Samstag, 30. März 2013

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் , யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

சிங்கள இனவாத அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாத அரசியலானது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்பு வாதிகளுக்குள் பல்வேறு இனவாத-சாதிய வொடுக்குமுறை-பெண்ணடிமைத்தனம்-பிரதேசவாதமெனக் கோலாச்சிய இந்த மானுடவிரோதமானது பௌத்த சிங்களப் பெருந்தேசிய உச்சத்துள், தமிழ்த் தேசியவினத்தின் மீதான வொடுக்குமுறையாகவும்,அதற்கு முன்னமே சிங்கள-முஸ்லீம் வார்த்தகர்களது முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும் எழுந்து, இறுதியில் இந்த இனவாதமானது "தமிழீழப் போராட்டத்துள்"அதீத உச்சமான மனித அவமானகரமான புலிப் பாசிசமாக உச்சம் பெற்றது!

இதன் முகங்கள் பல்வேறு வகையானவை.

இந்திய உளவுப் படையினது நேரடியான ஆலோசனையின் பெயரில் இந்தப் பாசிசமானது அநுராதபுரத்துள் (1988 இல்) சிங்கள மக்களை வேட்டையாடியது.பின். இஸ்லாமிய மக்களை வேட்டையாடியது.இதன் முகத்தைத் தமிழ்பேசும் மக்களே தரிசித்த காலமானது புலிகளது வதை முகாமிலிருந்தும்,முள்ளிவாய்க்காலிலிருந்தும் மட்டுமல்ல.கூடவே,தமிழ் மக்கள் தமது குழந்தைகளை,கல்வியாளர்களை,மாற்று அமைப்புப் போராளிகளைப் பல்லாயிரக்கணக்காகப் புலிப் பாசிசத்தால் இழந்தபோதுதாம் அதன் உச்சம் புலப்பட்டது.

இந்த அந்நிய அடியாட்படைச் சேவையுள் பாசிசப் புலிகளது பாத்திரம் தேசிய விடுதலையாகப் பின்னப்பட்ட கருத்தாடல்களால்-சிங்கள இனவாத ஒடுக்குமுறையால் ஒரு தேசிய இனம் தன்மீதானவொரு வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது, இன்று!

இந்த வரலாற்றைத் தந்த புலிப் பினாமிகள் இன்றும் அஃதே, வகை அந்நியச் சேவையில் மக்களிடம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களுடன் பாரிய முதலாளிகளாகிவிட்டு எமது மக்களுக்காக மீளவும், கொலை அரசியலையே செய்கின்றனர்.

புலிப் பாசிசத்தின் பெயரால் மொட்டையடிக்கப்பட்ட            " தமிழினத்துக்கு வெளியிலான பிற-இனங்கள் " தமது அனைந்து நியாயத்தையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட தமிழ்த் தேசியவினத்தின்மீது சுமத்திவிடும்போது அந்தத் தேசியவினமானது அதை நிராகரிக்க முடியாது.இஃது,இந்த உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பான ஒடுக்குமுறையாக மேலெழுகிறது.ஒன்று ,உளவியலொடுக்குமுறை மற்றது, பௌதிக ஒடுக்குமுறை!புலிப்பாசிசத்தின் உச்சத்தின் அறுவடை இதுதாம்!

ஆனால்,இது குறித்து நாம் பேசியாக வேண்டும்.

புலிப் பாசிசத்தை, இவ்வளவு மனித அவமானகர ஒடுக்குமுறைகளுக்குப் பின்னும்-பாசிசத்தின் புதிய மாதிரிகளுக்குப் பாத்திராமாகவும்,அந்நியச் சக்திகளது அடியாளாகப் போன பின்பும் அந்தப் பாசிசப் புலிகளைத் தேசிய இராணுவமாகவும்,அதனால் தமிழீழம் விடுதலையாவதாகவும் அப்பட்டமான பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை இவ்வளவு அழிவுக்குள் தள்ளிய பயங்கரமான " புரட்சிகரச் சிந்தனையாளர்களும்" நமக்குள் "இப்போது" புரட்சி வகுப் பெடுக்கின்றனர்தாம்.இவர்களைத் தண்டிக்கவென ஒரு இனங்கடந்த நீதி மன்றைத் தோற்றுவிக்க முடியாதளவுக்கு உலகம் மனிதக் குருதியில் நீந்திக்கொண்டிருக்கிறது.எனவே,இலங்கை மக்களாகிய அனைவரும் தமக்குள் இணைவுறவேண்டியது இந்த யுத்தக் கிரிமனல்களைக் குறித்த விசாரணையுள் இனவாதப் பேதமின்றி நீதி-விசாரணைக்கானதாக இருக்க வேண்டும்.


