Montag, 2. Januar 2012

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

சமீபத்தில் இந்த >> Why this Kolaveri Di << ஆங்கில வார்த்தையூடாகப் பலதரப்பட்ட தொடுப்புகளை எங்கும் காணக் கூடியதாக இருந்தது.முக நூல்வழியாக இந்தத் தொடுப்புகளைக் கண்ணுற்றாலும்,அதைத் தேடிச் செல்ல மனம்வரவில்லை.

இளையவர்கள் ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ பேசிக்கொள்வதாக இருந்துவிட்டேன்.ஆனால்,தமிழ்ச் சினிமாவில்இப்படியொரு பாட்டை தனூஸ் பாடுவதுபோல அமைத்திருப்பதென்றும்,மிகவும் மோசமாகத் தமிழைக் கொலை செய்து பாடல் கட்டப்பட்டிருப்பதென்பதும்,அப்பாடலானது ஒரு மில்லயன் தடவைகளுக்குமேல் கேட்கப் பட்டிருப்பதையும் இன்றுதாம் கண்ணுற்றேன்.

ஏலவே,ரகுமானின் வரவோடு,தமிழ்ப் பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பும்,அதுசார்ந்து கிளர்ச்சி வெறியூட்டும் இரைச்சல் வகைப்பட்ட ஒலியும் சினிமாவில் புதியதொரு செவிவழி நுகர்வு இசையை உருவாக்கியது.

மெல்லிசைச் சாரலில், நாட்டுப்புறத் தேமாங்கு பாடிய இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து "கொலைப்படாத" தமிழ் வார்த்தைகள் அதிகமாக ரகுமானால் கொல்லப்பட்டு வெறும் இரைச்சலாக செவிகளில் பட்டுத்தெறித்தன- 1990 களில் தமிழின் நிலை இதுவாக உருவாகியபோது,இன்று அதன் பரிணாமம் கொலைவெறிப் பாடலாக நம்மைத் தொடர்ந்து தாக்கி நமது மொழியைக் கொன்றுவிடும் அளவுக்கு வளர்ந்து விருட்ச மாகியுள்ளது!.இது கவனத்துக்குரியது.



கொலைவெறியோடு, புகுந்து விளையாடிய ரகுமான் காலத்தில் இசைப் புயலாவும் போய், நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றியபோது,அதை முன்னிலைப்படுத்திய சொனி நிறுவனம், அவரை ஓஸ்க்கார் விருதுபெற வைத்துச் சந்தையில் நிரந்தரமானவொரு நுகர்வுப் பொருளாக ரகுமானை மாற்றி வைத்திருக்கும் இன்றைய பொழுதில்தாம், இந்தக் கொலை வெறிப் பாடல்களெல்லாம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கவேண்டும்.

இந்தத் திசையில், மக்களது கலையில் அதிகமான பல்வகை உணர்வுகளைத் தகவமைக்கும் நுண்கலை வடிவமானது நிரந்தரமாகவே,மொழியின் வார்த்தைகளைக் கொய்தெறியும் இரைச்சல் ஒலியாக எழுந்து,அதுவே பிரபலமான இசைப் பாணியானது.

இதன் உச்சம் இப்போது தனுஸ்கூட்டணியின் தலைமையில் கொலைவெறிப்பாடல்களாக வந்திருக்கிறது?.

இதை வார்த்தைகொண்டு,கவிஞர்கள் எதிர்த்திருப்பதை நேற்று வாசித்தேன்.தமிழில் மிக அழுத்தமாகத் எழுதத் தெரிந்தவர் கவிஞன் காசி ஆனந்தன்.

அவர்,இத்தகைய பாணியையும்,கவிதை-பாடல் எழுதும் போக்கையும் கண்டித்திருக்கிறார்.அதையும் மீறி ,மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாடல் வழியாகவே-அவர்களது இசைப்பாணியிலேயே இந்தப் பாடல் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.

இது,எடுத்துப்போடும் வார்த்தைகள்-கேள்விகள் தார்மீக அடிப்படையில் ஒரு இனத்தின் மொழிமீதான எதிர்கால இருப்புக் குறித்த பார்வையில், அதிகமாக வரவேற்கத் தக்க நிலைப்பாடுகளை அது முன் வைக்கிறது.இரண்டையும் செய்திருப்பவர்கள் இளைஞர்கள் என்பதே இதன் கவனத்துக்கான முக்கிய புள்ளி.

ஒரு அணி : நிதிவலுவுள்ள தமிழ்நாட்டுத் தமிங்கிலீஸ் நடுத்தரவர்கத்துக் கோடம்பாகத்து இளைஞர்கூட்டம்,

மற்றய அணி : நிதிவலுவற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் குழாம்,

இதுள்,உலக நடப்பிலுள்ள நுகர்வுச் சந்தையில் பல கோடிகளைக் குவித்துள்ள பாரிய கெடுதி விளைவிக்கக்கூடிய தமிழ் நாட்டுச் சினிமாக் கூட்டத்தின் அதீத வலுவை,எந்தச் சந்தையோ அல்லது நிதிவலுவோ அற்ற யாழ் இளைஞர்களின் பாடல் எதிர்கொள்கிறது!

இந்த யாழ்ப்பாண இளைஞர்களின்பாடலுக்கு, நியாயமான கேள்வியும்,எதிர்காலம் குறித்த ஏக்கமுமே பக்கப்பலமாக இருக்கிறது.இந்த எதிர்ப்புக் குரல், தான் பேசிய மகிழும் மொழியின் நிலைக்காக பலமான வேண்டுதலொடு நம்மை அண்மிக்கிறது.நம்மை அழுதுவிடுமளவுக்குத் தாக்குகிறது-நியாயமாகக் கேள்வி கேட்டு உருகுகிறது.நாமும் உருகிப் போகிறோம்.அந்த மிருக வலுவுள்ள கோடம் பாகத்தை அவ்வளவு இலகுவில் வீழ்த்திவிட முடியுமா?அல்லது, மாற்றிவிட முடியுமா?சிறுதுளி பெரு வெள்ளமாகணும்-யாழ்ப்பாண இளைஞர்கள் முளை போட்டிருக்கிறார்கள்.அதுபோல் பல முளைகள் போடப்பட்டு அவை விருட்சமாகினால்மட்டுமேதாம் இந்தச் சினிமாத்தனமான அழிவுச் சந்தையைத் தோற்கடிக்க முடியும்.

தாய்மொழியென, நமது நினைவிலி மனதில் பதிந்த தமிழ் நமது இருப்பையும்,வாழ்வையும்,அதுசார்ந்த பண்பாட்டையும் நமக்கு உணர்த்தும் ஊடகமும்தாம்.அதுள் பல்வேறு பிற்போக்கு-முற்போக்குத்தனங்கள் எல்லா மொழிகழுக்குமுரியதைப்போல் உண்டுதாம்.என்றபோதும்,தத்தமது தாய்மொழி குறித்த எதிர்கால அவா,அதன் இருப்பு-நிலைப்பு,வளர்ச்சி குறித்த எண்ணத்துக்கொப்ப எதிர்காலக் கனவைக்கொண்டிருக்கும்.

அந்தக் கனவுமீது, தொடர்ந்து சினிமாத்தனத்தாலும்,வர்த்தக நோக்காலும் தமிழ் இனத்தின் இருப்பையே அசைக்கும் இந்த விபரீத இசையையும்-சினிமாவையும் விமரிசனத்துக்குட்படுத்துவதும்,அத்தகைய சினிமாவை நிராகரித்தும், மாற்றுச் சினிமாவின் அவசியமும் உணரப்பட இந்த யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி ஏதுவாக இருக்கின்றது.

தமிழினத்தைப் பல முனைகளில் தாக்கும் வார்த்தகவுலகமானது தொடர்ந்து,தமிழினத்தின் அரசியலையும்,அதன் பாண்பாட்டு வடிவங்களையும் பல்வேறு ஆயுதங்களைக்கொண்டு தாக்கி அழித்துவருகிறது. அதுள்,இந்த ரகுமான் பாணி சினிமா இசைப்பாணியும், அதுசார்ந்தெழுதும் பாடல்களும் ஒருவித நச்சு ஆயுதமாகும்.

இந்த நச்சு ஆயுதத்தை எதிர்க்கும் யாழ்ப்பாண இளைஞர்களது கனவு பலிக்க வாழ்த்திக்கொள்வதென்பது,நமது ரசனையை நாம் திறம்பட அகலிக்க வேண்டுமென்பதும்,அந்த அகலிப்புள் இந்த நச்சு ரசனைக்கு மாற்றான நமது மண்சார்ந்தும்-நவீனப் புதுமை சார்ந்தும் மொழியைக் கொலை செய்யாத பாடல்களை உருவாக்கி இரசிப்பதற்கு மாற்றுச் சினிமாவை வளர்த்தாகவேண்டும்.

இதைவிட வேறு வழி இருக்க்க முடியுமா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012



என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

எழுத்து, இசை : எஸ்.ஜே.ஸ்ரலின்.


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா...


செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு...
பழமை பாடும்...
தமிழர் பெருமை எங்கே?


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா...? - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா


யேசுஇ புத்தன்இ
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு -- தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு


தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்...
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்...

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல -- அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா. ''

Samstag, 3. Dezember 2011

கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா?

// Annam Sinthu Jeevamuraly:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழிலோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம.!; இங்கே கொண்டுவரப்பட்டுள்ள விவாதத்தை யாருடைய வாய்கால் வழிக்கும் திசைதிருப்பி விரும்பியபடி அனுபவித்துப்பார்க்கலாம.; இலக்கியமென்பது காலத்தின் கண்ணாடியென கட்டுரை மட்டும்தான் எங்களுக்கு எழுத் தெரியும். ஆனால் காலத்தையும் காலத்தின் வாழ்ந் மனிதர்களையும் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகின்றோம். காலத்தின் கண்ணடியாகவும் தான் வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும்; அடையாளமாகவும் விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் சொல்லிவிடுகிறது
கசகறணம் என்பதை யார் எப்படி வேண்டமானாலும் புரிந்து கொள்ளலாம்.//

விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன? மதுவந்தி, யாழ்ப்பாணம்.

'ஷோபா சக்தி படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது.

ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும்.

வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா.

வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது. - ஷோபா சக்தி


P/S :ஏல்லா நாடுகளிலுமுள்ள மொழியை கற்றுக்கொள்ளவும் வட்டாரவழக்குகளைப் புரிந்துகொள்ளவும் முடிகின்ற யாழ்பாணத்தாருக்கு கிழக்குமக்களின் மொழியை புரிந்து கொள்ளமுடியவில்லை என்பது எவ்வளவு பொரிய புலுடா?

இந்த விமரிசனத்தை விமல் பேளினில் நடந்த உரையாடல் அரங்கில் 27.11 2011 மிகத்தெளிவாக முன்வைத்தார் இதுக்குள்ள வடக்கும் கிழக்கம் மீள இணையவேணும் என்கிறகோசம் வேற! - By Annam Sinthu Jeevamuraly

**

நெல்லு+புல்லு:

ரு தேசியவினத்தின்மீதான சிங்கள அரசினது திட்டமிடப்பட்ட இனவொடுக்குமுறையின் வெளிப்பாடுகளினூடாகப் பாதிக்கப்பட்டது முழுத் தமிழ்பேசும் மக்களும்தாம்.அது மலையகத்தவர்களாகவிருந்தாலென்ன,இல்லை இஸ்லாமியர்களாகவிருந்தாலென்ன சிங்கள அரசினதும்,அதன் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினதும் திட்டமிடப்பட்ட இனவழிப்பின் உச்சம்தாம்.இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள்ளே நியாயமுறும் எதிர்ப்புப் போராட்டங்களது தேவையானது அவர்களது இருத்தலுக்குரியதான வெளியுள்,அந்தச் சிறுபான்மை இனங்களுக்குள் நசுக்கப்படும் விளிம்பு நிலை மானுடரது குரல்கள் இன்னொரு தரமாக இருமுனைப்பட்ட அதிகாரகங்களைத் தமது வாழ்வுக்குள் சந்திக்கும் திசைகளை,ஒன்றுடனொன்று பொருத்திவிடுவதால் அகவொடுக்குமுறையானது புற ஒடுக்குமுறையைவிடக் காத்திரம்தாம்.

தரப்படுத்தல்,என்பதும் அதைக் காரணங்காட்டித்தாம் யுத்தம் எழுந்ததென்பதும் ஒரு ஓரத்திலிருக்கும் நிலைமைகளுக்கு(...)லொபியாகும் தகுதிகள் உருப்பெற்றதன் பார்வைகளாகத் திசை திருப்புதலும் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை நீர்த்துப்போக வைக்கும் பெருங்கதையாடலாக்கச் சாதியத்தைக் கைலெடுத்த இலங்கைப் பாசிச அரசினது வியூகமாக இனங்காணும்போது,இவற்றை வைத்துப் பொதுப்படையான யாழ்ப்பாணத்து மேலாதிக்கமென(தமிழ்ச் சமுதாயத்தின்அக ஒடுக்குமுறை) வர்ணிக்கப்பட்டு ,அரசியல் கருத்தாக்கமாக உள்வாங்கப்படும் செயற்பாட்டுக்கு வலுச் சேர்பதில் பல புரட்டுக்கள் தமிழ்பேசும் மக்களது தன்னுரிமைக் கேள்விகளுக்குள் மலிந்திருக்கிறது.இப்போதைய நிலவரப்படி தமிழ்பேசும் மக்களது பாரம்பரியமான ஐதீக நிலப்பரப்புகளைத் திட்டமிட்டுத் தட்டிப் பறிக்கும் குடியேற்றங்கள் நாளொருவண்ணம் நிகழ்ந்தே வருகிறது.

இதுள்,யாழ்மைய வாதம்-யாழ்ப்பாண மேலாதிக்கம் என்பதன் தொடரில் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் வலுவைச் சிதைப்பதிலும் மையங்கொண்டியங்குகிறது!.தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறும் இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களது வாழ்வாதாரத்துக்குப் பயன்படும் கடலும் சம்பந்தப்பட்டது என்பதையுங் கவனமாகப் பரிசீலித்தோமானால், அத்தகைய போராட்டங்கள் அந்த மக்களிடமிருந்து எழாது தடுப்பதற்கும்,இஃதொரு நல்ல வியூகமாகவே யாழ்ப்பாண மேலாதிக்கம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதைக்கடந்து, இன்றைய பிரச்சனைகளை மேலோட்டமாகப் பார்க்கும் கருத்து நிலைகளைத் தாழ்த்தப்பட்ட மக்களது அரசிலுக்குள் திணிப்பதில் தற்காலிக"அபிவிருத்திகள்-சமூக மேம்பாடுகள்"என அவர்களை அணைத்தபடி இனவாத அரசு வெற்றிகரமாகத் தன் இலக்கை எட்டும்போது,சோபாசக்தியினது கூற்றை அப்படியே யாழ்ப்பாண மேலாதிக்கமென வகுப்பெடுக்கும் ஜீவ முரளியிடமிருந்து சோபாசக்தி சொன்னதான கருத்தைப் புரிந்துகொண்டோமானால்,அஃது ஒரு தனிப்பட்ட மனிதரது இலக்கிய அழகியற் பார்வையாகிறது.அந்தக் கருத்தைச் சொன்ன நபர் யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் உறுப்பிராகவும்,அதைப் பிரதிநிதிப்படுத்துபவராகவும் இவர்கள் பார்ப்பதுங்கூட ஒருவகையான பிரபலப்படுத்தலுக்கான வியூகம்தாம்.இதை பிறதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இப்போது சோபாசக்தி சொன்னதைவிட மிக மோசமாக வெங்கட் சாமிநாதன் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொன்னதையும் ஞாபகப்படுத்திக்கொண்டமோனால்(தமிழுக்கு இலக்கியம் இல்லை.அது சகாரப்பாலை வனத்தின் உணர்வுகளைச் சொல்லும் நிலையில் இருப்பதென...)இந்த யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் அண்ணன் பார்ப்பனியமென வகுப்பெடுக்கப்படலாம்.

நமது நிலைப்பாடு,தமிழ் இலக்கியத்தின்மீதான சமகால அழகியற் கொள்கைகள்,தத்துவார்த்தப்புரிதல்கள்.இலக்கியமென்பது மனித வாழ்வில் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் வரலாற்றின்-சமுதாயத்தின் கண்ணாடி அடியுண்டு போய்விட்டது. இதுதாம், இயற்கை வாதச் சொல்விளையாட்டை வேறுறொரு பாணியில் முறியடிக்க விரும்பியது.டி.எஸ்எலியாட்டையும்,அவரது கோட்பாட்டுருவாக்கத்துக்குத்(இலக்கியக்கொள்கை) துணை நிற்பதான"மனிதர்கள் தமது அனுபவத்துக்குட்பட்ட புரிதல்களின்வழி தொடர்ந்து சிந்திப்பதன் வாயிலாக சமகாலப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து எழுதுவது படைப்போ-கத்தரிக்காயோ" என்பதையுந்தாண்டி , நான் பீட்டர்.வி.சிமா [Peter V.Zima]குறித்த புரிதலின்வழி [ http://www.amazon.de/Literarische-%C3%84sthetik-Methoden-Literaturwissenschaft-Uni-Taschenb%C3%BCcher/dp/3825215903/ref=sr_1_4?s=books&ie=UTF8&qid=1322951270&sr=1-4 ]படைப்பிலக்கியமானது அகவயப்பட்ட அனுபவத்தின்வழியே புறநிலையுள் உருவாகின்ற தன்மைக்கொப்பான சிந்தனைப்பயனுள் மீளவும் அகவயப்படுத்தப்பட்ட புரிதல்களை நிகழ்காலத்துள்புரிய மீட்டெடுப்பது,அதன் தற்காலித் தர்ப்பாரான நிறுவனப்பட்ட அதிகாரத்தினது மொழியை, ஆயுதமாக எடுப்பதில் அந்த அனுபவத்துக்கானவொரு அழகயிற்றேவையை நுகர்வுமட்டத்தில் சந்தை விடாப்பிடியாக வலிந்துருவாக்கிக்கொள்கிறது. எனவே,இலக்கியமென வரிந்துணர முற்படும் போக்குகளுக்கு இந்த அநுபவத்தின்மீதான(கசகறணம்- நான் இன்னும் வாசிக்கவே இல்லை.எங்காவது சந்தித்தால் வேண்டலாம்) இலாடன்கள் அவசியமான உணர்வாக்கப்பட்டபின், அது உருவாக்கி வைத்த அழிகியல் மனதானது தனக்கானவொரு இலக்கிய வடிவத்தை உருவாக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுவிடுகிறது.

அந்த மனதின்வழி, வெற்றுப் பேப்பர்களாக அநுபவங்களைக் குவித்து, அதை எழுத்தாக்க முனையும் தருணங்களில் சம்பந்தப்பட்டவரது அநுபவம் ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் அழிகியலை நெருங்காதுபோனால் அது மட்டரமாக உணரப்படும்.இதைச் சோபாசக்தி உணரும்போது,அது யாழ் மேலாதிக்கமாக முரளிக்கு அனுபவமாகும்போது,அவர் மீள,மீளச் சொல்லும்"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்காற் வழியாக ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"என்பதில்,புல்லு யாழ்ப்பாண மேலாதிக்கமாகவும் நெல்லு தலித்து மக்களுமாக உணரத் தலைப்படலாம்.

எது,எப்படியோ போயினும்,சோபாசக்தியின் இலக்கியக் கொள்கை என்பது அவரது சக்திக்குட்பட்ட புரிதலின் அனுபவமென்பதை யாழ்ப்பாணிய மேலாதிக்கமென வகுப்பெடுப்பதிலிருந்து விடைகாண முற்படும் முரளிக்கு இருப்பது சம்பந்தப்பட்ட அனுபவத்தின் மீதானவொரு நுகர்வறிமுக யுக்திதாம்.எந்தப் பெரிய முரண்பாடென வகுத்துச் சொல்லினும் இவர்களுக்குள் உலாவரும் நானும் இவர்களது இலக்கியக் கொள்கைகள் குறித்து நிறையவே அனுபவப்பட்டதிலிருந்து, இதை இப்படித்தாம் சொல்லிக்கொண்டு, "உண்மையத் தரிசிப்பதும் மொழியினது அடிப்படைகளை நிலவுகின்ற அமைப்பாண்மைக்குள் புரிந்துகொள்ள முனைதலென்பதால் மொழி என்ன செய்யும் என்பதிலிருந்து மொழியை விடுதலைப்படுத்த லென்பது அதன் தார்மீகமான உழைப்பின் வினையை மறுத்துவிட்டு, என்னால் அனுபவத்தை முதன்மைப்படுத்தி மகிமைப்படுத்த முடியவில்லை"என்றாக முடிக்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.11

Samstag, 26. November 2011

பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..."

// பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. //


http://www.facebook.com/parani.krishnarajani


பரணி,இஃது ரொம்ப ஓவராக இல்லையா?

"சுதந்திரம்,விடுதலை,இறைமை"என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?அதன் அடிப்படைகள் என்ன?பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய "கோட்பாட்டுருவாக்கச் சித்திரங்கள்..." "........." இதுதாம் இன்னும் மோசமான ஆபத்தைத்(அபத்தம்) தமிழ் மக்களுக்குத் தரவல்லது.


அவர் எந்தவொரு கோட்பாட்டுருவாக்கச் சித்திரத்தின் கர்த்தாவாக இருக்க முடியாது!நடைமுறைசார்ந்து ஒடுக்குமுறைக் கெதிரான "எதிர்ப்புப் போராட்டத்தை"ஒரு இனஞ்சார்ந்து அதைத் சமூகவுணர்வுக்குள்ஜீரணிக்க வைத்ததும்,அதையே ஒரு கட்டத்தில் சமுதாய ஆவேசமாக்கிய பிரக்ஜையில் பிரபாகரன் ஒரு குறியீடாக இருப்பதால் அவர் கோட்பாட்டுருவாக்க கர்த்தாவென்பது மிகைப்படுத்தப்பட்ட உரையாடல்.இதன் வாயிலாகத் தமிழ் இளைஞர்களது சிந்தனைக்குள் மீளவும் மாயயை-போலிப் பெருமையைக் கட்டி வைத்துச் சுயசிந்தனையை மழுங்கடிக்கும் போக்கு இது.சிந்திக்கவும்.


தமிழ்ச் சமுதாயத்திடம் எந்தவொரு கோட்பாட்டு இரீதியான உருவாக்கமோ அல்லது செல்நெறியோ இதுவரை நியாயமான வடிவில் நிறைவாக உருவாகவில்லை!தமிழ் மொழியானது வெறும் பூஜைக்குரிய மொழியாகவும்,எதிரிகளால் போலிப் புகழுக்கும் உட்பட்ட வெறும்உணர்வுசார் புனைவுகளால் வாழும் மொழி.இது,ரொலான்பார்த் வழி புரியப்பட்ட"மொழி பாசிசத் தன்மையாக நின்றேகும்"நிலைக்கு மிக நெருங்கிய மொழியாக இன்றிருக்கிறது!இந்த மொழி பேசும் மக்கட்டொகுதியானது இதுவரை"திருக் குறளை"வைத்து உலகைப் புரிய முனையும் அபத்தத்தின் மத்தியில் பிரபாகரன் குறித்து மிகைப்படுத்தி வைப்பதில் அடுத்த தலைமுறையையும் இப்படியே வழிப்பாட்டு அடிமைக் கூட்டமாக்கும் கைங்காரியத்தையும் நீங்களும் செய்வதில்"இனத்தின் விடுதலை,சுதந்திரம், இறைமை" என்பதைப் புலிகளது போராட்டச் செல்நெறிவழி உரைக்க முனைதலானது இதன் அடிப்படைகளைச் சொல்லி சென்றிருக்க வேண்டிய அவசியத்தைக் கோருகிறது.மற்றும்படி, தொல் காப்பியத்துக்கு விளக்கந்தரும் வேலை போன்று பிரபாகரன் குறித்துக் கருத்துக் கட்டுவது ஒரு இனத்தின் விவேகத்தின்மீது ஆணியடிப்பதாகும்!

இங்ஙனம் நீங்கள் செய்வதாவது,குறியியல் ரீதியான உணர்வுகொள் சொல்லாடல் குறிப்பானைக் காரணியாக்கும் மருவு நிலையில் புறநிலைகளின் தன்மைகளை மறந்தொதுக்கிறது.ஒப்புமை மூலமாக"இனவிடுதலையை,சுதந்திரத்தை, இறைமை" விளக்கப் படுத்துவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை."இனவிடுதலை,சுதந்திரம்,இறைமை" என்பவை குறிகளின் தொகுப்பல்ல!

மொழிவழியாகவுணரப்படும் இவைகளை மொழிவழி குறியாக அடையாளப்படுத்துவதில் அதன் அடிப்படைகள் மறுக்கப்படுகிறது.பிரபாகரன், தமிழ்இனத்தின் இன்றைய கட்டத்தில் இவற்றுக்கானவொரு குறிப்பானாக இருப்பது,அவர்வழி உணரப்படும் போராட்டம் ஒரு குறியீடாகத் தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்திருப்பதானது மேற்காணும் இனவிடுதலை,சுதந்திரம்,இறைமைக்கு கோட்பாட்டுச் சித்திரங்களல்ல!கோட்பாடென்பதை மிக மலினப்படுத்திக் கதைப்பது இன்றைய நிலையில் சாத்தியமாகிவிடுவதையிட்டு நாம் கேகலின் அகவயக் குறைபாடான இயக்கவியலுக்குள் மெல்லச் செல்கிறோம்.ஒன்றின் தொடர்ச்சியை இன்னொன்றுக்குள் காணும்அனாலோஜிக் கோட்பாட்டுரீதியான ஒப்பீட்டுருவாக்க மொழிவு, உங்களது கருத்தின்வழி புரிய முனையும் இந்த நிலையில் இதுவொருவகை சிம்பாதி-பரிவுணர்ச்சி என்பேன்!

