Dienstag, 4. September 2007

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்

வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை

பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து

எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!

எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!

இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்

இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்

நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!

இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க

எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:

வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கி,வாழ்க நீடூழி!!!



1 Kommentar:

Anonym hat gesagt…

சாமானிய மனிதன் டோண்டு எல்லோர் எழுத்திலும், இவ்வளவு பெரிய பிம்பத்தை அடைந்திருப்பது, சாதாரண தமிழரின் குழப்பங்களையே காட்டுகிரது.