இதுவொரு புதிய நூரன்பேர்க் நீதிவிசாரணை மன்றாக அமைய வேண்டும்.தென் கிழக்காசியாவின் விடிவுக்கு இது அவசியமானவொரு பணி.இதன் வாயிலாகவொரு நீதியை இந்த இஸ்லாமிய மற்றும் தமிழ்தேசியவினத்துக்கானவொரு மாண்பான நீதியும்-நிலைத்த ஜனநாயக வழித் தீர்வும் எட்டாதா?நிச்சியம் எட்டும்!மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அந்த மக்கள் தம்மைத்தாமே தலைமையாக்கும்போது இது சாத்தியமானதே!

இன்று, இஸ்லாமிய மக்களது இந்த வடூவுக்காகப் புலிப்பாசிசத்தை ஊக்குவித்த புரட்சிக்காரர்களே ஆதரவாகவும்,பக்கப்பலமாகவும் இருந்து அநுதாபம் தெரிவிப்பது வேடிக்கையானதல்ல-வினையானது.

புலிகளுக்குக் கருத்தியல்-பரப்புரை செய்து, பிழையானவொரு அழிவுச் சக்தியைத் தேசிய இராணுவமெனச் சொன்னவர்கள்,அதற்காகக் கட்சி கட்டி எமது மக்களை ஏமாற்றியவர்கள், புலம் பெயர் தமிழ் குழுமத்தில் உலகு தழுவி வாழ்கின்றனர்.அவர்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் இப்போது அரசியல் பண்ணுகின்றனரென்பதை இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அறியார்கள்.அவர்களை நிர்க்கதியாக்கிய இந்தப் பாசிஸ்டுக்களே இப்போது, புரட்சியின் புரவலர்களென்றும்-முன்னேறிய பிரிவினரென்றும் ஐரோப்பாவெங்கும் தமது அரசியலை தொடர்கின்றனர்.

எப்போதும்,முகமூடி அரசியல் செய்தவர்கள்-புலிப்பாசிசத்தை மிக மூர்க்கமாக ஆதரித்தவர்கள்,அதைத் தேசியச் சக்தியாக வரையறை செய்து முள்ளி வாய்க்கால்வரை மனித வதை செய்தவர்கள் முஸ்லீம்-சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரானவர்களே!

இவர்கள்தாம் இப்போது, இந்த வீடியோவுக்கும் "ஆதாரித்து அரசியல் " செய்கின்றனர்.இவர்களிடம் ஏமாறாது, பாதிக்கப்பட்ட இஸ்லாம்-தமிழ்த் தேசியவினங்கள் தமக்குள் நீதி காணும் முயற்சியில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

அது,பாசிச அரசாகத் தோன்ற முனையும் இலங்கை அரசை மக்களுக்கான சட்டத்துக்குட்பட்ட-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,ஜனநாயக விழுமியத்துள் தள்ளி அதன் வாயிலாகவொரு நீதிகான அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவிருக்கவேண்டும்.இதன் முகிழ்ப்பில்தாம் இலங்கையில் யுத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும்.

இதைத் தவிர்த்துவிட்டுப் பாசிசக் கூறுகளை மேலும் அரசியல் வாழ்வாக நிலை நிறுத்தும் அரசியல் பிழைப்புவாதிகளின்பின் நம்பிக்கை தரிப்பது கானல் நீரான எதிர்ப்பார்ப்பையே இந்த மக்களுக்கிட்டுச் செல்லும்.

புலிப்பினாமிகளான இந்த மேற்சொன்ன சிந்தனையாளர்கள் சொல்லும் அநுதாபமும்,அதுசார்ந்த இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவும் "புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!" என்பது போன்றதே!ஏனெனில்,முள்ளி வாய்க்கால் வரைப் புலிகளைத் தேசியச் சக்திகளாக வர்ணித்து அதை வளர்த்துவிட்டுப் பாசிச ஒடுக்குமுறையை அப்பாவிகள்மீது செலுத்தியவர்கள் இவர்கள்தாம்.

இவர்களைக் குறித்து கவனத்தைக் குவிப்பதே முதற்கட்ட விடுதலைக்கு-விமோசனத்துக்கான முகிழ்ப்பாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.03.2013

Keine Kommentare:

Blog-Archiv