இது,எமக்கு எட்டப்பட முடியாது நிற்கும்சுதந்திரம்,இன-விடுதலை,இறைமை குறித்து மிக வேகமாக "போலிப் பெறுதல்" உணர்வுக்குள் மிக வேகமாக ஒருவரை இணைத்துவிடுகிறது.இதன் இயக்கவியல்ரீதியான உள்ளடக்கமானது அனைத்து வடிவத்தையும் உடைத்துவிடுதனால் ஒவ்வொன்றின் தனித்தன்மையையும்(சுதந்திரம்,விடுதலை,இறைமைசார் ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு தன்நிலைகளை) அழித்துவிடுகிறது. இது,சுதந்திரத்தையும்,விடுதலையையும்,இறைமையையும் வெறும் மொழிவுகளுக்குள் குறுக்கி-குறியாக்கி வடிவத்துக்கு அந்நியத்தை வழங்கி,நாம் இவற்றுக்குப் பக்குவப்பட்ட வாழ்வைத் துய்க்க இலாயக் கற்றவர்களென்று சொல்லாமற் சொல்கிறது.இதைத் தொடர்ந்து நீங்கள் கட்டும்-உதிர்க்கும் நறுக்குகளுக்குள் இயங்கும் நிலைகளாக என்னால் நிறுவ முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
25.11.11

Samstag, 29. Oktober 2011

இன்னொரு "அலசல்" வீடியோ

"விடுதலை"ப் பு(ளி)லிகள்

( இன்னொரு "அலசல்" வீடியோ )

க்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
புலித் துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
தூரத் துரத்திய கையோடு,

தேம்பியழுது
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும்,
"அன்று" உச்சத்தைத் தாண்டப்
பிள்ளை பிடித்துத்
தேசக்காளிக்கு நரபலியிட்டனரா?

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும்புலத்துத்தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் "மாவீரர் தினப் பஜனை"!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!

ஈழமென்ற கனவின்
நனவாய்"தேசிய-மாவீரர் தினம்"
தெருவெங்கும் "தேசியத் தலைவர்"
உயிருடன் உள்ளார் எனத்தோரணமிடுகிறது!

செத்தவன்,
மண்ணோடு போன பின்னும்
நிணம் புசிக்கும் தந்திரமெனச் சரடுவிடும்
புலத்துப் புலி
கோடம்பாக்கத்துக்
குமரிகளைக் காட்டிக் காசும் பறிக்கிறது.

எந்தப்புரிதலும்
தமிழரை எட்டாத திசைகளைச் செய்து
திரட்டிய நிதியோ
ஒரு சிலரது தேடிய சொத்தாச்சு!

கட்டை விரலை
வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற "தமிழீழ"மயக்கம்
மக்களில் சிலருக்கு.

அற்பர்கள் அழித்தவை
தேசத்து மக்களை
வாழ்வை ,பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை"பொய்மை"இவர் இறைத்திடினும்
எத்துணை"கொலைகள்"இவர் கரஞ்செய்கினும்
இடர் மறந்து "அன்று" இறந்தனர் மக்கள்!

புலத்தில்,
இதயத்தைத் தொலைத்த துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி,
"மாவீரர் பஜனை"ஒலித்தும்,
மக்களின் மனதில்உண்டியில் தூக்கி,
வழிகளில்"தமிழீழ வெடிகளைப்" புதைத்து
பணத்துடன் ஓடப்
பொழுதுகள் பார்த்து...

மீண்டும்,மீண்டும்
பிரபாகரன் "உயிருடன்"
சுகமாய்-சுகமாய் உண்டு
உறங்குவதாக உருவங்கட்ட,
உருண்டவன் தலையும்,
கோத்தபாயக் கோடாரியுமாக
இன்னொரு "அலசல்" வீடியோ
அமெரிக்கப் பாணியில் இங்கே...

Freitag, 19. August 2011

அகதிப் பிள்ளைகளுக்கு_FLUECHTLINGSKINDERN

FLUECHTLINGSKINDERN:

Wir wollen den Erdball schenken,
wenigstens fuer einen Tag,
dass sie damit spielen Koennen
wie mit einen bunter Luftballon,
spielen und singen unter den Sternen.

Lasst uns den Kindern den Erdball schenken
wie einen runden Apfel oder ein warmes Brot,
dass sie satt werden koennen,
wenigstens fuer einen Tag,


Den ganzen Erdball sollen sie haben,
dass sie,
wenigstens fuer einenTag,
Kennenlernen,was Freundschft ist.

spaeter werden sie uns das Land
ohnehin aus den Haenden nehmen,
um unsterbliche Baeume darauf zu pflanzen.

-NAZIM Hikmet.


அகதிப் பிள்ளைகளுக்கு

ங்கள் விருப்பமோ இப் பூமியை
ஒரு நாளுக்காவேனும் குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுக்கவேண்டும்
வர்ணங்கள்கொண்ட பலூன்கள் போன்று
அதனோடு அவர்கள் விளையாடுவதற்கு
நட்ஷத்திரங்களின் கீழே ஆடியும் பாடியும் மகிழ்ந்திருக்க.

குழந்தைகளுக்கு இந்தப் பூமியைப்
பரிசளிக்க எம்மை விட்டுவிடுங்களேன்,
ஓருண்டையான ஆப்பிள் போன்றோ அல்லது
ஒரு சூடான ரொட்டி போல்,
அவர்கள் பசியாற,குறைந்த பட்சம் ஒரு நாட்களுக்காவேனும்!


மொத்தப் பூமிப் பந்தும் அவர்கள் வசமானால்
அவர்கள்,
குறைந்த பட்சம் ஒரு நாளுக்குள்ளே
நட்பு என்பது என்வெனப் புரிந்து கொள்வர்.

பின்னர் அவர்கள் இந்தப் பூமியை
நம்மிடமிருந்து எப்படியும் கையேற்கும்போது
சாகாவரம் பெற்ற மரங்களையாவது
நட்டு வைப்போம்.


நசீம் கிக்மெற்

தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்


Montag, 15. August 2011

Drei junge Tamilien, drei Männer in Indien

DRINGENDE AKTION !!!

Drei junge Tamilen, drei Männer in Indien
von Hinrichtung (durch den Strick) bedroht

Sehr geehrte Damen und Herren,

Indiens Oberstes Gericht lehnte ein Wiederaufnahmeverfahren für die drei Tamilien Murugan, Perivalan und Santhan ab, die zu Beginn des vergangenen Jahres für den Mord an dem vorherigen Premierminister Indiens, Rajiv Gandhi, zum Tode verurteilt wurden. Nur noch der Präsident Indiens könnte jetzt intervenieren, um die drohende Hinrichtung zu stoppen.
Dieser Ungerechtigkeit muß endlich und sofort Einhalt geboten werden ! Nur eine kräftige, internationale Kampagne könnte jetzt noch erwirken, daß die drei Menschen nicht grausam erhängt werden. Wir bitten Sie/Euch daher, diese Unterschriftenaktion so bekannt wie möglich zu machen, damit sich viele Menschen daran beteiligen.



Nähere Informationen sind auf Facebook_ Internetseite
(http://www.facebook.com/notes/stop-death-penalty-in-india/urgent-petition-to-the-president-of-india-stop-hanging-perarivalan-murugan-santh/110545945713419?notif_t=note_reply ) in Englische _Sprache zu finden.

http://www.facebook.com/notes/stop-death-penalty-in-india/urgent-petition-to-the-president-of-india-stop-hanging-perarivalan-murugan-santh/110545945713419

http://www.tamilsolidarity.org/?p=1773

Bitte senden Sie Protestfaxe, Telegramme oder Briefe zu den unten angegebenen Adressen:

APPELLE AN
STAATSPRÄSIDENTIN
Pratibha Patil
Office of the President
Rashtrapati Bhavan
New Delhi 110 004
INDIEN
Fax: (00 91) 11 2301 7290 oder (00 91) 11 2301 7824

KOPIEN AN

INNENMINISTER
P. Chidambaram
North Block, Central Secretariat
New Delhi - 110 001
INDIEN
Fax: (00 91) 11 230 94 221
Email: hm@nic.in

BOTSCHAFT DER REPUBLIK INDIEn

S.E. Herrn Sudhir Vyas
Tiergartenstr. 17
10785 Berlin
Fax: 030-2579 5102
E-Mail: dcm@indianembassy.de
Bitte schreiben Sie Ihre Appelle möglichst sofort. Schreiben Sie in gutem Englisch oder auf Deutsch.

Von Sri Rangan Vijayaratnam
Wuppertal
15.08.11


Mittwoch, 3. August 2011

சலாம் பம்பாயும் நானும்-மீரா நாயரும்

என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது.

(சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)


"........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும் இனித்தோன்றும் என் அடுத்த பிறப்புக்காகவும் நான் வதைப்பட்டதும்,படுவதும்-படப்போவதும் குறித்துப் பேசுவது அவசியமில்லையா?


பேசவேண்டும்!


தர்மம் செய்கிறோமெனும் பேர்வழிகளில் நானும் ஒருவனல்ல.கையேந்தும் ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களில் ஒன்று நான்.எனது மனவலியும்,வடுவும் என்னைப் பல முறைகள் மீரா நாயரைப் பார்க்க வைத்தது.அவர் திறந்து காட்டிய என் வாழ்வை, நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.எனது சின்னக் கனவின் வண்ணங்களைச் சொன்னதால் மீரா நாயரை மனதுக்குள் அதிகம் நேசித்த காலம் அதிகம்.இளைமைக் காலத்தின் அற்புதமான கனவுகள் எல்லோருக்கும் ஒன்றல்ல.


கிருஷ்ணாவுக்கு வீட்டுக்குப்போகவேணும்!அம்மாவைப் பார்க்கவேணும்.



கடைகளில் தேனீர்க் குவளை தாங்குகிறான்.பணம் சேர்க்கிறான்.ஏதோவொரு முடுக்கு வீதியில் அநாதவராக எழுந்திருக்கும் சுவருக்குள் ஒரு பொந்து!நண்பன் அதைப் பெட்டகமாகவும்-வங்கியாகவும் அறிமுகப் படுத்துகிறான்.கிருஷ்ணாவின் சின்னவிரல்கள் சேர்த்த பணம் அம்மாவுக்கு,அப்படியே வீட்டைபோவதற்கு.பொந்துக்குள் பணம் பத்திரமாக வைக்கப் படுகிறது.


தொடர்ந்து இயங்கிய சின்னக்கால்கள் ஒரு முறை பொந்தைப் பார்த்தபோது பணம் மாயமாக மறைந்துவிடுகிறது.


உலகம் இருண்டு விடுகிறது!மனம் வலியெடுக்கிறது எனக்கு.எங்கேயடா எனது பணம்?


கேட்டேன்.


உதைத்துத் தள்ளுகிறான் நண்பன்.


"நான் வீட்ட போகணும்,வீட்டை போகப் போறேன்."பணம் போனது போனதுதாம்.


எனக்கு எழுத வராது.


வீதியில் அமர்ந்து "அதை" மக்களுக்கு நிறைவேற்றும் ஒரு அண்ணரிடம் கடிதம் எழுதுவிக்கிறேன்.


"அன்புள்ள அம்மா,..." கடிதத்தில் என்னைக் கொட்டி கவருக்குள் திணித்து மூடிய பின், முகவரி எழுதுவதற்கு அந்த அண்ணர் "என்னடா உன்ர வீட்டு அட்றஸ்?"...ம்...


தெரியாது!


தெரியாது.அம்மாவை,அப்பாவை,அன்புடைய சகோதரத்தைத் தெரியாத முகவரியால் நான் தொலைத்தேன்.


என்னோடு உலாவும்-வாழும் எல்லோரும்தாம்.


மஞ்சுவுக்கு ஒரு அம்மாவும்,பல அப்பாக்களும் இருப்பது தெரிந்திருக்கு.அவள் அம்மாவோடு இருப்பாள்.பொழுதுகளில் என்னோடு உலா வருவாள்.


நாங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.


எங்கள் கதைகளில் நாங்களே நாயகர்கள்.எனினும் எங்களுக்கும் ஸ்ரீதேவியைக் காதலிக்கவும் தெரியும்.தெருவில் அமிதாப் பச்சனாக வாய்விட்டுப்பாடவும் தெரியும்.



ஒருநாள்,ஒருநாள் என்னப் பல நாள் பொலிசினால் நகரத் தூய்மை-அழகு கருதி நகருக்கு அப்புறமாகத் துரத்தப்படுவதும் உண்டு.நாங்கள் மீளவும் நகரத்துக்குள் கால் வைப்போம்.


எங்கே போவோம்?


இந்தியாவின் கதாநாயன் கிருஷ்ணன்!


ஆனால் இந்தக் கிருஷ்ணாவுக்கு தாயுமில்லை,தந்தைத் தேசமுமில்லை.வீதியின் விளிம்பில் படுத்துறங்கும் நாம்,சமூகத்தின் உள்ளேயும் வாழ முடியாது விளிம்பில்தாம்.


ஆம்! நாங்கள் விளிம்பு மனிதர்கள்.


"சலாம் பம்பாய்"-மீரா நாயர்.


"என்ன பிரச்சனை?,ஒரு பிரச்சனையுமில்லை!" -மீரா நாயர்.


வெண்திரை மூடி விடுகிறது.


மீளவும்,மீளவும்... ஒரு அறுபது தடவைகளுக்கு மேலே இந்தச்"சலாம் பம்பாய்"க்குள் வாழ்ந்திருக்கிறேன்.அதனால் எனது பையனுக்கு"கிருஷ்ணா" என நாமமும் இட்டேன். அந்தக் கிருஷ்ணா அநாதையில்லை என்பதற்காக நான் கிருஷ்ணாவுக்குப் பெற்றவனாய்... இது நிஷம்!வாழ்வு இப்படித்தாம் மனதுள் விரிகிறது.வசந்தத்தை நாம் வடிவமைப்பதிலும்,வாழ்வதிலும் இணைத்துவிடுகிறோம்.

II

சுய உணர்வும்,சுய நம்பிக்கையும் சமூகத்தின் அனைத்து ஆளுமைக்கும் அடிப்படைக் காரணியாகும்.மனித சமுதாயத்தில் அநேகமாகப் பல குழந்தைகள் அச்சத்தைத் தரிசிப்பவர்கள்.சமூகப் பாதுகாப்பற்ற ஒரு மொன்னைத்தனமான ஆட்சி,நிர்வாகக் கட்டமைப்பு உலகத்துள் நிலவுகிறது.இங்கே மனிதவுணர்வுகள் இயந்திரத்தனமான மனதுகளுக்குள் பின்னப்பட்டிருக்கிறது.இது சமூகத்தின் மொத்த மறுவுற்பத்தியையும் பாழடித்தபடி, பொருள் உற்பத்தியின் திறனைத் தினம் உயர்த்துவது எப்படியெனச் சிந்திகிறது.இந்தவுலகத்தில் துண்டாடப்படும் மனித ஆற்றலானது எந்தக் காரணத்துக்காகவும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.இது தாரளமயமான ஜந்திர வடிவத்துக்குள் உலகைத் தரிசனம் செய்யுந் தரணங்களில் தகவமைக்கும் மானுட மாதிரியானது மேலே வரும் வாழ்வைத் தினம்,தனம் மெருக்கேற்றி வளர்த்தெடுக்கிறது.



இன்றைக்கு மானுடத்திடம் சுய பெறுமானாவுணர்வு குறைந்துவிட்டது.சுயமதிப்பென்பது மானுடத்தின் ஆளுமையை விருத்திக்கிட்டுச் செல்வது.அது மனித ஆற்றலைத் தீர்மானிப்பதும் அறிவை மேம்படுத்திப் பல நல்ல சமூக மனிதர்களை உலகத்துள் வாழத் தருவதுமாக மறு உற்பத்தி இயங்குவதன் ஆதார சுருதியாகும்.இந்தச் சுயமதிப்பு சமுதாயத்தின் மொத்த உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையில் ஒருசில மேட்டுக் குடிகளுக்கான வரையறையாக மாற்றப்பட்டுள்ளது.இவர்கள் தவிர்ந்த சமூகத்தின் மற்ற மனிதர்கள் யாபேரும் இந்தச் சமுதாயத்தின் ஏதோவொரு விளிம்பில் தொங்குகிற ஒட்டுண்ணிகளாகச் சமூக யதார்தத்தம் உருப்பெற்றுள்ளது.இது சமுதாயத்தின் கடமையைச் சரிவர இயக்க முடியாது ஆட்சியையும்,அதிகாரத்தையும் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆளும் வர்கத்தின் அரசியலானது இந்தவுலகத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன்கள் குழந்தைகளை வீதிக்கு உதைத்துத் தள்ளியுள்ளது.இந்த ஈனத்தனமான பொருளாதார இலக்கானது மனிதர்களில் இப்படி மனிதக் குப்பையாக சமூகத்தின் ஒருபகுதித் தலைமுறையைத் தனது கழிவாக்கி வைத்திருக்கிறதென்றால் இந்த ஆட்சி,அமைப்புகள் எவ்வளவு மனிதக்கொடுமைகளைச் செய்கிறது!இதைக் கடைந்தெடுத்த துரோகத்தனமென்பதா இல்லை பயங்கரவாதம் என்பதா?


இது பயங்கரவாதமே!




மனிதக் கூளங்களாக நூறு மில்லியன்கள் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில்கிடந்து உழல இந்த மனித சமுதாயமும்,அதன் பெருந்தலைவர்களும் அமைதியாகக் "கனவு காணுங்கள் இளைஞர்களே"என்கிறார்கள்!


எதைப்பற்றிக் கனவு?


கோடிக்கணக்கான குழந்தைகளை எங்ஙனம் வீதிக்கனுப்புவதென்றா?


வீதிகள்தோறும் மனிதக் கழிவாகக் குழந்தைகளைக் கொட்டிவைத்திருக்கும் தேசங்கள் வீராப்போடு போர்கள் செய்கின்றன!


இன்றைய அரசுகள்-நிறுவனங்கள் விண்ணுலகத்துக்கு ரொக்கட்டுகளைச் செய்மதிகளை பல கோடிக்கணக்கான நிதியிட்டு அனுப்பிவைக்கின்றன.ஆனால் அப்பாவி மனித ஜீவன்களுக்கு ஒருபடி உணவளிக்கமுடியாது,தேசத்துக் குழந்தைகளைச் சமுதாயத்தின் விளிம்பில் உந்தி தள்ளி அவர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டித்தனமாகப் பறிக்கின்றன.இது கொடுமையில்லையா?,கோபம் வரவேண்டாமா?எத்தனை காலத்துக்குத்தாம் மற்றவர்களைக் காறித் துப்பிப் பழகப்போகிறோம்!இந்தக் குழந்தைகள் நம்மில் ஒரு அங்கமில்லையா?


நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!


உலகப் பொருளாதாரப்போக்குகள்,அதன் காடைத்தனமான சுரண்டல்,மற்றும் நிதிமூலதனத்தின் கண்ணைப் பொத்தியடிக்கும் வட்டி,அந்த வட்டிக்கு வட்டி இப்படி நிதியை வைத்திருப்பவர்கள் செல்வத்தில் புரண்டொழும்ப,உலகத்துச் செல்வமெல்லாம் இவர்கட்கே சொந்தமெனும் மோசடி அரசுகள்-சட்டங்கள்.இவற்றைப் பொறுத்தே பழகுவெனக் கல்வி,நிர்வாக ஒழுங்கு,சட்டம்,நீதிமன்றம்,பொலிசு,இராணுவமென்று பற்பல ஒடுக்குமுறைகள் விலங்கிட அப்பாவிக் குழந்தைகள் அநாதையாகிக் கண்முன்னே செத்து மடிகிறார்கள்.


கடைந்தெடுத்த யுத்தங்கள்,கண்மண் தெரியாத போர்களின் காட்டுமிராண்டிக் குண்டுகள் எத்தனை வகையான துன்பத்தைச் சிறார்க்கு வழங்கி விடுகிறது!



1830 இல் உலக வல்லரசு பிரித்தானியாவிலேயே 30.000. அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி வீதிக்கு வந்தார்கள் என்கிறது ஒரு அமைப்பின் பிரசுரம்(terre des hommes)..ஆனால் அது இந்தக் காரணத்தாலல்ல.சமுதாயத்தில் எங்ஙனம் வறுமை தோன்றுகிறதென்பதும்,குழந்தைகளின் பெற்றோர்கள் எங்ஙனம் இணைந்து வாழ முடியாதுபோனது அல்லது குழந்தைகளைச் சமுதாயத்தின் பொது உயிரியென்ற வகையில் அவர்களைக் காக்க அரச முயலவில்லையென்பதையும் வெறுமனவே பெற்றோர்கள் இன்மை என்பதற்குள் அடக்கி, உண்மைகளை உருத்தெரியாமல் அழிப்பது இந்தச் சமூக அரசியலுக்குப் பழக்கமாகிறது!இதுதாம் முதலாளியத்தின் தப்பித்தல்.முதலாளியத்தில் இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாது தொடர்ந்தே இருக்கும்.வேலையில்லாத் திண்டாட்டத்தைப்போன்று!


ஆண்டுதோறும் கடலில் கொட்டும் கோதுமையும்,பழங்களும்,மற்றும் பல்வகைத் தானியங்களும் இந்தவுலகத்திலுள்ள அனைத்து மானுடர்களும் ஒரு மாதத்துக்கு உணவருந்தப்போதுமானது.பல இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள விளை பொருட்களைச்"செயற்கைத்தனமான அழிப்பு"எனும் சந்தை விதி வார்த்தையில் நாம் அழைத்துக்கொள்கிறோம்.இவையாவும் எதன்பொருட்டு?முதலாளியத்தின் "சந்தைப்படுத்தல்-மதிப்பிறக்கத்தைத் தணித்தல"; எனும் தந்திரத்தின்-உத்தியின் விளைவல்லவா?


இன்றைய நிலவரப்படி 100 மில்லியன் வீதிக்குழந்தைகள் இந்த உலகத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!(தரவு:Weltgesundheitorganisation WHO.)இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் முப்பது மில்லியன் வீதிக் குழந்தைகள் வாழ்கிறார்கள்.பிரேசில்போன்ற உலகின் மிக ஏழ்மையான நாட்டில் ஏழு மில்லியன்கள் குழந்தைகள் வீதியில் கையேந்தும்-கண்ணயரும் நிலை.



வளர்ச்சியடைந்த ஜேர்மனியானது உலகத்தின் எந்த நாட்டையும்விட மிக முன்னேறிய சமூகப் பாதுகாப்புடையது.அதன் மண்ணிலே அண்ணளவாக 40.000. வீதிக் குழந்தைகள்,தெருவினில் சீவித்துச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவென்ன ஜப்பானென்ன முதலாளியத்தின் மூச்சு எங்கே நிலவுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்வைத் தொலைத்துத் தெருவுக்குத் துரத்தப்படுகிறார்கள்.



"இராஜசிறீ பன்சிவார் கூறுகிறார்:":"Viele Leute meinen die beste Hilfe fuer diese Kinder waere,sie zuruek zu den Eltern zu schicken oder bei wohlhabenden Leuten unterzubringen.Das ist eine Illusion aus den Filmfabriken"-Voluntary Organisation in Community Enterprise-VOICE."இக் குழந்தைகளை பெற்றோர்களுடன் அல்லது வளம்மிக்க மனிதர்களிடம் மீள அனுப்பிவைப்பதே சாலச் சிறந்ததெனப் பல பேர்கள் எண்ணுகிறார்கள்.ஆனால் இது ஒரு மாயை சினிமாவால்."


இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன்கள் குழந்தைகள்-பெரியவர்கள்,பெற்றோர்கள்-குடும்பங்கள்; முற்றுமுழுதான அநாதைகளாகத் தெருக்களில் அலைகிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைதாம் இவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக இருக்கிறது.இந்த தொழிற்சாலை இச் சிறார்களை- இளைஞர்களை இரண்டும் கெட்டான் நிலைகிட்டுச் சென்று எவருடனும் இணைய முடியாத அகப் புறநிலைக்குள் தள்ளி விடுகிறது.மில்லியன் கணக்காகக் குழந்தைகளையும்,பெற்றோர்களையும் தெருவுக்கு விரட்டியடித்த இந்தியப் பொருளாதாரமானது இப்போதுதெல்லாம் வல்லரசுக்கனவு காண்கிறது.


இவையனைத்தும் இந்த முதலாளித்துவப் பெரும் சுரண்டலினால் தொடரப்படும் பயங்கரவாதமாக இனம் காணப்பட வேண்டும்.
இத்தகைய அரசியல் பொருளாதாரப் பயங்கரமானது இன்னும் சில தரணங்களில் பல மாவட்டங்களில் மனிதர்களைக் கிருமிகளிடமிருந்து காக்காது கொன்றுவிடும் திட்டம் வைத்திருக்கின்றது.சனத்தொகை இங்ஙனம் குறைப்பதற்கானவொரு பொருளாதாரப் புள்ளி இனத்துவ அடையாளப்படுத்தலுடன் நகர்ந்துகொண்டிருப்பதும் இங்கே கவனிகத் தக்கது.


எனவேதாம் கூறுகிறோம் இவ்வுலகம் மாற்றப்படவேண்டுமென.





ப.வி.ஸ்ரீரங்கன்

Blog-Archiv