Dienstag, 4. September 2007

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!


நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்


வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை


பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து


எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!


எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!


இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்


இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்


நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!


இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்


டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க


எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:


வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கிஇவாழ்க நீடூழி!!!

9 Kommentare:

TBCD hat gesagt…

இது வஞ்சகப்புகழ்ச்சியா...

வேற ஆளே கிடைக்கவில்லையா..பாடல்..புனைய

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//இது வஞ்சகப்புகழ்ச்சியா...

வேற ஆளே கிடைக்கவில்லையா..பாடல்..புனைய //


சேச்சே!இஃதொன்றும் வஞ்சகத்தாருக்குரியதன்று-நிந்திப்பாருக்கான நிலைப்படுத்தலை இற்றுவரை ஏந்திப்பிடித்தலும்,அதன் பின்பான பராக்கிரமத்தைக் குறித்து மகுடம் சூடிக்கொள்ளக் கனவைத் தனதாக்கிக் கட்டியணைக்கும் சில வெட்டுப் ப+ச்சிகளுக்குச் சிறகொடிப்பதற்கான முயற்சியில் விந்தியத்துக்கு முந்தின முயற்சிகளிலொன்றென்றால் மிகையிருக்குமாவென்ன?அப்பப்ப பாடித்தானாகணுமெனுங் நல்ல மனதின் நன்றியறிதலைக் குறித்த கவனக் குறிப்பொன்றைச் சொல்வதற்குத் தகுதியுடை மாமனிதரைக்காணுமொரு வழித் தேடலில் நன்றிக்கும்-நல்ல மனதிற்கும் பாத்திரமுடையவரான நம்ம ராகவச்சாரியார் நாலுந்தெரிந்தபோது"இஸ்ரேலுக்கான விசுவாசத்துள் தன் வேரைக் கண்டடைந்து"நான் வடகலைக்குரிய இஸ்ரேலியப் பரம்பலின் பண்டையப் பு(ர)ட்டு எனுங்கால்-வாழ்த்துவதும் தோதுபெறுமெனத் தகுமல்லவா?

TBCD hat gesagt…

இதுக்கு என்ன கெட்ட வார்த்தையிலே திட்டியிருக்கலாம்

Anonym hat gesagt…

///TBCD said...
இதுக்கு என்ன கெட்ட வார்த்தையிலே திட்டியிருக்கலாம் ///

இதைப் படித்தவுடன் சிரிச்சே வயிரு புண்ணாப் போச்சுங்க சார்.

Anonym hat gesagt…

செந்தழல்ரவி ரொம்ப ரொம்ப நல்ல குடும்பத்தில் பிறந்ததால்தான் போலிடோண்டு கூட்டத்தில் சேர்ந்து இத்தனைநாள் அல்லக்கையாக செயல்பட்டு ஆபாச வலைப்பதிவுகள் தொடங்கி ஆபாசமாக எழுதி ஆபாசமாக பின்னூட்டங்கள், பதிவுகள் போடுகிறான்.

ஹாஹாஹா

நல்ல ஜோக்கு!

Anonym hat gesagt…

டோண்டு ராகவன் என்ற பார்ப்பன நாய்க்கு மட்டும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா பாப்பார நாய்களுக்கும் விடுதலைப்புலிகாளையோ அல்லது ஈழத்தமிழனையோ சுத்தமாக அறவே பிடிக்காது!

Anonym hat gesagt…

"எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:"

ஒருவர் இன்னொரு நாட்டை புகழ்ந்தார் என்றால், அது 'பாதம் பிடிப்பது' ஆகாது.
இகழ்ச்சி மனப்பான்மை மிகுந்தவந்தான், யாருக்கும் பாராட்டு தெரிவிக்க தயங்குவான்.
டோண்டுவை விட்டுவிட்டு, நீங்கள் எந்த நாடுகளை புகழ்கிறீர்கள், ஏன் புகழ்கிறீர்கள் என எழுதுங்கள்.

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//டோண்டு ராகவன் என்ற பார்ப்பன நாய்க்கு மட்டும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா பாப்பார நாய்களுக்கும் விடுதலைப்புலிகாளையோ அல்லது ஈழத்தமிழனையோ சுத்தமாக அறவே பிடிக்காது!//

"....................."நாய்களுக்குத் தெரியாது தாங்க என்ன ஜாதியென்று,இதிலபோய் புலிகளையோ அல்லது (ஈழத்து)மனிதர்களையோ அது பகைக்க முடியாது.மனிதர்கள்தான் எல்லாவகைக்ச் சாமான்களையும் வகுத்து வைத்துள்ளார்கள்.மிருகங்கள் அவையவை தத்தம் குணவியல்போடு வாழ்பவை அல்லவோ?

Anonym hat gesagt…

யோவ், ஒரு மூலைல குந்திகிணு இருக்கர கிழவன பத்தி அடிக்கடி எழுத உங்களுக்கெல்லாம் வெக்கம் இல்ல?