Dienstag, 5. Oktober 2010

நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

வினவுவில் நிலா:



>> ஸ்ரீ ரங்க, நீ அங்காலையும் பாடுவாய், இங்காலையும் படுவாய், திங்கிற சோத்தில பங்கும் கேட்பாய்.எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு. இப்போ நாவலன் கை உயர்கிற மாதிரி தெரியுது…. பானையில சோறு இருந்தால்…பூனைகளும் சொந்தம் …பாவம் மக்கள் <<

nila Posted on 05-Oct-10 at 10:29 pm


http://www.vinavu.com/2010/10/02/raya-thesam-inioru/#comment-30768



நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?;



என் வீட்டு முகவரி தெரியுமா?;



அல்லது என்னோடு எப்பவாவது உரையாடியுள்ளீரா?



அங்கேயும்,இங்கேயும் பாடுவதென்பது நியாயம் எங்கே-அங்கே!



சும்மா இரயாவுக்குக் கொம்பு சீவுவது எனது நோக்கமில்லை!



நான்,எவரையும் சந்தேகம் கொள்கிறேன்.



இரயாவைப் புலியின் இன்போமர் என்று, கடந்த இரு ஆண்டுகள் முன் கூறியவன்.

http://srisagajan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF



அதுபோல் இன்று பலரைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறேன்.



அதிகார வர்க்கத்தோடிணைந்து புரட்சியைக் காட்டுபவர்கள் எல்லோரும் தம்மைப் "புரட்சி "வாதிகளாகவே காட்டுகின்றார்கள்.



இப்படி ஜேர்மனியில் எத்தனையோ புரட்சிக்காரர்களை-அமைப்பை பார்த்தவன் நான்.



சும்மா வீம்பு பேசமால் நியாயமாகச் சிந்திக்கப் பழகினால் அது தோழமைக்கும்-மக்கள்சார் அரசியலுக்கும் நல்லது.இல்லை "இப்படித்தாம் செய்வேன் "என நீங்கள் முனைந்தால் அது உங்கள் வர்க்க நிலையைப் பொருத்தது.



நான் எப்பவும்"சோத்துக்கு"அலைபவன் இல்லை!



அவ்வளவு போக்கிரியாகப் பணத்துக்குப் பந்தாவுக்கு ஓடுபவன் நான் இல்லை!என்னை உரைத்துப் பார்க்கும்"தகுதி"எவருக்கு இருக்கிறது.முடிந்தால் செய்யுங்கள்!



நான் இரயாகரன் இல்லை!



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.10.2010

Keine Kommentare: