Samstag, 20. Oktober 2007

"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

சாத்திரிக்குப் போகும் மூத்திரம்: புலிக்குள் நிகழும் நடுக்கம்!


கேடுகெட்ட தமிழ்த் தேசியம்.இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்,அற்புதன் என்ற அலுக்கோசு-அரைப்பனி.

தமிழ் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணய விடுதலையை மரணப்படுக்கைக்கு தள்ளிய புலிகளின் கொலைகள், உலகப் பிரசித்தமானது.இவர்களால் மாற்றியக்கங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித் தொடர்ச்சியின் இன்னொரு வகையான அராஜகமே இன்றைய சேறடிப்புகள்-செல்லரித்துப்போன கோணங்கித்தனமான குதர்க்கங்கள்.இந்த மக்கள் விரோதிகள் எத்தனையெத்தனை இளம் போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளினார்கள்?இவர்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் "துரோகிகளான"கதை நாம் அனைவரும் அறிந்ததே!இந்தக் கேவலமான சதியை இந்திய உளவுப்படையான ராவ் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளின் முன்னணித் தலைவர்கள்-ஆலோசகர்கள் செய்து முடித்தபோது, நமது தேசத்தின் மிகப் பெரும் செல்வமான மனிதவளம் அழித்தொழிக்கப்பட்டது.

இன்று, இதே புரளியோடு புலிப்பினாமிகள் தலித்துவக் குரலை நசித்திடவும்,தம்மைத் தவிர வேறொரு அமைப்புப் பலம் பெற்றுவிடக் கூடாதென்ற பதவி-அதிகார வெறியால் தமிழ் மக்களில் கணிசமானவர்களைத் "துரோகி"யென்றழைத்து, எதிரிக்கு நமது விடுதலையை விலைபேசுவது மிகப் பெரும் சமூகக் குற்றமாகும்.இது நமது மக்களை இன்னும் அடிமை கொள்ளமுனையும்,இந்திய மற்றும் உலக-இலங்கைச் சிங்களக் கொடுங்கோன்மை அரசுகளுக்கு பலமான-சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நாம் இனம் காணவேண்டும்.

கருத்தியல் தளத்தில் ஒரு சிறு பொறிகூட மேலெழும்புவதை இந்தத் (வி)தேசியவாதச் சகதிகள் பொறுத்துக்கொள்ள முடியாது, இஞ்சி தின்ற குரங்காய் ஓடியாடித் திரிகிறார்கள்.தமது அதிகாரப் பீடத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக இவர்கள் செய்த-செய்யும் கொலைகளின்பின்னே கோரமாகக் கொட்டப்பட்ட அராஜகக் கருத்தியல்கள் நமது உரிமைகளுக்கு ஆப்பு வைத்த அதே பாணியில் தொடர்ந்து செயற்படும் புலிகளின் முகவர்கள்,இன்னும் எத்தனை பொய்களை உரைத்திடினும் ஒடுக்கப்படும் மக்கள் தமது அதிகாரத்துக்கான நியாயத்தை உயர்த்திப் பிடித்தபடி போர்க்கொடி தூக்குவது தொடரவே செய்யும்.ஒடுக்கு முறைகளுக்கெதிரான மனிதச் செயற்பாடானது எப்பவும் தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதான் நகர்வது.கடந்த காலத்தில் எத்தனையெத்தனை கொலைகள்தான்"துரோகி"சொல்லி நடந்தேறியது?இருந்தும் மக்களின் குரல்களை அடக்க முடிந்ததா?

மக்களின்மீதும்,அவர்களின் நலன்கள்மீதும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்த முனையும் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தரணங்களில்,அந்த மக்களையே"துரோகி"என அழைத்து ஒடுக்கும் சூழ்நிலைகள், ஏலவே பற்பல நாடுகளின் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களுக்குள் நடந்தேறியபோதும் புலிகளினது அரசியல்-அராஜகமே நம்மை இன்னும் கிலிகொள்ள வைப்பதாகும்.இவர்கள், தமிழ்பேசும் மக்களின் சிங்கள ஆளும்வர்க்க எதிரியைத் தொடர்ந்து நண்பராகவும்,எதிரியாகவும் சித்தரித்துத் தமது நலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் போராட்டத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்ட முழுமொத்த மக்களையும் எதிர் நிலைக்குத்தள்ளித் தமது கொலைக் கரத்தைத்"தேசிய விடுதலை"சொல்லி மறைப்பதற்கெடுக்கும் எல்லா வகைக் காரணிகளும் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானதாகத் திரும்புகிறது.

அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முழு மொத்த இஸ்லாமிய மக்களையே தமிழர்களுக்கு எதிரிகள்-சிங்களக் கைக்கூலிகளென வர்ணித்து,அவர்களின் பூர்வீக யாழ்மண்ணிலிருந்து வதைத்து வெருட்டியடித்த புலிகள்,இப்போது அதே கதையோடு தலித்துக்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள்.இதற்காகத் தலித்துவ முன்னணியை,அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளை-இலக்கியகர்த்தாக்களை,மனித மேம்பாட்டாளர்களைச் சிங்கள இனவாத அரசின் கைக்கூலியாக வர்ணிக்கும் கயமையான அரசியலோடு, முழுமொத்தத் தமிழினத்துக்கே ஆப்பு வைத்துத் தமது அரசியல் ஆதிக்கத்தை-ஏக பிரதிநித்துவத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.இதற்காக எவரையும் "துரோகி,கைக்கூலி"என்ற மிகக் கொடுரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களை தொலைத்துக்கட்டுவதற்காக முனைகிறார்கள்.இதற்காகப் புலிகள்போடும் எச்சிலை உறிஞ்சும் சாத்திரிகள்,பூசாரிகள்,அற்புதன்கள் கட்டும் மடத்தனமான கருத்துக்கள் மிகவும் மலினப்பட்ட புலியின் நெட்டூரம் நிறைந்த அராஜகத்தையே நிலை நாட்டுகிறது.இது புலம் பெயர் சூழலில் மிகவும் ஆபத்தானது.மிகப் பெரும் அராஜகச் சூழலும்,கொலைக் கரமும்,மாற்றுக் கருத்துகளின் குரல்வளையை நெரிக்க முனையும் தரணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இத்தகையவொரு வலிய-கொடிய அடக்குமுறை தமிழ் பேசும் மக்களின் உரிமையைச் சொல்லி அரங்கேறுகிற சந்தர்ப்பங்களில்,இன்னும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள்"துரோகி"சொல்லிப் பறிக்கப்படும் அபாயம் நெருங்குகிறது.இதை ஏலவே செய்து இதுவரைத் தமது ஏகத் தலைமையைத் தக்க வைத்த புலிகள்,இனிமேலும் அதைத் தொடரவே முனைவர்.அதன் தொடர்ச்சியாகப் புலிகளின் பினாமிகளால், ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்-சேறடித்தல் முதல்கட்டமாக நடாத்தப்பட்டு,மக்களை மூளைச் சலவை செய்து,தாம் செய்யப்போகும் கொலைகளுக்கு மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதிருப்பதற்கான முன்னெடுப்பே இந்தச் சாத்திரி,பூசாரிகள்,அற்புதன்களால் அள்ளிப் போடும் அவதூறுகள் என்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

