Samstag, 19. Juli 2008

அறிவித்தல்!

வாசகர்கள் கவனத்திற்கு,தேசம்நெற் இணையத் தளத்தில் வெட்டியொட்டப்படும் நிர்மாணம் தளக் கட்டுரைகளுக்கும்,அந்த நிர்மாணம் எனும் பெயருக்கும், நமக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.நமது வலைப் பதிவினது பெயரில் உலாவும் நிர்மாணம் முற்றிலும் வேறானவர் என்பதைக் குறித்துரைக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.இது,நிலவுகின்ற இலங்கை அரசியல்போக்கில் அவசியமாகும்.


புலம் பெயர் "மாற்றுக் கருத்தாளர்கள்"பலர் இலங்கை-இந்தியக் கைக்கூலிகளாக மாறிவரும் இந்த அரசியல் இலாபங்களின் பின்னே நமது பெயர்கள் அடிபட்டுப்போவதை நாம் விரும்பவில்லை.நமது மக்களின் விடிவுக்கான விடுதலையை நாம் மக்களின் தயவோடு சாதிப்பதற்கான அடிப்படை அரசியலை முன்வைத்து இயங்குபவர்கள்.எனவே,தத்தம் தனிப்பட்ட இலாபங்களுக்காக இலங்கை-இந்திய அரசுகளிடம் மடிப்பிச்சை ஏந்தும் பொறுக்கிகளாக அலையும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் பெயரில் உலாவரும் ஞானம்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,மற்றும் அவர்களின் பின்னே வால்பிடிப்பவர்களின் இழி அரசியல் நடாத்தைகளின் கருத்துத் தளமாக உலாவரும் தேசம்நெற்றையும் நாம் எதுவிதத்திலும் மக்கள் நலனுக்கான சக்திகளென வரையறுக்கவும் இல்லை.இவர்கள் நமது மக்களின் எதிரிகள் கூட்டில் அரசியல் இலாபம் பெறும் பொறுக்கிகள் என்பதால், இவர்களுக்கும் எமக்குமான எந்தப் பொருத்தப்பாடும் கிடையாதென்பதை மிகவும் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.


நிர்மாணம் எனும் பெயரில் தேசம்நெற் தளத்தில் வெட்டியொட்டும் அவரது கருத்துக்களுக்கும் நமக்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது.இந்த நிலையில் அவரது செயலூடாக நமது பதிவினது கருத்ததுத் தளத்தை அளவிடும் தப்பான தருணங்களை நாம் தவிர்த்துக்கொள்ளவே இப்பதிவினூடாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இலங்கைப் போர் வாழ்வினூடாகக் கடக்கப்பட்டிருக்கும் அரசியலில் நாம் யுத்தத்தை வெறுத்தொதுக்கும் அரசியலை மக்களின் நலனிலிருந்து முன் வைக்கின்றோம்.தேசம்நெற்றில் வெட்டியொட்டும் நிர்மாணம் கொண்டிருக்கும் அரசியலை அவர் பிரதியெடுக்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரைவழி புரியமுடியும்.இவர்கள் யுத்தத்தைத் தமது கட்சி-இயக்க-தனிப்பட்ட நலனிலிருந்து எதிர்ப்பதும்,அதேயே ஒரு கட்டத்தில் இலங்கை அரசின்வழி ஆதரிப்பதாகவும் இருக்கிறார்கள்.


நமது நிலைப்பாடனது, மக்களது அடிப்படை வாழ்வாதாரத்தின் அவசியமான அதீத தேவைக்காவும்,அவர்களது உயிர்வாழ்வின் பாதுகாப்புக்கும்,உரிமைகளை வென்றெடுக்கும் இன்னொரு வகையான மக்கள்-வெகுஜன எழிச்சிக்கான முன் நிபந்தனைகளுடன் இலங்கைப் போரை எதிர்த்து வருகிறோம்.இந்த நிலையிலிருந்தே இலங்கையில் இருவேறு அரச ஜந்திரங்களால் முன் தள்ளப்படும் யுத்த ஜந்திரத்தை எதிர்த்து வருகிறோம்.இது, எமது மக்களின் எதிர்கால வாழ்வினதும்,உரிமைகளினதும் உண்மையான விடுதலைக்குரிய நோக்கங்கட்கமைய முன்வைத்து நடாத்தப்படும் கருத்தியல் போரினுள் நமது நிலையாக இருக்கிறது.


இதுவே,எம்மை தனித்தியங்கும் நிலைக்குள் இதுவரை இயக்கி வருகிறது.நாம் எந்தக் காரணம்கொண்டும் தேசம் நெற்றில் பின்னூட்டுக்கள் போடுவதற்கோ அன்றி அத் தளத்துக்குக் கட்டுரைகள் எழுதவோ அடிப்படையில் எந்த பொருத்தப்பாடும் கிடையாது.கடந்த காலத்தில் அத் தளத்தில் நிர்மாணம் எனும் பெயரில் நாம் எந்தப் பதிவையோ அன்றிப் பின்னூடத்தையோ இடவில்லை என்பதையும் இத்தால் அறியத் தருகிறோம்.


எமக்கும் அத்தளத்தில் உலாவரும் நிர்மாணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.


நன்றி.

நிர்மாணம்.

19.07.2008

Keine Kommentare: