Freitag, 19. Oktober 2007

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !


வாசகர்களே,
திரு.சேனன் புலம் பெயர் சூழலுக்குள் மிக முக்கியமான
ஆய்வாளர்.
இவர் 90 களுக்குப் பின் பிரான்ஸ் வந்த கையோடு,புலம் பெயர் இலக்கியச்
சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்தவர்.
தற்போது இலண்டனில் தனது மேற்படிப்புக்காக
வாழ்ந்தாலும்,உலக நடப்பில் மிகவும் கவனம் செய்து
வருபவர்.
மார்க்சியம்,பின்நவீனத்துவம்,மானுடவியல்,

வரலாறு,மொழியியல்,பௌதிகம்,பொறியியல்,கணிதம் போன்ற
தளங்களில்
மிக ஆழ்ந்த புலமையுடைய இவர்,ஈழத்துச் சமுதாயத்துள் நிலவும் சாதிய
ஒடுக்குமுறைகள் குறித்துச் சில தரவுகளைச் சொல்கிறார்.
இதுள், இன்றுதேசிய
விடுதலைக்குப் போராடுவதாகச் சொல்லும் புலிகளின் முன்னணித் தலைவர்களே உயர்
வேளாளரோடு
சமரசம் செய்து,தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குழி தோண்டியதைத்
தோலுரிக்கிறார்.படித்துத்தான் பாருங்கள்.படித்து
விமர்சிப்பதை உங்களோடு
வைத்திராது எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.எதையும் கேள்விக்குட்படுத்துவோம்.அப்போது
உண்மையின் தரிசனம் ஓங்கி எம் முன் விரியும்.அது நம்மை நேரிய பாதைக்கிட்டுச்
செல்லும்-அற்புதமான அறிவு கூடும்போது
ஆராலும் தடுத்துவிட முடியாத போராட்டத்
திடம் தலித் மக்களின் விடுதலைக்கு உந்து சக்தியாகும்.-நிர்மாணம்.


இன்று சாதியம் பற்றி, குறிப்பாக
புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி
பேசுவது பல்வேறு வகை கோபங்களை
கிளறும் என்பது தெரிந்ததே.
தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி
உறைபட்டுக்கிடக்கும் சில ஊத்தைகளை
பற்றி ஒருசொல் அங்க இங்க பேசப்படும்போது
உலகின் அனைத்து புனிதங்கிளினதும்
பெயரில் எதிர்ப்புக் கிளம்பி அடி விழுவது
வழமையாக நடக்கிறது. எங்காவது
மூலைக்கு மூலை முனகுபவர்கள் கூட
கூச்சப்பட்டு ஒதுங்கும்படி காழ்ப்போடு
ஒதுக்கப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழ்
சமூகத்திற்குள்ளும் மேலாதிக்க (வர்க்க,
சாதிய) சிறுபான்மை செல்வாக்கு செலுத்தி
வருவதன் வெளிப்பாடே இது.
"இல்லாத கதை பேசி சும்மா தாமே
என்றிருக்கும் சமுதாயத்தையும் கெடுக்க
முற்படுகிறார்கள்", "இதென்ன புதுக்கதை",
"இப்படியும் நடக்குமோ?" "ஏன் தேவையில்லாம
பிரச்சினைகளை இழுக்கிறாய்?", என்ற
குரல்கள் முதற்கொண்டு, "வெளிநாட்டில
இந்தப்பிரச்சின இல்லை" என்று அடித்துக்கூறி
சூட்சுமமாக விதண்டாவாதம் செய்பவர்கள்
உட்பட அனைவரும் சுய சாதிய, வர்க்க
நலன்களுக்காக செயற்படுபவர்களாகவே
இருக்கிறார்கள்.

வெளியில் பயந்து பாசாங்கு காட்டும்
வெள்ளாள அறிவிலி மடச்சாம்பிரானிகளின்
ஆக்கினைகள் பல லண்டனில் நடந்து
வருகிறது.

உதாரணமாக "காரைநகர் நலன் புரிச் சங்கம்"
என்று இயங்கும் ஒரு அமைப்பை சொல்லலாம்.
இவ்வமைப்பு காரைநகர் மேலாதிக்க
வெள்ளாளரின் புகலிடமாக கடந்த 20-25 வருட
காலமாக இயங்கிவருகிறது. காரைநகரில்
அதிகம் வாழும் ஒடுக்கப்படும் சாதியினரை
புறக்கணிக்கும் இச்சங்க மேலாதிக்க
வெள்ளாளர் அப்படியே ஊர் மேலாதிக்க
பழக்கங்களை இங்கும் தொடர்கின்றனர்.
காரைநகர் சாதிய கொடுமைகளின்,
அதற்கு எதிரான போராட்டங்களின் களமாக
நீண்டகாலமாக இருந்து வருகிறது. காரைநகர்
தண்ணிப் பிரச்சினை இதற்கு ஒரு முக்கிய
காரனமாக இருந்து வந்திருக்கிறது. இது பற்றி
அறிவது இங்கிலாந்துக்கும் கடத்தப்பட்டு
இருக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை
புரிந்துகொள்ள உதவும்.


காரைநகரில் அந்தந்த சாதியினர்
தமக்கென்றிருக்கும் கிணறுகளில் மட்டுமே
தண்ணி அள்ளுவது பழக்கத்தில் இருந்து
வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான
நல்ல தண்ணிக் கிணறுகள் வெள்ளாளரின்
வயல்களிலேயே இருக்கின்ற காரணத்தால்,
அந்த வயல் கிணறுகளுக்கு ஒடுக்கப்படுப
வர்கள் தண்ணி எடுக்கச் செல்வது வழக்கம்.
இவர்கள் அங்கு தண்ணி பெற்றுக்கொள்ள
முடியுமே அன்றி தண்ணி அள்ள முடியாது.
குடங்களுடன் அங்குபோய் வரிசையில்
நின்றால் ஆதிக்க சாதியினர் முட்டாமல்
தட்டாமல் தண்ணி ஊத்தி விடுவினம்.
மற்றபடி, ஒடுக்கப்பட்டவர்கள் தண்ணி அள்ள
அங்கு அனுமதியி;லை. இதில் கேவலமான
விசயம் என்னவென்றால் இந்த கிணறுகளில்
பெரும்பாலானவை -அவை மேல்சாதியினரின்
வயல்களுக்குள் கிடந்தாலும்- அரசாங்கத்தால்
கட்டப்பட்டவை. இந்த பொதுக் கிணறுகள்
தங்கள் வயல்களுக்குள் கிடப்பதால்
வெள்ளாளர் அதைச்சுத்தி வேலிபோட்டு
சொந்தம் கொண்டாடுவது காரைநகரில்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதிகமான பிரச்சினைகள் வெடிப்பது
வறட்சிக்காலத்தில்தான். வெள்ளாளர் பெரிய
பெரிய பீப்பாய்களை கொண்டுவந்து வயல்
கிணறுகளில் தண்ணி அள்ளிக்கொண்டு
போய்விடுவார்கள். 60, 70 பேருக்கும் மேலாக
வரிசையில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு
அவர்களாக இரக்கப்பட்டு ஊத்திவிட்டால்தான்
உண்டு. இத்தருணங்களில் சண்டைகள்
தொடங்கும்.
தண்ணி எடுக்கும் இடத்தில் நித்தமும்
நிகழும் சச்சரவுகள் மாதிரியன்றி இந்த
சண்டைகள் பெரிதாக வளரும்.

உதாரணமாக 1987ம் ஆண்டுஈஸ்ட்டர் மாதம்
ஏற்பட்டகொந்தளிப்பை சொல்லலாம்.
ஈஸ்ட்டர் காலம் ஒடுக்கப்பட்ட
பலகிறித்தவ மக்களின்முக்கிய காலம்.


காத்து காத்து நின்று பீப்பாய்களில்
தண்ணி போய் கிணறு வற்றும் போக்கு
பொறுக்க முடியாமல் ஒடுக்கப்பட்ட மக்கள்,
தண்ணி ஊத்தி விடும்படி காத்துக்கொண்டு
நிற்காமல் அள்ளிக் கொண்டுபோக வெடிச்சது
பிரச்சினை.