இது,நமது குரல்வளையைமட்டும் நெரிப்பதில்லை.தமிழ் பேசும் முழு மொத்த மக்களையும் அடிமைப்படுத்த முனையும் சிங்கள இனவாத மற்றும் உலக அரசுகளுக்காக இவர்கள் கூலிக்குக் கொலை செய்யும் அமைப்பாகச் சிதைந்ததையே காட்டுகிறது.இத்தகைய அரசியலை விளங்குவதற்கு ரெலோ அமைப்புமீதும் மற்றும் ஏனைய தோழமைக் குழுக்கள்மீதும் புலிகள் நடாத்திய கொலைவெறியே சாட்சியாகும்.பல் வகை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடும்போது,மக்களின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு ஏமாற்றிவிட முடியாது.ஆதலால்,இத்தகைய நோக்கிலிருந்து தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது அமைப்புக்களையும் நரவேட்டையாடும் ஒரு அமைப்பாகப் புலிகளை அன்னிய நலன்கள் வளர்தெடுத்து,இன்றுவரையும் அமைப்பு ரீதியாகவும்,இராணுவரீதியாகவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உலாவவிட்டுள்ளார்கள்.இது தமிழ் பேசும் மக்களின் எந்த நியாயமான குரலையும்"துரோகி" என்றே குரைத்துக் குதறும்.இந்தக் குரைப்புக்கு சாத்திரிகளோ அல்லது பூசாரிகளோ அன்றி அற்புதன்களோ தலைமை தாங்குவதில்லை.புலிகளே நேரடியாக இவர்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.இது குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

நிர்மாணம்.

Freitag, 19. Oktober 2007

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !


வாசகர்களே,
திரு.சேனன் புலம் பெயர் சூழலுக்குள் மிக முக்கியமான
ஆய்வாளர்.
இவர் 90 களுக்குப் பின் பிரான்ஸ் வந்த கையோடு,புலம் பெயர் இலக்கியச்
சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்தவர்.
தற்போது இலண்டனில் தனது மேற்படிப்புக்காக
வாழ்ந்தாலும்,உலக நடப்பில் மிகவும் கவனம் செய்து
வருபவர்.
மார்க்சியம்,பின்நவீனத்துவம்,மானுடவியல்,

வரலாறு,மொழியியல்,பௌதிகம்,பொறியியல்,கணிதம் போன்ற
தளங்களில்
மிக ஆழ்ந்த புலமையுடைய இவர்,ஈழத்துச் சமுதாயத்துள் நிலவும் சாதிய
ஒடுக்குமுறைகள் குறித்துச் சில தரவுகளைச் சொல்கிறார்.
இதுள், இன்றுதேசிய
விடுதலைக்குப் போராடுவதாகச் சொல்லும் புலிகளின் முன்னணித் தலைவர்களே உயர்
வேளாளரோடு
சமரசம் செய்து,தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குழி தோண்டியதைத்
தோலுரிக்கிறார்.படித்துத்தான் பாருங்கள்.படித்து
விமர்சிப்பதை உங்களோடு
வைத்திராது எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.எதையும் கேள்விக்குட்படுத்துவோம்.அப்போது
உண்மையின் தரிசனம் ஓங்கி எம் முன் விரியும்.அது நம்மை நேரிய பாதைக்கிட்டுச்
செல்லும்-அற்புதமான அறிவு கூடும்போது
ஆராலும் தடுத்துவிட முடியாத போராட்டத்
திடம் தலித் மக்களின் விடுதலைக்கு உந்து சக்தியாகும்.-நிர்மாணம்.


இன்று சாதியம் பற்றி, குறிப்பாக
புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி
பேசுவது பல்வேறு வகை கோபங்களை
கிளறும் என்பது தெரிந்ததே.
தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி
உறைபட்டுக்கிடக்கும் சில ஊத்தைகளை
பற்றி ஒருசொல் அங்க இங்க பேசப்படும்போது
உலகின் அனைத்து புனிதங்கிளினதும்
பெயரில் எதிர்ப்புக் கிளம்பி அடி விழுவது
வழமையாக நடக்கிறது. எங்காவது
மூலைக்கு மூலை முனகுபவர்கள் கூட
கூச்சப்பட்டு ஒதுங்கும்படி காழ்ப்போடு
ஒதுக்கப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழ்
சமூகத்திற்குள்ளும் மேலாதிக்க (வர்க்க,
சாதிய) சிறுபான்மை செல்வாக்கு செலுத்தி
வருவதன் வெளிப்பாடே இது.
"இல்லாத கதை பேசி சும்மா தாமே
என்றிருக்கும் சமுதாயத்தையும் கெடுக்க
முற்படுகிறார்கள்", "இதென்ன புதுக்கதை",
"இப்படியும் நடக்குமோ?" "ஏன் தேவையில்லாம
பிரச்சினைகளை இழுக்கிறாய்?", என்ற
குரல்கள் முதற்கொண்டு, "வெளிநாட்டில
இந்தப்பிரச்சின இல்லை" என்று அடித்துக்கூறி
சூட்சுமமாக விதண்டாவாதம் செய்பவர்கள்
உட்பட அனைவரும் சுய சாதிய, வர்க்க
நலன்களுக்காக செயற்படுபவர்களாகவே
இருக்கிறார்கள்.

வெளியில் பயந்து பாசாங்கு காட்டும்
வெள்ளாள அறிவிலி மடச்சாம்பிரானிகளின்
ஆக்கினைகள் பல லண்டனில் நடந்து
வருகிறது.

உதாரணமாக "காரைநகர் நலன் புரிச் சங்கம்"
என்று இயங்கும் ஒரு அமைப்பை சொல்லலாம்.
இவ்வமைப்பு காரைநகர் மேலாதிக்க
வெள்ளாளரின் புகலிடமாக கடந்த 20-25 வருட
காலமாக இயங்கிவருகிறது. காரைநகரில்
அதிகம் வாழும் ஒடுக்கப்படும் சாதியினரை
புறக்கணிக்கும் இச்சங்க மேலாதிக்க
வெள்ளாளர் அப்படியே ஊர் மேலாதிக்க
பழக்கங்களை இங்கும் தொடர்கின்றனர்.
காரைநகர் சாதிய கொடுமைகளின்,
அதற்கு எதிரான போராட்டங்களின் களமாக
நீண்டகாலமாக இருந்து வருகிறது. காரைநகர்
தண்ணிப் பிரச்சினை இதற்கு ஒரு முக்கிய
காரனமாக இருந்து வந்திருக்கிறது. இது பற்றி
அறிவது இங்கிலாந்துக்கும் கடத்தப்பட்டு
இருக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை
புரிந்துகொள்ள உதவும்.


காரைநகரில் அந்தந்த சாதியினர்
தமக்கென்றிருக்கும் கிணறுகளில் மட்டுமே
தண்ணி அள்ளுவது பழக்கத்தில் இருந்து
வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான
நல்ல தண்ணிக் கிணறுகள் வெள்ளாளரின்
வயல்களிலேயே இருக்கின்ற காரணத்தால்,
அந்த வயல் கிணறுகளுக்கு ஒடுக்கப்படுப
வர்கள் தண்ணி எடுக்கச் செல்வது வழக்கம்.
இவர்கள் அங்கு தண்ணி பெற்றுக்கொள்ள
முடியுமே அன்றி தண்ணி அள்ள முடியாது.
குடங்களுடன் அங்குபோய் வரிசையில்
நின்றால் ஆதிக்க சாதியினர் முட்டாமல்
தட்டாமல் தண்ணி ஊத்தி விடுவினம்.
மற்றபடி, ஒடுக்கப்பட்டவர்கள் தண்ணி அள்ள
அங்கு அனுமதியி;லை. இதில் கேவலமான
விசயம் என்னவென்றால் இந்த கிணறுகளில்
பெரும்பாலானவை -அவை மேல்சாதியினரின்
வயல்களுக்குள் கிடந்தாலும்- அரசாங்கத்தால்
கட்டப்பட்டவை. இந்த பொதுக் கிணறுகள்
தங்கள் வயல்களுக்குள் கிடப்பதால்
வெள்ளாளர் அதைச்சுத்தி வேலிபோட்டு
சொந்தம் கொண்டாடுவது காரைநகரில்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதிகமான பிரச்சினைகள் வெடிப்பது
வறட்சிக்காலத்தில்தான். வெள்ளாளர் பெரிய
பெரிய பீப்பாய்களை கொண்டுவந்து வயல்
கிணறுகளில் தண்ணி அள்ளிக்கொண்டு
போய்விடுவார்கள். 60, 70 பேருக்கும் மேலாக
வரிசையில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு
அவர்களாக இரக்கப்பட்டு ஊத்திவிட்டால்தான்
உண்டு. இத்தருணங்களில் சண்டைகள்
தொடங்கும்.
தண்ணி எடுக்கும் இடத்தில் நித்தமும்
நிகழும் சச்சரவுகள் மாதிரியன்றி இந்த
சண்டைகள் பெரிதாக வளரும்.

உதாரணமாக 1987ம் ஆண்டுஈஸ்ட்டர் மாதம்
ஏற்பட்டகொந்தளிப்பை சொல்லலாம்.
ஈஸ்ட்டர் காலம் ஒடுக்கப்பட்ட
பலகிறித்தவ மக்களின்முக்கிய காலம்.


காத்து காத்து நின்று பீப்பாய்களில்
தண்ணி போய் கிணறு வற்றும் போக்கு
பொறுக்க முடியாமல் ஒடுக்கப்பட்ட மக்கள்,
தண்ணி ஊத்தி விடும்படி காத்துக்கொண்டு
நிற்காமல் அள்ளிக் கொண்டுபோக வெடிச்சது
பிரச்சினை.

வெள்ளாளர் அல்லோல கல்லோலப்
பட்டினம். மற்றக் கிணறுகளில் தாரை ஊற்றி
தண்ணியை கெடுத்தினம். கிணத்தச் சுத்தி
முள்ளுக்கம்பி வேலிய கட்டிச்சினம். சனம்
அத புடுங்கிப் போட்டு தண்ணி எடுக்குது
என்று காவலுக்கும் ஆள் வைச்சினம்.
இவை முள்ளுக் கம்பி வேலிபோட்டு
காவலுக்கும் ஆள்வைச்ச இந்த கிணறுகளில்
பெரும்பான்மையானவை காரைநகர் கிராம
சபையால் கட்டப்பட்டவை. (காரைநகர்
கிராம சபையின் மேலாதிக்கமும், முன்னால்
எம்.பீ.(நாடாளுமன்ற உறுப்பினர்) தியாகராசா தண்ணியை டாங்கில ஏத்தி
லைன் போட்ட பின்னனிகளை அடுத்த
லண்டன் குரலில் பார்க்கலாம்).
இந்த பிரச்சினை கன இடங்களில்
வெடிச்சு பெரிதுபட்டுக்ககொண்டே போன
போது, திலீபன், குமரப்பா(புலிகளின் முன்னணித் தலைவர்கள்) என்று பலரும்
வந்து பெரிய கூட்டங்கள் வைக்க நேர்ந்தது.
"இதை முதன்மைப்படுத்த வேண்டாம்"
என்று சமாதானம் செய்ய வெளிக்கிட்ட
கதையும் இத்தருணத்திலேயே நிகழ்ந்தது.

தண்ணிக்கு வழியில்லாத பெரிய அடிப்படை
பிரச்சினையில் இருந்த மக்களிடம் வந்து
இந்த பிரச்சினையை - அடிப்படை
மனிதாபிமான பிரச்சினையை - பெரிதுபடுத்த
வேண்டாம். முதலில் நாட்டுப் பிரச்சினையை
பார்ப்பம் என்று கூட்டம் போட்டு கதைக்க
வெளிக்கிட்டதற்கு ஒடுக்கப்பட்டவர்கள்
மத்தியில் ஆதரவு இல்லாமல் போனது
ஆச்சரியமான விசயமில்லை.
இந்தமாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து
நடந்துகொண்டுதான் இருந்தது. இப்பொழுது
கூட பல பொதுக் கிணறுகளை சுத்தி
வேலிகட்டப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு
ஆபுசு வீட்டுக் கிணத்தை சொல்லலாம்.

தற்சமயம் நேவிக்காரன் தண்ணியை
எடுத்துச் செல்வதால் மேலும் பற்றாக்குறை
ஏற்பட்டதால் வெளியில் இருந்து தண்ணி
கொண்டு வரவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டிருக்கு.

காரைநகர் நலன்புரி சங்கத்தார் தம்காசில்
வெளியில் இருந்து பௌhசரில் தண்ணி
கொண்டு வந்து சனத்துக்கு கொடுக்க பண
உதவி செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக
வண்டியை தள்ளிக்கொண்டு நின்று படம்
எடுத்துக்கொண்டு வந்து லண்டனில் படம்
காட்டுகிறார்கள். தண்ணிக்கு வழியற்ற
சனத்துக்கு ஏதோ ஒரு வழியில் தண்ணி
கிடைப்பது சரிதான். இவர்களது "இரக்க
சுபாவத்தாலும், தருமத்தாலுமே" மக்களுக்கு
தண்ணி கிடைப்பதாக நிறுவ முயலும்
இவர்தம் மேலாதிக்க பாவனைகளைத்தான்
பொறுத்துக்கொள்ள முடியாது.

இதே நலன்புரிசங்க்ககாரர் பழைய
காரைநகர் தண்ணி பிரச்சினைகளில்
மும்முரமாக நின்றவர்கள். இன்று ஒடுக்கப்பட்ட
இடங்களுக்கும் தண்ணிகொடுப்பதாக இவர்கள்
காட்டும் பாவனை பழைய "கொடுக்கும்"
மேலான்மையை மீண்டும் நிறுவவே.
நேவிக்காரனால் உப்பாகிப்போன
கிணறுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு
20 ரூபாயோ சொச்சமோ கொடுத்து தண்ணி
கிடைப்பது பெருங்காரியம். இந்த நலன்புரி
சங்கம் இல்லாவிட்டால் இது நடக்குமோ என்று
கேட்பவர்கள் சிந்திச்சு பார்க்க வேண்டும்.
இவர்கள் தமது சொந்த காசை கொண்டுபோய்
இந்த வேலை செய்யவில்லை. இது சங்கக்
காசு. இந்த சங்கக் காசு பெரும்பாலும்
மேல்சாதியினரிடம் இருந்து வருகிற
காரணத்தால் மேலாதிக்கத்தை நிறுவும்
பணிகளுக்கே செல்கின்றன. உதாரணமாக
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு இக்காசு
போகிறது. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட
70 பதுகள் வரை பிற்படுத்தப்பட்ட சமூகத்து
மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பும்
பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணிபுரிய
முடியாத நிலையே அங்கு நிலவி வருகிறது.
முன்பு இப்பாடசாலை அதிபராக வரவேண்டிய
டானியல் மாஸ்டருக்கு நடந்த பிரச்சினைகளை
காரைநகர் வாசிகள் அறிவர். இவரின் கலகம்
தாங்க முடியாமல் வேறு வழியின்றி காரை
சுந்தரம்பிள்ளையை அதிபராக போட்டு
கூட்டணியினர் தப்பிக்கொள்ள முயன்ற
கதையும் தெரியும். சுருக்கம் காரணமாக
இதுபற்றி இங்கு விபரிக்கவில்லை ஆனால்
நிச்சயமாக பின்பு பார்ப்போம். அதுமட்டுமின்றி
இன்றைக்கு அங்கு தொடரும் மேலாதிக்க
ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக
லண்டன் குரலில் வெளிக்கொண்டு வருவோம்
என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.


போதாக்குறைக்கு காரைநகர் இந்துக்
கல்லூரியில் வேலை செய்யும் பல
ஆசிரியர்கள் நலன்புரி சங்கத்தாரின்
உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ
இருக்கிறார்கள். இந்த இந்துக் கல்லூரி இன்று
மேலாதிக்க எம் பி தியாகராசாவின் பெயரால்
அழைக்கப்படுகிறது. இந்த தியாகராசாவின்
மருமகன்தான் காரை நலன்புரிசங்கத்தின்
செயலாளராக கடந்த 25 வருடங்களாக
இருகக்கிறார். இவரது தகப்பனார் சபாபதிப்பிள்ளை
எதுவித அரசியல்அடிப்டையுமற்று கட்சிக்கு
கட்சி தாவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எதிராக இயங்கியது பலரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட சங்கம் தொடங்கிய காலம்
தொட்டு இன்றுவரை சங்கத்தை தங்கள்
சொந்த குடும்பச் சங்கமாக நடத்தி வரும்
களபூமிக்காரரின் சாதித் தடிப்பு இன்று
அச்சங்கத்தை ஏறத்தாள சாதிச்சங்கமாக
மாற்றிவிட்டிருக்கு. பிறகேன் "காரைநகர்"
பேரை இழுப்பான் என்று தெரியவில்லை.
சும்மா வெள்ளாளர் நலன்புரிசங்கம், அல்லது
களபூமியர் நலன்புரி சங்கம் என்று வைத்துக்
கொண்டிருந்திருக்கலாம்.

சமீப காலங்களில் அகதியாக ஓடி
வந்தவர்கள் போலன்றி இவர்கள் லண்டனில்
நன்றாக கால் ஊண்றியவர்கள். அவர்களிடம்
தாராளமாக இருக்கும் நேரமும் வசதியும்
காரணமாக "சமூகசேவை", "சங்கம்"
என்று ஓடித்திரிய அவர்களாள் முடிகிறது.
தங்களின் சுய திருப்திக்காக சங்கங்கள்
கட்டும் பல்வேறு வசதியானவர்களில்,
கார்நகர் நலன்புரிசங்கத்தின் சாதிய தடிப்பு
ஓங்கியிருப்பதால், அதில் ஒரு நல்ல
சூடுபோட வேண்டியது எமது கடைமையாக
இருக்கிறது.

