Mittwoch, 9. Juni 2010

11 வயதுச் சிறுமி...

11 வயதுச் சிறுமி.

பிரியான்சி சோமனி.

இந்தியாவினது ஒவ்வொரு உயர்விலும் ஏனோ மகிழ்தல் தொடர்கிறது.நான்,என்னை-எனது பூர்வீகத்தை உணரும்போது இஃது,நிகழ்கிறது.
பேராசிரியர் கிசோர் முபபானி போன்ற மேதமைகளிடம் இந்தியாவினதும்-ஆசியாவினதும் எதிர்காலத்தைக் காணும்போது, இந்தச் சிறுமி ஜேர்மனிவரை வந்து இவ்வாண்டுக்கான கணிதச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளாள்.
object width="480" height="385">

வகுத்தல்,
கூட்டல்,கழித்தல்,பிரித்தல்,பெருக்கலென அவள் ஒரு கணினிக்கொப்பாகவும்,கல்குலேற்றருக்கு நிகராகவும் மனக்கணிப்பில் வெற்றியீட்டியுள்ளால்.அவளோடு, 50 வயதுப் பாட்டியுங்கூடப் போட்டியிட்டுத் தோற்றுப் போயிருக்கிறாள்.

இந்தியா!

அடுத்த இருபதாண்டுகளில்...
சீனாவும்,இந்தியாவும் மேற்குலகத்தில் காலனித்துவத்தை ஏற்படுத்துமெனப் பேராசிரியர் கிசோர் அடிக்கடி உரைக்கிறார்.அவரது கூற்று மெய்பிக்க வேண்டாம்.ஆனால்,இந்தியா-சீனா பொருளாதார ரீதியாக மேற்கைப் பின் தள்ளுமென நம்பலாம்.அதை இத்தகைய மாணவர்கள் இப்போது கட்டியங் கூறுகின்றனர்.


இந்திய-சீன மூளைகள் அடுத்த 50 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் பல புதுமைகளைச் செய்யப் போகின்றது.உற்பத்தியில் வீரியமடையும் இத் தேசங்களது இன்றைய துருப்புச் சீட்டே மூளைதாம்.இதை இத் தேசங்கள் இழக்குமாயின் குறிப்பிட்ட தேசங்கள் மீள அடிமையாகும்.அதைத் தடுப்பது இத்தகைய இளைஞர்களது கைகளிலேயேதாம் இருக்கிறது.
இந்தவுண்மையை பிரியான்சி சோமனி நிரூபிக்கின்றாள்!

அழகு.
இந்தியக் கண்டம் பொருள் வளர்ச்சி காண்பது அழகு.அந்தத் தேசத்து மக்கள் மேன்மையுறுதல் அதனிலும் அழகு!

ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.10

Keine Kommentare: