Mittwoch, 6. Oktober 2010

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

மெரிக்க-நேட்டோத் துருப்புகள் அவ்கானில் ஜனநாயகத்தைக் கட்டி வளர்க்கிறார்கள்:

இதோ சாட்சி; இந்த வீடியோ அவர்களது சமூக சேவையைச் சொல்கிறது.

அவ்கானிஸ்த்தானில் நேட்டோ சமாதானத்தையும்,பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அது தலிபான் "பயங்கரவாதிகளிடமிருந்து" அவ்கானிஸ்த்தானைக் காத்து வருகிறது.

அந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையும்,பொருளாதார சுபீட்சத்தையும்,மீள் கட்டுமானத்தையுஞ் செய்வதென்று ஒரே கத்துக்கத்தும் ஜேர்மனி,பிரான்ஸ்சு-அமெரிக்கா இங்கே அம்மணமாகிறது.



1990-2000 ஆண்டுகள்வரை அவ்கானில் 90.000.கெக்டரில் போதைப் பயிர் பயிரடப்பட்டது.

2001 ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போதைப் பயிர் வெறும் 7500 கெக்டரில்தாம் பயிரிடப்பட்டது.

அனைத்தையும் அழித்து அவ்வகானைப் போதைப் பயிரிலிருந்து அவர்கள்(தலிபான்கள்) காத்தார்களாம்.

அந்த 7500 கெக்டர் பயிரும் அமெரிக்கா காலூன்றிய இடத்திலேயே பயிரடப்பட்டிருக்கு.

நேட்டோ தலிபான்களை மலையடிவாரத்துக்குத் துரத்தியபின் 2004 ஆம் ஆண்டு அப் போதைப் பயிர் செய்கை 131.000.ஹெக்டரில் செய்பட்டும்-2007 ஆண்டு 193.000. ஹெக்டரில் பயிரிடப்பட்டு பெருமளவு உலக மக்களைக் கொல்ல, அமெரிக்கா தனது இராணுவத்துக் கூடாக இவ் வியாபாரத்தைத் தொடர்ந்தது-இன்றும் அமோகமாகத் தொடர்கிறது!

இன்று, இது பல இலட்சம் ஏக்கரில் அமெரிக்க இராணுவத்தால் பயிரடப்படுகிறதாம்.செய்ப்படும் போதைப் பயிர் உஸ்பிஸ்த்தானுக் கூடாக அமெரிக்க இராணுவத்தால்கடத்தப் பட்டு, இருஷ்சியாவை வேட்டையாடுவது எதனால்?எந்த மக்களைத கருவறுக்க? அமெரிக்காவுக்கு இதுவுமொரு ஆயுதம்!கவனிக்கப்பட வேண்டியது இது...

இந்த வீடியோவைப் பாருங்கள்-கேளுங்கள்.இதன் மொழி புரியாதவர்களுக்காக இதை வேறொரு தினத்தில் முழுமையாக மொழிமாற்றிச் சொல்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2010

Dienstag, 5. Oktober 2010

நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

வினவுவில் நிலா:



>> ஸ்ரீ ரங்க, நீ அங்காலையும் பாடுவாய், இங்காலையும் படுவாய், திங்கிற சோத்தில பங்கும் கேட்பாய்.எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு. இப்போ நாவலன் கை உயர்கிற மாதிரி தெரியுது…. பானையில சோறு இருந்தால்…பூனைகளும் சொந்தம் …பாவம் மக்கள் <<

nila Posted on 05-Oct-10 at 10:29 pm


http://www.vinavu.com/2010/10/02/raya-thesam-inioru/#comment-30768



நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?;



என் வீட்டு முகவரி தெரியுமா?;



அல்லது என்னோடு எப்பவாவது உரையாடியுள்ளீரா?



அங்கேயும்,இங்கேயும் பாடுவதென்பது நியாயம் எங்கே-அங்கே!



சும்மா இரயாவுக்குக் கொம்பு சீவுவது எனது நோக்கமில்லை!



நான்,எவரையும் சந்தேகம் கொள்கிறேன்.



இரயாவைப் புலியின் இன்போமர் என்று, கடந்த இரு ஆண்டுகள் முன் கூறியவன்.

http://srisagajan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF



அதுபோல் இன்று பலரைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறேன்.



அதிகார வர்க்கத்தோடிணைந்து புரட்சியைக் காட்டுபவர்கள் எல்லோரும் தம்மைப் "புரட்சி "வாதிகளாகவே காட்டுகின்றார்கள்.



இப்படி ஜேர்மனியில் எத்தனையோ புரட்சிக்காரர்களை-அமைப்பை பார்த்தவன் நான்.



சும்மா வீம்பு பேசமால் நியாயமாகச் சிந்திக்கப் பழகினால் அது தோழமைக்கும்-மக்கள்சார் அரசியலுக்கும் நல்லது.இல்லை "இப்படித்தாம் செய்வேன் "என நீங்கள் முனைந்தால் அது உங்கள் வர்க்க நிலையைப் பொருத்தது.



நான் எப்பவும்"சோத்துக்கு"அலைபவன் இல்லை!



அவ்வளவு போக்கிரியாகப் பணத்துக்குப் பந்தாவுக்கு ஓடுபவன் நான் இல்லை!என்னை உரைத்துப் பார்க்கும்"தகுதி"எவருக்கு இருக்கிறது.முடிந்தால் செய்யுங்கள்!



நான் இரயாகரன் இல்லை!



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.10.2010