இந்த வருடம் அண்மையில் நடந்த
இச்சங்கத்தின் ஒரு கமிட்டி கூட்டத்தில்
அச்சங்கத்தின் உபதலைவர் கோணேசலிங்கம்
ஒடுக்கப்பட்ட காரைநகர்வாசி ஒருவர்மேல்
காழ்ப்பு காட்டி, இவர்களையெல்லாம்
இச்சங்கத்துக்குள் கொண்டுவர வேண்டாம்
என்று மிரட்டியது பலரதும் கோபத்தை
கிளறிவிட்டுள்ளது. இதை கண்டும்
கானாமல் இருந்தவர்கள், இது தொடர்பாக
அதிருப்தியடைந்தவர்கள், பிரிந்து சென்று
இன்னுமொரு சங்கம் கட்டியுள்ளவர்களின்
கருத்துக்கள் முதலான மேலதிக செய்திகளை
அடுத்த லண்டன் குரலில் படிக்கவும்.


-சேனன்.

தலித் சிறப்பிதழிலிருந்து நன்றியோடு மீள் பதிவிடுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.

சாதியப் போராட்டம் சில நினைவுகள்



(தோழர். சண்முகதாசன் அவர்கள்
எழுதிய 'ஒரு கம்யுனிசப் போராளியின்
அரசியல்
நினைவுகள்' என்னும் நூலில்
சாதீயப் போராட்டம் பற்றி அவர்
குறிப்பிட்ட
கருத்துக்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.)


சாதி அமைப்பு என்பது இலங்கை
முழுவதிலும் சிங்களவர், தமிழர் இருசாரார்
மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால்
வடக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்த
வரையில் இதனுடன் தீண்டாமை என்ற
நாசமும் சேர்ந்து இருக்கின்றது. அங்கு
சில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக
கருதப்படுகின்றன. ஆவர்கள் மனிதர்களாகவே
கருதப்படவில்லை. சமுதாயத்தின் கீழ்தட்டில்
அவர்கள் கிடந்து நசிகின்றார்கள். ஆவர்கள்
உயர் சாதியினரின் வீடுகளுக்குள் செல்ல
முடியாது. அவர்களுடன் ஒன்றாக கலந்து
பழக முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுடன்
கலந்து திருமணம் செய்து கொள்வது
என்ற பேச்சுக்கே இடமில்லை. தாழ்த்தப்பட்ட
மக்கள் பொதுக் கிணறுகளில் இருந்து
தண்ணீர் அள்ள முடியாது. ஒரே கிண்ணத்தில்
தேநீர் பருக முடியாது. மிகவும் மோசமானது
என்னவென்றால் கடவுளைக் கும்பிடக்கூட
கோயிலுக்குள் அவர்கள் செல்ல முடியாது.
தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச்
செய்யும் மிக மோசமான கொடுமை என்று
உண்மையில் கூறமுடியும்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள்
இச்சாதீய அடக்குமுறைக் கொடுமைகளுக்கு
எதிராக திரண்டெழுந்து பல கிளர்ச்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால் இவை
கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன.
சாதி அடக்குமுறைகள் சிலவற்றின்
காட்டுமிராண்டித்தனத்தை உண்மையில் நம்ப
முடியாது. கிளர்ச்சி செய்யத் துணிந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் உடனே
தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களுடைய
கிணறுகளில் நஞ்சு ஊற்றப்பட்டது.
காணிகளில் இருந்து அவர்கள் துரத்திக்
கலைக்கப்பட்டனர். (தீண்டத்தகாதவர்களுக்கு
பெரும்பாலும் சொந்தமாக காணி இருக்க
வில்லை). மார்புக்கு மேல் மறைக்கத்
துணிந்த தாழ்த்தப்பட்ட பெண்களின்
சட்டைகள் கத்தியால் கிழித்தெறியப்பட்டன.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள்
தோளில் சால்வை போட அனுமதிக்கப்பட
வில்லை. சால்வை போட்டால் உயர்
சாதியினihக் கண்டதும் அவர்கள் அதனை
அகற்ற வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகளின் திரிபுவாதம்
சீர்திருத்தவாதம் ஆகியவற்றால்தான் இந்த
மிருகத்தனமான சமூக ஒழுங்கிற்கு எதிரான
போராட்டம் சரியாக நடத்தப்படவில்லை.
உயர் சாதியினர் மக்கள் தொகையில்
பெரும்பான்மையாக இருக்கின்றபடியால்
எந்தப் பாராளுமன்றக் கட்சியும் அவர்களைப்
பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்த
நிலைமை எமது மார்க்சிய - லெனிய
கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன்
மாறியது. எமது கட்சி பாராளுமன்றத்தின்
மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற
கருத்தை நிராகரித்தது. பாராளுமன்ற
திரிபுவாதம் என்ற சகதியில் அதன் தலை
புதைந்து இருக்கும் வரை ஒரு கட்சி எந்த
வெகுஜனப் போராட்டத்திற்கும் வெற்றிகரமாக
தலைமை தாங்க முடியாது என்பதை
எவரும் இலேசாகப் புரிந்து கொள்வார்கள்.

Mao and N. Shanmugathasan

பாராளுமன்ற சந்தர்பவாதம் என்ற திரிபுவாத
தளையில் இருந்து விடுபட்ட நாம்
தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு
துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.
1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி
சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட்
கட்சியின் தலைமையில், சுன்னாகத்தில்
இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு
வெகுஜன ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை
ஒழுங்குபடுத்தியது. முற்றவெளியில்
இந்த இயக்கத்தின் நோக்கங்களுக்கு
ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடைபெற
இருந்தது.

பொலிசார் ஊர்வலத்தை
தடுத்து நிறுத்தினார்கள். பொலிசார்
எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்களின்
எந்த இயக்கத்தையும் நசுக்கினார்கள்
என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். இதற்குக்
காரணம் பொலிசாரும் உயர் சாதியினர்
என்பதே. ஆனால் ஊர்வலக்காரர்கள்
கலைய மறுத்தார்கள். இறுதியில் ஒரு
வரிசையில் யாழ்ப்பாணம் செல்ல பொலிசார்
அவர்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று.
முற்ற வெளியில் மிகுதியும் வெற்றிகரமான
கூட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். இக்
கூட்டத்தில்தான் புகழ் பெற்ற அமெரிக்க
நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு
அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை
நான் மேற்கோள் காட்டினேன். "ஒருபோதும்
அடிபணிந்து போகாதே. ஏதிர்த்து நின்று
அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக
அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும்
விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்."


சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான இயக்கம் சில வெற்றிகளைப்
பெற்றது. பல ஆலயங்கள் திறக்கப்பட்டன.
பல இடங்களில் தேநீர் கடைகளில்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி
கிடைத்தது. மாவிட்டபுரம் கோயிலுக்குள்
பிரவேசிப்பதற்கான போராட்டம் இவற்றில்
முக்கியமானது. யுhழ்ப்பாணத்தில் உள்ள
இந்த பிரசித்தி பெற்ற கோயிலுக்குள்
தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதைத்
தடுக்க உயர்சாதியினர் அழுங்குப் பிடியாக
நின்றார்கள். ஆவர்கள் இந்த ஆலயத்தின்
உள் மண்டபத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்
கம்பிகள் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களை
தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சென்றார்கள்.
கொஞ்சக் காலம் அவர்கள் ஆலயத்தை மூடி
வைத்திருந்தார்கள். ஆனால் உயர் வருமானம்
பெறும் இந்த ஆலயத்தை அவர்கள் நீண்ட
காலம் பூட்டி வைக்க முடியவில்லை.
இறுதியில் மக்கள் நெருக்கத்தினாலும்
நேரடிப் பேராட்டத்தினாலும் இந்த ஆலயத்தின்
கதவுகள் திறக்கப்பட்டன.


தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த
போராட்டத்திற்கு ஆதரவாகப் பல வடிவக்
கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன
என்பதைக் குறிப்பிட வேண்டும். அற்புதமான
பாடல்கள் பல தோன்றின. நூற்றுக்கு
மேலான தடவை அரங்கேற்றப்பட்ட கந்தன்
கருணை என்ற சிறப்பான நாடகம் ஒன்றை
எமது தோழர்கள் தயாரித்தளித்தார்கள்.
உயர்சாதியினர் இந்த நாடகத்தை
எதிர்த்தார்கள். இந்த நாடகம் பெரும்
வெற்றியாகியது. கொழும்பில் கூட அது
பல தடவை அரங்கேற்றப்பட்டது. புரட்சிகர
கலை எப்படி பரட்சிகர இயக்கத்தை
முன்தள்ளிவிட முடியும் என்பதற்கு அது
நல்லதோர் உதாரணம் ஆகும்.

புரட்சிகரநடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது
என்பதையும் அது தெளிவாக்கியது.
நடைமுறைதான் பிரதானமானது. ஆனால்
புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும்
புரட்சிகர கலை புரட்சிகர இயக்கத்தை
மேலும் முன்தள்ளிவிட உதவுகின்றது.
சூன்யத்தில் நாம் புரட்சிகர கலையை
உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின்
அங்கமாக அது உருவாகின்றது.
சாதி அமைபபு; முறைககும தீண்டாமைக்கும்
எதிரான எமது கட்சியின் இயக்கம் அதன்
மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும்.
ஆதனைஒட்டி நாம் என்றும் பெருமைப்படுவோம்.


அது வடக்கு இலங்கையில் உள்ளுர்
நிலைமைகளுககு; ஏறப் மாhக் ச் pய-லெனியதi; த
பிரயோகம் செய்ததாகும். இதனால்
ஆயிரக்கணக்கானோர் புரட்சிப் பாதைக்கு
வந்தார்கள். சகல பகுதி மக்கள் மத்தியிலும்
(வடக்கிலும் தெற்கிலும்) இதனால் கட்சியின்
செல்வாக்கு பரவியது. யாழ்ப்பாணத்தில்
தாழ்த்தப்பட்ட சாதியில் கணிசமான
தொகையினர் தொழிலாளர் வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற் கொள்ள
வேண்டிய விடயமாகும். உழவர்களும்
உழைப்பாளிகளும் அவர்கள்தான்.


அவர்கள் உடல்ரீதியிலும் பலமானவர்கள்.
இதனால்தான் யாழ்ப்பாணத்தில் எமது
கட்சி ஒழுங்குபடுத்திய எமது கூட்டத்தை
எவராலும் குழப்ப முடியவில்லை. இந்த
நம்பிக்கையில்தான் நான் பின்னர்
1975இல் சுன்னாகம் சந்தைக்கு முன்னால்
பொது மேடையில் மானிப்பாய் தொகுதி
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
தருமலிங்கத்துடன் பகிரங்க விவாதம்
நடத்தினேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள்
தொகையில் கூடுதலானவர்கள். ஆனால்
எம்மை யாரும் தொட்டுவிடமுடியாது.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர்
எம்முடன் இருந்ததுதான் எமக்குக் கிடைத்த
பாதுகாப்பாகும்.



நன்றி தலித் சிறப்பிதழ்

தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது!!!

தமிழரின் ஒற்றைப்பரிமாணம் ?

-பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்


ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களாகிய நாம் ஒற்றைப் பரிமாணம் கொண்டவர்களாக என்றும் இருந்ததும் இல்லை. இருப்போம் என்பதும் சந்தேகமே. இது மனித சமூகத்தின் இயல்பு நிலை சம்பந்தப்பட்டது. சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம். அவர்களே இலங்கையை ஆள்கிறார்கள். முக்கியமான முடிவுகளின் வெளிப்பாடுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவை எமது உறவு சம்பந்தப்பட்டவை என்பதை அவர்களும், தமிழர்களாகிய நாமும் அறிவோம். இவர்கள் ஏன் போராடுகிறார்கள்? என பல சிங்களக் கல்விமான்கள் அடிக்கடி ஆச்சரியத்துடன் கேட்பார்கள். புலிகளின் தோற்றத்தின் பின்னரே தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக பல சிங்கள கல்விமான்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் தமது ஆட்சி யாளர்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கடந்த காலங்களில் தமிழர்களை நன்கு நடத்தி இருப்பதாகவே கருதுகின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையர்கள் பலரும் தமது ஆட்சியாளர்கள் கறுப்பர்களை நன்கு நடத்தியதாகவே நம்பினார்கள். தமது குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு தாம் சிறந்த நாகரிகத்தைப் போதித்ததாக பிரித்தானியர்கள் நம்பினார்கள்.
இதேபோன்று தமது நுகத்தடியில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுமைகளோடு வாழ்வதாக தமிழ் ஆட்சியாளர்கள் எப்போதாவது உணர்ந்தார்களா? அதற்கான சாத்தியமுண்டா?


தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மிகவும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகிறேன். புலிகளின் தலைமை அச்சமூகத்தைச் சார்ந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் அறிவுத்தளம் வெள்ளாள சமூகத்திடம் தான் உள்ளது. றோமன் கத்தோலிக்கரும், கரையோர மக்களும் கீழ்ச் சாதியினர் என நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கம் தனது வெளியீட்டில் தெரிவித்திருந்தது.

Prof.Dr.Ratnajeevan H.


தற்போது வல்வெட்டித்துறையில் வாழும் மக்களை உயர்ந்த அரச வம்ச சாதியாகக் காட்டும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தலைமைத்துவத்தை அங்கீகரிக்கு முன் சாதியை உயர்ந்த அந்தஸ்திற்கு எடுத்துச் செல்வது அவசியத் தேவையாகியுள்ளது. நாவலரை உயர்ந்த இந்துவாக உயர்தியதன் பின்னரே அவர் மொழிபெயர்த்த பைபிளின் சிறப்பு விபரிக்கப்பட்டது. உயர்ந்த சாதியினரால்தான் உயர்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என்பதை நிருபித்த பின்னரே பாலசிங்கம் மாமனிதராக்கப்பட்டார். இது வெள்ளாள சமூகத்தினரால் ஈழப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் தத்துவார்த்த விளக்கங்களாகும். போராட்டத்தில் இறப்பவர்களுக்கு ஓர் சமூக அந்தஸ்தினை வழங்க எடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடாகும்.

புலிகளில் வெள்ளாளர் அல்லாதோர் உள்ளனர். அவர்கள் அதிகாரத்தின் உச்சநிலையில் உள்ளார் கள் என்பதும் உண்மையே. முதலில் உயர் சாதியர் யார்? என்பதனை விளக்கினால் மட்டுமே அதிகாரத்தில் இருப்பவரை அங்கீகரிப்பது நியாயப் படுத்தப்பட முடியும். அதுவரை இவை தொடரும். இன்னும் இரண்டு தலைமுறை சென்றால் அவர்களும் வெள்ளாளர் அல்லது சைத்திரியர் ஆகிவிடுவர்.


கடந்த 2007 ஆகஸ்ட் 6ம் திகதி புலிகளின் tamilnet என்ற இணையத் தளத்தில் பறையர் சமூகத்தினர் என்போர் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் மிகவும் சிறப்பு மிக்க வழித் தோன்றல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத் தளத்தின் ஆசிரியர்களை பறையர்கள் என அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகமே. இதுவே வெள்ளாள சமூகத்தின் போலித்தனமாகும். ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அமுக்கி வைக்க முடியாவிடில் தெரிவு செய்து தமது மட்டத்தில் தற்காலிகமாக வைத்திருத்தலாகும்.


வெள்ளாள சாதியினரின் அதிகார முன்னிலைப் படுத்தலும், மேற்குலக நாடுகளில் புதிதாகத் தோன்றியள்ள பணக்கார வர்க்கமும் இணைந்து புதிய தொழிலில் செயற்படுகின்றன. இவர்கள் அவர்களது குடும்ப வரலாறுகளுக்கு புதிய விளக்கம் அளிக்கின்றனர். பழைய அரசர்களின் காலத்திற்குச்; சென்று ஆதாரங்களைத் திரட்டி விளக்கம் அளிக்கின்றனர். பண்பாடான கலாச்சாரத் தினை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டிராத பலர் சிறந்த பண்பாட்டு குடும்ப மரத்தின் வாரிசுகளாக விபரிக்கப்படும் வரலாறுகள் தற்போது எழுதப்படுகின்றன. றோமன் கத்தோலிக்கர் என்போர் கீழ் சாதியர் என வர்ணித்த தமிழ்ச் சங்கம் வெளிநாட்டில் வாழும் இன்னொரு றோமன் கத்தோலிக்க குடும்பத்தினரை ஆரிய சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக வர்ணித்து எழுதியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி இவ்வாறான மடத்தனமான சமூகப் பிரக்ஞையே இல்லாத வெளிநாட்டுத் தமிழர்களின் கையில் சிக்கிச் சீரழிவது நம்பகரமானதாக அமையுமா?

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலிகளின் ஆலோசனையாளர்கள் என அழைக்கப்படுவோர் பலரும் வெள்ளாளர்களே. இந்த உண்மையை இவர்களால் மறைக்க முடியாது. சட்ட ஆலோசகர்களாக பேச்சு வார்த்தைக்குச் சென்றவர்கள் வெள்ளாளர் அல்லாதோர் என்ன செய்யவேண்டுமெனக் கூறுவார்கள். இவர்கள் ஒரு காலத்தில் எதிரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இவர்கள் வெள்ளாள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை விட தாம் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறியே வாழ்ந்த பின்னணியைக் கொண்டவர்கள்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம். தமிழ் தலைமையைப் பார்ப்போம். யாழ்ப்பாணத் தலைமையினால் சகல தமிழரையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமா? எமது கடந்த கால தமிழ்த் தலைமைகள் ஏன் மக்களால் தோற்கடிக்கப்படார்கள் எனபதை இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் சிங்களத் தலைமை அவதிப்படுவது போல் இன்றைய தமிழ்த் தலைமைகளால்; தொடர்ந்து செல்ல முடியுமா? கிழக்கு மாகாண மக்களின் கணிசமான ஆதரவு இல்லாமல் கருணாவால் இவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? என கிழக்குப் பல்கலைக்கழக கல்விமான்களால் உறுதிபடக் கூற முடியவில்லை. மண்ணுக்குள் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டு நீண்ட காலம் இந்த உண்மையை மறைக்க முடியாது.

சிங்கள ஒடுக்குமுறையிலிருந்தும், விஸ்தரிப்பில் இருந்தும் வௌ;வேறு குழுக்களாக உள்ள மக்கள் வௌ;வேறு விதங்களில் போராடி வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் யாழ். மேலாதிக்கத்தில் இருந்தும் தம்மை விடுவிக்க முயற்சிக்கின்றனர். கீழ்சாதி மக்கள் வெள்ளாள அதிக்கத்திலிருந்து விடுதலை பெற போராடுகின்றனர். சிங்கள, தமிழ் மேலாதிக்கத்திற்கு இடையில் நசுங்கியுள்ள முஸ்லீம் மக்கள் தம்மை விடுவிக்கப் போராடுகின்றனர். தமிழ் புரட்டஸ்தாந்து சமூகத்தினர் இன்றுள்ள புதிய ஒழுங்கிலிருந்தும் தம்மை விடுவிக்க அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். மேற்கு நாடுகளில் தம்முடைய ஸ்தானத்தைப் பலப்படுத்துவதும் ஒரு போராட்டம்தான்.




முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட எமது பிரச்சாரத்தைப் பார்ப்போம். 27 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாக சேர். பொன். இராமநாதன் முஸ்லீம் மக்களையும் தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி இணைத்தார். சேர். ராசிக் பரீத், மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தம்மைத் தமிழர்கள் என அழைப்பதை விரும்பவில்லை. தமிழரசுக் கட்சி ஒரு வகையில் பாலமாகச் செயற்பட்டு அவர்களது வாக்குகளையும் பெற்றது. எம்மோடு வாழத் தகுதி அற்றவர்கள் என்பதால் அவர்கள் துரத்தப்பட்டதால் இவை யாவும் தற்போது பூச்சியத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் நாம் மொத்த தமிழ் மக்களுக்காகவும் பேசத் தகுதி உள்ளவர்களா?

70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள். மலையத்திலிருந்த பிச்சைக்காரர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு வந்தபோது எமது சகோதர வாஞ்சை வேறு விதமாக இருந்தது.தமிழ்பேசும் மக்களின் போராட்டம் என்பது மிகவும் விசாலமானது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக போராடுவது என்பது சகல சிறுபான்மையினரினதும் ஆதங்கங்களின் கூட்டாக இருத்தல் வேண்டும்.


P/S:துப்பாக்கி நிழலில் தூங்குவதாக நடிக்கும் சாதியமைப்பை "தமிழீழத்தில்"அறிந்து,கருத்தாட இதையும் படியுங்கள்:தேசத்தில் தலித் சிறப்பிதழ்


நன்றி:தேசத்தில் தலித் சிறப்பிதழ்

Samstag, 6. Oktober 2007

காமனை வென்றகண் ஆரை உகப்பது?

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?


காமத்துக் கொட்டகையிலொரு
சூத்திரக் கனவு
கவித்துவமாக
கனிப் பறிப்பதற்கும்
புசிப்பதற்கும்
பக்குவங்கள் சில பாடங்களாய்...



பாய்(மெத்தை) விரித்தலென்னவோ
"ஏடங்கை நங்கை
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம்
விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை
பார்ப்பனி பாதங்கள்
சூடும்என் சென்னி..."அவளை நொந்து

(...) பாதம் தாங்கிய தலையின்
பின்னிரவுக் கனவின் கடுப்பில்
ஓரவாயுள் உவர்ப்பாய் ஊறிய
ஒரு யுகக் கனவு

அடுப்பில் எரியும்
பட்டமரத்துக் கட்டையாக
விரும்பு என்(அவள்) செந்தாமரையும்
விட்டது மூச்சு
அப்போது,

"எட்டுத் திசையும்
அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரைஅனல்
மாநிலம் ஆகாசம்
பொடியுரியுங் காலத்துப் பொய்வெளிதனிலும்
பொய்யாக் கனவு புணரும் பொழுது
மெய்யா முடக்கு வாதமொன்று
ஒட்டி உயிர் நிலை
என்னும்இக் காயப்பை
பெருங்காய டப்பாவுக்கும்
பெருமையிலாப் (எதிர்ப் )பால் வினையுங்
கட்டி அவிழ்கின்ற
கண்ணுதல் காணுமே!"

அக்காப் பாட்டும்
பக்காப் பொருளும்
பல்லுப் படரும்
சொல்லும் அவிழ்க்கும்
சுகம் ஒன்று
சொறி நாய்ச் சிரங்காய்ச் சொறியும் எங்குமெதிலும்

ஏடங்கை நங்கை
உடலெங்கும் தேடும் படிகம்
எடுப்பதும் சுவைப்பதும்
சொல்லிப் புரியாச் சுகம்
வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு நான் வீமன்
வாளுக்கு என் தோழன்
முக்காலமும் உணரும் பெருவெளிப் பாதையொன்றில்
வீழ்ந்தேன் பெருவினையால்

"உடலாய் உயிராய்
உலகம தாகிக்
கடலாய் கார்முகில்
நீர்பொழி வானாய்
முக்காலப் பருவப்பயல்கள்
பாவியாகப் போகவும் துணியும்
விரும்பு செந்தாமரை விடியும்
விரியும் குவியும்
வியர்க்கும் விழிக்கும்
இடையாய் உலப்பிலி!"

அறியாப் பொருளாய் அமர்த்திய
விடலைப் பருப்பு அவியாப் பொழுதில்
எடுப்புப் பற்றிய இடுப்புச் சுகத்துள்
அடையார் பெருவிழி
அண்ணலாய் நானும் நின்றேனே நிமிர்ந்து!

சிற்றிடைச் சீமைச் சிற்பவலையுள்
செருகும் தலையுந் தொலைய
முறியும் கனவும்
கவிழ்த்த ஆண்மையுங் கரைய
கடுப்பாய் உலரும் உதட்டில்
வெளுப்பாய் மறையும் ஆத்தையின் கோலம்

"தானும் அழிந்து
தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்தென்
உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து
மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை
நானறி யேனே?"

நானறிந்தே அழிந்தேன்
நாவின் சுனையுள் நடுங்கிய கன்னி
மோகச் சுவையுள்
மடி வலித்த கணத்துள்
கடைந்தாள் "என்னை"
அள்ளிய பொழுது
அதுவே அழுதது
அலுப்புத் தாங்காது.

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?
நெக்குநெக்குள் உருகி உருகி
தொப்புள் வெளியுள்
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
பழந்தாங்கும் முனையுள்
நக்கும்அழுதும் தொழுதும் வாழ்த்தி
செந்தாமரைச் சொண்டில் குந்திய பெருநிலையில்
நான விதத்தால் கூத்து நவிற்றிச்
கொடிபோலும் திருமேனி
கொழுத்துக் கிடக்கும் கொல்லைப் புறத்துள்
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ
என்
இள மேனிச் சிலிர் நங்கை
மென் கொங்கை புணர்ந்தே!

ஓம் சூத்திரா!
காமத்துச் சூத்திரச்
சுகத்தைச் சொல்லிப்
புகுவீர்
மெல்லத் தாண்டும்
தெற்பத்துச் சுகத்துள்
மேனினுடங்கி!

நிர்மாணம்.
(மோகத்துள்
முக்கி முனகிய பொழுதொன்று:05.10.2007)












Blog-Archiv