Dienstag, 29. Juni 2010

உண்மைகள் உரைக்கும் ஜனாதிபதி...

ஜேர்மனிய ஜனாதிபதி கோர்ஸ்ற் ஹோலர் தனது உரையாடலுக்காகப் பதவி துறந்தார்.அவருக்குப் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை. ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும்தொடர்ந்து போராடியபடி இருக்கிறார்கள். ரொறொன்டேவில் இடம் பெற்ற ஜீ-20 நாடுகளது பொருளாதார உச்சி மாநாட்டில் உதைப்பட்டவர்கள் பலர்.

இத்தகைய தேசங்கள் எதற்காக அந்நியத் தேசங்களில் தத்தமது இராணுவத்தை அனுப்பி,அவ்கானிஸ்த்தான்-ஈராக் போன்ற நாடுகளை வேட்டையிடுகின்றனவென்பதை ஜேர்மன் ஜனாதிபதி உரைக்கிறார்.இந்தவுண்மை பகிர்தலோடு அவர் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார்.விளைவு பதவியைத் துறுந்தார்.என்றபோதும்,இந் நூற்றாண்டின் உண்மை பேசிய ஜனாதிபதி இவராகத்தாம் இருக்கிறார்.

தேசங்கடந்த நிதிமூலதனமானது அரசுகளுக்கே அதிகாரத்தைச் செய்யும் வடிவமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும்,பூ ர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் உலகத்தைத் தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இந்தச் சர்வதிகாரத்துக்குள் முழுக்முழுக்க வர்த்தக நலன்கள் விரிந்துகிடக்கிறது.அதை ஜேர்மனிய ஜனாதிபதி தெளிவாகப் பகிரங்கப்படுத்தினார்.

இது வரவேற்கத்தக்கது.

அவ்கானை வேட்டையிடும் நேட்டோ கூட்டு இராணுவம் தினமும் அவ்கானை வேட்டையிடுவது எதன் காரணமெனப் புரிய இவரது பேட்டியை கேளுங்கள்...



இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால்,
ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியேபூ ர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இதுதாம் இன்றைய யதார்த்தம். இதன் விளைவில்தாம் ஒரு தேசத்தின் "முதற் குடிமகன்" பதவி விலகும் சூழல் உருவாகிறது.


ஜேர்மனிய ஜனாதிபதி இப்போது பதவியைத் துறந்துகொண்டாலும் அவரது நியாயவாதமானது யுத்தவெறிபிடித்த பெரு நிறுவனங்களுக்கானவொரு எதிர்ப்பு அரசியலை மக்களிடம் வலுவாகவே ஊன்றுகிறது.இது,வரவேற்கத்தக்க செயலே!


பெயரளவுக்குப் பேசப்படும் மேற்குலகத்தின்ஜனநாயகம் உண்மையில்அவர்களது பொருளாதார ஆதிக்கத்துள் நிலவுவதில்லை என்பதை உண்மையாகவுரைத்த ஜேர்மன் ஜனாதிபதிமீதான ஜேர்மன் ஊடகங்களது விமர்சனத்திலிருந்து காணக்கூடியதாக இருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பெரும் நிதி நிறுவனங்களேதாம் ஒரு தேசத்தையே கட்டுப்படுத்தும் அளவுக்குத் தன் ஆதிக்கத்தை நிறுவியுள்ளதென்பதை நாம் அறிவதற்கு ஜனாதிபதி கோலரது கருத்துக்கள் துணையாக இருக்கும்.

An economic system that only by bringing wealth and get themselves can, by wars and thus always the murder of hundreds and thousands of innocent calls can not be a just, humane and rational, meaningful system.
Capitalism is not acceptable. It is against human rights and permits, or calls for the assassination of other nations for the benefit of owners and allies. The humanism repugnant in the highest degree ...


ப.வி.ஸ்ரீரங்கன்

29.06.2010

Mittwoch, 9. Juni 2010

11 வயதுச் சிறுமி...

11 வயதுச் சிறுமி.

பிரியான்சி சோமனி.

இந்தியாவினது ஒவ்வொரு உயர்விலும் ஏனோ மகிழ்தல் தொடர்கிறது.நான்,என்னை-எனது பூர்வீகத்தை உணரும்போது இஃது,நிகழ்கிறது.
பேராசிரியர் கிசோர் முபபானி போன்ற மேதமைகளிடம் இந்தியாவினதும்-ஆசியாவினதும் எதிர்காலத்தைக் காணும்போது, இந்தச் சிறுமி ஜேர்மனிவரை வந்து இவ்வாண்டுக்கான கணிதச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளாள்.
object width="480" height="385">

வகுத்தல்,
கூட்டல்,கழித்தல்,பிரித்தல்,பெருக்கலென அவள் ஒரு கணினிக்கொப்பாகவும்,கல்குலேற்றருக்கு நிகராகவும் மனக்கணிப்பில் வெற்றியீட்டியுள்ளால்.அவளோடு, 50 வயதுப் பாட்டியுங்கூடப் போட்டியிட்டுத் தோற்றுப் போயிருக்கிறாள்.

இந்தியா!

அடுத்த இருபதாண்டுகளில்...
சீனாவும்,இந்தியாவும் மேற்குலகத்தில் காலனித்துவத்தை ஏற்படுத்துமெனப் பேராசிரியர் கிசோர் அடிக்கடி உரைக்கிறார்.அவரது கூற்று மெய்பிக்க வேண்டாம்.ஆனால்,இந்தியா-சீனா பொருளாதார ரீதியாக மேற்கைப் பின் தள்ளுமென நம்பலாம்.அதை இத்தகைய மாணவர்கள் இப்போது கட்டியங் கூறுகின்றனர்.


இந்திய-சீன மூளைகள் அடுத்த 50 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் பல புதுமைகளைச் செய்யப் போகின்றது.உற்பத்தியில் வீரியமடையும் இத் தேசங்களது இன்றைய துருப்புச் சீட்டே மூளைதாம்.இதை இத் தேசங்கள் இழக்குமாயின் குறிப்பிட்ட தேசங்கள் மீள அடிமையாகும்.அதைத் தடுப்பது இத்தகைய இளைஞர்களது கைகளிலேயேதாம் இருக்கிறது.
இந்தவுண்மையை பிரியான்சி சோமனி நிரூபிக்கின்றாள்!

அழகு.
இந்தியக் கண்டம் பொருள் வளர்ச்சி காண்பது அழகு.அந்தத் தேசத்து மக்கள் மேன்மையுறுதல் அதனிலும் அழகு!

ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.10