Mittwoch, 29. September 2010

இலங்கை மாநகரில் ப.வி.ஸ்ரீரங்கனின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை....

இலங்கைப் பெரு நகர் கண்டிப் பேராதனைப் பல்கலைக் கழக அனுசாரணையுடன்,

பிரபல புல-நில, வலை-அலை,முக நூல் பதிவாளரும்,சர்வதேச-அண்ட அகிலச்சார்"ஆய்வு-ஓய்வாளரும்,தோலரும்,மேல் புலப் வரண்ட வர்ணனையாரும்,பொருள்-ஆதாரத்துக்கான புனைவுப் பெருமகனும்,கல்லாநிதியுமான Prof.Dr.Dr. ப.வி.ஸ்ரீரங்கனின்

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

நூல் பற்றியதும்,அவரது வலை-உலை பற்றியதுமானதுமான அறிவார்ந்த-ஆழ்ந்த கலந்து உரைசெய்து ஊரைக்கெடுத்தேய்கும் வானர வர்ணைனைகளைப் பற்றி ஒரு தெருகூத்து நிகழக் காத்திருக்கிறது.

இடம்: அலரி மாளிகை.

காலம்:01.10.2010

நேரம்:அதிசாமம் 12 மணியிலிருந்து இருளகலும்வரை

ஆர்வமுள்ள அனைத்துப் பெருங்குடிகளையும் அன்புடன் அழைக்கிறார் கோத்தபாய அன்ட மகிந்த இராஜ பக்ஷ

பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்:இந்தியப் பிரதமர் மான் மோகன் சிங்
நன்றியுரைக்காக அமெரிக்க அதிபர் துணைவி மிகேலா ஒபா வருவதெனச் சொல்லப்படுகிறது.

ஏற்புரையை கல்லாநிதி ப.வி.ஸ்ரீரங்கனும் ஏற்று வழங்குவர்.

மறவாது கலந்து சி(...)றுப்பிக்கவும்.