வெள்ளாளர் அல்லோல கல்லோலப்
பட்டினம். மற்றக் கிணறுகளில் தாரை ஊற்றி
தண்ணியை கெடுத்தினம். கிணத்தச் சுத்தி
முள்ளுக்கம்பி வேலிய கட்டிச்சினம். சனம்
அத புடுங்கிப் போட்டு தண்ணி எடுக்குது
என்று காவலுக்கும் ஆள் வைச்சினம்.
இவை முள்ளுக் கம்பி வேலிபோட்டு
காவலுக்கும் ஆள்வைச்ச இந்த கிணறுகளில்
பெரும்பான்மையானவை காரைநகர் கிராம
சபையால் கட்டப்பட்டவை. (காரைநகர்
கிராம சபையின் மேலாதிக்கமும், முன்னால்
எம்.பீ.(நாடாளுமன்ற உறுப்பினர்) தியாகராசா தண்ணியை டாங்கில ஏத்தி
லைன் போட்ட பின்னனிகளை அடுத்த
லண்டன் குரலில் பார்க்கலாம்).
இந்த பிரச்சினை கன இடங்களில்
வெடிச்சு பெரிதுபட்டுக்ககொண்டே போன
போது, திலீபன், குமரப்பா(புலிகளின் முன்னணித் தலைவர்கள்) என்று பலரும்
வந்து பெரிய கூட்டங்கள் வைக்க நேர்ந்தது.
"இதை முதன்மைப்படுத்த வேண்டாம்"
என்று சமாதானம் செய்ய வெளிக்கிட்ட
கதையும் இத்தருணத்திலேயே நிகழ்ந்தது.

தண்ணிக்கு வழியில்லாத பெரிய அடிப்படை
பிரச்சினையில் இருந்த மக்களிடம் வந்து
இந்த பிரச்சினையை - அடிப்படை
மனிதாபிமான பிரச்சினையை - பெரிதுபடுத்த
வேண்டாம். முதலில் நாட்டுப் பிரச்சினையை
பார்ப்பம் என்று கூட்டம் போட்டு கதைக்க
வெளிக்கிட்டதற்கு ஒடுக்கப்பட்டவர்கள்
மத்தியில் ஆதரவு இல்லாமல் போனது
ஆச்சரியமான விசயமில்லை.
இந்தமாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து
நடந்துகொண்டுதான் இருந்தது. இப்பொழுது
கூட பல பொதுக் கிணறுகளை சுத்தி
வேலிகட்டப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு
ஆபுசு வீட்டுக் கிணத்தை சொல்லலாம்.

தற்சமயம் நேவிக்காரன் தண்ணியை
எடுத்துச் செல்வதால் மேலும் பற்றாக்குறை
ஏற்பட்டதால் வெளியில் இருந்து தண்ணி
கொண்டு வரவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டிருக்கு.

காரைநகர் நலன்புரி சங்கத்தார் தம்காசில்
வெளியில் இருந்து பௌhசரில் தண்ணி
கொண்டு வந்து சனத்துக்கு கொடுக்க பண
உதவி செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக
வண்டியை தள்ளிக்கொண்டு நின்று படம்
எடுத்துக்கொண்டு வந்து லண்டனில் படம்
காட்டுகிறார்கள். தண்ணிக்கு வழியற்ற
சனத்துக்கு ஏதோ ஒரு வழியில் தண்ணி
கிடைப்பது சரிதான். இவர்களது "இரக்க
சுபாவத்தாலும், தருமத்தாலுமே" மக்களுக்கு
தண்ணி கிடைப்பதாக நிறுவ முயலும்
இவர்தம் மேலாதிக்க பாவனைகளைத்தான்
பொறுத்துக்கொள்ள முடியாது.

இதே நலன்புரிசங்க்ககாரர் பழைய
காரைநகர் தண்ணி பிரச்சினைகளில்
மும்முரமாக நின்றவர்கள். இன்று ஒடுக்கப்பட்ட
இடங்களுக்கும் தண்ணிகொடுப்பதாக இவர்கள்
காட்டும் பாவனை பழைய "கொடுக்கும்"
மேலான்மையை மீண்டும் நிறுவவே.
நேவிக்காரனால் உப்பாகிப்போன
கிணறுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு
20 ரூபாயோ சொச்சமோ கொடுத்து தண்ணி
கிடைப்பது பெருங்காரியம். இந்த நலன்புரி
சங்கம் இல்லாவிட்டால் இது நடக்குமோ என்று
கேட்பவர்கள் சிந்திச்சு பார்க்க வேண்டும்.
இவர்கள் தமது சொந்த காசை கொண்டுபோய்
இந்த வேலை செய்யவில்லை. இது சங்கக்
காசு. இந்த சங்கக் காசு பெரும்பாலும்
மேல்சாதியினரிடம் இருந்து வருகிற
காரணத்தால் மேலாதிக்கத்தை நிறுவும்
பணிகளுக்கே செல்கின்றன. உதாரணமாக
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு இக்காசு
போகிறது. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட
70 பதுகள் வரை பிற்படுத்தப்பட்ட சமூகத்து
மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பும்
பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணிபுரிய
முடியாத நிலையே அங்கு நிலவி வருகிறது.
முன்பு இப்பாடசாலை அதிபராக வரவேண்டிய
டானியல் மாஸ்டருக்கு நடந்த பிரச்சினைகளை
காரைநகர் வாசிகள் அறிவர். இவரின் கலகம்
தாங்க முடியாமல் வேறு வழியின்றி காரை
சுந்தரம்பிள்ளையை அதிபராக போட்டு
கூட்டணியினர் தப்பிக்கொள்ள முயன்ற
கதையும் தெரியும். சுருக்கம் காரணமாக
இதுபற்றி இங்கு விபரிக்கவில்லை ஆனால்
நிச்சயமாக பின்பு பார்ப்போம். அதுமட்டுமின்றி
இன்றைக்கு அங்கு தொடரும் மேலாதிக்க
ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக
லண்டன் குரலில் வெளிக்கொண்டு வருவோம்
என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.


