையாகுமென்ற கனவு,இராணவத்தானின் வான் தாக்குதலில் தமது தலையில் குண்டு விழுமென்ற பதபதைப்பு மக்களுக்கு!



துப்பாக்கிகளுக்கு உறக்கமில்லை,
தோட்டாக்கள் வெடிக்கின்றன-குண்டுகள் சிதறுகின்றன.
எனினும், தேசத்தில் சமாதானம் முன்னெடுக்கப்படுகிறது,
பேச்சு வார்த்தை தொடர்கிறது...



தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம், ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கைக் குழந்தைகள்(...) ஒருபுறமும் அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...இன்றைய நிலையில் பதவி வேட்கைக்காகப் பலியாகிப்போன குழுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரிகளாக்கப்பட்டபின், எல்லாத்தையும் வெறுத்துத் தமது நியாயத் தன்மைக்கு(...) வீரியம் சேர்ப்பதில் உள்ள அக்கறையால் ஈழதேசத்தின் நலனைப் போட்டுடைக்கிறார்கள்.


கூலிக் குழுக்களின் இன்றைய அட்டகாசமான பரப்புரைகள் மக்களைக் குழப்பியெடுப்பினும் மக்கள் தமது கடந்தகால அனுபவத்திலிருந்து இப்பாதகமான அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொள்கிறார்கள்.



என்றபோதும்,இலங்கையின் அதீத யுத்த முனைப்புப் புலிகளைச் சொல்லி மக்களை வேட்டையாடுவதற்காகக் குண்டுகளை வானிலிருந்து கொட்டுகிறது.அதையும் நம்ம கூலிக் குழுக்குள் புலிகளுக்கெதிரானதாகச் சொல்லி நியாயப்படுத்தும் நிலை இன்று...


கூடவே அரச தலைவர்கள்-அரச தூதர்கள் அமெரிக்காவுக்கு-ஐக்கிய நாடுகள் சபைக்கு...வெளி நாடுகளுக்குப் போய் கை குலக்கிச் சமாதானம் வேண்டி வரப் பிளேன் ஏறிப் பறக்கிறார்கள்.



இதற்குள் குண்டுகள் கோட்டைகளைப் பிடித்துக் கொடிகளைப் பறக்க விடும்போது
பிண நாற்றமடிக்கும் காற்றில் அவை பறக்கலாம்...


தொடர்ந்தும் கொடியிறங்கும்...
குண்டுகள் வெடிக்கும்...
மக்கள் எங்கோவொரு மூலையில்
அரிசிப் பருக்கைக்குப் பதிலாகக் கெந்தகப் பருக்கைகளை அகற்றயபடி...


விடுதலை...


உடலிலிருந்து உயிருக்கு...

Sonntag, 16. September 2007

கனத்த மிதப்பொன்றில்...


மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்.

Sonntag, 9. September 2007

குரைக்காதே டோண்டு!

குரைக்காதே டோண்டு!

குடுமியற்ற டோண்டு-நீ
கும்மாளமிட்டுக் கூட்டிப் பெருக்கும்
கம்யூனிசம் ஒரு ஓரத்தில்
இருந்தே தொலையட்டும்

இப்படி வா,
இன்னும் கொஞ்சம் நெருங்கி
அதென்ன உனக்குமட்டுமே
எந்தப் பன்னாடைக்குமில்லா உயர் சாதித்தடிப்பு?

உனக்குத் தெரியும்-நீ
உண்டு கொழுக்கும் உணவுக்கு
உழைப்பவனல்ல நீ என்பது
இருந்த இடத்தில் உண்டி வளர்க்க
கிட்லரைக்கூட வரவேற்றவர்கள் உன் பரம்பரை

உனக்காகச் சொல்வதற்கு
ஒரு இந்தியா போதும்
உலக நடப்புப் பெரியதுமில்லை-நீ
கும்மியடிக்கும் கம்யூனிசம் குளறுபடியுமில்லை!

கூற்றுக்குக் கூற்று மனிதரைத் தாழ்த்தும் கபோதியே!
பார்ப்பானின் படிகளில் நசியும் ஈக்களைவிட
மானுடர் அழிவு உனக்கு உறைக்கவில்லையா?
சே...பொல்லாதவனே!
ஜாதிக்குள் ஜாதி வைத்தவன் வாரீசே!!

பொய்யுரைப்பதற்காகவே பொறந்தாயா?
இல்லைப் பொல்லாப்புச் சொல்வதற்காகப்
புடியுருண்டைச் சோற்றை மெல்வதற்குப்
பொறந்தாயா?

எந்தத் தரணத்திலும் நீ
எதிரியின் ரூபத்துள்
எடுத்து வைக்கும் பொல்லாத வார்த்தைகளோ
வாழ்வாருக்கு வாய்க்கரிசி

என்ன மனிதனப்பா நீ?
இந்தியாவின் இருட்டுப் பக்கத்துள்-உன்
வெந்துலர்ந்த இதயத்தைத் தேடிப் பார்க்கிறேன் அங்கேயுமில்லை
ஓ...! உனக்கு அது இருப்பதற்கான அறி குறியே இல்லை

நேற்றைய பொழுதொன்றில்-நீ
நெருப்பிட்டெரித்த நிணத்துக்கு நந்தன் என்றும்
சதிவலை பின்னிப் பிணைத்தெரித்த உயிருக்கு
உடன் கட்டை என்றும் பின்னியவன் நீ!

உனக்கா புரியாது கம்யூனிசத்தை கடைந்தெடுக்க?
கட்டியம் கூறு!
கவனமாகச் செல்லரித்துச் சென்று
கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதற்கு!!

அனல் வாதமிட்டும்
புனல் வாதமிட்டும்
ஒரு இனத்தின் வேரையே செல்லரித்தவன் பார்ப்பான்
அவன் விந்தின் வழியல்லவா நீ?

காலங் கடந்திடுவதற்குள்
கோவணம் கழற்றிக் கடமையைச் செய்
நாளை நலிந்தவருக்குச் சாஸ்த்திரமுரைக்க-உன்
பரம்பரை இருந்தாகவேண்டும்

நடுநிசிப் பொழுதொன்றில்
வேட்டையாடப்படும் மிருகங்களில் ஒன்று
உன் சாயலாகவும் இருக்கலாம்
எதற்கும் முந்திக்கொள் ராகவரே

கடுகளவும் பின் வாங்காதே!
கண்ணீரையாவது கடைவிரித்து
காவித் திரியும் குப்பைகளைக் காசாக்கத் தெரிந்தவன் நீ
கம்யூனிசம் பற்றிப் புலம்புவது புரியத் தக்கதே புண்ணாக்கு!!!

தாராவியிலும் மும்பாயிலும்-இன்னும்
முன்னூறு இந்தியப் பெரு நகரிலும்
பின்னைய பொழுதுகளில் கண்ணயரும்
இளம் இந்தியர்கள்
காரேறும் பொழுதுகளில் முண்டமாகும் தெருவோரம்
இதுவும் கம்யூனிசக் கோளாறாய் வாந்தியெடு

வற்றாத வடுவாய் நால் வர்ணமிருக்க
முப்பது கோடி இந்தியர்கள் இழி ஜாதியென்பாய்
இதுவும் கம்யூனிசக் கோளாறுதான்
இந்தியாவுக்கு இந்து அதர்மம் இப்படித்தான் சொல்லும்!

இந்த இலட்சணத்தில் நீயோ
கவடு கிழிப்பதில் காலத்தை ஓட்டியபடி
கம்யூனிசக் கோளாறுப் படிகம் சொல்ல
சீனத்தையும் மாவோவையும் கேட்டு
மடிப் பிச்சை எடுத்து...

மந்தைகளுக்குச் சொல்லிப் புரியாது
மொத்துவதற்கும் மனசு வருவதில்லை எமக்கு!
ஆண்டைகளுக்கு அடைகாப்பதில் உனக்குத்தான் எவ்வளவு சுகம்
அப்பப்பா அரவணைத்துன்னைக் கக்கத்தில் வைப்பார்-நீ
கம்யூனிசக் கோளாறைக் கோலமிட்டுச் சொல்
கோழி கூவுவதற்குள் கோடீஸ்வரனாவாய்!

கொப்பராணை நீ
கொல்லுவதற்காகவே
தொப்புள் கொடியறுத்துத் திரண்டெழுந்து
திண்ணையிற் குந்தியவன்

குரைக்காதே டோண்டு!
தெரு நாய்கள் உன்னைப் பதம் பார்த்தாலும்
நாய்களுக்கே நஞ்சேறும்
பாவம் நன்றியுள்ள நாய்கள்!!!

09.09.2007

Dienstag, 4. September 2007

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!


நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்


வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை


பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து


எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!


எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!


இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்


இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்


நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!


இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்


டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க


எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:


வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கிஇவாழ்க நீடூழி!!!

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்

வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை

பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து

எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!

எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!

இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்

இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்

நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!

இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க

எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:

வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கி,வாழ்க நீடூழி!!!