Mittwoch, 26. September 2007

விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!


விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!



தொடரும் குண்டுத்தாக்குதல்கள்"..................."வன்னியை நோக்கித் தாக்தல்கள்!
கொலைகள்.இராணுவத் தளபதிகள்-போராளித் தளபதிகள் என்றெல்லா ஆயுததாரிகளும் அற்ப வயதில் அழிந்து போவதும்,அழிவார்களின் வழிகாட்டல்களில் ஆயிரமாயிரம் மக்கள் அழிந்து போவதும் ஈழ இலங்கைக் கோதாவில்,தொடர் கதையாய்...


போராளிக்குத் தாம் செத்துத் தேசம் விடுதலையாகுமென்ற கனவு,இராணவத்தானின் வான் தாக்குதலில் தமது தலையில் குண்டு விழுமென்ற பதபதைப்பு மக்களுக்கு!



துப்பாக்கிகளுக்கு உறக்கமில்லை,
தோட்டாக்கள் வெடிக்கின்றன-குண்டுகள் சிதறுகின்றன.
எனினும், தேசத்தில் சமாதானம் முன்னெடுக்கப்படுகிறது,
பேச்சு வார்த்தை தொடர்கிறது...



தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம், ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கைக் குழந்தைகள்(...) ஒருபுறமும் அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...இன்றைய நிலையில் பதவி வேட்கைக்காகப் பலியாகிப்போன குழுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரிகளாக்கப்பட்டபின், எல்லாத்தையும் வெறுத்துத் தமது நியாயத் தன்மைக்கு(...) வீரியம் சேர்ப்பதில் உள்ள அக்கறையால் ஈழதேசத்தின் நலனைப் போட்டுடைக்கிறார்கள்.


கூலிக் குழுக்களின் இன்றைய அட்டகாசமான பரப்புரைகள் மக்களைக் குழப்பியெடுப்பினும் மக்கள் தமது கடந்தகால அனுபவத்திலிருந்து இப்பாதகமான அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொள்கிறார்கள்.



என்றபோதும்,இலங்கையின் அதீத யுத்த முனைப்புப் புலிகளைச் சொல்லி மக்களை வேட்டையாடுவதற்காகக் குண்டுகளை வானிலிருந்து கொட்டுகிறது.அதையும் நம்ம கூலிக் குழுக்குள் புலிகளுக்கெதிரானதாகச் சொல்லி நியாயப்படுத்தும் நிலை இன்று...


கூடவே அரச தலைவர்கள்-அரச தூதர்கள் அமெரிக்காவுக்கு-ஐக்கிய நாடுகள் சபைக்கு...வெளி நாடுகளுக்குப் போய் கை குலக்கிச் சமாதானம் வேண்டி வரப் பிளேன் ஏறிப் பறக்கிறார்கள்.



இதற்குள் குண்டுகள் கோட்டைகளைப் பிடித்துக் கொடிகளைப் பறக்க விடும்போது
பிண நாற்றமடிக்கும் காற்றில் அவை பறக்கலாம்...


தொடர்ந்தும் கொடியிறங்கும்...
குண்டுகள் வெடிக்கும்...
மக்கள் எங்கோவொரு மூலையில்
அரிசிப் பருக்கைக்குப் பதிலாகக் கெந்தகப் பருக்கைகளை அகற்றயபடி...


விடுதலை...


உடலிலிருந்து உயிருக்கு...

Keine Kommentare: