Samstag, 6. Oktober 2007

காமனை வென்றகண் ஆரை உகப்பது?

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?


காமத்துக் கொட்டகையிலொரு
சூத்திரக் கனவு
கவித்துவமாக
கனிப் பறிப்பதற்கும்
புசிப்பதற்கும்
பக்குவங்கள் சில பாடங்களாய்...



பாய்(மெத்தை) விரித்தலென்னவோ
"ஏடங்கை நங்கை
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம்
விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை
பார்ப்பனி பாதங்கள்
சூடும்என் சென்னி..."அவளை நொந்து

(...) பாதம் தாங்கிய தலையின்
பின்னிரவுக் கனவின் கடுப்பில்
ஓரவாயுள் உவர்ப்பாய் ஊறிய
ஒரு யுகக் கனவு

அடுப்பில் எரியும்
பட்டமரத்துக் கட்டையாக
விரும்பு என்(அவள்) செந்தாமரையும்
விட்டது மூச்சு
அப்போது,

"எட்டுத் திசையும்
அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரைஅனல்
மாநிலம் ஆகாசம்
பொடியுரியுங் காலத்துப் பொய்வெளிதனிலும்
பொய்யாக் கனவு புணரும் பொழுது
மெய்யா முடக்கு வாதமொன்று
ஒட்டி உயிர் நிலை
என்னும்இக் காயப்பை
பெருங்காய டப்பாவுக்கும்
பெருமையிலாப் (எதிர்ப் )பால் வினையுங்
கட்டி அவிழ்கின்ற
கண்ணுதல் காணுமே!"

அக்காப் பாட்டும்
பக்காப் பொருளும்
பல்லுப் படரும்
சொல்லும் அவிழ்க்கும்
சுகம் ஒன்று
சொறி நாய்ச் சிரங்காய்ச் சொறியும் எங்குமெதிலும்

ஏடங்கை நங்கை
உடலெங்கும் தேடும் படிகம்
எடுப்பதும் சுவைப்பதும்
சொல்லிப் புரியாச் சுகம்
வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு நான் வீமன்
வாளுக்கு என் தோழன்
முக்காலமும் உணரும் பெருவெளிப் பாதையொன்றில்
வீழ்ந்தேன் பெருவினையால்

"உடலாய் உயிராய்
உலகம தாகிக்
கடலாய் கார்முகில்
நீர்பொழி வானாய்
முக்காலப் பருவப்பயல்கள்
பாவியாகப் போகவும் துணியும்
விரும்பு செந்தாமரை விடியும்
விரியும் குவியும்
வியர்க்கும் விழிக்கும்
இடையாய் உலப்பிலி!"

அறியாப் பொருளாய் அமர்த்திய
விடலைப் பருப்பு அவியாப் பொழுதில்
எடுப்புப் பற்றிய இடுப்புச் சுகத்துள்
அடையார் பெருவிழி
அண்ணலாய் நானும் நின்றேனே நிமிர்ந்து!

சிற்றிடைச் சீமைச் சிற்பவலையுள்
செருகும் தலையுந் தொலைய
முறியும் கனவும்
கவிழ்த்த ஆண்மையுங் கரைய
கடுப்பாய் உலரும் உதட்டில்
வெளுப்பாய் மறையும் ஆத்தையின் கோலம்

"தானும் அழிந்து
தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்தென்
உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து
மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை
நானறி யேனே?"

நானறிந்தே அழிந்தேன்
நாவின் சுனையுள் நடுங்கிய கன்னி
மோகச் சுவையுள்
மடி வலித்த கணத்துள்
கடைந்தாள் "என்னை"
அள்ளிய பொழுது
அதுவே அழுதது
அலுப்புத் தாங்காது.

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?
நெக்குநெக்குள் உருகி உருகி
தொப்புள் வெளியுள்
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
பழந்தாங்கும் முனையுள்
நக்கும்அழுதும் தொழுதும் வாழ்த்தி
செந்தாமரைச் சொண்டில் குந்திய பெருநிலையில்
நான விதத்தால் கூத்து நவிற்றிச்
கொடிபோலும் திருமேனி
கொழுத்துக் கிடக்கும் கொல்லைப் புறத்துள்
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ
என்
இள மேனிச் சிலிர் நங்கை
மென் கொங்கை புணர்ந்தே!

ஓம் சூத்திரா!
காமத்துச் சூத்திரச்
சுகத்தைச் சொல்லிப்
புகுவீர்
மெல்லத் தாண்டும்
தெற்பத்துச் சுகத்துள்
மேனினுடங்கி!

நிர்மாணம்.
(மோகத்துள்
முக்கி முனகிய பொழுதொன்று:05.10.2007)












Keine Kommentare:

Blog-Archiv