Samstag, 20. Oktober 2007

"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

சாத்திரிக்குப் போகும் மூத்திரம்: புலிக்குள் நிகழும் நடுக்கம்!


கேடுகெட்ட தமிழ்த் தேசியம்.இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்,அற்புதன் என்ற அலுக்கோசு-அரைப்பனி.

தமிழ் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணய விடுதலையை மரணப்படுக்கைக்கு தள்ளிய புலிகளின் கொலைகள், உலகப் பிரசித்தமானது.இவர்களால் மாற்றியக்கங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித் தொடர்ச்சியின் இன்னொரு வகையான அராஜகமே இன்றைய சேறடிப்புகள்-செல்லரித்துப்போன கோணங்கித்தனமான குதர்க்கங்கள்.இந்த மக்கள் விரோதிகள் எத்தனையெத்தனை இளம் போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளினார்கள்?இவர்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் "துரோகிகளான"கதை நாம் அனைவரும் அறிந்ததே!இந்தக் கேவலமான சதியை இந்திய உளவுப்படையான ராவ் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளின் முன்னணித் தலைவர்கள்-ஆலோசகர்கள் செய்து முடித்தபோது, நமது தேசத்தின் மிகப் பெரும் செல்வமான மனிதவளம் அழித்தொழிக்கப்பட்டது.

இன்று, இதே புரளியோடு புலிப்பினாமிகள் தலித்துவக் குரலை நசித்திடவும்,தம்மைத் தவிர வேறொரு அமைப்புப் பலம் பெற்றுவிடக் கூடாதென்ற பதவி-அதிகார வெறியால் தமிழ் மக்களில் கணிசமானவர்களைத் "துரோகி"யென்றழைத்து, எதிரிக்கு நமது விடுதலையை விலைபேசுவது மிகப் பெரும் சமூகக் குற்றமாகும்.இது நமது மக்களை இன்னும் அடிமை கொள்ளமுனையும்,இந்திய மற்றும் உலக-இலங்கைச் சிங்களக் கொடுங்கோன்மை அரசுகளுக்கு பலமான-சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நாம் இனம் காணவேண்டும்.

கருத்தியல் தளத்தில் ஒரு சிறு பொறிகூட மேலெழும்புவதை இந்தத் (வி)தேசியவாதச் சகதிகள் பொறுத்துக்கொள்ள முடியாது, இஞ்சி தின்ற குரங்காய் ஓடியாடித் திரிகிறார்கள்.தமது அதிகாரப் பீடத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக இவர்கள் செய்த-செய்யும் கொலைகளின்பின்னே கோரமாகக் கொட்டப்பட்ட அராஜகக் கருத்தியல்கள் நமது உரிமைகளுக்கு ஆப்பு வைத்த அதே பாணியில் தொடர்ந்து செயற்படும் புலிகளின் முகவர்கள்,இன்னும் எத்தனை பொய்களை உரைத்திடினும் ஒடுக்கப்படும் மக்கள் தமது அதிகாரத்துக்கான நியாயத்தை உயர்த்திப் பிடித்தபடி போர்க்கொடி தூக்குவது தொடரவே செய்யும்.ஒடுக்கு முறைகளுக்கெதிரான மனிதச் செயற்பாடானது எப்பவும் தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதான் நகர்வது.கடந்த காலத்தில் எத்தனையெத்தனை கொலைகள்தான்"துரோகி"சொல்லி நடந்தேறியது?இருந்தும் மக்களின் குரல்களை அடக்க முடிந்ததா?

மக்களின்மீதும்,அவர்களின் நலன்கள்மீதும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்த முனையும் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தரணங்களில்,அந்த மக்களையே"துரோகி"என அழைத்து ஒடுக்கும் சூழ்நிலைகள், ஏலவே பற்பல நாடுகளின் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களுக்குள் நடந்தேறியபோதும் புலிகளினது அரசியல்-அராஜகமே நம்மை இன்னும் கிலிகொள்ள வைப்பதாகும்.இவர்கள், தமிழ்பேசும் மக்களின் சிங்கள ஆளும்வர்க்க எதிரியைத் தொடர்ந்து நண்பராகவும்,எதிரியாகவும் சித்தரித்துத் தமது நலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் போராட்டத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்ட முழுமொத்த மக்களையும் எதிர் நிலைக்குத்தள்ளித் தமது கொலைக் கரத்தைத்"தேசிய விடுதலை"சொல்லி மறைப்பதற்கெடுக்கும் எல்லா வகைக் காரணிகளும் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானதாகத் திரும்புகிறது.

அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முழு மொத்த இஸ்லாமிய மக்களையே தமிழர்களுக்கு எதிரிகள்-சிங்களக் கைக்கூலிகளென வர்ணித்து,அவர்களின் பூர்வீக யாழ்மண்ணிலிருந்து வதைத்து வெருட்டியடித்த புலிகள்,இப்போது அதே கதையோடு தலித்துக்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள்.இதற்காகத் தலித்துவ முன்னணியை,அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளை-இலக்கியகர்த்தாக்களை,மனித மேம்பாட்டாளர்களைச் சிங்கள இனவாத அரசின் கைக்கூலியாக வர்ணிக்கும் கயமையான அரசியலோடு, முழுமொத்தத் தமிழினத்துக்கே ஆப்பு வைத்துத் தமது அரசியல் ஆதிக்கத்தை-ஏக பிரதிநித்துவத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.இதற்காக எவரையும் "துரோகி,கைக்கூலி"என்ற மிகக் கொடுரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களை தொலைத்துக்கட்டுவதற்காக முனைகிறார்கள்.இதற்காகப் புலிகள்போடும் எச்சிலை உறிஞ்சும் சாத்திரிகள்,பூசாரிகள்,அற்புதன்கள் கட்டும் மடத்தனமான கருத்துக்கள் மிகவும் மலினப்பட்ட புலியின் நெட்டூரம் நிறைந்த அராஜகத்தையே நிலை நாட்டுகிறது.இது புலம் பெயர் சூழலில் மிகவும் ஆபத்தானது.மிகப் பெரும் அராஜகச் சூழலும்,கொலைக் கரமும்,மாற்றுக் கருத்துகளின் குரல்வளையை நெரிக்க முனையும் தரணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இத்தகையவொரு வலிய-கொடிய அடக்குமுறை தமிழ் பேசும் மக்களின் உரிமையைச் சொல்லி அரங்கேறுகிற சந்தர்ப்பங்களில்,இன்னும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள்"துரோகி"சொல்லிப் பறிக்கப்படும் அபாயம் நெருங்குகிறது.இதை ஏலவே செய்து இதுவரைத் தமது ஏகத் தலைமையைத் தக்க வைத்த புலிகள்,இனிமேலும் அதைத் தொடரவே முனைவர்.அதன் தொடர்ச்சியாகப் புலிகளின் பினாமிகளால், ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்-சேறடித்தல் முதல்கட்டமாக நடாத்தப்பட்டு,மக்களை மூளைச் சலவை செய்து,தாம் செய்யப்போகும் கொலைகளுக்கு மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதிருப்பதற்கான முன்னெடுப்பே இந்தச் சாத்திரி,பூசாரிகள்,அற்புதன்களால் அள்ளிப் போடும் அவதூறுகள் என்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

இது,நமது குரல்வளையைமட்டும் நெரிப்பதில்லை.தமிழ் பேசும் முழு மொத்த மக்களையும் அடிமைப்படுத்த முனையும் சிங்கள இனவாத மற்றும் உலக அரசுகளுக்காக இவர்கள் கூலிக்குக் கொலை செய்யும் அமைப்பாகச் சிதைந்ததையே காட்டுகிறது.இத்தகைய அரசியலை விளங்குவதற்கு ரெலோ அமைப்புமீதும் மற்றும் ஏனைய தோழமைக் குழுக்கள்மீதும் புலிகள் நடாத்திய கொலைவெறியே சாட்சியாகும்.பல் வகை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடும்போது,மக்களின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு ஏமாற்றிவிட முடியாது.ஆதலால்,இத்தகைய நோக்கிலிருந்து தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது அமைப்புக்களையும் நரவேட்டையாடும் ஒரு அமைப்பாகப் புலிகளை அன்னிய நலன்கள் வளர்தெடுத்து,இன்றுவரையும் அமைப்பு ரீதியாகவும்,இராணுவரீதியாகவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உலாவவிட்டுள்ளார்கள்.இது தமிழ் பேசும் மக்களின் எந்த நியாயமான குரலையும்"துரோகி" என்றே குரைத்துக் குதறும்.இந்தக் குரைப்புக்கு சாத்திரிகளோ அல்லது பூசாரிகளோ அன்றி அற்புதன்களோ தலைமை தாங்குவதில்லை.புலிகளே நேரடியாக இவர்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.இது குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

நிர்மாணம்.

1 Kommentar:

Anonym hat gesagt…

மாற்றுக் கருத்து அவசியம்.புலிகள் இவ்வளவு கொடுமையானவர்கள்?

Blog-Archiv