போதாக்குறைக்கு காரைநகர் இந்துக்
கல்லூரியில் வேலை செய்யும் பல
ஆசிரியர்கள் நலன்புரி சங்கத்தாரின்
உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ
இருக்கிறார்கள். இந்த இந்துக் கல்லூரி இன்று
மேலாதிக்க எம் பி தியாகராசாவின் பெயரால்
அழைக்கப்படுகிறது. இந்த தியாகராசாவின்
மருமகன்தான் காரை நலன்புரிசங்கத்தின்
செயலாளராக கடந்த 25 வருடங்களாக
இருகக்கிறார். இவரது தகப்பனார் சபாபதிப்பிள்ளை
எதுவித அரசியல்அடிப்டையுமற்று கட்சிக்கு
கட்சி தாவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எதிராக இயங்கியது பலரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட சங்கம் தொடங்கிய காலம்
தொட்டு இன்றுவரை சங்கத்தை தங்கள்
சொந்த குடும்பச் சங்கமாக நடத்தி வரும்
களபூமிக்காரரின் சாதித் தடிப்பு இன்று
அச்சங்கத்தை ஏறத்தாள சாதிச்சங்கமாக
மாற்றிவிட்டிருக்கு. பிறகேன் "காரைநகர்"
பேரை இழுப்பான் என்று தெரியவில்லை.
சும்மா வெள்ளாளர் நலன்புரிசங்கம், அல்லது
களபூமியர் நலன்புரி சங்கம் என்று வைத்துக்
கொண்டிருந்திருக்கலாம்.

சமீப காலங்களில் அகதியாக ஓடி
வந்தவர்கள் போலன்றி இவர்கள் லண்டனில்
நன்றாக கால் ஊண்றியவர்கள். அவர்களிடம்
தாராளமாக இருக்கும் நேரமும் வசதியும்
காரணமாக "சமூகசேவை", "சங்கம்"
என்று ஓடித்திரிய அவர்களாள் முடிகிறது.
தங்களின் சுய திருப்திக்காக சங்கங்கள்
கட்டும் பல்வேறு வசதியானவர்களில்,
கார்நகர் நலன்புரிசங்கத்தின் சாதிய தடிப்பு
ஓங்கியிருப்பதால், அதில் ஒரு நல்ல
சூடுபோட வேண்டியது எமது கடைமையாக
இருக்கிறது.

இந்த வருடம் அண்மையில் நடந்த
இச்சங்கத்தின் ஒரு கமிட்டி கூட்டத்தில்
அச்சங்கத்தின் உபதலைவர் கோணேசலிங்கம்
ஒடுக்கப்பட்ட காரைநகர்வாசி ஒருவர்மேல்
காழ்ப்பு காட்டி, இவர்களையெல்லாம்
இச்சங்கத்துக்குள் கொண்டுவர வேண்டாம்
என்று மிரட்டியது பலரதும் கோபத்தை
கிளறிவிட்டுள்ளது. இதை கண்டும்
கானாமல் இருந்தவர்கள், இது தொடர்பாக
அதிருப்தியடைந்தவர்கள், பிரிந்து சென்று
இன்னுமொரு சங்கம் கட்டியுள்ளவர்களின்
கருத்துக்கள் முதலான மேலதிக செய்திகளை
அடுத்த லண்டன் குரலில் படிக்கவும்.


-சேனன்.

தலித் சிறப்பிதழிலிருந்து நன்றியோடு மீள் பதிவிடுகிறோம்.

1 Kommentar:

Anonym hat gesagt…

சேனந்தான் வலகிட்ட கல்லர கட்டிறுக்காரே. நீங்க பாக்கில்லியா நிர்மானம்?

Blog-Archiv