Samstag, 24. Juli 2010

சாதலிலும் உயிர்த்திருத்தல்

சாதலிலும் உயிர்த்திருத்தல்

து,பாடசாலை விடுமுறைக் காலம்.எல்லோரும் எங்கோ ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள்.எனக்கான காலமென்பதும் இதுவே!ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கிறேன், பறக்கின்ற விமானங்கள் அதிகரித்திருக்கு.அவை எங்கெங்கோ கடற்கரைகளை நோக்கிப் பறக்கின்றன.நான் ஒவ்வொரு திசையிலும் கடற்கரையைக்கண்டே பிறந்து வளர்ந்தவன்.எனக்குக் கடலும்.கரையும் அதீதமான கவர்ச்சிக்குரிய இயற்கைக்கொடையென...


இந்தக் காலத்தின் ஏதோவொரு திசையில் எனது கடலும், கரையும் அநாதையாகக் கிடக்கின்றன.அவைகளின் வனப்பில் இலயித்திருந்த ஒரு தலைமுறை அழிந்தே போய்விட்டது.புதிய முகங்களால் நிறைந்துள்ள அந்தத் தீவில் எனக்கெப்போதாவது உறவு துளிர்க்குமா?





காலத்துள் கோலமிட்ட பதின்மம், எல்லாத் தலைமுறையையும் ஏதோ செய்திருக்கும்.என்னைப்போல அதிக காதல் வயப்பட்டவர்கள் இருக்கமுடியுமா?
எனது தேவைக்கு அதிகமாக நான் காதலால் சுவாசித்து இருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் கட்டிவைத்த கனவு மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறேன்.அவை, வர்ணயாலமாகக் கோலமிடும், வானத்தின் வனப்பையும் மீறி என்னைத் தாலாட்டியவை. அந்தத் தாலாட்டுக்குள் வராத எந்தச் சினிமாப்பாட்டும் எனது இரசனைக்குள் வகைகப்படவில்லை.

இன்றும் நான் இரசிக்கும் பாடல்களுக்குள் "அவள்"ஜீவித்து வருவாதாகப் புலம்புகின்ற எனது அகத்தின் தவிப்பில், எல்லாமே இருண்டுவிட்ட வெளிகளாகக் கிடக்கின்றது.


இந்தவாழ்வு இருள்வெளி.





இந்தக் கோடைக்கால விடுமுறையை மீள நான் எகிப்த்தில் களிக்கலாம்.அந்த மண்ணானது நெய்தல் நிலத்தை அப்படியே உரித்து வைத்திருக்கும்போது எத்தனை முறையானாலுஞ் சென்று களிக்கலாம், குதிக்கலாம்.

காலில் பட்டு விலகும் கடல் நீரும், அந்த அரேபிய மணலும் எனது நிலமற்ற நினைவையும் இரட்டிப்பாக்கலாம். ஆனாலும்,அவளது காதல் மொழிக்கு எந்தத் தடையமுமே இல்லாத "இந்த" இன்றைய குடும்ப வாழ்வில், இத்தகைய சினிமாப் பாடல்களே தடயத்தை உருவாக்கும்-முகிழ்க்கும் ஊடகங்களாக...

ஒரு பனை வளவு.



பனங்காய்கள் பழுத்துக் கொட்டும் காலத்தில் கூடித் திரிந்த சின்னமடுக் கோவில்தாண்டும் எனது சுதந்திரத்துள் அத்தானின் கொடுமுடித் தார்ப்பாரில் ஒடுங்கிய எனது கனவுகள், அவளால் உயிர்த்திருந்தது.

உண்மையும்,உயிரும் காதலினால் நிலைத்திருப்பது. காவியங்களெல்லாம் காவியமாவதற்கு இந்தவுறவே காரணமானாலும், காலத்தில் செய்யாத எந்தவினைக்கும் இறுதியில் தோல்வியே நிச்சியமானதாக இருக்கிறது. அது,அனைத்துக்கும் பொருந்தும்போது அழுவதா சிரிப்பதா?





ஸ்ரீரங்கன்
24.07.2010

Keine Kommentare: