Dienstag, 30. Januar 2007

விறலிவிடு தூது...

விறலிவிடு தூது...

"கான லுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னகையும் மொழியாது
ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறைஇய தளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமானால்...-அகம் 170


......... கரிய கழியில் கண்போல் மலர்ந்த நெய்தற் மலரின் இதழ் மணத்தை அமுதென...விரும்பித் தாதூதும் வண்டுகளே களிப்பு மிக்கப் பறந்து தளரும்படியான துறைவனிடம் என்னைப்பற்றிக் கழிகானாலும் சொல்லாது உப்பங் கழியும் சொல்லாது தேன் சொரியும் நறு மலருடைய புன்னை மரமும் சொல்லாது... ஒப்பற்றி(:-)))) நின்னையன்றி(சும்மா தாமாஷ்) வேறு யாதொன்றையும் உதவியாக உடையேன் அல்லேன் ,அதனால் நீ அவனிடம் சென்று சொல்லல் வேண்டும்...


அறிவும் புலனும் மங்கிய பொழுதொன்றில் யாருக்கும் -யார்மீதும் செழுநீர் பீச்சும் சிறப்புத் தமிழ் மக்காள்! சேதாரம் அகத்துள்,அரும்பாதோ அறிவுத் தீ?:-(((((((

அற்ப(:-0)அது நெஞ்சாய் குறியாசைபட்டு:- "அவர்க்கு "ஆவது பார்த்து" நீவீர் அரும் பெருஞ் சொற் தேடி அதுகுறியாய்...(ஓடு!ஆத்தாளிடம் அகவி,அருப்பெருஞ் செல்லதைக் கட்டிவைக்க ஒரு வழி பண்ணு!இல்லையா?பெருசுகளின் காதில மெல்லப் போடூடூடூடூடூடூ;.அப்புறம்பார்...ஆசைக் கனிவு ஒரே கழியுணர்வாய்...களி கொள்வாய் பிறகு கவிண்டுவிடுவாய் பொருட்சுமைக்காய்...)


"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்நிறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல் செய் தகன்றாரை உடையையோ நீ..."-கலி 129


...பாயும் அலையோசை நீங்காத பரந்த நீருடைய பனிக்கடலே(பனி:மண்டையுள் படியும் பனி)! அன்பறத்துறந்தான் துறவன் என்று...(மாற்றாரை வதைப்பதில்,காமத்துப்பால் விளக்கி-பளுஊத் தூக்கிப் தன் பாடையில் போடும்...)சிண்டெரெல்லாச் சின்னக் குஞ்சுகள் பல கரை சோக்கத் காத்திருக்கும் அகண்ட பாரதத்தில் உமக்கொரூ "சிண்டெரெல்லா"கண்ணெதிரே காண்கலையோ?...
அடப்பாவி...

அப்பாவி பெரியோரை அடியோடு சாய்க நீ என்ன கிறுக்கனின் காரியதரசியோ?கடதாசிப் பயலே!)
அவனால் உண்டான காமநோய் சுடவருந்துவாரிடத்தே நின்று வருத்த நினைத்து ஓலிக்கின்றாயோ அல்லது நீயும் முன்னே காதல் செய்துப் பின்னர் நீங்கிய தலைவவியை-தலைவனை உடையையாய் வருந்தியழுகின்றாயோ!


வாய் மொழி துப்பி வரப்பெல்லாம் நாசமிடும்,கவியே(கவிஞரில்லை:குரங்கு என்று ஈண்டு காண்க!) காணுமிடமெல்லாம் கச்சைப் பேச்சைக் கக்குவது பாழ்.

"இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே...""-அகம்:128

என் நெஞ்சம் இருளில் தலைவன்(பால்விருப்புடைய பெருமான்...)மிதித்துச் செல்லும் இடத்தின் கொடுழமயை நினைந்து(உருகி,உலைந்து,குலைந்து,குடைந்து,குளிர்ந்தல்...)அவர் தளரும் கால்களைத் தாங்கச் செல்லும்...பேதையாய் யாருமிலை கேள்!...

Keine Kommentare: